புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_m10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_m10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_m10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10 
3 Posts - 6%
heezulia
சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_m10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_m10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_m10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_m10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_m10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_m10சென்னையில் வசிக்க போவது  யார் !! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் வசிக்க போவது யார் !!


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 03, 2014 6:58 pm


சென்னையில் வசிக்க போவது யார் !!


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி வந்து தமிழநாட்டின் சில கரையோற மாவட்டங்களில் கரையை தொட்டு பாதத்தை நனைத்து விட்டு போனது. ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் சென்னையின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும். சென்னையின் பல பகுதிகள் கடலுக்குள் போயிருக்கும். காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்கள் கூட கடல் நீரால் சூழுப்பட்டு விடும் என்று சென்னைவாசிகளை உலுக்கும் செய்தியை ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளது. அவர்கள் கட்டுரையில் சரியாக சொல்லாமல் விட்ட விஷயம்...சென்னைவாசிகளுக்கு இன்னும் சில ஆண்டுகளில் உணவு கிடைப்பது சிக்கலாக போகிறது என்பதை தான்.
இதன் சுருக்கம் இங்கே......

'உலகின் சுற்றுச்சூழல் சூப்பர் ஹீரோ' என்று பெயரெடுத்தவரும், 25 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய எட்டு நண்பர்களுடன் தனிக்கப்பலில் அண்டார்டிகா சென்று 'இதைப்பாதுகாப்பதே லட்சியம்' என்று தன் வாழ்நாளை அர்ப்பணித்த ராபர்ட் டிவைன் சுதந்திர தினத்தன்று சென்னை வந்திருந்தார். உலகமே போற்றும் ராபர்ட் ஸ்வானிடம் ஜு.வி பேட்டி கண்டிருக்கிறது. அப்போது அவர்,
" நான் நின்று பேசிக் கொண்டிருக்கும்இந்த இடம் இன்னும் 80 வருடங்களில் கடலுக்குள் இருக்கும். என் முன்னால் அமர்ந்திருக்கும் உங்கள் வீடுகளை எல்லாம் கடல் மூழ்கடித்திருக்கும்" என்றார். புவி வெப்பமயமாதல் காரணமாக, கடல் மட்டம் மெள்ளமெள்ள உயர்ந்து கொண்டே போவதால் சென்னை மூழ்கடிக்கப்பட்டு விடும் என்றார்ராபர்ட்.
இது தவிர தமிழ்நாட்டு நிலங்களுக்கு புற்று நோய் வந்து விட்டது என்றும் சொல்லிவிட்டு போயிருக்கிறார் அவர். இது என்ன புது நோய்?

இந்த நிலப்புற்று நோய் பற்றி தெரிந்து கொள்ள எக்ஸனோரா நிர்மலை சந்தித்தது ஜு.விகடன்

"இந்தியாவில் விவசாய நிலங்கள் தொழில் புரட்சி, தொழில் முன்னேற்றம்,சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயர்களால் சூறையாடப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் விவசாய நிலத்தில் 10 சதவீதம் காணாமல் போய்விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் விவசாய நிலங்களே இருக்காது. இதைத்தான் ராபர்ட் ஸவான்'நிலப்புற்று நோய்' என்கிறார்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இணையாக ரியல்எஸ்டேட் மூலமும் விவசாய நிலங்கள் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. இப்பொழுது சென்னையை சுற்றியிருக்கும் விளைநிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டு விட்டன. இப்போது அது அடுத்த கட்ட நகரங்களுக்கும் நகர ஆரம்பித்து விட்டது. இதனால் வேலைவாய்ப்பு பெருகும் தான். ஆனால் விவசாயம் இல்லாமல் போய்விடும்.
இதை ஒரளவுக்கு தடுக்கவும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும்,விவசாயம் சார்ந்த தொழில்களை அரசாங்கம் ஊக்கப்படுத்தவும், உழவனின் மகன் விவசாயம் செய்யவும்,விவசாயம் சாராத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞன் விவசாயம் செய்யவும் அரசாங்கம் ஊக்கப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்கிறார் நிர்மல்.

எக்ஸனோரா அமைப்பு இப்போது கூட்டுப்பண்ணை விவசாயத்தை பிரபலப்படுத்தி வருகிறது. ஒரு விவசாயி தன்னிடம் உள்ள இரண்டு ஏக்கருக்கு தன் மூளையை கசக்கிப் பயிரிட வேண்டும். இதற்கென தனிநபராக பணம் செலவழிப்பதுடன்,விளைந்த பொருள்களை விற்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது. சிறிய நிலத்தில் நவீன உத்திகளை பயன்படுத்துவதும், தனிநபருக்கு சாத்தியமான விஷயம் அல்ல. அதுவே 10 பேர் தலா 10 ஏக்கர் என்று வாங்கி, மொத்தமாக 100 ஏக்கரில் கூட்டுப்பண்ணை ஆரம்பித்தால்,நவீன விவசாய உத்திகளை கையாள முடியும்.விவசாய ஆலோசனைக்கு சர்வதேச ஆலோசனைக்குழுவை கூட நியமித்துக் கொள்ளலாம்.

தண்ணீரை சேமிக்கும் லேட்டஸ்ட் பாசன வசதிகளை மேம்படுத்தலாம். இப்படி கூட்டு பண்ணையின் மூலம் விவசாயத்தின் மீது இருக்கும் தற்கால நம்பிக்கையின்மையை போக்கி அந்த நிலங்கள் கைமாறி தொழிற்சாலைகளாகவோ, அடுக்குமாடிக்குடியிருப்புகளாகவோ மாறிவிடாமல் தடுப்பதும் நிலப்புற்று நோய்க்கு எதிரான முக்கிய நடவடிக்கைகள். வனவிலங்குகளை பாதுகாக்க அரசு தனித்துறை வைத்திருக்கிறது. ஆனால், நாட்டின் முதுகெலும்பான விவசாய நிலங்களை பாதுகாக்க தனித்துறையோ,தனிச்சட்டங்களோ இல்லை என்பதும் நிலப்புற்று நோய் முற்ற ஒரு காரணம்.

இப்போது நஞ்சை நிலங்களில் தான் பரவலாக வீட்டு மனைகள் போடப்பட்டு வருகின்றன. இதை தடுக்க வேண்டியது மிகவும் அவசரம். நஞ்சை நிலத்தை வீட்டு மனைகளாக்க தற்போது கிராம நிர்வாக அதிகாரிகள் அளவில் அனுமதி பெற்றாலே போதுமானது. கிராம அளில் இருக்கும் அதிகாரிகள் இந்த குறிப்பிட்ட நிலம் நீண்ட நாட்களாக விவசாயம் செய்யப்படாமல் இருக்கிறது.அந்த நிலத்தில் உழவும் இல்லை என்று சான்றிதழ் கொடுத்துவிட்டால் வீட்டு மனைகளாக ஆக்க முடியும். இதனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் கொடிகட்டி பறக்கிறது. இந்த அதிகாரத்தை இனி மாவட்ட கலெக்டர் தலைமையிலான ஒரு குழுவிடம் மாற்ற வேண்டும். இப்படி மாற்றினால் மட்டுமே இது போன்ற விவசாய நிலங்களை 'பண்ணை வீடு' என்ற பெயரில் சிலர் முடக்குவதை தடுக்க முடியும். பல ஏக்கரில் ஒரு பங்களா கட்டி, நீச்சல்குளம் அமைத்து உள்ளே போகும் கரன்சி கர்த்தாக்கள் பிறகு ரிசார்ட்ஸ் என்ற பெயரில் விளைநிலங்களே இல்லாமல் செய்து விடுகிறார்கள்.

தமிழக அரசு இலவச திட்டங்களில் புதுப்புது சட்டங்களில் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. ஆனால், அறிவிக்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை மட்டும் செயல்படுத்த முடியவில்லை. காரணம்,தமிழ்நாட்டில் விவசாய நிலம் இல்லவே இல்லை என்பதை அரசே ஒப்புக் கொண்டதால் தான். இப்போதே சென்னையை சுற்றிலும் சர்வதேச தொழிற்சாலைகள் வந்து விட்டன.இதற்கே காஞசிபுரம்,திருவள்ளுர் மாவட்டத்தின் முக்கால் வாசி நிலங்கள் தாரைவார்க்கப்பட்டு விட்டன. இப்போதும் தினம் தினம் முதல்வரும், துணைமுதல்வரும் புதுப்புது பன்னாட்டு கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்கள். இந்த நிறுவனஙகளை விவசாய நிலங்கள் குறைவாக உள்ள தர்மபுரி,பெரம்பலூர்,அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

மத்திய அரசாங்கம் கொண்டு வந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் விவசாயத்தை சாகடிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை,விருதுநகர்,தூத்துக்குடி,தேனி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களை சார்ந்திருக்கும் விவசாயிகளே விவசாயத்தை ஒரம் கட்டிவிட்டு இந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு போகிறார்கள். இந்த திட்டத்தில் வேலை இல்லாத நாட்களில் தான் தினக்கூலிகளை அழைத்து விவசாயம் செய்கிறார்கள். இதெல்லாம் விவசாயம் அழிவதற்கான கண்கூடு.

நிலப்புற்று நோய்க்கு கடைசி காரணம், பாசனம் இல்லாததும் தான். ஊரில் பெய்யும் மழையை விட்டு விட்டு இன்று கடல்நீரை குடிநீராக்க பல கோடிகளை செலவழிக்கிறோம். பாசனத்திற்கு தண்ணீர் கொடுத்த பல ஏரிகள் அழிக்கப்பட்டு ஏரி இருந்த இடங்களில் வீடுகள் முளைத்துள்ளன. காஞசிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காணாமல் போன ஏரிகளை கணக்கெடுத்தால் தலைசுற்றும்.

விவசாயத்தை பற்றி நினைத்தால் தானே ஏரியையும் பாசனத்தையும் நினைப்பதற்கு!

எனவே, சென்னைவாசிகளுக்கு இனி எதிர்வரும் காலத்தில உணவுகிடைப்பதற்கு மற்ற மாவட்டங்களையோ,மாநிலங்களையோ நம்பி இருப்பார்கள். எளிதில் உணவு கிடைக்காது. காரணம், சென்னையிலும் சுற்றியிருக்கும் மாவட்டங்களிலும் விவசாயம் இருக்காது. அப்படியே கிடைத்தாலும் அதன் விலை சராசரி மக்கள் தொட முடியாததாக இருக்கும். சென்னையில் கடுமையான எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் பெருகிவிட்டால் ஏற்படும் வெப்பத்தால் ஏர்கண்டிசன் இல்லாமல் வாழவே முடியாது. முடிவில சென்னை என்பது கோடீஸ்வரர்கள் மட்டுமே வாழும் பகுதியாக (ராபர்ட் ஸ்வான் சொன்னது போல் கடல் சூழந்து அழிக்காமல் இருந்தால்) மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இன்றைக்கு மதிய சாப்பாடு ஓட்டலில் 75 ரூபாய். இன்னும் சில ஆண்டுகளில் அது 250 ரூபாயாக கூட மாறலாம். அதற்கு மேலும் அதிகமானலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பூமி உருண்டை அந்தரத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை ரியல்எஸ்டேட் கபாலீஸ்வரர்கள் நினைத்துக் கொண்டால் சரி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 03, 2014 10:13 pm

ஆறிலும் சாவு நூறிலும் சாவு நண்பா? இதுக்கொல்லாம் பயந்தா எப்படி.

நல்ல விழிப்புணர்வு கட்டுரை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 04, 2014 9:02 am

நன்றி , நல்ல விழிப்புணர்வு கட்டுரை .

இது சுய பதிவா அல்லது மறு பதிவா ?

மறு பதிவென்றால் , மூலத்திற்கு ஒரு நன்றி ,தெரிவியுங்கள் .

தாங்கள் ,ஈகரைக்கு புதியவர் என்பதால் ,கூறுகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 04, 2014 10:50 am

சென்னையில் வசிக்க போவது  யார் !! 3838410834 சென்னையில் வசிக்க போவது  யார் !! 103459460
சென்னைவாசிகளுக்கு இனி எதிர்வரும் காலத்தில உணவுகிடைப்பதற்கு மற்ற மாவட்டங்களையோ,மாநிலங்களையோ நம்பி இருப்பார்கள். எளிதில் உணவு கிடைக்காது. காரணம், சென்னையிலும் சுற்றியிருக்கும் மாவட்டங்களிலும் விவசாயம் இருக்காது. அப்படியே கிடைத்தாலும் அதன் விலை சராசரி மக்கள் தொட முடியாததாக இருக்கும். சென்னையில் கடுமையான எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் பெருகிவிட்டால் ஏற்படும் வெப்பத்தால் ஏர்கண்டிசன் இல்லாமல் வாழவே முடியாது. முடிவில சென்னை என்பது கோடீஸ்வரர்கள் மட்டுமே வாழும் பகுதியாக (ராபர்ட் ஸ்வான் சொன்னது போல் கடல் சூழந்து அழிக்காமல் இருந்தால்) மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 04, 2014 10:51 am

T.N.Balasubramanian wrote:நன்றி , நல்ல விழிப்புணர்வு கட்டுரை . இது சுய பதிவா அல்லது மறு பதிவா ? மறு பதிவென்றால் , மூலத்திற்கு ஒரு நன்றி ,தெரிவியுங்கள் . தாங்கள் ,ஈகரைக்கு புதியவர் என்பதால் ,கூறுகிறேன் . ரமணியன்
டாக்டர் சசிகுமார் கவனத்திற்கு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 04, 2014 11:29 am

காலங்காலமாக இரண்டு ரூபாய்க்கு விற்ற டீயை
இன்று பத்து ரூபாய்க்கு வாங்கப் பழகி விட்டோம்...
-
அதே போல 75 ரூபாய் சாப்பாட்டை , காலப்போக்கில்
250 ரூபாய்க்கு வாங்கும் சக்தியுடன்தான் இருப்போம்...
-
ஆக எதற்கும் பயப்பட தேவையில்லை என்பதே என் கருத்து...!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 04, 2014 11:56 am

எனக்கு ஒரு கவிதை ஞாபகம் வருகிறது  "சோற்றிக்கு காசு வாங்குகிறார்களா என்று என்னிடம் கேட்ட என் பாட்டனிடம் எப்படி சொல்வேன் குடிக்கும் தண்ணீரே இங்கு காசு தான் என்று "
"நகர வாழ்க்கை பற்றி ஒரு கவிஞன் எழுதியது , இனி இது நம் அனைவருக்கும் பொருந்தும் சில வருடங்களில்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 04, 2014 1:42 pm

ayyasamy ram wrote:காலங்காலமாக இரண்டு ரூபாய்க்கு விற்ற டீயை
இன்று பத்து ரூபாய்க்கு வாங்கப் பழகி விட்டோம்...
-
அதே போல 75 ரூபாய் சாப்பாட்டை , காலப்போக்கில்
250 ரூபாய்க்கு வாங்கும் சக்தியுடன்தான் இருப்போம்...
-
ஆக எதற்கும் பயப்பட தேவையில்லை என்பதே என் கருத்து...!
மேற்கோள் செய்த பதிவு: 1101470

வரவேற்கப்படவேண்டிய நன்னம்பிக்கை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக