ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

3 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Empty வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:24 pm

கடவுள் வாழ்த்து
அதிகாரம் 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


அக்கரங்களின்
ஆரம்ப மாவது
அகர உயிர்

அஃதே போல்
அனைத்திற்கும்
ஆதியா யிருந்து
ஆக்கவல்ல…

அக்கரங்களில்
ஆரம்ப மாவது
அகில உயிர்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 8:58 am

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.




ஆழக் கற்றும்
அகலக் கற்றும்
நீளக் கற்றும்
நெடுகக் கற்றும்…

அமைவது உண்டோ
அறிய ஆகாததை
அறிய அறிவு? அது
அரிய அறிவு! அவ்

வாலறிவு
மேலறிவு

என
ஏத்தாதான்…

நூலறிவு
காலறிவு!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:02 am

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.



தரைப்பூ வாடலாம்;
வரைப்பூ வாடலாம்;
நுரைப்பூ கொண்ட – நீர் விளையும்
விரைப்பூ வாடலாம்;

வையமிசை
வாடாப்பூ; இதழ்
வாசல்கள்-
மூடாப் பூ;

உன்
உளப்பூ அமர்ந்த
ஒரு பூ; அது
ஒளிப் பூ; அந்த
ஒரு பூ அடியிணை
இரு பூ; அவை தொழு! உன்-
உயிர்ப்பூ வாழும்
உயிர்ப்பொடு நீடு!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:04 am

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.




விருப்பு மீதும் – அவன்
விருப்பு இலாதவன்;
வெறுப்பு மீதும்- அவன்
வெறுப்பு இலாதவன்!

அவன்
அடி பரவுவார்க்கு
அவலங்களின்
ஆணி வேரான…

விருப்பு மீது
வெறுப்பு வரும்; அத்தகு
வெறுப்பு மீது
விருப்பு வரும்!

அதன்பின்
அவர்…

தாமரை இலைத்
தண்ணீர்; அவர்
கண்களுக்கு அந்நியமாகும்
கண்ணீர்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:08 am

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.




புகழ் எனும்
பதத் திற்கு
மெய்ப் பொருள் –அந்த
மெய்ப்பொருள்!

அவன் புகழே புகழ்! என-
அவன் புகழே புகழ்!

கருவறை கல்லறை
கல்லறை கருவறை
என்று
இவ் வுயிர்…

கண்ணாமூச்சி ஆடக்
காரண மான-

ஆகூழ்;
போகூழ்;
ஆகிய இரண்டும்
ஆகிடும் கூழ்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:11 am

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.




மெய்வாய் கண்மூக்கு
செவி-
எனப்படும்
இந்த…

அஞ்சுதான் – அவா
அஞ்சுவரும் ஆறு;
அஞ்சையும் ஆறையும்
அழித்தவன் அவனெனத் தேறு!

அவன் கற்பித்த
அப்பழுக் கற்ற
அறவழி கற்பார் – அழிசூழும்
அவனியில் நீடித்து நிற்பார்!


Last edited by தமிழ்நேசன்1981 on Tue Oct 14, 2014 9:23 am; edited 1 time in total
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:14 am

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.




ஒப்பு இல்லாத ஒருவன்;
உதித்தல் உதிர்தல் எனும் –
தப்பு இல்லாத ஒருவன்!

அவனே
அவனுக்கு இணை; அண்டுக –
அவனது
அடிமலர் இணை!

அண்டுவார்க்கு
அவலம் போக்கும் அவன்பதம்;
அண்டாதார்க்கு
அதுவலால் வேறேது அவுடதம்?


Last edited by தமிழ்நேசன்1981 on Tue Oct 14, 2014 9:27 am; edited 1 time in total
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:17 am

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.



அவன்
தண்ணளி மிகுந்த
தரும சாகரம்!

அவன்
திருவடி என்னும்
தெப்பம் ஏறுவார்
கடந்திட ஏலும்
கரும சாகரம்!

பாதப் படகில்
பயணிக் காதார்…

போக சாகரம்
பொருள் சாகரம்
எனப் படும் இரண்டு
இருள் சாகரம்!

எங்ஙனம் கடந்து
ஏறுவார் கரை?
ஏலாது; கடலவரை
ஏற்குமே இரை!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:35 am

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.



எண்ணதற் கரிய
எண்ணுதற் குரிய
ஏற்றமிகு குணங்களை
ஏற்ற குரிசிலின்…

திருவடி போற்றி;
திருப்புகழ் சாற்றி…

வாழ்த்தாத் தலை;
வழுத்தாத் தலை;
தாழ்த்தாத் தலை;
தறுதலை!

கேளாச் செவி;
காணா விழி;
எந் நிலை?
அந் நிலை!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum