ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதோர் காதல் செய்தேன்....!!! Mano Red

Go down

நல்லதோர் காதல் செய்தேன்....!!! Mano Red Empty நல்லதோர் காதல் செய்தேன்....!!! Mano Red

Post by Mano Red Tue Oct 21, 2014 9:42 am

உறைகின்ற நின் முழுமதியில் மயங்கி, சரிந்து
மறைகின்ற என் திருவுருவம் அதிர்வடைய, வந்து
நிறைகின்ற வெண் பால் நிலவே, நெஞ்சத்து
அறைகின்ற கண்மலர் பூவே, என் சிறு கொடியே..!!

கொடியே சூழும் இளந்தளிரே பெண்ணே, பாடும்
படியே என்னை சுருக்கிவிரிக்கும் சுடரே, அன்புப்
பிடியே அர்த்தம் ஆயிரமுள்ள காதலே, உன்னை
அடியேன் தொழ காத்திருக்கிறேன்,என் ஆசையே..!!

ஆசைப் பட்ட அடி நெஞ்சம் ஆருயிர் தேட, உன்
பாசச் சிறையில் என்னுயிர் வேர் அகல, கூந்தல்
வாசம் பட்டு உடல் சிலிர்த்து தெறிக்க, மெல்ல
நேசக் கரம் நீட்டி காதல் தந்தாய், என் பூத்தவளே..!!

பூத்தவளே புது வெக்கம் கொண்டவளே, என்னை
காத்தவளே கருவாக்கியவளே, அத்தனைக்கும்
மூத்தவளே ஒப்பிலா காதலியே, ஒப்பனையில்லா
மாத்தவளே காதல் கொண்டேன்,என் பேரழகே..!!

அழகே அச்சம் மடம் மறைய, களிப்பில் காதல்
பழகி தேசம் சுற்றக் கண்டோம், மிரட்சியின்றி
உழவு நிலமாய் இன்புறவே, எங்கேனும்
இழவு கொடியதாய் காணலையே, என் விழிக்கே..!!

விழிக்கே வினையொன்று வந்து, காதல் வெறுத்த
வழிக்கே காதல் சாகுமாயின், இப்படியொரு
பழிக்கே காதல் கல்லறை ஏற, தேள் நரகக்
குழிக்கே என எண்ணாதே, என் முத்துமாலையே.!!

மாலை சூட நான் வருவேன், காக்கை கரையும்
காலையில் உன்னை மீட்டு, அச்சம் துறந்து
வேலை ஏந்தி கானகம் சேர்ந்து, மிச்ச உயிருடன்
பாலையும் உனக்களிப்பேன், என் சிறந்தவளே..!!

சிறக்கும் காதலில் பூமி சுழல, அந்த நிலவெல்லாம்
பறக்கும் நம் இதயம் கண்டு பசிகொள்ள, நீயோ
உறக்கம் ஏற கண் அமர்ந்தால் போதும், சுய அறிவு
மறக்கும் நிலையிலும் எந்நிலை மாறாது காதலே.!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum