ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதை விபத்துகளில் தமிழகம் முதலிடம்!

2 posters

Go down

போதை விபத்துகளில் தமிழகம்  முதலிடம்! Empty போதை விபத்துகளில் தமிழகம் முதலிடம்!

Post by Powenraj Sun Oct 19, 2014 8:42 pm

சராசரியாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சாலையோரம் படுத்திருப்பவர்களை கார் ஏற்றிக் கொல்கிறார்கள் போதை ஓட்டுநர்கள். சமீபத்தில் சென்னையில் எழும்பூர் சம்பவம், பின்பு சூளை, இப்போது வேளச்சேரி.

காவல்துறை நண்பரிடம் பேசியபோது, “மூன்று மாத இடைவெளியெல்லாம் இல்லை. இங்கே மாதத்துக்கு மூன்று விபத்துகள் இப்படி நடக்கின்றன. பெரும்பாலும் பெரிய இடத்து ஆட்களாக இருப்பதால், வழக்கை வேறு மாதிரியாக முடிக்க வேண்டியிருக்கிறது” என்றார் வேதனையும் வெறுப்புமாக.

“இரவில் எத்தனையோ சரக்கு வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள் செல்கின்றன. அவை பெரும்பாலும் சாலையோரம் படுத்திருப்பவர்கள் மீது தறிகெட்டு ஏறுவது இல்லை. ஆனால், நடிகர் சல்மான் கானில் ஆரம்பித்து, இப்போது வேளச்சேரி இளைஞர்கள் வரை ஏன் போதையில் கார் ஏற்றி ஆட்களைக் கொல்கிறார்கள்?” என்று டாக்டரிடம் கேட்டேன்.

வெறிபிடிக்க வைக்கும் நடத்தைக் கோளாறு!

“ஆட்களைக் கொல்கிறார்கள் என்பதுடன் மட்டும் அசம்பாவிதங்களைச் சுருக்கிக்கொள்ள வேண்டாம். என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதே உண்மை. நீங்கள் கேட்கும், கார் ஏற்றிக் கொல்லும் சம்பவங்களுக்கு வருவோம். அவற்றை வெறும் விபத்தாக மட்டுமே பார்ப்பது அபத்தம். அடிப்படையில் ஏதோ ஒரு நடத்தைக் கோளாறு அவர்களுக்கு இருந்திருக்கும். மது அருந்தியவுடன் முழு வேகத்தில் அது வெளியே வரத் தொடங்கும். தொடர்ந்து மது அருந்துவதால் இந்த மனக்கோளாறுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு.

ஒரு விஷயம். இங்கு 100% சரியான நபர் என்று யாரும் இல்லவே இல்லை. நீங்கள், நான், இதைப் படிப்பவர் என எல்லோருக்கும் அடிப்படையில், மனதின் ஆழத்தில் சிறியதாகவும் பெரியதாகவும் சில முரண்பாடுகள் இருக்கும். இது இயல்பு. இதைத்தான் நாம் முன்கோபி, உணர்வுபூர்வமானவர், குழந்தை மாதிரி, அப்பாவி, முரடன், ஜொள்ளு பார்ட்டி என்று பலவிதமாக அழைக்கிறோம். அவரவரின் தன்மையைப் பொறுத்து இந்த உணர்ச்சிகளின் அளவு மாறலாம். இதுபோன்ற நடத்தைக் கோளாறுகளும், ஏன் மோசமான பாதிப்பான ‘இருதுருவ மனநிலைக் கோளாறு’ (Bipolar mental disorder) போன்றவையும்கூட ஒரு மனிதனின் ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும். இப்படி ஒருவரின் ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும் உளவியல் கோளாறுகளை உலுக்கி எழுப்பிவிடும் தன்மை மதுவுக்கு உண்டு.

ஒருவரின் மூளைக்குள் மது சென்றவுடன் அது, ‘டெட்ராஹைட்ரோஐசோகுயினோலின்’ (Tetrahydroisoquinoline) என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது மொத்த மூளையையும் கட்டுப்பாடு இழக்கச் செய்கிறது. ஒருவர் அதிகமாக மது அருந்துவதால் அல்லது அவசரமாகக் குறைந்த நிமிடங்களில் ஒரே மூச்சாக அதிக அளவு மது அருந்துவதால் மிதமிஞ்சிய போதை ஏற்படுகிறது.

அப்போது சிறுமூளை பெருமூளையின் கட்டளைக்குக் கீழ்படிவதில்லை. அல்லது பெருமூளை சிறுமூளையைக் கட்டுப்படுத்தும் தன்மையை இழக்கிறது. ‘என்னை யார் கேட்பது? எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’, ‘என்னதான் ஆகிவிடும் பார்ப்போமே’ என்கிற பயங்கர, அதீத எதிர்மறை உணர்ச்சி நிலை மேலோங்கும். பக்கத்தில் இருப்பவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். சுயமாகவும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. வெறிபிடித்த மனநிலை அது. கொண்டாட்டமும் வெறுப்பின் உச்சமும் சோகங்களும் கைகோத்த வன்முறை மனநிலை அது. எங்கேயோ வாங்கிய அடிக்கு யாரையோ பழிவாங்க நினைக்கத் துடிக்கும் மனநிலை அது. இயல்புக்கு மாறாக, பயங்கரமாக ஒன்றை நிகழ்த்தாமல் ஓயாது அது. நடுவே மயக்கம் அடைந்து ஓய்ந்தால்தான் உண்டு. அப்போது நடப்பவைதான் இதுபோன்ற விபத்துரீதியிலான கொலைகள், கூட்டுப் பாலியல் வன்முறைகள், இன்னபிற. அதாவது, திட்டமிட்டு நடத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், மதுவின் ‘மிதமிஞ்சிய ஆதிக்கம்’ அவர்களை அப்படிச் செய்ய வைத்திருக்கும்.

அதிகரிக்கும் இருதுருவ மனநிலைக் கோளாறு!

இங்கு மதுவின் போதை என்பதையும் மிதமிஞ்சிய ஆதிக்கம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒருவர் தனக்கான மதுவின் அளவுடன் நிறுத்திக்கொண்டால் அது போதை. தன்னிச்சையாக வண்டியை ஸ்டார்ட் செய்வார். கியர் போடுவார். செக்கு மாடுபோல எங்கும் முட்டாமல் வண்டி வீடு சென்று சேரும். இடையே சில அசந்தர்ப்பங்களும் நேரிடலாம். ஆனால், நாம் பெரும்பான்மை விஷயங்களைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், மது அருந்த இதையே சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த போதைதான் இருதுருவ மனநிலைக் கோளாறு வரை கொண்டுசென்றுவிடுகிறது. இப்போதெல்லாம் 20 முதல் 35 வயதுக்குள்ளாகவே இருதுருவ மனநிலைக் கோளாறுகளுடன் சிகிச்சை பெறவரும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் கவலையாக இருக்கிறது” என்றார் டாக்டர்.

போதை விபத்துகளில் தமிழகம் முதலிடம்!

டாக்டர் சொல்வது உண்மைதான். மதுபோதையில் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் செய்தித்தாள்களில் இடம்பெறாத நாட்களே இல்லை. அதுவும் தமிழகத்தின் நிலைமை முன்னெப்போதையும்விடக் கவலையளிக்கிறது. சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் முதல் இடத்தில் இருக்கிறது தமிழகம். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த 14,504 விபத்துகளில் 15,563 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் 70% மதுபோதையால் நடந்த விபத்துகள். குறிப்பாக, 2002 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மிக மோசமாக மதுபோதை விபத்துகளால் பாதிக்கப்பட்டது என்கிறது மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்துக்கான பன்னாட்டு ஆய்விதழ். இதுமட்டுமல்ல, 2013-ம் ஆண்டு மட்டும் மதுவருந்திய போதை ஓட்டுநர்களால் தமிழகத்தில் 718 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் ஒன்று.

(தெளிவோம்)

நன்றி:திஇந்து
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

போதை விபத்துகளில் தமிழகம்  முதலிடம்! Empty Re: போதை விபத்துகளில் தமிழகம் முதலிடம்!

Post by krishnaamma Sun Oct 19, 2014 11:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நிறைய அந்த கடைகள் இருப்பதால் வரும்   வினை  இது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum