புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_m10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_m10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_m10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_m10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_m10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_m10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_m10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_m10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_m10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_m10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_m10ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்!


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 03, 2014 1:16 pm

இன்றைய நிலையில் ரியல் எஸ்டேட் முதலீடே நம்பகமானது; அதுவே அதிக வருமானம் தரக்கூடியது எனப் பலரும் நினைக்கிறார்கள். அவர்கள் இதிலுள்ள சிக்கல்களை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பெரும் பணத்தை செலவு செய்து இடத்தை வாங்கியவர்கள் பிற்பாடு வருத்தப்படவே செய்கிறார்கள். ஏதோ ஓர் அவசரத்தில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பற்றியும், இனி அந்தத் தவறை செய்யாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது பற்றியும் நிதி ஆலோசகர் ஆர்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். ரியல் எஸ்டேட்டில் நாம் செய்யக்கூடாத தவறுகளைப் பட்டியலிட்டார் அவர். அந்தத் தவறுகள் இதோ...

எதிர்காலத் தேவை தந்த ஏமாற்றம்!

“முதலீடு என்கிறபோது அது எதுவாக இருந்தாலும் கவனம் முக்கியம். அதுவும் ரியல் எஸ்டேட் முதலீடு என்றால் தேவை அறிந்தே பரிசீலிக்க வேண்டும். காரணம், அதை அவசரத் தேவை என்கிறபோது உடனே விற்று பணமாக்கிக்கொள்ள முடியாது.

அவர் என் நெருங்கிய நண்பரின் உறவினராகப் பழக்கமானார். அவரது நண்பர்கள் இவரிடம் முதலீடு செய்யப் பணம் இருக்கிறது என்பதை அறிந்து பல்வேறு ஏரியாக்களில் நிலத்தை வாங்க பரிந்துரை செய்திருக்கிறார்கள். இவரும்  தனது மகளின் திருமணத் தேவையின் போது அதை விற்று பணமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்து, ஆறு ஊர்களில் இடங்களை வாங்கியிருக் கிறார்.

அதில் சில இடங்கள் இவரது தேவைக்கு முன்னதாகவே நல்ல விலைக்குக் கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இவர் இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என்று விட்டிருக்கிறார். ஆனால்,  மகளுக்குத் திருமணம் நிச்சயமாக, அந்த நேரத்தில் நிலத்தை விற்க முன்வந்திருக்கிறார். இவரது அவசரம் தெரிந்துகொண்டு, நிலத்தை அடிமாட்டு விலைக்குக் கேட்டிருக் கிறார்கள். அப்போதுதான் என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டு வந்தார்.

‘நீங்கள் மகளின் திருமணத் தேவைக்காக நிலத்தில் முதலீடு செய்தது முதல் தவறு. வாங்கிய ஓரிரண்டு ஆண்டுகளிலேயே உங்கள் நிலத்துக்கு நல்ல விலை கிடைத்தும் விற்க தவறியது நீங்கள் செய்த இரண்டாம் தவறு' என  அவர் செய்த தவறுகளைச் சொன்னேன்.

எதிர்காலத் தேவைக்காகவென்று நிலத்தின் மீது முதலீடு செய்வதை முற்றிலும் தவறு என்று சொல்லிவிட முடியாது. நம் தேவை நெருங்கும்போது, அல்லது மனை விலை நல்ல உச்சத்துக்கு சென்றுவிட்டது; இனி எதிர்காலத்தில் இறங்கும் என்கிற சூழ்நிலைக் காணப் பட்டால் அந்த மனையை விற்று, பாதுகாப்பான முதலீட்டில் பணத்தை போட்டுவைக்க தயங்கக்கூடாது. விலை அதிகமாக இருந்தபோது நிலத்தை விற்ற பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருந்தால் மகள் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தி இருக்கலாம்.

தெரியாமல் வாங்கியதால் வந்த விபரீதம்!

என் இன்னொரு நண்பர் பிறந்தது ஈரோட்டில். படித்தது வளர்ந்தது எல்லாமே அங்கேதான். ஆனால், பிழைப்புக்காகக் குடியேறிய இடம் சென்னை. சுற்றுலாவுக்காகச் சென்றதை தவிர, குற்றாலத்தைப் பற்றி எந்தவொரு அறிமுகமும் இல்லாமல், அங்கிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் ஏரியாவில் இடம் வாங்குவதாக இருக்கிறேன் என்று என்னிடம் சொன்னபோதே, பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும் என்று எச்சரித்தேன். அதை அலட்சியம் செய்தவர், இடத்தை வாங்கி கையிலிருக்கும் பணத்தைப்  போட்டு வீட்டையும் கட்டினார்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. நிரந்தரமாக வாடகைக்கு வருபவர்கள் யாரும் இல்லை.  தற்போது காலியாக இருக்கும் அந்த வீட்டைப் பாதுகாக்க, பராமரிக்க நம்பிக்கையான ஆட்கள் அங்கே யாரையும் தெரியாது என்பதால் சென்னையிலிருந்து மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ குற்றாலத்துக்குச் சென்று வந்துகொண்டிருக்கிறார்.

நமக்குத் தெரிந்த இடங்களில் நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்கிப் பராமரிப்பதுதான் சுலபமான காரியம். எந்த வகையிலும் அறிமுகமும் இல்லாத இடத்தில் நிலத்தை வாங்குவதால், அதன் பாதுகாப்புக்கு யாராலும் உத்தரவாதம் தரமுடியாது. எந்தத் தொடர்பும் இல்லாத ஊரில் வாங்கிய இடங்களை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ முடியா மல் போனதால், மோசடிக்காரர்கள் அந்த இடத்தை அபகரித்துக் கொண்டதாக வரும் செய்திகளை நாம் அன்றாடம் படிக்கத் தானே செய்கிறோம்.

தந்திரத்தால் தடுமாற்றம்!

‘பிரபலமாக உள்ள துறையில் ஏமாற்று வேலைகள் அதிகமாக இருக்கும் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் ரியல் எஸ்டேட்' என்று எனக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார். ஆனால், அவரே ஒருநாள் ரியல் எஸ்டேட் டில் ஏமாந்தார்.  

ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் களில் பெரும்பாலானவர்கள் பல இடங்களைக் காட்டி பலவாறு நம்மை வாங்கத் தூண்டுவார்கள். அவர்களின் அந்தத் தந்திரத்தாலேயே ஏமாந்தவர்கள் பலபேர். அப்படித்தான் இவரும் ஏமாந்து போயிருக்கிறார். தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம், தான் நிலம் வாங்க இருப்பதாகச் சொல்ல, அவரோ அவருக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரிடம் இவரைச் சிக்க வைத்திருக்கிறார்.

அந்த ரியல் எஸ்டேட் வியாபாரி ஒருநாள் இவர்களுக்காகத் தனியே கார் ஒன்றை ஏற்பாடு செய்து, அன்றைய தினத்துக்கான அனைத்து செலவுகளை யும் அவரே செய்து தன்னிடமுள்ள பல இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டி இருக்கிறார். எந்த இடமும் பிடிக்காமல் போனாலும், நமக்காக இவர் இவ்வளவு செலவு செய்கிறாரே என நினைத்து ஓர் இடத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அந்த இடத்தில் இன்று வரை ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது.

ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Nav30d

நிலத்தை விற்க நினைப்பவர்கள் ஆயிரம்தான் சொன்னாலும் அந்த இடம் குறித்த விவரங்களைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்காமல் வாங்கக் கூடாது. அதேபோல, விற்பனை செய்பவரின் மீது பரிதாபப்பட்டு சொத்தை வாங்கக் கூடாது.

உஷார் வழிகள்!

பொதுவாக வீடு வாங்குகிறவர்கள், முக்கியமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குகிறவர் கள் உடற்பயிற்சி நிலையம் இருக்கிறது, நீச்சல்குளம் இருக்கிறது என்றெல்லாம் நினைத்து, அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால், அதை நாம் பயன்படுத்துவோமா என்றெல்லாம் அந்த நேரத்தில் யோசிக்க மாட்டார்கள்.

ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்! Nav30b

சில நேரங்களில் நிலத்துக்கான தேவை இருக்காது. ஆனால், நல்ல வருமானம் தரும் முதலீடு என்று பிறர் சொல்லக் கேட்டு, வட்டிக்கு கடன் வாங்கியாவது நிலத்தில் முதலீடு செய்து ஏமாந்து போவார்கள். இதுபோன்ற தருணங்களில் கொஞ்சம் உஷாராக இருந்தால் ஏமாற்றத்தைத் தவிக்கலாம்” என்று சொல்லி முடித்தார் ராதாகிருஷ்ணன்.

எல்லோருக்கும் நாம் பிறந்த மண்ணில் நமக்கான ஒரு சென்ட் நிலம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத்தான் செய்வார்கள். இந்த ஏக்கம் ஏமாற்றத்தைத் தராமல் இருக்க வேண்டுமானால், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்போது  உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

--ந.விகடன்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 03, 2014 1:19 pm

மிக, மிக அருமையான பதிவு.. நிலம், நிலம் என்று ஓடி, ஓடி முதலீடு செய்பவர்கள் கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டும்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக