புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_c10கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_m10கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_c10 
6 Posts - 67%
heezulia
கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_c10கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_m10கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_c10கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_m10கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_c10கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_m10கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 06, 2014 5:24 pm



ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் அன்பின் மார்க்கமான இஸ்லாமுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

‘இஸ்லாமிய தேசம்’ என்று சொல்லப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறார்களோ இல்லையோ, வெளிநாட்டினரின் தலைகளைத் துண்டிப்பதில்தான் பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். சிரியாவில் உள்நாட்டுப் போர்ச் செய்திகளைத் திரட்ட வந்த அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ் ஃபோலே, ஸடீவன் சாட்லாஃப்ட், பிரிட்டன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் ஹெயின்ஸ், ஆலன் ஹென்னிஸ்கின் முதலானோரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கழுத்தைத் துண்டித்துக் கொலை செய்தனர். பிணைக் கைதிகளுக்கு மட்டுமல்ல, எதிர்ப்பாளர்கள் மாற்று இனத்தவர்கள் போன்றவர்களுக்கும் மரணம்தான் தண்டனை.

கடவுளின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகவும், கடவுளின் ஆட்சியை நிலைநாட்டவே போராடுவதாகவும் சொல்லிக்கொள்ளும் இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஒவ்வொரு முறை பிணைக் கைதிகளின் தலையைத் துண்டிக்கும்போதும், துண்டிக்கப்பட்டுத் தரையில் வீழ்வது மனிதர்களின் தலைகள் அல்ல, மகத்தான ஒரு மார்க்கத்தின் மானமும் மரியாதையும்தான்.

உண்மையான இஸ்லாம் எது?

வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டியுள்ள ஓர் அருள்நெறிதான் இஸ்லாம். பலரும் கருதுவதுபோல் இஸ்லாம் என்றாலே ‘ஜிஹாதும் பலதார மணமும் தலாக்கும் தான்’ என்பது உண்மையல்ல. பிறப்பிலிருந்து இறப்பு வரை, மனிதர்களுக்குத் தேவையான எல்லா வழிகாட்டுதல்களையும் குறைவின்றி நிறைவாக வழங்கியுள்ளது இஸ்லாம். இந்த உன்னதமான வழிகாட்டுதலில் போர்களும் அடங்கும். போர்க்களத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்குறித்து இஸ்லாம் நிறையப் பேசியுள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், துறவிகள் ஆகியோரைக் கொல்லக் கூடாது; வயல் நிலங்களைப் பாழ்படுத்தவோ தீயிடவோ கூடாது; மரங்கள் போன்ற தாவரங்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடாது; கால்நடைகளைக் கொள்ளையிடக் கூடாது; போர்க்களத்தில் இறந்த எதிரி களின் உடல்களைச் சிதைக்கக் கூடாது; பிடிபட்ட கைதிகளைத் துன்புறுத்தக் கூடாது என்றெல்லாம் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் நிறைய வழிகாட்டுதல் கள் உள்ளன. ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

பாதுகாப்பாகச் சேர்த்துவிடுங்கள்

எதிரிகளுடன் கடுமையான போர் நடந்துகொண்டிருந்த ஒரு சூழலில், எதிரிப் படையைச் சேர்ந்த ஒருவர் இறைமார்க்கத்தை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் முஸ்லிம் ராணுவத்தினரிடம் வந்தால், அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? இதோ, குர்ஆன் கூறுகிறது: “இணை வைப்பாளர்களில் எவரேனும் அடைக்கலம் கோரி உங்களிடம் (இறைவனின் வேதத்தைச் செவி யுறுவதற்காக) வந்தால் அப்போது இறைவனின் வேதத்தை அவர் செவியுறும் வரையில் அவருக்கு அடைக்கலம் அளியுங்கள். பிறகு, அவரை அவருடைய பாதுகாப்பிடத்தில் சேர்த்துவிடுங்கள்.” (குர்ஆன் 9:6) இந்த வசனத்தின் இறுதிப் பகுதி அடிக்கோடிட்டுக் கவனிக்க வேண்டியதாகும்: “பிறகு, அவரை அவருடைய பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடுங்கள்.” அதாவது, அவர் தமக்குப் பாதுகாப்பான இடம் என்று எந்த இடத்தைக் கருதுகிறாரோ அந்த இடம் வரை அவரைப் பாதுகாப்பாகக் கொண்டுசேர்த்துவிட வேண்டும். இதுதான் இஸ்லாமே தவிர, ‘கிடைத்தான்டா எதிரி’ என்று தலையை வெட்டுவது ஒருபோதும் இறைமார்க்கம் ஆகாது.

பிணைக் கைதிகளை எப்படித் தண்டிப்பது?

பிணைக் கைதிகள் விஷயத்தில் நபிகள் நாயகம்(ஸல்) எவ்வாறு நடந்துகொண்டார் என்பதையும் இந்த இடத்தில் அறிந்துகொள்வது மிகவும் பயன்தரும். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நடைபெற்ற பத்ருப் போர் இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். மதீனாவில் நபிகளாரின் தலைமையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாகிக்கொண்டிருந்தது. அந்த அரசை முளையிலேயே கிள்ளியெறிய மக்காவிலிருந்து குறைஷிகள் படை திரட்டிக்கொண்டு வந்தார்கள். அந்தப் போரில் முஸ்லிம் வீரர்களின் மொத்த எண்ணிக்கையே முந்நூற்றுச் சொச்சம்தாம். இந்த வீரர்களும் பெரும்பாலும் ஏழைகள், வறியவர்கள். போதிய ஆயுதங்களோ தளவாடங்களோ இல்லாதவர்கள்.

ஆனால், மக்காவிலிருந்து படையெடுத்து வந்த வர்களோ ஆயிரத்துக்கும்மேல். எல்லோரும் முழு ஆயுதபாணிகளாக, குதிரைகள், ஒட்டகங்கள், அம்பு, வில், ஈட்டி என்று அனைத்துப் போர்த் தயாரிப்பு களுடனும் வந்திருந்தனர்.

போர் மூண்டது. இஸ்லாத்துக்கு ‘வாழ்வா, சாவா’ என்ற போராட்டம். நபிகளார் செய்த ஒரு பிரார்த்தனையிலிருந்து போரின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்ளலாம்: “இறைவா, இந்தப் போரில் முஸ்லிம்களுக்கு நீ தோல்வியை அளித்தால், பிறகு உலகில் அல்லாஹ் என்று உன் பெயரை உச்சரிப் பதற்குக்கூட யாரும் இருக்க மாட்டார்கள்” போரில் நபிகளார் வெற்றிபெற்றார்.

இதில் முக்கியமான செய்தி, எதிரிப் படையைச் சேர்ந்த 70 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிபட்டனர். இந்த இடத்தில்தான், கேடுகெட்ட இந்த ஐ.எஸ். பயங்கர வாதிகள் வரலாற்றை ஆழ்ந்து படிக்க வேண்டும். பத்ருப் போரில் பிணைக் கைதிகளாய் பிடிபட்ட 70 பேரையும் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. பலதரப்பட்ட யோசனைகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு, நபிகளார் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். அது என்ன தீர்மானம்? 70 பேரின் தலைகளையும் துண்டித்து எறிந்துவிட வேண்டும் என்றா?

அதுதான் இல்லை. “பிணைக் கைதிகளில் யாருக்கு எழுதப் படிக்கத் தெரியுமோ அவர்கள் ஒவ்வொருவரும் பத்து முஸ்லிம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும்; எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் உரிய இழப்பீட்டுத் தொகையைச் செலுத்திவிட்டு விடுதலை ஆகலாம்” என்று அறிவித்தார். அவ்வாறுதான் நடந்தது. பிணைக் கைதிகள் முஸ்லிம் பிள்ளைகளுக்கு எழுதவும் படிக்கவும் கற்பித்துவிட்டு விடுதலை பெற்று ஊர் திரும்பினார்கள், இஸ்லாத்தையும் நபிகளாரின் அருஞ் செயலையும் புகழ்ந்தபடியே.

இதுதான் இறைத்தூதரின் வழிமுறை. இதுதான் இஸ்லாமிய நடைமுறை. இன்றைக்கும்கூட இந்த வழி முறை பின்பற்றத் தகுந்ததே.

முகமூடிக் கொள்ளையர்கள் போன்ற ஐ.எஸ். பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இஸ்லாமியத் திருநெறிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்:

“அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தயவுசெய்து அவமானப்படுத்தாதீர்கள்.”


- சிராஜுல் ஹஸன்



கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Nov 07, 2014 4:00 pm

சிரி சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 07, 2014 4:14 pm

சிறப்பான பகிர்வுக்கு நன்றீ தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக