ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th

3 posters

Go down

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Empty இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th

Post by krishnaamma Sat Oct 25, 2014 9:14 pm

ஒளிக்க முடியாத தகவல்: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம்!

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Vr2YhF4HSjSt95df5jWs+Tamil_News_large_1098890

அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காஷ்மீருக்கு இச்சட்டம் பொருந்தாது.

இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

எப்போது தொடங்கியது:

2005 மே 11ல் லோக்சபாவிலும், மே 12ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். ஜூன் 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ம் தேதி விஜயதசமி அன்று நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

எப்படி பெறுவது:

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை.

நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம் குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Empty Re: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th

Post by murugesan Sun Oct 26, 2014 11:49 am

பொதுமக்கள் கேட்ட தகவலை சரியானபடி வழங்காத அதிகாரிகள் மீது எந்த வழிமுறையில் நடவடிக்கை எடுக்கலாம்? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Empty Re: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th

Post by krishnaamma Sun Oct 26, 2014 12:11 pm

murugesan wrote:பொதுமக்கள் கேட்ட தகவலை சரியானபடி வழங்காத அதிகாரிகள் மீது எந்த வழிமுறையில் நடவடிக்கை எடுக்கலாம்? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மேற்கோள் செய்த பதிவு: 1099517

முருகேசன், நீங்க தானே வக்கீல் ? ..............எங்களை கேட்கறீங்க புன்னகை ...................நீங்க தான் சொல்லணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Empty Re: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th

Post by சிவனாசான் Sun Oct 26, 2014 2:12 pm

அய்யா வக்கீல் அவர்களே!! சேவை குறைபாடு என நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார்செய்து கேட்ட தகவலை பெறலாம் மன உனைச்சல் நஷ்ட ஈட்டுடன். அல்லது மாநில தகவல்ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடுசெய்தும் கோரிய தகவல்களை பெறலாம். அளிக்காதவர்கள்மீது ஆணையம் தண்டனை (அபராதம்) அளிக்கும்படியும் செய்யலாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Empty Re: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th

Post by சிவனாசான் Sun Oct 26, 2014 2:21 pm

கிருஷ்ணம்மா எந்தசட்டம் மக்களிடத்தில் செல்லுபடி ஆகிறது. சட்டப்படிநடப்பவர் சிலரேதான்.எனவே 2005 தகவல் அறியும் உரிமை சட்டமும் சரியாகசெயல்பட வில்லை என அதற்கென ஓர் சட்ட இயக்கமும் போராடுகின்றது. ஏன் மாநில தகவல் ஆணையமும் விருப்பு வெறுப்புடன்தான் செயல்படுகிறது............சட்டப்படி நேர்மையாக ஓர் உரிமையியல் நீதிமன்றம்போல் செயல்பட அதிகாரமிருந்தும் ...செயல்படல. சாதா மனுபோல் எண்ணி மேல்முறையீடுகளை பார்வேட்செய்து விட்டு காலம் கழிக்கிறது....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Empty Re: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th

Post by murugesan Sun Oct 26, 2014 6:21 pm

வணக்கம்
"சட்டப்படிநடப்பவர் சிலரேதான்.எனவே 2005 தகவல் அறியும் உரிமை சட்டமும் சரியாகசெயல்பட வில்லை என அதற்கென ஓர் சட்ட இயக்கமும் போராடுகின்றது. ஏன் மாநில தகவல் ஆணையமும் விருப்பு வெறுப்புடன்தான் செயல்படுகிறது............சட்டப்படி நேர்மையாக ஓர் உரிமையியல் நீதிமன்றம்போல் செயல்பட அதிகாரமிருந்தும் ...செயல்படல. சாதா மனுபோல் எண்ணி மேல்முறையீடுகளை பார்வேட்செய்து விட்டு காலம் கழிக்கிறது...." இதுதான் சரியான பதில்..
சட்டம் இயற்றுபவர்கள் அதனை செயல்பட விடாமல் இருக்க விடக்கூடாது என்று நினைத்தே சட்டத்தை இயற்றுகின்றனர்.. இருந்த போதிலும் நிவாரணம் பெறுவது என்பது சாமானிய மக்களுக்கு குதிரை கொம்பு என்பதுதான் உண்மை.. ஆகவே இந்த சட்டம் உண்மையில் செல்லாகாசு போன்றது... இந்த சட்டம் வந்த புதிதில் தகவல் தரும் அரசு அதிகாரிகள் பயந்தார்கள். இப்போது RTI மனுவை கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் உண்மை..
"சேவை குறைபாடு என நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார்செய்து கேட்ட தகவலை பெறலாம் மன உனைச்சல் நஷ்ட ஈட்டுடன்" தற்போது நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் இந்த புகார்களை தாக்கல் செய்யமுடியாது.. காரணம் மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தில் "RTI மனுவிற்கு சரியான பதில் வழங்காவிட்டால் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம் என்று எந்த சட்டத்திலும் சொல்லவில்லை " என்று கூறியுள்ளது.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Empty Re: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th

Post by murugesan Sun Oct 26, 2014 6:33 pm

இன்று ஆயிரக்கணக்கான மக்கள் சரியான பதில் தராத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறார்கள். அரசு அலுவலரிடம் ஒரு தகவல் கேட்டு செல்கிறார்கள், அரசு அலுவலர் சரியான பதிலை சொல்ல மறுக்கும்போது நம்ம இந்திய பிரஜை வீராவேசமாக அரசு அதிகாரியை பார்த்து "உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று பேசிவிட்டு ஒரு வக்கீலை போய் பார்த்து பணம் செலவு செய்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்கிறார். அனால் அந்த மனுவிற்கு கண்டிப்பாக சரியான பதில் வராது. அவர்மீது நடவடிக்கை எடுக்க நினைத்தால் உடனே ஒன்னும் முடியாது. நமது தமிழ் மனம் விரைவாக மறக்கக்கூடியது. ஆகவே நமது நண்பர் மேற்படி பிரச்னையை ஒரு வாரத்தில் மறந்து விடுவார். அருமையான இந்த சட்டம் நம்ம அரசு அலுவலர்கலளால் சின்னபின்னம் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதனை மன வேதனையுடன் சொல்கிறேன்..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th Empty Re: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் ! Oct.25th

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum