புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10 
19 Posts - 3%
prajai
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1)


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Oct 13, 2014 9:13 pm

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு தீபாவளி பண்டிகைக்குள் ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான் தற்போதைய சூடான விவாதம்.

18 ஆண்டுகளாக ஆமைநடை போட்ட சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் வழங்கி, குற்றவாளி அதை செலுத்தத் தவறும்படசத்தில் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை பெற நேரிடும் என அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா.

இந்த வழக்கில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ஜெயலலிதா நடத்திய தடபுடலான ஆடம்பர திருமணமும் முக்கிய ஆதாரமாக வைக்கப்பட்டிருந்தது. 1995-ல் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தமிழர்கள் வாய்பிளக்கும் வகையில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு திருமணம் என்னும் திருவிழாவை நடத்திக் காட்டினார். அப்படி ஒரு பிரம்மாண்டம். 19 வருடங்களுக்கு முன்பு (8.9.95) நடைபெற்ற சுதாகரனின் பிரமாண்ட திருமணத்தை தற்போதைய தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக சின்ன ஃப்ளாஷ்பேக்.

செப்டம்பர் 10, 1995 ஜூனியர் விகடன் இதழில் இருந்து...

‘‘ஒரு முதல்வரின் மகனுக்குத் திருமணம் எப்படி நடக்குமோ அப்படித்தான் இந்தத் திருமணமும் நடக்கும். அதுபற்றி யாரும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!’’ - தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் பற்றி பத்திரிகைகள் எழுதத் துவங்கியதுமே பொங்கியெழுந்து முதல்வர் ஜெயலலிதா விட்ட அறிக்கை இது!

‘எப்படியெல்லாம் இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் அமைய வேண்டும்!’ என்று அமைச்சர்களிடம் தன் விருப்பத்தை முதல்வர் விவரிக்க...விவரிக்க வாயடைத்துப் போனார்கள் மந்திரிகள்!

‘கற்பனைக்கும் எட்டாத ஆடம்பரத்துடன் இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா’ என்று திகைப்பு ஒருபுறம் இருக்க...‘அந்த அளவுக்குத் தேவையா’ என்ற தயக்கமான கேள்வியைத் தட்டுத் தடுமாறி ஓர் அமைச்சர் எழுப்பினாராம். ‘‘ஏன்.. யார் என்ன சொல்லிவிட முடியும்! நான் சொல்கிற அளவுக்கு உங்களால் செய்ய முடியுமா என்பதுதான் பேச்சு! இது திருமணமே அல்ல... கட்சியின் மாபெரும் மாநாடு என்று நினைத்துக்கொண்டு செயல்படுங்கள்!’’ என்றாராம் முதல்வர்.

அவ்வளவுதான்!

மின்கம்பங்களில் கரண்ட் எடுப்பது.. ரோடு முழுக்கப் பள்ளம் தோண்டி அலங்கார வளைவு அமைப்பது, நிதி வசூல், காவல் துறை குவிப்பு என்று புகுந்து விளையாடத் துவங்கினார்கள் அமைச்சர்கள்!

நான்காம் தேதி இரவு மணி பதினொன்றரை! வழக்கமான அணிவகுப்பு ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், முன்னும் பின்னும் ஓரிரு கார்கள் தொடர போயஸ் தோட்டத்தில் இருந்து கிளம்பினார் முதல்வர். அவருடன் தோழி சசிகலா இல்லை!

அடையாறு சிக்னல் வரை சென்று அங்கிருந்து கடற்கரையில் கண்ணகி சிலை வரை அதிவேகமாக ஒரு முறை சென்றது முதல்வரின் கார்! வரிசையாகச் செய்யப்பட்டிருந்த வண்ண வண்ண சீரியல் செட் அலங்காரங்கள், அமைச்சர்களும் கட்சிப் பிரமுகர்களும் வைத்திருந்த கட் - அவுட்கள், சாலை நெடுக அமைந்திருந்த அலங்கார வரவேற்பு மேடைகள் ஆகியவற்றைப் பார்த்து திருப்தியடைந்தார் முதல்வர்.

அடுத்து, திருமணம் நடக்கும் எம்.ஆர்.சி. நகருக்கு விரைந்தார். வழக்கமான வேட்டி, சட்டை, தோள் துண்டு இல்லாமல் அத்தனை அமைச்சர்களும் பாண்ட் அணிந்து மிடுக்குடன் காத்திருந்தது வித்தியாசமான காட்சி! அதிலும் மூத்த அமைச்சர் எஸ்.டி.எஸ். லூஸான வெள்ளைச் சட்டையும் க்ரே கலர் பேன்ட்டும் அணிந்து ‘துறுதுறு’ப்புடன் நின்ற காட்சியைப் பார்க்க சக அமைச்சர்களுக்கேகூட ஜாலியாகத்தான் இருந்தது!

நாவலர், இந்திரகுமாரி, மதுசூதனன் தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாம் அங்கிருந்தனர்.

முதல்வரின் கார் வந்ததும் அதன் பின்னே ஓடித் திருமணம் நடக்கப் போகும் மாபெரும் மைதானத்துக்குள் சென்றார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துத்தான் முதல்வர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். உள்ளே என்ன நடந்தது?

அமைச்சர் ஒருவரின் உதவியாளரும், சில போலீஸ் அதிகாரிகளும் நமக்குச் சொன்ன தகவல் திகைப்பை உண்டாக்கியது!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிப் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி ஐயர் உள்ளே முதல்வருக்காக காத்திருந்தார். அவர் பெரிய மாந்திரீகர்!

முன்னாள் பிரதமர் சந்திரசேகர், கவர்னர் சென்னாரெட்டி ஆகியோர் பயபக்தியுடன் வணங்கும் திருவக்கரை வக்கிர காளியம்மன் கோயிலில் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ பூஜை நடந்ததாம். மாந்திரீக வார்த்தைகளும் குறிகள் போட்ட அகலமான தங்கத்தகடுகளை அந்தக் கோயிலில் வைத்து விசேஷ பூஜை செய்தார் ராமமூர்த்தி ஐயர். அவற்றைத்தான் திருமணப் பந்தலுக்குக் கொண்டுவந்திருந்தார்!

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், பிறர் பொறாமைப்படும் வண்ணமாக ஏதாவது நிகழ்ச்சி நடத்தும்போது, திருஷ்டிபடாமல் இருக்க சில பரிகாரங்கள் செய்வதுண்டாம்! அதில் மிக மிக ‘காஸ்ட்லி’யான ஒரு பரிகாரத்தைச் செய்யத்தான் அந்த மாந்திரீகர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

திருவக்கரை கோயிலில் வைத்து மந்திரிக்கப்பட்ட தங்கத் தகடுகளை, மணவிழாப் பந்தலின் எட்டுத் திக்குகளிலும் புதைத்தார்கள். அத்துடன் வைர வைடூரியன் உட்பட நவமணிகளையும் போட்டுப் புதைத்துச் சாணத்தால் மெழுகியிருக்கிறார்கள்!

கூடவே, ராஜ கம்பீரமாக மிகப்பெரிய தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள மணமேடையிலும் ஒவ்வொரு அடி இடைவெளிட்டு மந்திர வார்த்தைகள் பொறித்த தங்கத் தகடுகள் புதைக்கப்பட்டதாம்!


இந்தியா முழுவதும் இருந்து வி.ஐ.பி-க்கள் முதல் சாதாரண கட்சித் தொண்டர் வரை வரப்போகிற இந்தத் திருமணத்தில் யாராவது ஏதாவது ஆபத்து உண்டாக்கிவிடக்கூடும் என்ற கவலை இருக்கிறது! அப்படி அபாயம் உண்டாக்க வருபவரின் மனத்தை மாற்றி, எதிர்ப்புக் குணத்தைப் போக்கி திருப்பியனுப்பிவிடக்கூடிய ‘வசிய சக்தி’ இந்தத் தகடுகளுக்கு இருப்பதாக மேலிடம் வரை நம்புகிறார்கள்!

மந்திர வார்த்தைகள் பொறித்த தகடுகள் புதைக்கப்படுவதை முதல்வர் உட்பட அமைச்சர்கள் பயபக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தனராம்! எல்லாம் முடிந்து திருப்தியுடன் முதல்வர் கிளம்பிப் போன பிறகு, மூத்த அமைச்சர் எஸ்.டி.எஸ் அடித்த கமென்ட்தான் மற்றவர்களைத் திகைப்படைய வைத்தது! ‘‘மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் எந்தப் பிரச்னையும் அரசியல் ரீதியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், நம்ம அம்மா எதையும் மாந்திரீக ரீதியாக அணுகறாங்க. அதான் வெற்றிமேல் வெற்றி கிடைக்குது!’’ என்றார் எஸ்.டி.எஸ்!

போலீஸ் படையையும் முதல்வர் நம்பத்தான் செய்கிறார். திருமணம் நடக்கும் இடம் கடலோரம் என்பதால் கடல் வழியாகத் சந்தேகத்துக்கிடமான ஆட்கள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் கப்பலில் ஏறி, போலீஸ் கடலில் சுற்றி ரோந்து வர ஆரம்பித்துவிட்டது!

இது தவிர, பந்தலை ஒட்டியுள்ள பகுதியில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களில் இருந்தும் படை படையாக வேன்களில் வந்து குவிந்திருக்கும் போலீஸாருக்கென மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே சென்னை நகரின் பல திருமண மண்டபங்கள் ஒழித்துத் தயார் செய்யப்பட்டுவிட்டன!

திருமணம் நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான பந்தல்களில் உள்புறமிருந்து பார்த்தால் ஓலையே தெரியாது! பல லட்ச ரூபாய் செலவில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் போட்டு அலங்கார வேலைகள் செய்யப்பட்டுள்ளன.

மணமேடை ஒரு அரண்மனையின் ராஜதர்பார் போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறம் இருந்து பார்த்தால் ‘கண்’பட்டுவிடும் என்பதால் அதற்குத் தனியாக ஓர் ஓலைத்தடுப்புப் போட்டு மறைத்திருக்கிறார்கள். திருமணத்தன்று ஓலைத்தடுப்பு பிரிக்கப்படும்போது, அந்த மணமேடையின் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ள விலைமதிப்புள்ள கற்களும், அலங்கார அமைப்பும் அனைவரையும் வாய்பிளக்க வைக்கப் போகிறது!

திருமண வளாகத்துக்கு உள்ளே மூன்று விதமான பங்களாக்கள் அசுரவேகத்தில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன!

ஒன்று - முதல்வர் தங்கியிருப்பதற்கான (சகல வசதிகளும் கொண்ட) ஏ.ஸி. மாளிகை! இன்னொன்று சசிகலாவின் மிக நெருங்கிய உறவினர்கள் தங்குவதற்கு! மூன்றாவது, சிவாஜி குடும்பத்தினருக்கு! இந்த மூன்று மாளிகைகளையும் இப்போதே போலீஸ் சூழ்ந்து நிற்கிறது! கடுமையான பாதுகாப்பு!

எம்.ஆர்.சி.நகர்ப் பகுதியில் உள்ள பல வீடுகளுக்குள் கடந்த திங்கட்கிழமை போலீஸும் முக்கிய அதிகாரிகளும் புகுந்தனர். ‘‘நீங்களெல்லாம் வெளியேறிவிடுங்கள்! திருமணத்துக்கு முன்தினமும், திருமண தினத்தன்றும் இந்த ஏரியவுக்குள் லட்ச லட்சமாக ஆட்கள் ஆக்கிரமித்துவிடுவார்கள். அப்போது உங்களால் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாது. எனவே, நீங்களெல்லாம், உங்களுக்கு விருப்பப்படும் ஓட்டல்களுக்குப் போய்க் குடும்பத்தோடு தங்கிக் கொள்ளுங்கள். பிறகு ஓட்டல் ‘பில்’லைக் கொடுத்தால் பணத்தைக் கொடுத்துவிடுகிறோம்!’’ என்றார்கள்.

எதிர்த்துப் பேசத் திராணியற்று மூன்று தெருக்களில் வசித்த குடும்பங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டன. ‘‘ஓட்டல் பில்’’லை யாரிடம் கொடுத்து எப்படிப் பணம் வாங்குவது? அது நடக்காத காரியம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்!’’ என்று புலம்பியபடியேதான் கிளம்பினர் அவர்கள்.

வேறு பலர் வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள். அதை எந்த ஓட்டலில் தங்க அனுமதிப்பார்கள். அதேபோல் இடம்பெயர முடியாமல் உள்ள பல நோயாளிகளும் அங்குள்ள சில வீடுகளில் உள்ளனர். அந்தக் குடும்பங்கள் வீட்டை காலி செய்ய முடியாது என்று சொன்னதால், பலத்த மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர்! இவர்களுக்கெல்லாம் போலீஸ் அடையாள அட்டை அளித்துள்ளது. அதைக் காட்டினால்தான் தெருவை விட்டுப்போக முடியும் திரும்ப முடியும். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வை.கோ. கட்சிப் பிரமுகருமான அழகு. திருநாவுக்கரசு வீட்டுக்கும் அடையாள அட்டை தரப்பட்டுள்ளது!

திருமணத்துக்கு வருபவர்கள் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி குடும்பத்துக்குச் சொந்தமான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்! வருகிற 11 ஆம் தேதியன்று அங்கு கால்வருடப் பரீட்சை! ஆயிரக்கணக்கில் பந்தல் அமைப்பாளர்களும் பொதுப் பணித்துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் போலீஸும் அந்தப் பகுதியைச் சூழ்ந்துவிட்டதால் கடந்த ஒன்றாம் தேதி முதல் செயல்பட முடியாமல் விடுமுறையில்தான் உள்ளது பள்ளி!

பாடங்களைச் சரிவர நடத்தி முடிக்காததால் பரீட்சை எப்படி எழுதப் போகிறோம் என்று புரியாமல் தவித்தபடி உள்ளனர் குழந்தைகள்! வி.ஐ.பி.க்கள் உட்காரும் இடம் என தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் இடைஞ்சலாக இருந்ததால் கிட்டத்தட்ட நாற்பது மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன!

தனது வளர்ப்பு மகன் திருமணத்துக்கு வரும் வெளி மாநில வி.ஐ.பி.க்கள் எந்த சிரமும் இன்றி, குழப்பம் இன்றித் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சென்று அமர வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்!

இந்தப் பிரச்னையை அழகாகத் தீர்த்து வைக்க முன்வந்தது கல்வித் துறை! தமிழகத்தின் முக்கியமான சில கல்லூரிகளுக்கு அவசரச் செய்தி சென்றது! ஒவ்வொரு கல்லூரியும் தங்களிடம் பயிலும் மிக அழகான பத்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து சென்னை முன்கூட்டி அனுப்புகின்றன! மணமகன் வீட்டுச் செலவிலேயே விலை உயர்ந்த பட்டுச் சேலை ஜாக்கெட் தைத்து அளிக்கிறார்கள்! இந்த மாணவிகள்தான் வரவேற்பு கமிட்டி! புன்னகைத்த முகத்துடன் வி.ஐ.பி-க்களை வரவேற்று அழைத்துச் சென்று அவரவர் இடங்களில் அமர்த்த வேண்டும்! திருமணம் முடிந்த பிறகு தலைக்குப் பத்தாயிரம் ரூபாய் இந்த மாணவிகளுக்கு அளிக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்!

ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் சென்னை நகரின் பியூட்டி பார்லர்கள் (அழகுநிலையங்கள்) பெரும்பாலும் புக்’ செய்யப்பட்டுவிட்டன. சசிகலா குடும்பத்துப் பெண்களின் விசேஷ அலங்காரத்துக்காக?

தனது திருமண நிகழ்ச்சி பற்றி அநாவசியமான விமரிசனங்கள் பத்திரிகைகளில் வருவதை வளர்ப்பு மகன் சுதாகர் விரும்பவில்லையாம். இதனால் திருமணத்துக்கு நிருபர்கள் வர அனுமதியில்லை! பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கு நிச்சயம் அனுமதியில்லை! ஆளுங்கட்சிக்கு வேண்டிய மிகச் சில பத்திர்கை ஆசிரியர்கள் மற்றும் சில இந்ருபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது!



என்.டி.ஆர்., தேவகௌடா, லல்லு பிரசாத் யாதவ், பைரான்சிங் ஷெகாவத்,பிஜுபட்நாயக் ஆகியோர் முதல்வர் எதிர்பார்க்கும் முக்கிய அரசியல் வி.ஐ.பி-க்கள்!

இத்தனை திருமண ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையில் மிகுந்த கவலையுடன் இருப்பவர்கள் மூன்று அமைச்சர்கள்! கண்ணப்பன், எஸ்.டி.எஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகிய மூவர்தான் இவர்கள்!

‘அன்பளிப்புகளைத் தவிர்க்கவும்’ என்று திருமண அழைப்பிதழில் அச்சிட்டிருந்தாலும் அதற்கு நேர் எதிரான ‘பாலிஸி’தான் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணத்துக்குத் தேதி குறிக்கப்பட்ட தினத்திலிருந்தே பணமாகவும் பொருளகவும் வசூல் தொடங்கிவிட்டது அனைவரும் அறிந்த சேதி!

ஆனால், திருமணத்தன்று வருகிற கட்சி முக்கியஸ்தர்களிடமும் தொழிலதிபர்களிடமும் கண்டிப்புடன் திருமணப் பரிசுகளை வாங்க வேண்டியது மேற்சொன்ன மூன்று அமைச்சர்களின் பணிதான்! பரிசுப் பொருட்கள் மற்றும் செக், டிராஃப்ட், சூட்கேஸ் எதுவானாலும் திருமண வளாகத்துக்குக் கொண்டு வரக்கூடாது என்பது முன்கூட்டியே சொல்லப்பட்டுவிட்டது! அதை இந்த மூன்று அமைச்சர்களின் வீடுகளுக்கே கொண்டுசென்று கொடுத்துவிட வேண்டும்! லட்சம், கோடி எல்லாம் சாதாரணமாக ‘டீல்’ செய்யும் இந்த அமைச்சர்களே மிரண்டுபோயிருக்கிறார்களாம்.



பரிசுப் பொருட்களைப் பெற்று, சரியாக கணக்கு சொல்லி அவற்றைப் பத்திரமாக ஒப்படைக்கும் வரை இவர்களுக்கு நிம்மதி கிடையாது! பல கோடி செலவு செய்து நடக்கும் இந்தத் திருமணத்துக்கு என்னென்ன பரிசுப் பொருட்கள் வரப்போகிறது என்று மத்திய அரசு அதிகாரிகளும் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதுதான் அமைச்சர்களின் கவலைக்கு முக்கிய காரணம்!

இத்தனைக்கும் மத்தியில் தேர்ந்த ஜோதிடர்கள் சொன்ன ஒரு கருத்து திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து சம்பந்தப்பட்டவர்களை வாட்டுகிறது! ஜோதிடர்கள் சொன்னது -‘‘திருமணத்துக்குக் குறித்த தேதி சரியில்லை! செப்டம்பர் ஏழாம் தேதி சனி- செவ்வாயைப் பார்க்கிறான். அதுவும் வக்கிரப் பார்வை! பெரும் தீவிபத்துகளும் ரயில் விபத்துகளும் நடந்தது இந்தக் கிரக நிலையில்தான்!’’

இன்னொரு பக்கம், இந்தியாவிலேயே இதுவரை நடக்காத இந்தப் பிரமாண்ட திருமணத்தல் மணமகளுக்குத் திருஷ்டிபடுமோ என்ற கவலையும் இருக்கிறது. திருமணம் முடிந்த கையோடு, அந்தப் பகுதியில் ஏதாவது பந்தலை வலியக் கொளுத்தி திருஷ்டிகழிக்கலாமா எனவும் யோசிக்கப்படுகிறது!

நன்றி:ஜினியர்விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 13, 2014 10:54 pm

அடேயப்பா..... படித்தவுடன் மயக்கம் வருகிறது.... யாரு காச, யாரு திங்கறது... அதான் இப்போ களி திங்க வேண்டிய கட்டாயம்....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 11:12 pm

M.M.SENTHIL wrote:அடேயப்பா..... படித்தவுடன் மயக்கம் வருகிறது.... யாரு காச, யாரு திங்கறது... அதான் இப்போ களி திங்க வேண்டிய கட்டாயம்....
மேற்கோள் செய்த பதிவு: 1096139

அப்படியும் இந்த மக்களுக்கு புத்தி இல் உரைக்கலையே செந்தில் ...என்ன பண்ண ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 11:28 pm

//இந்தப் பிரச்னையை அழகாகத் தீர்த்து வைக்க முன்வந்தது கல்வித் துறை! தமிழகத்தின் முக்கியமான சில கல்லூரிகளுக்கு அவசரச் செய்தி சென்றது! ஒவ்வொரு கல்லூரியும் தங்களிடம் பயிலும் மிக அழகான பத்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து சென்னை முன்கூட்டி அனுப்புகின்றன! மணமகன் வீட்டுச் செலவிலேயே விலை உயர்ந்த பட்டுச் சேலை ஜாக்கெட் தைத்து அளிக்கிறார்கள்! இந்த மாணவிகள்தான் வரவேற்பு கமிட்டி! புன்னகைத்த முகத்துடன் வி.ஐ.பி-க்களை வரவேற்று அழைத்துச் சென்று அவரவர் இடங்களில் அமர்த்த வேண்டும்! திருமணம் முடிந்த பிறகு தலைக்குப் பத்தாயிரம் ரூபாய் இந்த மாணவிகளுக்கு அளிக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்!//

இதையே தான் அமைச்சர்களும் இப்போ கடை பிடிக்கிறாங்க.................பிரியாணி.................100 முதல் 10000 வரை பணம் என்று லிஸ்ட் போட்டு போராட்டம் நடத்தறாங்க......................சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 11:48 pm

இதற்கான படங்களையும் போட்டால் தான் கட்டுரை, மற்றும் அவர்களின் அட்டகாசத்திற்கு நிறைவா இருக்கும்




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:06 am

ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Sudakaranmarriageoct14_1
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Sudakaranmarriageoct14_12(1)
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Sudakaranmarriageoct14_10(1)
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Sudakaranmarriageoct14_5(1)
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Sudakaranmarriageoct14_7


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 2:13 pm

படங்கள் நல்லா இருக்கு, பகிர்வுக்கு நன்றி நேசன் புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 14, 2014 2:40 pm

நன்றி தமிழ்நேசன் - இப்பதான் ஆர்ப்பாட்டம், அட்டகாசம் இதெல்லாம் நல்லா தெரியுது




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 8:53 pm

ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 2)

ராணி வீட்டுக் கல்யாணம்!


செப்டம்பர் 13, 1995 ஜூனியர் விகடன் இதழில் இருந்து...

சாலையெல்லாம் ஒளிவெள்ளம் பொழிய அந்த வெளிச்சத்தில் உடலெங்கும் வைரமும் தங்கமும் மின்ன தன் தோழி சசிகலா மற்றும் பரிவாரங்களுடன் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்தார் முதல்வர்!
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Sudakaranmarriageoct14_2
‘‘இந்த ஒரு திருமணத்துக்கு இத்தனை கோடிச் செலவா..?! திருமணமாகாத ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஒரு லட்சம் என்று கொஞ்சம் தாராளமாகச் செலவு செய்தாலும் நிச்சயம் ஒரு லட்சம் பெண்களுக்குத் திருமணம் செய்திருக்கலாமே!’’

ஓர் ஓரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மத்தியதரக் குடும்பத்து வாக்காளர் அடித்த வயிற்றெரிச்சல் கமெண்ட் இது!

தமிழகத்துக்கே உரிய ‘விசேஷ நிகழ்ச்சிகளுடன்’ களைகட்டியது செப்டம்பர் ஏழு... கல்யாண நாள்!

சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆறாம் தேதி இரவுத் தூக்கம் போட்டு எழுந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுக்கும் அவசரம்... ஒட்டுமொத்தமாக அத்தனைபேரும் காலைக்கடன் கழிக்கிற அளவுக்கு அங்கே வசதியில்லை. ஓடினார்கள், அருகிலேயே இருந்த கடற்கரைக்கு. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் கிழக்கு வெளுத்தபோது, கடற்கரை திறந்தவெளிக் கழிப்பிடமாக மாறியிருந்தது.

அடுத்தது - குளியல்.

‘‘பக்கத்துல நீச்சல்குளம் இருக்கு டோய்...’’ என்று ஒரு தொண்டர் குரல் விட... ‘திமுதிமு’வென மெரீனா பீச்சை ஒட்டியிருந்த நீச்சல்குளத்தை நோக்கி ஓடினார்கள். ஒரே ஜம்ப்தான்! ‘மாங்கு மாங்கென்று’ சோப்பு வேறு போட்டுத் தேய்த்துக் குளித்துவிட... நீச்சல்குளம் முழுக்கக் ‘குப்’பென நிறைந்துவிட்டது சோப்பு நுரை! இந்த நீச்சல்குளம் ஆரம்பித்த நாள் முதல் சோப்பு போட்டுக் குளித்த முதல் சம்பவம் இதுதானாம்!

சரி... ஆறாம் தேதி மாலை நடந்த மாப்பிள்ளை அழைப்பில் இருந்தே தொடங்குவோம்!

அந்தி சாயும் நேரம்... அடையாறு சிக்னல் அருகில் உள்ள சுந்தரவிநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை ஊர்வலம்!

மாப்பிள்ளைக்காக அலங்கார சாரட் வண்டி காத்திருக்க, மக்கள் கூட்டமோ ‘மணமகனை’ எதிர்பார்த்து நிற்க... சரியாக 6.30-க்கு வந்தார் சுதாகரன்! அந்தக் கால இளவரசர் கெட்-அப்பில் சிரிப்பு கொப்பளிக்க சுதாகரன் நிற்க... சுற்றிலும் குவிந்திருந்த அமைச்சர்களோ ‘ஏவலர்கள்’ போல அவரையே மொய்த்துக் கிடந்தனர்.

சில நிமிடங்களுக்குள் வெள்ளை காரில் வந்திறங்கிய ஜெயலலிதா, குத்துமதிப்பாக ஒரு கும்பிடு போட்டு விட்டு வளர்ப்புமகனைப் பார்த்து வாஞ்சையோடு சிரித்தார்!
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Sudakaranmarriageoct14_12(2)
6.20-க்குத் தொடங்கியது மாப்பிள்ளை ஊர்வலம். சந்தனமரத்தால் இழைத்துத் தயாரிக்கப்பட்ட ‘சாரட்’ வண்டி என்று முதல்வர் தரப்பில் இருந்தே பெருமையுடன் செய்திகள் அளிக்கப்பட்டிருந்தன! ஆனால், அந்தச் சந்தன அழகை ரசிக்க முடியாதபடி சிவப்புநிற ‘வெல்வெட்’ துணியால் மறைக்கப்பட்டிருந்தது சாரட்!

சட்டம் - ஒழுங்கு காப்பது தவிர, கரகாட்டம், ஒயிலாட்டத்துக்கூட இதற்கென ஸ்பெஷல் பயிற்சி பெற்ற போலீஸ் டீம் பயன்படுத்தப்பட்டது! கலைக்குழுக்கள் ஆட்டத்தோடு முன்னே செல்ல... அடுத்ததாக பாண்டு வாத்தியக்குழு பாடிக் கலக்க... தொடர்ந்து சிறப்புப் பாதுகாப்புப்படை அணிவகுத்தது!

அதன் பின்னே பார்த்தால் அதிசயம்... ஆச்சரியம்!

இதுவரை இல்லாத வகையில் கிட்டத்தட்ட கும்பலோடு கும்பலாக ‘அம்மா’ நடந்து வந்துகொண்டிருந்தார்! அவரை ஒட்டியபடியே ‘நடமாடும் ஜுவல்லரியாக’ உடல் முழுதும் நகை மறைக்க தோழி சசிகலா கம்பீரமாக நடந்துவர... அவரது உறவுக்காரப் பெண்கள் அதைவிட சற்றே குறைந்த நகைகளுடன் சிரிப்பும் சந்தோஷமுமாக நடைபோட்டனர்.

இருபத்தைந்து நிமிடம் நடந்து சாதனைபடைத்த நிலையில், ஜெயலலிதா முகத்தில் களைப்பு பெருகியது. தடித்த வைர வளையல் மாட்டிய தனது வலது கையால் முகத்தை லேசாகத் துடைத்தபடி அவர் திரும்பிப் பார்க்க... கூடவே ஊர்ந்து வந்த அவரது கார் கதவு திறந்தது. ஏறிக்கொண்டார்!

அடையாறு பாலத்தைக் கடந்து அமைச்சர்கள் இல்லத்துக்கு அருகே போடப்பட்டிருந்த ‘கோட்டை செட்டிங்கை’ ஊர்வலம் நெருங்கியபோது, முதல்வரின் கார் நின்றது. மீண்டும் ‘வாக்’ செய்ய ஆரம்பித்து விட்டார்!

இசைக்கல்லூரி அருகே மதில்மேல் உட்கார்ந்திருந்த அழுக்கு உடை அணிந்த இளைஞர் ஒருவர், அம்மாவைக் கிட்டத்தில் பார்த்தவுடன் அவரை நோக்கி அப்படியே ஓடிவர... சுதாரித்த போலீஸ் பாய்ந்து ஒரே அமுக்காய் கொண்டுபோனது! மீண்டும் காரில் முதல்வர்!

நல்லவேளையாக, மாப்பிள்ளை ஊர்வலம் மண்டபம் போய்ச் சேர்ந்த பிறகு சொல்லி வைத்ததுபோல இருபது நிமிடத்துக்கு ‘சோ’வெனப் பெய்தது மழை! திடுக்கிட்ட தொண்டர்கள் ஓடி ஒளிய இடம் பார்ப்பதற்குள், அவர்களை முற்றிலுமாக நனைத்து முடித்தது மழை!

உள்ளே மணவீட்டார் நலுங்கு சம்பிரதாயங்களை நடத்திவிட்டு சாப்பிடத் துவங்கியபோது, வெளியே கட்சிக்காரர்கள் பலர் குளிரில் வெடவெடத்துக்கொண்டிருந்தனர்!

மறுநாள்... திருமணம்!

போயஸ் தோட்டத்திலிருந்து மெரீனா வரை கட்டப்பட்ட வாழை மரங்கள் அனைத்தும் அவசர கதியில் கட்டப்பட்டதால், முன்னிரவு பேய்த மழைக்கு அனைத்துமே உடைந்து தெருவில் சரிந்துகிடந்தன. குலை இல்லாமல் வாடி வதங்கி அமங்கலமாகக் காட்சியளித்த வாழை மரங்களை மாநகராட்சி வண்டியின் குப்பை லாரிகளில் அவசர அவசரமாக அள்ளி ஏறக்கட்டிக் கொண்டிருந்தனர் மாநகராட்சி ஊழியர்கள். காலை திருமண நிகழ்ச்சிக்குச் செல்லும் முதல்வர், சரிந்து கிடக்கும் மரங்களைப் பார்த்து அப்செட் ஆகிவிடக் கூடாதாம்!
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Sudakaranmarriageoct14_3
மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் அடுத்தடுத்து வந்திறங்க... எம்.ஆர்.சி. நகரில் இருந்த அந்த மாபெரும் திருமண வளாகம் (ப்ளேகிரவுண்ட்) கலகலப்பு பெற்றது. பந்தலின் கடைசி வரிசையிலிருந்து பார்த்தால் ‘தகதக’க்கும் தங்க நிறத்துடன் மணமேடை தக்கனூண்டு தெரிந்தது. மேடையில் இருந்தவர்கள் சிறு புள்ளிகளாகத் தெரிந்தனர். பந்தல் அத்தனை நீளம். முக்கால்வாசிப் பேர் க்ளோஸ் சர்க்யூட் டிவியில்தான் கல்யாணத்தை பார்த்தார்கள்.

மேடைக்கு அருகில் இடம் கிடைத்தவர்கள் ஜெயலலிதா, மணமகன் சுதாகரன் மற்றும் சசிகலா குடும்பத்துப் பெண்கள் அனைவரும் தங்க நிற உடையை யூனிஃபார்ம் போல அணிந்திருந்தது கண்டு ரசித்தார்கள்.

பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் வராததால் முதல்வர் அப்செட் ஆனதாகத் தெரிகிறது. ‘‘இவ்வளவு தூரம் நேரில் சென்று அழைத்தும் காங்கிரஸ்காரர்கள் புத்தியைக் காட்டிவிட்டார்களே... நல்லவேளை, தேசிய முன்னணித் தலைவர்களாவது வந்திருந்து எனக்கு அகில இந்திய ஸ்டேட்டஸைக் கொடுத்தார்களே’’ என்று ஒரு அமைச்சரிடம் அந்தத் திருமண கலாட்டாவுக்கு நடுவிலேயே சொன்னாராம் முதல்வர்.

வந்தவர்களை விழுந்து விழுந்து உபசரித்தவர்களில் தலையானவர் தலைமைச் செயலர் ஹரிபாஸ்கர். நாட்டியமாடுவதுபோல் அங்குமிங்கும் ஓடிச் செயல்பட்டவர் பத்மா சுப்பிரமணியம். இடுப்பில் இருந்த ரிவால்வரைத் தொட்டபடியே நடை பழகினார் வால்டர் தேவாரம். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை சகிதம் மனைவியுடன் வந்தார் முன்னாள் டி.ஜி.பி-யான ஸ்ரீபால்.

சசிகலாவின் கண்ணசைப்பில் செயல்பட்டவர் இந்திரகுமாரி. தொழிலதிபர்களையும் வி.ஐ.பி-க்களையும் மட்டுமே கவனிக்கும் பொறுப்பு இந்திரகுமாரியுடையது. சசிகலா எங்கு திரும்பினாலும் அங்கே இருந்தார் அவர்.

ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Sudakaranmarriageoct14_7(1)
யாதவரான பீகார் முதல்வருடன் மிக நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார் அமைச்சர் கண்ணப்பன். ஒவ்வொரு வி.ஐ.பி.க்கள் தன்னைக் கடந்து சென்றபோதும் எழுந்து எழுந்து நின்றார் முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங்.

செம்மங்குடி சீனிவாச ஐயர் வந்தபோது யாரும் அவரை வரவேற்கவில்லை. ‘சிவனே’ என்று ஒரு மூலையில் போய் அமர்ந்துகொண்டார். கமல்ஹாசன் மனைவியுடன் வந்து, சிவாஜி கணேசனையும் மணமக்களையும் பார்த்துப் பேசிவிட்டு, ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளாமலேயே போய்விட்டார்.

திருமண மந்திரம் சொல்லும் புரோகிதர்கள் மணமகனின் பெயரை ஒவ்வொரு தடவை உச்சரிக்கும்போதும், தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெ. ஜெயலலிதாவின் மகன் சுதாகரன் என்று கூறினார்கள். ஆனால் செவாலியர், நடிகர் திலகம் என்றெல்லாம் அடைமொழி தராமல் ‘சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தி’ என்று சிம்பிளாகச் சொன்னார்கள்.

திருமண விழாவில் ஒரு ஸ்பெஷாலிட்டி! திருமண மந்திரங்களில் நிறைய திவ்யப்பிரபந்தங்களும் திருக்குறளும் சொல்லப்பட்டதுதான்.

முகூர்த்தம் பத்தரையில் இருந்து பன்னிரண்டு மணிக்குள், தாலி கட்டியபோது கரெக்டாக மணி பதினொன்று இருபது!
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Sudakaranmarriageoct14_10(2)
‘‘இந்தக் கல்யாண விஷயத்திலேயே மிகக் கவனமாக முதல்வர் ஏற்பாடு செய்தது தொண்டர்களுக்கான சாப்பாடுதான். ஒரே மூச்சில் ஒரே சமயத்தில் பன்னிரண்டாயிரம் பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். நிச்சயம் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்தத் திருமணத்தில் சாப்பிட்டார்கள். இதை கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு எழுதி அனுப்பப்போகிறோம்!’’ என்று அமைச்சர்கள் பரமசிவம் மற்றும் சத்தியமூர்த்தி இருவரும் சொல்கிறார்கள். இவர்கள்தான் சாப்பாட்டுப் பந்தி ஒழுங்காக நடக்கிறதா என்று பார்க்க வேண்டிய முக்கிய இன்சார்ஜ்!

என்னதான் ஏற்பாடு செய்தும் திருமணத்துக்கு வந்தவர்களில் பாதிக்கும் மேலான தொண்டர்கள் சாப்பாடு கிடைக்காமல் சாபம் விட்டுக் கொண்டு சென்றது சர்வசாதாரண காட்சியாக இருந்தது!

மொத்தம் எட்டுப் பந்தல்களில் சாப்பாடு போடப்பட்டது! மிக நீண்ட அந்த ஒவ்வொரு பந்தலிலும் ஒரு பாதி வரைதான் இலை போட்டுச் சாப்பாடு வைத்தனர். மறுபாதியில் தொண்டர்கள் வந்து அமருவதும், வெகுநேரம் வரை யாரும் கவனிக்காமல், பசி மயக்கத்துடன் எழுந்து செல்வதுமாக இருந்தனர்!

குடிக்க ஒரு இலைக்கு ஒரு பாட்டில் ‘மினரல் வாட்டர்’ வைக்க வேண்டும் என்று ஏற்பாடு’ அந்தத் தண்ணீர் பாட்டில்களை அதிகாரிகள் சிலர் பெட்டி பெட்டியாக கார்களில் கடத்திச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

வாசலில், தாம்பூலப் பைகள் அளிக்கப்படுவது கண்ணில்பட்டதும் அதில் இருந்து பழமாவது எடுத்துச் சாப்பிடலாம் என ஆவலுடன் ஓடினர்.

பல பைகளில் பழம் இல்லை. தேங்காய் மட்டும் இருந்தது. அந்தத் தேங்காயை அங்கேயே உட்கார்ந்து, காலுக்கிடையில் அழுந்தப் பிடித்துக் கொண்டு, நார் உரித்துக் காயை உடைத்து அவசர அவசரமாக பசியாறினர் பலர்!
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Sudakaranmarriageoct14_4
திருமணம் முடிந்ததும்தான் தாமதம்... எம்.ஆர்.சி. நகரையொட்டியுள்ள பகுதிகளில் படுபயங்கர அமர்க்களம்! கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் கூத்துகளை வயிற்றெரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பகுதியில் வாழும் ஏழை மக்கள் பலர், அலங்கார ஆடம்பரப் பொருட்களில் கைக்குக் கிடைத்ததைப் பிய்த்து எடுக்கத் துவங்கினர்.

சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த ‘பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்’ அலங்காரச் சின்னங்கள் அடித்துத் தூள் தூளாக்கப்பட்டன. முதல்வரின் கட்-அவுட்கள் மீது ஏழு வயதுச் சிறுவன் முதல் எழுபது வயது கிழவர் வரை தாங்களாகவே ஏறி, அவிழ்த்து, தரையில் போட்டு உடைத்து, ப்ளைவுட் கட்டைகளை விலைக்குப் போடத் தோளில் தூக்கிச் செல்ல ஆரம்பித்து விட்டனர். ஒரு மூதாட்டி அலங்கார கட்-அவுட் ஒன்றைத் தன் பேரனின் துணையோடு நகர்த்த முடியாமல் நகர்த்திக்கொண்டு போனார். ‘‘பாவம்... நாலைந்து நாளுக்கு அடுப்பெரிக்கப் பயன்படும்!’’ என்று சொல்லி, பார்த்துக்கொண்டிருந்தது போலீஸ்.

தொங்கிக்கொண்டிருந்த அலங்கார சீரியல் விளக்குகளை ஆங்காங்கே பலர் தங்களுக்கு எட்டியது வரை பிடித்து இழுத்துச் சுருட்டிப் பைகளுக்குள் போட்டுக்கொண்டனர். இதைப் பார்த்துவிட்டு அதன் உரிமையாளர்கள் பகலிலேயே மின்சாரத்தை அதில் பாயவிட்டனர். இதனால், பலருக்கு ஷாக் அடிக்க... அப்படியும் கட்டைகளைக் காலடியில் போட்டுக்கொண்டு பலரும் அலங்கார விளக்குகளைச் சுருட்டிக்கொண்டுதான் சென்றனர்.

தாலி கட்டிய மூன்றாவது நிமிடமே மிச்சம் மீதி இருந்த வாழை மரங்கள் கந்தல் கந்தலாகிவிட்டன! நரசிம்மவதாரம் எடுத்த பொதுமக்கள், வாழை மரங்களைப் பிய்த்துக் குதறி உள்ளே இருந்த வாழைத்தண்டை எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

ஏதுமில்லாத ஏழைகள்தான் இப்படியென்றால், திருமண பந்தலிலும் இதே கதிதான்! அங்கு பணியில் இருந்த அரசு அதிகாரிகள், போலீஸ்காரர்கள் எல்லோருமே பைகளில் ‘ஏதேதோ’ அள்ளிக்கொண்டு போனார்கள். பல லட்சம் செலவில் திருமண வளாகத்தில் ஒட்டியிருந்த கலர் பேப்பர்கள், பளபளா பேப்பர்களைக்கூடச் சுருட்டிக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு விரைந்தனர்.

திருமணத்தில் டெல்லி அதிகாரிகள்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஒரு தொழிலதிபர் தன் மகளுக்குத் திருமணம் நடத்தினார். திருமணம் முடிந்த கையோடு அவருக்கு இன்கம்டாக்ஸ் அதிகாரிகளிடம் இருந்து நோட்டீஸ் வந்தது. அதில் இவ்வளவு செலவு செய்ய ஏது உங்களுக்குப் பணம்...வருமானம் எவ்வளவு?’’ என்று குடைந்து எடுத்துவிட்டார்கள்.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு, டெல்லியில் இருக்கும் நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி டெல்லியில் இருந்து வருமான வரித்துறை உயரதிகாரிகள் ஏழுபேரும் சென்னையில் இருக்கும் வருமானவரி புலனாய்வுத்துறை உயரதிகாரிகள் நால்வரும் சென்றனர்.

ஒரு தொழிலதிபரின் வீட்டுக் கல்யாணத்தில் லட்ச ரூபாய் செலவு செய்ததற்கு இவ்வளவு கெடுபிடி செய்த வருமானவரித்துறையினர், கோடிக்கணக்கில் செலவு செய்த முதல்வர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்?

- நமது நிருபர்கள்

திருமணத்தைத் தொடர்ந்த காட்சிகள் நாளை...


விகடன்.காம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 9:09 pm

ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Vztv3IPXRm651tVJ4H3g+sudakaranmarriageoct14_2

இந்த போட்டோ வில் ஜெ., தலை இல் கிரீடம் போல இருக்கு பாருங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக