ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
2ஜி வெடி... திரி ரெடி! Poll_c102ஜி வெடி... திரி ரெடி! Poll_m102ஜி வெடி... திரி ரெடி! Poll_c10 
heezulia
2ஜி வெடி... திரி ரெடி! Poll_c102ஜி வெடி... திரி ரெடி! Poll_m102ஜி வெடி... திரி ரெடி! Poll_c10 
mini
2ஜி வெடி... திரி ரெடி! Poll_c102ஜி வெடி... திரி ரெடி! Poll_m102ஜி வெடி... திரி ரெடி! Poll_c10 
mohamed nizamudeen
2ஜி வெடி... திரி ரெடி! Poll_c102ஜி வெடி... திரி ரெடி! Poll_m102ஜி வெடி... திரி ரெடி! Poll_c10 
Abiraj_26
2ஜி வெடி... திரி ரெடி! Poll_c102ஜி வெடி... திரி ரெடி! Poll_m102ஜி வெடி... திரி ரெடி! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி வெடி... திரி ரெடி!

2 posters

Go down

2ஜி வெடி... திரி ரெடி! Empty 2ஜி வெடி... திரி ரெடி!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 24, 2014 8:39 pm

கடந்த இரண்டு மாத காலமாக பெங்களூருவை மையம் கொண்டு இருந்த கழுகார், இப்போது டெல்லி தகவல்களுடன் நம்முன் ஆஜரானார்.



''வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு, இந்தியா முழுக்க அரசியல்வாதிகள் பலரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2ஜி வழக்கின் தீர்ப்பு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாக டெல்லித் தகவல்கள் சொல்கின்றன. அதுபற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டி வந்துள்ளேன்!'' என்றபடி ஆரம்பித்தார்.

''2ஜி வழக்கு, டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன் விசாரணையில் இருக்கிறது. 2ஜி சம்பந்தமாக இரண்டு வழக்குகள் ஷைனி முன்பு இருக்கின்றன. முதல் வழக்கு சி.பி.ஐ தாக்கல் செய்தது. அது, விதிமுறைகள் மீறப்பட்டு வழங்கப்பட்ட உரிமங்களின் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பது. இந்த வழக்கில் இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. 'நவம்பர் 10-ம் தேதி முதல் இறுதிக்கட்ட வாதம் தொடங்கலாம்’ என்று நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாகித் பால்வா உள்பட 17 பேர்கள். இவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை வைப்பார்கள். அதன் பிறகு சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை வைப்பார். வாதம் முடிந்ததும் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்படும். பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும். டெல்லி சி.பி.ஐ வட்டாரத்தை விசாரித்தால், 'ஜனவரி 15-ம் தேதிக்குள் தீர்ப்பு வந்துவிடும்’ என்று சொல்கிறார்கள்!''

''அவ்வளவு சீக்கிரமாகவா?''

''பெங்களூரு வழக்குக்காவது மனுக்கள் மீது மனுக்களாகப் போட்டு இழுத்தடித்தார்கள். ஆனால், 2ஜி வழக்கு ஆரம்ப கட்டத்தில்தான் தடங்கலைச் சந்தித்தது. இப்போது தடங்கல் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்புதான் கருணாநிதிக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. 'இந்த தீர்ப்பின் மூலம்தான் தி.மு.க-வின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது’ என்றும் தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.''

''ம்!''

''சி.பி.ஐ நீதிமன்றத்தில் உள்ள 2ஜி சம்பந்தப்பட்ட இரண்டாவது வழக்கை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்வது இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது. அதாவது இந்த மாதம் 31-ம் தேதி சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு நடக்கும் என்று கடந்த 20-ம் தேதி ஷைனி அறிவித்துள்ளது, அடுத்த பெரிய நெருக்கடி. '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம்பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்குப் பரிகாரமாக சில தனியார் நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் அளித்துள்ளது. இதில், கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது’ என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்கு தேதி குறித்துவிட்டார் நீதிபதி ஷைனி. முந்தைய சி.பி.ஐ வழக்கில் சாட்சிகளில் ஒருவராக இருந்த தயாளு அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கிறார். இதிலும் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி சரத்குமார், கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் உள்ளிட்ட 10 பேர் வருகிறார்கள். முதல் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கு வேகம் பிடிக்கும் என்கிறார்கள்!''

''அப்படியானால்?''

''டெல்லியில் இப்போதே, 'ஷைனி சுனாமி’ என்று பெயர் சூட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த 20-ம் தேதியே குற்றச்சாட்டுப் பதிவு நடந்திருக்க வேண்டும். ஆனால், நீதிபதி, 'உத்தரவு இன்னும் தயாராகவில்லை. அதனால் அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்’ என்று கூறினார். மத்திய அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞராக ஆனந்த் குரோவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களைத் தாக்கல் செய்வதற்கான அனுமதியைக் கேட்டார். அதற்கு ஷைனி அனுமதி வழங்கினார். அந்த மனுவில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி ரகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தயாளு அம்மாள் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை, சி.பி.ஐ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதாவது, அவர் விசாரணையை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இதுவும் கருணாநிதிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி பார்த்தால், நவம்பர் மாதம் முதல் கோபாலபுரத்தை ஷைனி சுனாமி வெகுவாக தாக்கலாம் என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன. இந்த வழக்குக்குப் பிறகு ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு சூடுபிடிக்கும் என்று சொல்கிறார்கள்!''

''அதனால்தான் கருணாநிதியும் அடக்கி வாசிக்கிறார்!''

''ம்! மூன்று வாரங்கள்தான் கருணாநிதி அமைதியாக இருந்தார். இதோ, ஆரம்பித்து விட்டாரே! 'ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்’ என்ற தலைப்பில் பெங்களூரு வழக்கின் தீர்ப்பு குறித்த மினி தொடரை தொடங்கிவிட்டார் கருணாநிதி. இதுவரை தனது வழக்கமான பாணியில் அறிக்கை விடாமல் அமைதியாக இருந்தார். அவரை ராமதாஸ் கடுமையாகச் சீண்டிவிட்டார். கட்சி நிர்வாகிகளும் 'தலைவர் இவ்வளவு மௌனமாக இருப்பது நல்லதல்ல’ என்றார்கள். இதுவே தி.மு.க-வின் மிகப்பெரிய பலவீனமாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கருணாநிதி இந்தத் தொடரைத் தொடங்கிவிட்டார். உடன்பிறப்புக்குக் கடிதம் பாணியில் எழுதப்படும் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் தனிப் புத்தகமாகவும் கொண்டு வரப்போகிறார்கள். குன்ஹாவின் தீர்ப்பை முழுமையாக மொழிபெயர்த்து 'முரசொலி’யில் வெளியிட்டு வருகிறார்கள். அதுவும் புத்தகமாக வரப்போகிறது. ஏற்கெனவே, தீர்ப்புக்கு முன்னதாக இந்த வழக்கு பற்றி கருணாநிதி எழுதிய கடிதங்கள் அப்போதே புத்தகமாக வந்துவிட்டது. இந்த மூன்றையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கருணாநிதி கட்டளையிட்டுள்ளாராம்!''

''ரஜினிகாந்த் அறிக்கையைப் பார்த்தீரா?''

''ம்! அரசியல், அரசியல்வாதிகள் பற்றிய சர்ச்சைகளில் சமீப காலமாக இறங்காத ரஜினி வலியப் போய் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதி உள்ளார். 'தாங்கள் மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்துக்குத் திரும்பி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களுக்குச் சிறப்பான நேரம் அமைய பிராத்திக்கிறேன். தாங்கள் எப்பொழுதும் நல்ல உடல் நலமும் அமைதியும் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். மேலும், எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ரஜினி அந்தக் கடிதத்தில் மையமாக எழுதி இருக்கிறார். 'தாங்கள் மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்துக்குத் திரும்பி இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்பது சிறையில் இருந்து ஜாமீன் வந்ததற்கான வாழ்த்தாக அமைந்துவிட்டது. இதற்குப் பதில் அளித்து ரஜினிக்கு ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், 'தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் தெரிவித்துள்ள கனிவான, அன்பான உணர்வுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நீண்ட ஆயுள், நல்ல உடல்நலம், செல்வ வளம் மற்றும் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் பார்த்தால் சாதாரணக் கடிதம்தான். ஆனால் எழுதிய சூழ்நிலை முக்கியமானதாக அதனை ஆக்கிவிட்டது!''

''ரஜினியின் நோக்கம் என்னவாம்?''

''பி.ஜே.பி-யில் சேரப்போகிறார், பி.ஜே.பி தன்னுடைய முதலமைச்சர் வேட்பாளராக ரஜினியை அறிவிக்கப் போகிறது, ரஜினி வீட்டுக்கு தமிழிசை தூது போகிறார், அமித்ஷா அடிக்கடி ரஜினியிடம் பேசுகிறார்.... இப்படி பரவும் தகவல்களை ரஜினியே ரசிக்கவில்லை என்கிறார்கள். 'நம்மளோட நிலைமையை மோடி சார் வந்தப்பவே சொல்லியாச்சே! அப்புறம் ஏன் இந்த மாதிரி தகவல் பரப்புறாங்க?’ என்று ரஜினி கேட்டுள்ளார். 'கலைஞர் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேன், என்னைப் பார்க்க அழகிரி வந்துட்டுப் போனார், விஜிட்ட(விஜயகாந்த்) அப்பப்போ பேசுவேன், ராம்ஜெத்மலானி எழுதிய புக்கைக் கொடுத்துட்டு வைகோ பேசிட்டுப் போனார். இப்படி எல்லோரையும் ஒரே மாதிரித்தான் நான் நினைக்கிறேன். இதுல ஒருத்தராகத்தான் மேடத்தை நான் பார்க்கிறேன்’ என்று சொன்னாராம் ரஜினி. 'கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த அரசியல் முடிவுகளையும் ரஜினி எடுக்க மாட்டார்’ என்பதுதான் ரஜினியை அறிந்தவர்கள் சொல்வது!''

''எப்படி இருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்?''

''அப்படியேதான்! வழக்கமான தாடியுடன் வலம் வருகிறார். அவரை முதல்வராக அங்கீகரிக்கிறார்களா என்பதைவிட முதல்வராக அவர் தன்னை நினைக்கிறாரா என்பதே சந்தேகம்தான்! ஒவ்வொரு துறையிலும், பணிகள் என்னென்ன நடைபெற்றுள்ளன என்று அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்குவதற்காகவே பொருட்காட்சி அரசு சார்பில் நடத¢தப்படுகிறது. தற்போது தஞ்சையில் பொருட்காட்சி நடக்கிறது. ஒவ்வொரு துறை சார்பில் வைக்கப்படும் விளம்பரத்தில் ஓ.பன்னீர்செல்வம் படத்தை பிரதானமாக வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதிலும் பொதுப்பணித் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் மெகா சைஸ் படம் வைக்கப்பட்டிருக்கிறது. 'அரசு நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான விளம்பரங்கள், ஃபிளக்ஸ் அளவுகள் எல்லாம் முதல்வரின் அலுவலகத்தில் இருந்துதான் வரும். அப்படித்தான் பொதுப்பணித் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கும் அங்கிருந்துதான் வந்தது. அந்த அளவுப்படிதான் வைத்திருக்கிறோம்’ என்று சொல்கிறார்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள். 'முதல்வராக இருந்தாலும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகத்தான் இருக்கிறேன். எல்லாமே அம்மாதான்’ என்று காட்டுவதற்காகவே இப்படி ஒரு விளம்பரத்தை பொதுப்பணித் துறை சார்பில¢ விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள்!''

''ஓஹோ!''

''இதில் ஒரு சர்ச்சையும் வந்துவிட்டது. தஞ்சை பொருட்காட்சியின் வரவேற்பு வளைவில் ஓ.பி.எஸ் படத்தை பெரிய அளவிலும் ஜெயலலிதா படத்தை சின்ன அளவில் எப்படி போடலாம் என்று அ.தி.மு.க-வினர் தலைமைக்குப் புகார் அனுப்ப ஆரம்பித்துவிட்டார்களாம்'' என்று கழுகார் சொல்ல...

''ஜெயலலிதா படத்தை வைக்கும் பிரச்னைக்கு, ஜெயலலிதாவே ஒரு கட்டளையைப் பிறப்பித்தால் மட்டுமே கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் நிம்மதியாக இருப்பார்கள்!'' என்று நாம் சொல்ல, தலையாட்டியபடி எழுந்த கழுகார், ''மேலிடத்தைச் சுற்றிவரும் மூன்றெழுத்து உயர் அதிகாரி, பரப்பன அக்ரஹாராவில் வீடு பிடித்து தங்கியபடி, டெல்லிக்கும் பெங்களூருக்குமாகப் பறந்தாராம். இந்த விஷயத்தை மத்திய உளவுத் துறையினர் கவனிக்கத் தவறவில்லையாம்'' என்றபடி பறந்தார்!



விகடன்.காம்

ஜூனியர் விகடன்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

2ஜி வெடி... திரி ரெடி! Empty Re: 2ஜி வெடி... திரி ரெடி!

Post by யினியவன் Fri Oct 24, 2014 8:44 pm

அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் ஊழல் செய்த கேடிகள் அனைவரும் சீக்கிரம் உள்ளே போகட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum