புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_m10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_m10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_m10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10 
3 Posts - 6%
heezulia
மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_m10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_m10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_m10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_m10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_m10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_m10மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 25, 2014 7:52 am

மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  QvvfC2cMSfGCaCtOTiVV+E_1414154041
-
-
"அம்மா, என் பள்ளிக்கூடத்தின் வாசலில் என்னை மாதிரி
ஒரு பையன் தினமும் அவன் அப்பாவுடன் செருப்பு
தைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஏன் படிக்கப்
போகாமல் வேலை செய்து கொண்டிருக்கிறான்?'
-
8 வயது மகனின் எதிர்பாராத கேள்விக்கு "அவனும்
உழைத்தால்தான் அந்தக் குடும்பத்தினர் சாப்பிடமுடியும்'
என்ற பதிலை தந்தார் அந்தத் தாய்.
-
"அப்படியானால் அவன் படித்து வேறு வேலைக்கு போகவே
முடியாதா?' என்ற அடுத்த கேள்விக்கு அம்மாவால் உடனே
பதில் சொல்ல முடியவில்லை.
-
விதிஷா என்பது போபால் நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில்
உள்ள சின்னஞ்சிறிய கிராமம். அங்கே ஒரு மத்தியதர
குடும்பத்தில் தந்தையையிழந்து தாயாரால் வளர்க்கப்பட்ட
கைலாஷ் சத்யார்த்திதான் இந்தக் கேள்விகளைக் கேட்ட
சிறுவன், இன்று அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றிருக்கிறார்.
-
சிறு வயதிலிருந்தே அடிமனத்தில் இவருக்கு எழுந்த கேள்வி
"ஏன் சில குழந்தைகள் மட்டும் மற்ற குழந்தைகள் போல
சந்தோஷமாக இல்லாமல் கஷ்டப்பட்டு வேலை செய்ய
வேண்டும்?' என்பதுதான். படிக்கும் காலத்தில் இவர்களுக்கு
உதவிகள் செய்து கொண்டிருந்தாலும் இதை ஒழிப்பது
எப்படி என்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தது.
இன்ஜீனியரிங் படிப்பை முடித்து பணியில் சேர்ந்தபோதும்
இதற்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம்
தீவிரமானது.
-
இந்தத் துயரத்தை வேரோடு வெட்டிச் சாய்க்க 1980ல் தனது
26ஆம் வயதில் "பச்பச் பசாவோ அந்தலன்' (குழந்தை பருவத்தை
காப்போம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அறவழிப்
போராட்டத்தைத் துவங்கினார். நேரடியாக காவல்துறையை
அணுகி புகார் செய்தார் புகார் செய்தவருக்கு ஆபத்து
நேரிடலாம் என்பதால், இந்த அமைப்பின் மூலம் குழந்தைத்
தொழிலாளர்களை மீட்க வழி செய்தார்.
-
இங்கு வரும் புகார்களை வைத்து அமைப்பில் உள்ள
தன்னார்வலர்கள் முதலில் அங்கு நடக்கும் அவலங்களை
ரகசியமாக கண்காணிப்பார்கள். புகார் உறுதிசெய்யப்
பட்டதும் அந்த ஊரின் லோக்கல் மாஜிஸ்திரேட் மற்றும்
காவல்துறை உதவியுடன் ரெய்டு நடத்தப்பட்டு
குழந்தைகளை மீட்பார்கள். பின்னர் சத்யார்த்தியால்
ஆரம்பிக்கப்பட்ட முக்தி ஆசிரமத்தில் அக்குழந்தைகள்
சேர்க்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்படும்
வரை தங்கவைக்கப்படுவார்கள்.
-
தற்போது தில்லியில் வசித்து வரும் 60 வயதாகும்
கைலாஷ் சத்யார்த்தி, 1990ஆம் ஆண்டு முதல் குழந்தைத்
தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில்
போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில்
இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80000
குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து
மீட்டு மறுநாழ்வு அளித்துள்ளது. குழந்தைகளுக்குக் கல்வி
அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது
ஒரு குற்றம் என்று கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத்
திண்டாட்டம், நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை
ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்தக்
கருத்துக்கள் பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்
பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் உருவானதில்
கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உண்டு.
-
சினிமா, அரசியல், பாலியல் குற்றங்கள் பற்றி அதிகம் பேசும்
மீடியாக்கள் இவரை போன்றவர்களை பற்றி மிகக்
குறைவாகவே பேசுவதால், நம் நாட்டுக்காரரான இவரைப்
பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.

ஆனால் பிபிசி, சின்பிசி போன்ற ஊடகங்கள் இவரது
கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவை பற்றி நிறைய
ஆவணப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள்,
விழிப்புணர்வு படங்கள் வெளியிட்டு உலகளவில் தாக்கத்தை
ஏற்படுத்தியிருக்கின்றன.

இவரது தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர்
ஏகப்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறார். அமெரிக்க அதிபர்
கிளிண்டன் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார்.

உலகின் 144 நாடுகளில் இவரது அமைப்புக்குத் தொடர்புகள்
உண்டு. இதன் மூலம் அங்குள்ள குழந்தைகளை காப்பாற்றவும்
உதவுகிறார். சாக்ஸ் என்ற அமைப்பின் தலைவராகவும்
இருக்கிறார். இது தெற்காசியா முழுவதும் உள்ள தன்னார்வ
நிறுவனங்கள் உதவியுடன் குழந்தைத் தொழிலாளர்களை
வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களைக் கண்காணிக்கிறது.

நாட்டின் அதிபர்களும், பிரதமர்களும் உறுப்பினராக இருக்கும்
யுனஸ்கோவின் உயர்மட்டக்குழுவில் இவரும் ஒரு உறுப்பினர்.
இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட 278 பெயர்களில் இவர்
தேர்ந்தெடுக்கப்பட்டிக்கிறார். இதுவரை இவ்வளவு பெயர்கள்
பரிந்துரைக்கப்பட்டதில்லை. 2000ஆம் ஆண்டில் உலகில்
குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 246 மில்லியன்
(ஒரு மில்லியன் = 10 லட்சம்) இன்று அது 168 ஆக
குறைந்திருக்கிறது. இந்த நிலைக்கு கைலாஷ் சத்யார்த்தியின்
பங்கு முக்கியம் வாய்ந்தது என்கிறது நோபெல் பரிசுக்
குறிப்பு.
-
தில்லியில் கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும்
மருமகள் என முழுக் குடும்பமே இவரது அமைப்பில் ஈடுபட்டு
உதவுகிறார்கள்.
-
இந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசை இவர்
பாக்கிஸ்தான் மலாலாவுடன் இணைந்து பெறுகிறார்.
இதுவரை நோபெல் பரிசுபெற்றவர்களின் சராசரி வயது 60.
முதல் முறையாக 17 வயதுப் பெண் பரிசு பெறுகிறார்.
இவர் கைலாஷûடன் இணைந்தும் உலக குழந்தைகள்
கல்விக்காகவும் செயல்படுவேன் என அறிவித்திருக்கிறார்.
-
பரிசு அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் மோடி "நாட்டுக்கே பெருமை'
எனப் பாராட்டியிருக்கிறார். பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும்
வாழ்த்துக்கள் மழையாகக் கொட்டின. அதில் ஒன்று பாடகர்
எஸ்.பி.பி.யின் பேஸ்புக் கமென்ட். மலாலாவின் பேச்சு என்
மனதைத் தொட்டது.

"எங்கள் இருவருக்கும் கிடைத்திருக்கும் இந்தக் கௌரவம்,
தலைவர்கள், அரசியல்வாதிகள், ராணுவத் தளபதிகளின்
கண்களைத் திறக்கட்டும். இனம், மதம், ஜாதி போன்ற நம்மைப்
பிரிக்கும் அற்ப விஷயங்களுக்கு அப்பாற்பட்டது மனிதம்.
கடவுளுக்கு அடுத்தபடியாக மதிக்கப்பட வேண்டியது அது
என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்' என்று பேசியிருக்கிறது
இந்தக் குழந்தை.
மலாலா "நீங்கள், அவர்களை மன்னித்துவிடுங்கள்'. உலகம்
உங்கள் தன்னலமற்ற பணிகளை பெரிதும் மதிக்கிறது.
என்பதுதான் எஸ்.பி.பி.யின் கமென்ட்.
-
-------------------------------------

- ரமணன்
நன்றி-- கல்கி





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 25, 2014 8:00 am

மழலைக் காவலர் கைலாஷ் சத்யார்த்தி  SBaG0PcTO6NYhytby9lg+102114CAChildLaborNobelwinner_full_600
--
HIS AWARDS LIST :

2014: Nobel Peace Prize
2009: Defenders of Democracy Award (US)
2008: Alfonso Comin International Award (Spain)
2007: Gold medal of the Italian Senate (2007)
2007: recognized in the list of “Heroes Acting to End Modern Day Slavery” by the US State Department
2006: Freedom Award (US)
2002: Wallenberg Medal, awarded by the University of Michigan
1999: Friedrich Ebert Stiftung Award (Germany)
1998: Golden Flag Award (Netherlands)
1995: Robert F. Kennedy Human Rights Award (US)
1995: The Trumpeter Award (US)
1994: The Aachener International Peace Award (Germany)
1993: Elected Ashoka Fellow (US)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக