புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
2 Posts - 1%
prajai
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கிருந்தோ வந்தான்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 7:25 pm

எங்கிருந்தோ வந்தான்! QEK92xbVQ8Jk9cRucjIN+E_1413886472

இரவு மணி ஒன்பது. மாயா க்ளினிக்கின் ஐ.சி.யூ. பிரிவு. அங்குள்ள பணியாளர்களின் டியூட்டி மாறும் நேரம். ஜன்னலோரக் கட்டிலின் அருகே படுத்திருந்த அந்த மூதாட்டி கமலம்மாவின் அருகே நின்றிருந்த சிஸ்டர், இரவு டியூட்டி சிஸ்டரிடம் அவளைக் காட்டி ஏதோ விளக்கம் தந்து கொண்டிருந்தாள்.

"ஆமா சுகந்தி, ஏற்கெனவே மோசமா இழுத்துக் கிட்டிருந்த கேஸ்தான்! உனக்குத்தான் தெரியுமோ! இன்னிக்கு எட்டு மணிக்கு திடீர்னு சீரியஸ் ஆயிடுச்சு! சீஃப் வந்து பார்த்துட்டுப் போயிட்டாரு. இன்னிக்கு நைட்டு தாங்காதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. ஆக்ஸிஜன் போட்டிருக்கு. நீ இவங்களை கொஞ்சம் கவனிச்சு பார்த்துக்கிட்டே இரு! ஏதாச்சு நிலைமை மோசமாச்சுன்னா உடனே டியூட்டி டாக்டரைக் கூப்பிட்டுக் காட்டு சரியா?'

"பேஷன்ட் வீட்டுக்குத் தகவல் சொல்லியாச்சா?'
"அப்பவே ரிசப்ஷன்ல தகவல் சொல்லியாச்சு. பேஷன்டோட தம்பியோ, யாரோ, அவரோட செல் ரீச் ஆகமாட்டேங்குதுன்னு ரிசெப்ஷன் கீதா சொல்லிட்டிருந்தா.'
"ஆமா, கிழவி நாலு நாளா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு பினாத்திக்கிட்டே இருக்காளே! அவன் பார்க்க வரலியா?'

"இல்லை, சுகந்தி! அவன் மிலிட்டரியிலே இருக்கானாம். அவனுக்குத் தகவல் அனுப்பியிருக்காங்க! அவனப் பார்த்துட்டுத்தான் உயிரை விடணும்னு கிழவி துடியாத் துடிக்குது! அவன் இன்னி வரைக்கும் வரலை. எப்போ வருவானோ! எங்கே இருக்கானோ!'
"சரி நீ போ! நான் பார்த்துக்கிறேன்!' என்று சொல்லி நைட் டியூட்டி சிஸ்டர் சுகந்தி அவளுக்கு விடை கொடுத்தாள்.

ஐ.சி.யூ. கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வு கொண்டிருந்தது. அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தவர்களின் ஷூக்களின் ஓசையும் நின்று போயிற்று.

சுகந்தி தன் டேபிளுக்குச் சென்று, பேஷண்டுகளின் கேஸ் ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம்... யாரோ ஐ.சி.யூ.வில் அனுமதியின்றி உள்ளே நுழைந்து நடக்கும் சப்தம். தலையைத் தூக்கிப் பார்த்த சுகந்தியின் கண்களில். அவன் தென்பட்டான். நல்ல வாட்ட சாட்டமாக, ஆறடி உயரத்திற்கு, இராணுவ உடையணிந்து கம்பீரமாகத் தென்பட்டவன், நேராக கிழவி கமலம்மா படுத்திருந்த கட்டிலை நோக்கி செல்ல.. திடுக்கிட்டு எழுந்த சுகந்தி, "ஹலோ! யார் நீங்க? இது ஐ.சி.யூ' என்றவாறே அவனைத் தடுத்து நிறுத்த முயற்சிக்க...
... சட்டென்று அவன் யாரென்று புரிந்து விட்டது.

"ஹலோ சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க! உங்களைப் பார்க்கணும்னுதான், உங்க அம்மா உயிரைக் கையிலே பிடிச்சுட்டு இருக்காங்க! இரண்டு நிமிஷம் பார்த்துட்டு வெளியிலே போயிடுங்க!' என்று அவசரப்படுத்தினாள்.

அவள் சொல்வதை சற்றும் கவனிக்காத அந்த வாலிபன், கமலம்மாவின் அருகே சென்று அமர்ந்து, அவள் கைகளைப் பிடித்து கொள்ள.. அரை மயக்கத்திலிருந்த கிழவியின் கண்கள் இலேசாகத் திறந்தன. வியப்பினாலும், மகிழ்ச்சியினாலும், அவளது முகத்தில் பிரகாசம் தோன்றியது.
அவள் முகத்துருகே நெருங்கிக் குனிந்த அவன், அவள் கண்களை நேராகப் பார்த்து "அம்மா! அம்மா! நான் வந்துட்டேம்மா! என்னை பாரு! நான் தான்! என்னைத் தெரியுதா?'
கிழவியின் கண்களில் பிரவாகமாகக் கண்ணீர் ஓட, அவள் தன் கைகளை உயர்த்தி, அவனை தழுவ முயன்றாள்.

"சார்! சார்! அவங்க எமோஷன் ஆயிட்டா ப்ராப்ளம் ஆயிடும். நீங்கள் வெளியே போயிடுங்க! டாக்டர் பார்த்தா திட்டுவார்' என சுகந்திபதறினாள். அதை அவன் பொருட்படுத்தவில்லை.
"அம்மா! இனிமே உன்னை விட்டு போகமாட்டேன், உனக்குப் பிடிக்காத இந்த மிலிட்டரி வேலையை விட்டுடறேன். எப்பவும் உன்கிட்டயே இருப்பேன், இது சத்தியம்!'
கிழவியின் கரங்கள் அவனை இறுக்கப் பிடித்துக் கொள்ள, அவள் உடல் உணர்ச்சிவசப்பட்டு இலேசாகக் குலுங்கியது. அள் உதடுகள் துடித்தன.

"ஐயோ சார்! சொன்னா கேளுங்க! வெளியே போங்க டாக்டர் வந்தார்ன்னா..'
"சுகந்தி, அங்கே என்ன சத்தம்? அது யார் இந்த வேளையிலே?' என்று கேட்டுக்கொண்டே ட்யூட்டி டாக்டர் அங்கு வர, அப்போதும் அவன் எழுந்திருக்கவில்லை.

சுகந்தி அவன் யாரென்று தெரிவிக்க, சற்று யோசித்த டாக்டர், "பேஷண்டுக்கு மல்டி ஆர்கன் ஃபெயிலியர்! பல்ஸ் இறங்கிக்கிட்டே வருது! எந்த நிமிஷமும் கொலாப்ஸ் ஆகலாம். உயிர் போற நேரத்திலே இந்த அம்மாவோட பிள்ளை பக்கத்திலேயே இருக்கட்டும். அதனாலே பரவாயில்லை! மத்த பேஷன்ட் டிஸ்டர்ப் ஆகாமப் பார்த்துக்க!' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஆங்காங்கே சில பேஷன்டுகள் முனகும் ஓசை, சிலர் புரண்டுபடுக்கும் ஓசை தவிர, மற்ற எந்த ஒலியும் கேட்காத அந்த இடத்தில், அவன் கிழவியிடம் சன்னமான குரலில் பேசுவது மட்டும் விசித்திரமாக ஒலித்தது.
அவனது ஒர கை அவளது வலது கையைப் பற்றியிருக்க, மற்றொரு கை அவளை அன்புடன் வருடியது.

அவன் உதடுகள் மட்டும் மெதுவாக அசைந்தன. நிச்சயமாக அவன் பேசுவதும் எதுவும் அவளது காதில் விழுவது சாத்தியமில்லை. அவளால் எதுவும் பேசவும் முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு, அவளுடைய இருங்கி, பஞ்சடைந்த கண்கள் அவன் முகத்திலேயே பதிந்திருந்தாலும், அவளால் அவனைத் தெளிவாகப் பார்க்க முடிந்ததா என்றே சந்தேகமாய் இருந்தது. அவளுடைய இதயம் மட்டும் அவனுடன் பேசிக் கொண்டிருந்ததோ என்று தோன்றியது.

சுகந்தி அருகில் ஒரு சேரில் அமர்ந்து அவர்கள் இருவரையுமே கூர்ந்துக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஐ.சி.யூ.வின் இந்த ஜீவ மரணப் போராட்டங்கள் அவளுக்குப் புதிதில்லை என்றாலும், மரணத்தின் தலைவாயிலில் நின்று கொண்டிருக்கும் மிக வயதான ஒரு தாய்க்கும், மரணத்தை தினமும் போர்க்களத்தில் சந்திக்கும் ஒரு மகனுக்கும் இடையேயான அன்பு பரிமாறல் அவளை நெகிழ வைத்தது.

அந்த சூழ்நிலையின் இறுக்கம் தாளாமல், சுகந்தி மற்ற பேஷன்டுகளின் பக்கம் ஒரு ரவுண்டு போய் விட்டு வரும்போது, திடீரென ஏதோ ஒரு ஒலி கேட்டுத் திரும்ப, கிழவியின் மூச்சு பலமாக இரைப்பதையும், பிறகு மூச்சு அடங்கித் தலை சாய்வதையும் கண்டு, பரப்பரப்புடன் டியூட்டி டாக்டரை அழைத்தாள். அவர் உடனே கமலம்மாவைப் பரிசோதித்த போது எல்லாம் முடிந்திருந்தது.

"ஐ ஆம் சாரி! உங்க அம்மா காலமாகிவிட்டாங்க!' என்ற டாக்டர், அப்போதும் அமைதியாக அமர்ந்திருந்த வாலிபனை பார்த்து, சற்றுத் தயங்கியபின், "சில ஃபார்மாலிடீஸ் பாக்கி இருக்கு.. சில டாக்குமென்ட்ஸ்ல சைன் பண்ணணும். பாடி ரெடி பண்ண கொஞ்ச நேரம் ஆகும்' என்றவர், சுகந்தியை பார்த்து "அக்கவுண்ட்ஸ்ல பில் ரெடி பண்ண சொல்லிடு! என்றவர் மீண்டும் அவனைப் பார்த்து, கொஞ்சம் என் ரூமுக்கு வர்றீங்களா?' என்றார்.

மிகவும் நிதானமாக எழுந்து அந்த வாலிபன் டாக்டரையே சற்று நேரம் உற்றுப் பார்த்தான். பிறகு, மிக மெதுவான குரலில், "டாக்டர் பேஷன்டோட சொந்தக்காரர்களுக்கு தகவல் அனுப்புங்க' என்றான்.

டாக்டர், சுகந்தி இருவருமே திகைத்து நின்றனர்!
"சொந்தக்காரங்களா? நீங்க பேஷண்டோட சொந்த மகன் தானே?'
"இல்லை! நான் இவங்க மகனில்லை!'
"என்ன? நீங்க மகன் இல்லையா? பின்னே நீங்க யாரு?'
"ஸாரி, இவங்க யாருன்னே எனக்குத் தெரியாது'

"எனன விளையாடறீங்களா? மணிக்கணக்கா, அவங்க கிட்ட உட்கார்ந்து சொந்த பிள்ளை மாதிரி உறவு கொண்டாடிட்டு, இப்ப நீங்க யாரோ, அவங்க யாரோன்னு சொல்றீங்களே?'
"அதுதாங்க உண்மை! அவங்க யாருன்னே தெரியாது. அவங்க பிள்ளை யாருன்னும் தெரியாது'
"ஹலோ கொஞ்சம் புரியற மாதிரி பேசுங்க!'

"சொல்றேன்! நான் என் சித்தப்பாவை ஐ.சி.யூவில பார்க்க வந்த போது, அவர் ஜெனரல் வார்டுக்குப் போயிட்டாருன்னு தெரிஞ்சுது. அப்பத்தான் இந்த சிஸ்டரும் இன்னொரு சிஸ்டரும் பேஷன்ட் கமலம்மா பெட் கிட்ட நின்னுப் பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டேன். இந்த அம்மாவைப் பார்த்தேன். அரை மயக்கத்தில் இருந்தாலும், இவங்க பார்வையிலே ஓர் ஏக்கம், ஒரு தேடல் தெரிஞ்சுது. சாகப்போற தன் கடைசி நேரத்திலே தன் மகனைப் பார்க்கத் துடிக்கிற ஒரு தாயோட பரிதவிப்பு தெரிஞ்சது. உடனே எனக்கு, எங்க அம்மா நினைவு வந்தது.'

சற்றுப் பேச்சை நிறுத்தி, வானை நோக்கிப் பார்த்த அவன், தன் பழைய துயர நினைவுகளில் மிதந்தாள்.
"ஆர்மியிலே, இந்தியா பாகிஸ்தான் பார்டர்ல எனக்கு போஸ்டிங் இருந்தப்போ, என் அம்மா காலமாயிட்டாங்க. நான் ஊருக்கு வர்றதுக்குள்ளேயே எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு.

சாகறதுக்கு முன்னாடி ஒரு தடவையாவது என்னைப் பார்க்கணும்னு துடிச்ச என் அம்மா சரவணா! சரவணா னு புலம்பிக்கிட்டே உயிரை விட்டாங்கன்னு கேள்விப்பட்டு, என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்தது. அந்திமக் காலத்திலே அவங்க ஆசைய நிறைவேற்றாத பாவியாப் போயிட்டேனேன்னு நெஞ்சு புண்ணாகி, இத்தனை நாள் தவிச்சேன்...'
அவன் குரல் தழுதழுத்தது. தன் கீழ் உதட்டை அழுத்தமாகக் கடித்துக் கொண்டான்.

"இந்த அம்மாவைப் பார்க்கறச்சே., என் அம்மாவைப் பார்க்கிற மாதிரி இருந்தது. என் அம்ாவுக்கு இப்படித்தானே என்று என்னைப் பார்க்கணும்னு துடிச்சிருப்பாங்க.

இன்னிக்கு இங்கேயும் அதே நிலைமைத்தான். இவங்களும் மகனை பார்க்கத் துடிச்சுகிட்டு இருக்காங்க! ஆனா அவன் எப்போ பவருவானோ, என்னமோ? அதான், அவ்ஙக மகனா நடிச்சேன். மிலிட்டரி யூனிஃபார்மிலே இருந்த என்னை, அரை மயக்க நிலையிலே இருந்த இவங்க, என்னை தன் மகனா நினைச்சுட்டாங்க!

அந்த நினைப்புலேயே நிம்மதியாய்ப் போய் சேர்ந்துட்டாங்க! இன்னிக்குத்தான் என் மனசும் நிம்மதி அடைஞ்சுது. இந்த அம்மாவோட ஆத்மாவும் நிச்சயமா சாந்தி அடையும்!'

மீண்டும் ஒருமுறை, மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்த கமலம்மாவை சற்று நேரம் பார்த்தபின், மிலிட்டரி யூனிஃபார்ம் அணிந்த அந்த வாலிபன் அமைதியாக வெளியே செல்ல, டாக்டரும், சிஸ்டரும் பிரமித்து நின்றனர்.

- லட்சுமி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 7:31 pm

ரொம்ப நெகிழ்வான கதை புன்னகை .......எனக்கு ரொம்ப பிடித்து விட்டது !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 28, 2014 7:35 pm

ராணுவ வீரனிடத்து இரக்கம் இருக்கும் என்றும்... அருமையான கதை அம்மா.....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 7:46 pm

M.M.SENTHIL wrote:ராணுவ வீரனிடத்து இரக்கம் இருக்கும் என்றும்... அருமையான கதை அம்மா.....
மேற்கோள் செய்த பதிவு: 1100147''

நன்றி செந்தில்................உங்க பதில் இல் இருந்த 'ம்' ஐ எடுத்துவிட்டேன்.....................ராணுவ வீரர்களிடம் நம்மைவிட இரக்கம் பாசம் ரொம்ப அதிகமாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக