புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
25 Posts - 38%
heezulia
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார கவிதை-விகடன் கவிதைகள்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:43 pm



ராமவாணம் ஒளிரும் கணம் - கவிதை
ஜான் சுந்தர், ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையபாரதி


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P94

சிவப்பு விளக்கொளியில் நின்று
குதிரைகள் உறும
நின்று நடுங்கும் தேர்களின்
பின்னெழும்பும் புகை நடுவே
திடுமெனக் காட்சியளிக்கும்
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி
முனைமுறியா பாணங்களை
லாகவமாய் உருவி
சரஞ்சரமாய்த் தொடுக்கிறார்

சுவாசம் முட்டி வரும்
கோபியருக்கு மாத்திரம்
சைக்கிளில் தொங்கும்
அம்பறாத்தூணியிலிருந்து
நறுமணத்தையள்ளி அவர் வழங்க

மன்மதக் கணைகளை
முழக்கணக்கில்
பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி
'மூர்த்தியண்ணா எனக்கு ஜாதிப் பூ’ என்ற கணத்தில்
சுங்கம் சிக்னலின் அத்தனை அம்புகளும்
ஒளிர்கிறது ராமர் பச்சையில்!

விகடன்



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:44 pm



காத்திருக்கும் திமிங்கிலங்கள் - கவிதை
சமயவேல், ஓவியம்: ஸ்யாம்


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P117

பேத்தி சொல்லிவிட்டாள்...
'நாளைக்கு ஒரு நீலத் திமிங்கிலம் படம்
வரைய வேண்டும்’ என.

வெகுகாலத்திற்குப் பிறகு விடிகாலைக் கனவில்
கடலும் வெள்ளமும் சூழ
நீலப்பரப்பில் சிக்கித் தவித்தேன்.

எழுந்தவுடன் சார்ட் பேப்பரை எடுத்து
டேபிளில் விரித்துவைத்து
'தாத்தா இதில் பாதியளவு பெரிய திமிங்கிலம் வரையணும்
மதியம் அப்பா வருவதற்குள் முடித்துவிடுவாயா?’

'அறிவியல் புத்தகத்தில் திமிங்கிலம் இருக்கிறது ஆனால்
புத்தகம் கொண்டுவர மறந்துவிட்டது’ என்றாள்.
'நீ உன் திமிங்கிலத்தையே வரைந்து தா பரவாயில்லை.’

என் திமிங்கிலம் எப்படி இருக்குமாம்
'தாத்தா உன் கம்ப்யூட்டர்ல பாரேன்
நெறையா திமிங்கிலம் இருக்கும்’ என்றாள்.
ரத்திகா போன்ற அன்பான டீச்சர்களின்
அக்கிரமங்கள் பற்றி யோசித்தவாறே
கணினியைத் திறந்தேன்.
ஒரு லட்சம் திமிங்கிலங்கள் இருந்தன

திமிங்கிலங்களின் கடலில்
பென்சிலோடு தத்தளிக்கத் தொடங்கினேன்!

விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:45 pm



ஏன் பூனை வளர்க்கிறோம்? - கவிதை
மகுடேசுவரன், ஓவியம்: மருது


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P32

நம்மில் பலரும்
பூனை வளர்க்கிறோம்.

நாய் வளர்ப்பது காவலுக்கு.
ஆடு, கோழி வளர்ப்பது உணவுக்கு.
பசு, எருமை வளர்ப்பது பாலுக்கு.
காளை வளர்ப்பது காட்டுழவுக்கு.

பயன் கருதி வளர்த்தே
பழகியோர் நாம்.

பூனை வளர்த்து என்ன பயன்?

எலித்தொல்லை என்பீரா?
அதற்கு மாற்று வழியுண்டே.

பூனைக்குச் சந்தை மதிப்புண்டா ?
அதை வளர்த்து விற்க இயலாதே.

அது பால் தருமா?
பால் விற்கும் விலைக்கு
நாம் வாங்கி ஊற்றவேண்டும்.

பாத்திரம் உருட்டும்
முடி உதிர்க்கும்
அது பாட்டுக்கு வரும் போகும்.

பின் ஏன்
பூனை வளர்க்கிறோம்...
கொஞ்சுகிறோம்...
குழந்தையைப்போல் நேசிக்கிறோம்?

ஏனென்றால்
உயிர்களின் மழலையை
நம் உள்ளம் விரும்புகிறது.

நம் காலடியில்
சிற்றுயிரொன்று பணிந்து வாழ்வது
நம் கருணையைப் பெருக்குகிறது.

யார்க்கேனும் உணவிட்டால்
நம் இதயம் நிறைந்துவிடுகிறது.

அபயமளிப்பதில் ஆறுதல் கிடைக்கிறது.

நம் மனம் பல்லுயிரோம்பும் பாங்குடையது.
அந்த வேட்கையை
முடியும் நகமும் முத்து விழிகளும்கொண்ட பூனை
ஏதோ கொஞ்சம் ஆற்றுகிறது.

நாம் பூனை வளர்க்கிறோம்!

விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:46 pm



ஒரு மண்புழுவின் சரிதம் - கவிதை
கரிகாலன், ஓவியம்: செந்தில்


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P45

அலுவலகம் முடிந்து வெளியே வந்த மண்புழு
அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறது

ஆகாயத்தின் எல்லையற்ற தன்மை
அதற்கு சிறிதளவு நம்பிக்கையைத் தருகிறது

அத்தெம்பில் உடலை லேசாகச் சிலுப்பிக்கொள்ளுகிறது

அதன் சிறிய மூளையில் பகல் முழுதும்
சேகரமான குப்பைகள் சிதறித் தெறிக்கின்றன

வாகனங்கள் அலையாய் எழும் சாலைகள்
அதை வீட்டின் வாசலில் கரையொதுக்குகின்றன

குளியலறைக்குள் நுழையும் அம்மெல்லுடலி
தன் இறுகிய தசைகளை தண்ணீருக்குக் கொடுத்து
தியானித்துக்கிடக்கிறது

அவ்வண்ணமது கண்டடையும் தரிசனங்களில்
அலுவலகக் கசப்புகள் கரைந்தோடுகின்றன

தலைதுவட்டும் துண்டை முகர்ந்துபார்க்கும்
அனிச்சை செயலில் அதன் ஒரு செல் பிளவுறுகிறது

பள்ளிவிட்டு வரும் குட்டி மண்புழுவைப்
பார்க்கும்போது கண்களில் மினுங்குகிறது
அதன் நான்காம் அறிவு

மனைவி கொண்டுவந்து வைக்கும்
ஏலக்காயும் இஞ்சியும் கலந்த ஆவிபறக்கும்
தேநீரை உறிஞ்சுகையில்
சுட்டுக்கொள்கிறது அதன் ஐந்தாவது அறிவு

பிறகு வெகு நேரம்
மாய யதார்த்தத்தில் மிதக்கிறது

நாளை அலுவலகம் செல்ல வேண்டுமே என்பது
நினைவுக்கு வருகையில்
விழித்துக்கொள்கிறது அதன் ஆறாம் அறிவு

அவசரமவசரமாய் சன்னலைச் சாத்தி
கதவைத் தாழிடுகிறது

மிகவும் பாதுகாப்பாயுணரும் மண்புழு
தூங்கிப்போய்விடுகிறது

மறுநாள் காலை
அலுவலகத்தில் ஒப்பமிடும்போதுதான்
ஞாபகத்துக்கு வரும்
அதற்கு ஒரு பெயர் இருப்பது!

விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 22, 2014 8:55 am

அனைத்து கவிதைகளும் .... இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் 3838410834 இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் 3838410834
-
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் BS00DAuR0aOsl2Du8o3w+w6nw
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக