புதிய பதிவுகள்
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
43 Posts - 47%
heezulia
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
1 Post - 1%
Rutu
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
1 Post - 1%
raajmithun
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
231 Posts - 43%
heezulia
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
24 Posts - 4%
i6appar
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
13 Posts - 2%
prajai
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குழந்தை மனம்! Poll_c10குழந்தை மனம்! Poll_m10குழந்தை மனம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை மனம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 27, 2014 7:35 pm

வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த அப்பா முத்துவின் பின்னால் சிணுங்கியபடி நின்று கொண்டிருந்தாள் ரோஜா.

''சொன்னா கேளும்மா... அங்க கல்லும், மண்ணுமா கிடக்கும். அப்பா வேலைக்குப் போனா, திரும்ப பொழுது சாஞ்சுடும்; நீ அங்க வந்து என்னா செய்யப் போறே...'' என்றான் முத்து.

''ஸ்கூல் லீவு தானேப்பா... அங்க வந்தா எனக்கு பொழுது போகும்... ப்ளீஸ்ப்பா... நானும் வரேன்.''
காபி கொண்டு வந்த அகிலா, மகள் கணவனிடம் கெஞ்சுவதைப் பார்த்து, ''இன்னைக்கு ஒருநாள் தானே போனாப் போகுது கூட்டிட்டு போங்க,'' என்றவள், ''ரோஜா... அங்க போயி அப்பாவ தொந்தரவு செய்யக் கூடாது; அப்பா சொல்றதக் கேட்டு, எங்கேயும் போகாம அப்பா பக்கத்திலேயே இருக்கணும்,'' என்றாள்.
''சரி... அம்மாவும், பொண்ணுமாக முடிவு செய்துட்டீங்க; இனி, நான் சொன்னா கேட்கவா போறீங்க...அவளுக்கு நல்ல கவுனாக போட்டு அனுப்பு,'' என்றான் முத்து.

கொத்தனார் வேலை பார்க்கிறான் முத்து. திருமணமாகி ஐந்து வருடங்கள் கழித்துப் பிறந்தவள் என்பதால் ரோஜா மீது, கணவன், மனைவி இருவருக்கும் அளவற்ற அன்பு. நான்காம் வகுப்பு படிக்கும் மகளுக்கு, தங்கள் கஷ்டத்தை சொல்லாமல், தேவையானதை அவளுக்கு வாங்கிக் கொடுத்து, நல்லபடியாக வளர்த்து வந்தனர்.
முத்து, வாசலில் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுக்க, சந்தோஷமாக ஏறி உட்கார்ந்து கொண்டாள் ரோஜா.
சாப்பாட்டுக் கூடையை கணவனிடம் கொடுத்த அகிலா, ''என்னங்க, மழை நாள் ஆரம்பிக்கப் போகுது... வீடு பிரிச்சு வேலை பார்க்கணும்; போன மழைக்கு நிறைய இடத்தில ஒழுகிடுச்சு. சொன்னா காதிலே வாங்க மாட்டேங்கறீங்க,'' என்றாள்.

''பணம் இல்லாம என்னத்த செய்யறது... பாப்போம்,'' என்று சொல்லி, புறப்பட்டான்.
அந்த பிரமாண்ட வீட்டின் முன், சைக்கிளை நிறுத்தினான்.
''அப்பா, இதுதான் நீ வேலை செய்யற வீடாப்பா,'' என்று ஆச்சரியம் மேலிட கேட்டாள் ரோஜா.
''ஆமாம்மா. அப்பா கட்டின வீடுதான்; நல்லாயிருக்கா...''

''ம்... ஜோரா இருக்கு; எவ்வளவு பெரிய வீடு...'' என்றபடி முத்துவின் கைபிடித்து உள்ளே நுழைந்தாள்.
'என்ன முத்து, உன் மகளா... வேலைக்கு வரும்போது கூட்டிட்டு வந்திருக்கேயே...' என்று வேலை பார்க்கும் ஆட்கள் கேட்டனர்.

''ஆமாம்பா... ஒரே அடம் பண்ணி என் கூடவே கிளம்பிடுச்சு,'' என்று சொன்னவன், ''ரோஜா... வீட்டு வேலை முடிஞ்சு, உள்ளே பெயின்ட் வேலை நடக்குது; எதிலேயும் கையை வைக்காம, உள்ளே போய் சுத்தி பாத்துட்டு வா; நாங்க வெளியே காம்பவுண்ட் சுவர் கட்டற வேலை பாக்கிறோம்,'' என்றான்.

வீட்டினுள் நுழைந்து ஒவ்வொரு அறையாகப் பார்த்தாள் ரோஜா. 'இந்த வீடு எவ்வளவு அழகாக இருக்கிறது... பாத்ரூம் எல்லாம், 'வழவழ'வென்று, 'டைல்ஸ்' ஒட்டப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல இருக்குதே...' என நினைத்து, ஆச்சரியம் ததும்ப வீட்டை வளைய வந்தாள்.

வெளியில் செங்கல்களை அடுக்கி சிமென்டை பூசிக் கொண்டிருந்த அப்பாவிடம் ஓடிவந்தாள் ரோஜா.
''அப்பா, இந்த வீடு ரொம்ப அழகா இருக்குப்பா. நிறைய அலமாரி, நாலு பாத்ரூம், பெரிய அடுப்படி எல்லாம் இருக்கு,'' என்றாள்.

''நம்ப மாதிரி ஆளுங்க எல்லாம் இத மாதிரியான வீட்டை கட்டத்தான் முடியும்; அதை அனுபவிக்க முடியாது,'' என்று சாந்து சட்டி தூக்கியபடி வந்த ஒரு கிழவி சொன்னாள்.

''ஏ... கிழவி, இதென்ன குழந்தைகிட்ட பேசற பேச்சா... ரோஜா, அதோ உள்ளே மணல் கொட்டிக் கிடக்கு பாரு... அங்கே போய் நிழல்ல விளையாடு,'' என்று முத்து சொல்ல, ''சரிப்பா,'' என்று கூறி, சிட்டாக ஓடினாள் ரோஜா.
மணலைக் குவித்து, கோபுரம் கட்டி விளையாடிக் கொண்டிருந்த ரோஜா, படகு போல பெரிய கார் வந்து நிற்பதைப் பார்த்தாள். அதிலிருந்து இரண்டு ஆண்களும், ஒரு பெண்மணியும் இறங்க, அவள் கைபிடித்து, ரோஜாவின் வயதையொத்த சிறுமி ஒருத்தி இறங்கினாள். பளபளக்கும் ஆடையில், தேவதையாக சிரித்தபடி வரும் அவளை, வைத்த விழி வாங்காமல் பார்த்தாள் ரோஜா.

பவ்யமாக வேலையாட்கள் அவர்கள் முன் நிற்க, ''என்ன முத்து, கான்ட்ராக்டர் வரலையா?''
''வர்ற நேரம்தான் சார்; உள்ளே வேலையெல்லாம் முடிஞ்சு, பெயின்டிங் வேலை நடந்திட்டிருக்கு போய் பாருங்க,'' என்றான்.

''அடுத்த மாசம், கிரகப் பிரவேசம் வச்சிருக்கு; அதக்குள்ள எல்லா வேலையும் முடிஞ்சா சரி,'' என்றபடி அவர்கள் வீட்டினுள் நுழைய, அங்கே மணலில் விளையாடிக் கொண்டிருக்கும் ரோஜாவைப் பார்த்தாள் அந்தச் சிறுமி.

தொடரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 27, 2014 7:35 pm

பால்கனி கதவைத் திறந்து வந்த சிறுமி, ரோஜாவைப் பார்த்து, ''உன் பேரென்ன... என்ன விளையாடிட்டு இருக்கே,'' என்று கேட்டாள்.

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த ரோஜா, ''என் பேரு ரோஜா; நான் கோவில் கட்டி விளையாடறேன். கோபுரம் கட்டியாச்சு; குளம் கட்டப் போறேன். உன் பேர் என்ன... நீ எந்த கிளாஸ் படிக்கிறே?''
''நான் வர்ஷினி; போர்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்.''

''ஐ... நானும் அதேதான்; நாலாம் வகுப்பு பி செக் ஷன், நகராட்சி பள்ளி.''
''இந்த ரூம் என்னோடது; இந்த பால்கனி, நான் நின்னு வேடிக்கை பாக்கறதுக்காக அப்பா கட்டச் சொன்னாரு. உள்ளே நிறைய அலமாரி இருக்கு; அதில் எல்லாம் என்னோட விளையாட்டு சாமான்கள வச்சுக்கப் போறேன்.''
''உனக்கு தனியா ரூமா... நிறைய விளையாட்டு சாமான் வச்சிருக்கியா...''

''ஆமாம்; ரிமோட் கார், டெடி பேர், பார்பி பொம்மை, ஏரோபிளேன், வீடியோ கேம்ஸ்ன்னு நிறைய இருக்கு.''
''நான், வீட்டுல இரண்டு மரப்பாச்சி பொம்ம வச்சிருக்கேன்; என்னோட விளையாட வர்றியா?''
''ம்கூம்... அம்மா திட்டுவாங்க; நான் போட்டிருக்கிற கவுன் மண்ணிலே விளையாடினா அழுக்காயிடும்.''
''என்னோட கவுனும் அழுக்காகத்தான் இருக்கு; ஆனா, எங்கம்மா அழுக்கு போக சுத்தமா துவைச்சிடுவாங்க.''

அதற்குள் அங்கு வந்த சிறுமியின் தாய், ''வர்ஷினி, வா போகலாம்; நேரமாச்சு,'' என்று கூறி அழைத்துச் சென்று விட்டாள்.

அம்மா கட்டிக் கொடுத்த புளி சாதத்தை, அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட்டபடி, ''அப்பா... காரில் வந்துட்டு போனாங்களே... அவங்கதான் இந்த வீட்டுக்கு வரப்போறாங்க; உனக்குத் தெரியுமா...'' என்றாள்.
''ஆமாம்மா. அவங்க தான் இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்க.''

''அப்பா, அவங்களோட வந்துச்சே... அந்த பொண்ணு வர்ஷினி, அவளுக்கு மாடியிலே தனி ரூம் கொடுத்திருக்காங்களாம். அதோ பால்கனி தெரியுதே பார்த்தீங்களா... அதுதான் அவ ரூம். நிறைய விளையாட்டு சாமான்கள் வச்சிருக்காளாம்; அதையெல்லாம் அந்த ரூமில இருக்குற அலமாரியில வச்சுப்பாளாம்; அவளும் நாலாம் வகுப்புதான் படிக்கிறா. விளையாட கூப்பிட்டேன்; கவுன் அழுக்காயிடும், வரமாட்டேன்னு சொல்லிட்டாப்பா.''

பதில் சொல்லாமல் மவுனமாக சாப்பிட்டான் முத்து. 'இந்த மாதிரி பெரிய மனுஷங்க புழங்கற இடத்துக்கெல்லாம் ரோஜாவ அழைச்சுட்டு வந்திருக்கக் கூடாது. அவளையொத்த சிறுமி, தன்னிடம் இருப்பதை பெருமையாக சொல்லியிருக்கிறா. ஒழுகுற ஓட்டு வீட்டில இருக்கும் என் பெண்ணுக்கு, பெருமைப்பட என்ன இருக்கு... இனிமேல் இந்த மாதிரி இடங்களுக்கு கூட்டி வந்து, அந்த பிஞ்சு மனசுல தேவையில்லாத ஆசைகளை வளக்கக் கூடாது...' என்று நினைத்துக் கொண்டான்.
''அப்பா, அந்த வர்ஷினியும், நானும் ஒண்ணுப்பா,'' என்றாள் ரோஜா.
மகளைப் புரியாமல் பார்த்தான் முத்து.

''ஆமாம்ப்பா. அவளும் என்னை மாதிரி நாலாம் வகுப்பு படிக்கிறா; அவங்க அம்மாவைப் போல, என் அம்மாவும் என் மேல பாசமா இருக்காங்க. அவங்க அப்பாவைப் போல நீயும் என்னைப் பார்த்து பார்த்து வளக்கிற. அப்படின்னா, எனக்கும் அவளைப் போல அன்பான அம்மா, அப்பா கிடைச்சிருக்காங்க. நானும் நாலாம் வகுப்புப் படிக்கிறேன்; அப்ப, நானும், அவளும் ஒண்ணுதானே,'' என்றாள்.
அந்த பிஞ்சு மனதில், அந்த பெரிய வீடோ, அவளிடம் இருக்கும் பொருட்களோ, பகட்டான அவள் உடையோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

தனக்கும், அவளுக்குமான ஒப்பீடு அன்பு மட்டுமே! அவளுக்குக் கிடைத்ததுபோல், தனக்கும், தன்மேல் அன்பும், அக்கறையுமுள்ள பெற்றவர்கள் கிடைத்திருக்கின்றனர் என்ற நிறைவே இருக்கிறது. கள்ளமில்லாமல் சிரிக்கும் தன் மகளை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான் முத்து.

பரிமளா ராஜேந்திரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக