ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

3 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:33 pm

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.



‘மண் மீது – இனி
மழைத்துளி விழா!’
எனும் நிலை
ஏற்பட்டால்…

வையத்தில் நடவாது
வானோர்க்கான விழா!

அன்றாட பூசை;
ஆண்டுக்கொரு பொங்கல்;
என்று நடந்தவை
நின்று போகும்;

இதுகாறும் -
இடைவெளியே…

விழா விழா -
விழும் விழா ஆகும்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:33 pm

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.





பிறன்
மிடி கெட –
மனமுடையோன் அளக்கும்
படி கெடும்;

தனது
அவம் கெட -
தனியொருவன் நோற்கும்
தவம் கெடும்;

மைவிரிக்கும் மேகம் -
கைவிரித்து விட்டால்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:34 pm

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.





எல்லா மிருக்கும் – செல்வர்
என்போர்க்கும்…

நீரில்லை யானால்
சோறில்லை;
நீர் தருவது –
ஆர்? கார்!
காரில்லை யானால்
நீரில்லை!

ஆக -
ஆகாயம் தரும்…

நீரில்லை யானால் -
ஊரில்லை; பாரில்லை!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:10 pm

நீத்தார் பெருமை
அதிகாரம் 3




ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.




அறவழி அறிவார்;
அதன்வழி நடப்பார்; ஆசைகள் –
அறவழி அறிவார்;
அவற்றை இடப்பார்;

கல்லா ஞானம்
கற்றுத் தேர்ந்தும் –
கல்லார் போலே
கல்லாய்க் கிடப்பார்;

ஆன்று அமைந்த
அவர்தம் பீடுகள்…
பெரிதும் பெரிதெனப்
பேசிடும் ஏடுகள்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:11 pm

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.



பற்று - அது
பந்தியை அரிக்கும்
பற்று - என
அறிந்து
அந் நோய்…

முற்றுமுன் அதற்கு –
முற்றுவைத்தார் அருமை…

அளந்து கூற
ஆரால் ஆகும்?
அங்ஙனம்
அளக்க முயல்வது…

இப் புவியில் –
இது வரையில் –

உடல் விட்டுக் கழன்ற
உயிர்களின் கணக்கை
விரல் விட்டு எண்ணும்
வினையாகிப் போகும்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:12 pm



இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.





பிறப்பு -
இறப்பு -
இவ் விரண்டின்
இறக்கம் ஏற்றம் கூர்ந்து…

பிறப்பு -
இறப்பு -
இவ் விரண்டும்
இற்றுப் போக…

துறப்பு -
சிறப்பு -
என அஃதினை
ஏற்று அறவழி சேர்ந்து…

நிற்பார் உயர்வு -
நிலமிசை உயர்வு!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:12 pm



உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.




அஞ்சு பொறிகள் -
அஞ்சு கரிகள்!

புலன்கள் வழியே
போய் - அவை
நலன்கள் கெட்டு
நாசமா காமல்…

ஆடா அறிவெனும்
அங்குசத்தால் – அந்த
அஞ்சானை – அடக்கும்
அஞ்சானை…

ஆரும் தொழுவர்
ஆன்றவன் என்று; மேலான
பூமியாம் வீட்டுக்கு – விதை
போன்றவன் என்று!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:13 pm



ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.


மெய்யுணர்வை
மேவ-தனது
மெய் யுணர்வை
மேவாது தவமியற்றி

அதற்கு-
ஆகாத-

ஐயுணர்வை
ஐய உணர்வின்றி அகற்றி-
உய்யுணர்வை
ஓர்ந்த ஒருவனின்…

வலிமைக்கு சாட்சி-
வாசவனின் ஆட்சி!

இந்திரியம் இறுக்கி
இரும்வேள்வி இயற்றி-
இந்திரப் பதவியை
ஏற்றவன் அவன்;

இந்திரியம் இளக்கி
இச்சைப்படி இயங்கி-
தந்திரப் பூனையாகித்
தோற்றவன் அவன்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:13 pm



செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.


ஆராலும்
ஆகும்… தவறாடை அணிந்து
தரணியில் திரிய!
ஆரால்
ஆகும்… துவாராடை தரித்துக்
தூயோனாய்த் துலங்க?
ஆராலும்
ஆகும்… அடக்கமாகும் வரை
அடக்கமற் றிருக்க!
ஆரால்
ஆகும்… அடக்கமாகும் வரை
அடக்கமாய் இருக்க?

தன்னை நீத்தார்;
தனது நீத்தார்;
அன்னவரே
அவனியின் கண்ணே-
பெரியா ரென்னும்
பெரும்புகழ் பூத்தார்!

அருஞ்செயல் புரியும்-
அரியார் பெரியார்;
அருஞ்செயல் புரிய-
அறியார் சிறியார்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:14 pm



வைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.




தின்னல்; காண்டல்;
தீண்டல்; கேட்டல்;
மோத்தல்; என-

முறைப் படுத்திய
மோகங்கள் ஐந்தையும்
சிறைப் படுத்திய
செம்மலின் கைக்குள்…

வசப்பட் டிருக்கும்
வையம்; அவன்தான்-
உலக வட்டத்தின்
மையம்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum