Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
+2
krishnaamma
சிவா
6 posters
Page 1 of 1
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
![ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு 1655274_750261248380308_608442211092379797_o](https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xaf1/t31.0-8/1655274_750261248380308_608442211092379797_o.jpg)
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் நேற்று அதிமுக சார்பில் 10 ஆயிரம் பேர் பால்குட ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டியும் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று பெண்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மதுரை கல்பாலம் அருகில் வைகை ஆற்றில் விசேஷ பூஜை செய்யப்பட்டு பால்குட ஊர்வலம் தொடங்கியது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். இதை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமையில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் வைகை ஆற்றில் இருந்து யானைக்கல், வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி வழியாக நேதாஜி ரோடு, முருகன் கோயிலை வந்தடைந்தது. முருகன் கோயிலில் அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் அதிமுக தொண்டர்கள் அலகு குத்தியபடியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். சிறிய தேர் இழுத்தபடியும் தொண்டர்கள் வந்தனர். சுமார் 3 கி.மீ தூரத்துக்கு நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் ராஜன் செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே. போஸ், சுந்தரராஜன், துணை மேயர் கு. திரவியம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜாங்கம், வளர்மதி ஜெபராஜ், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் துரை பாண்டியன், தங்கம், ராஜா, மண்டல தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், ஜெயவேல், பரவை பேரூராட்சி தலைவர் ராஜா, சூப்பர் மார்க்கெட் முத்துச்சாமி, தொகுதி நிர்வாகிகள் கிரம்மர் சுரேஷ், ரவிச்சந்திரன், சுப்பு, பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, முருகன், முத்துஇருளாண்டி, பூமிபாலகன், வக்கீல்கள் ரமேஷ், அசோகன், ஏ.பி. பாலசுப்பிரமணி, பேரவை நிர்வாகிகள் நிலையூர் முருகன், வெற்றிவேல், கலைசெல்வம், கவுன்சிலர்கள் கேசவபாண்டியம்மாள், லட்சுமி, இந்திராணி, கண்ணகி, கலாவதி, முத்துமீனாள், முருகேஸ்வரி, கார்னர் பாஸ்கர், புதூர் அபுதாகீர், தாஸ், வட்ட செயலாளர்கள் புதூர் கண்ணன், கே.வி.டி. கண்ணன், சக்தி விநாயகர் பாண்டியன், தேவதாஸ், பஜார் துரைபாண்டி, நிர்வாகிகள் ஐ.பி.எஸ். பாலமுருகன், மிசா செந்தில், தல்லாகுளம் மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
அடக்க்ருஷ்ணா................என்ன இது சிவா?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
பாஸ் தட்ஸ் தமிழில் வந்த செய்தி இது:
செல்லூர் ராஜு நடத்திய 'செட்டப்' பால்குடம், காவடி.. ஸ்தம்பித்த மதுரை.. திட்டித் தீர்த்த மக்கள்!
மதுரை: அதிமுகவினரின் அட்டகாசங்களுக்கு சற்றும் குறைவு இல்லை. மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தினந்தோறும் அம்மாவுக்காக என்ற பெயரில் மக்களை துயரப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர். மக்கள் படும் அவதியைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் இவர்கள் நடத்தி வரும் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை தினந்தோறும் ஸ்தம்பிக்கும் அவலம் தொடர்கிறது. மதுரையைச் சேர்ந்தவரான அமைச்சர் செல்லூர் ராஜு நடத்திய காவடி திருவிழாவின் மதுரையின் மையப் பகுதி இன்று ஸ்தம்பிப்பிக்குள்ளானது. பொதுமக்கள் அமைச்சரை வாய் விட்டுத் திட்டும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. தீபாவளி பர்ச்சேஸ் உள்ளிட்டவற்றுக்காக வெளியில் வந்த மக்கள் இந்த கொடுமையான அதிமுக பேரணியால் பாதிப்புக்குள்ளானார்கள்.
ஜெ. பார்வையில் விழுவதற்காக நாங்களும் உங்களுக்காக செய்தோம் அம்மா என்று கணக்கு காட்டுவதற்காகவே அதிமுகவினர் தொடர்ந்து மக்களை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் தமிழகம் முழுவதும். மண் சோறு, தீச்சட்டி மண் சோறு சாப்பிடுவது, தீச்சட்டி ஏந்துவது, தீ மிதிப்பது, காவடி எடுப்பது, அங்கப்பிரதட்சனம் செய்வது, உண்ணாவிரதம், வாயில் கருப்புத் துணி கட்டிக் கொள்வது என விதம் விதமாக செய்தபடி இருக்கின்றனர் அதிமுகவினர். செல்லூர் ராஜுவின் காவடித் திருவிழா அந்த வகையில் மதுரையில் ஜெயலலிதாவுக்காக பெண்களை விட்டு பால் குடம் ஏந்தி பவனி, காவடி ஊர்வலம் என மக்களை ஸ்தம்பிக்க வைத்து விட்டார் அமைச்சர் செல்லூர் ராஜு. இலவசமாக குடம், பால் இதற்காக ஆயிரக்கணக்கான பெண்களை காசு கொடுத்து திரட்டிக் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அனைவரையும் வைகை ஆற்றில் இறக்கி விட்டு, ஆளுக்கு ஒரு சில்வர் குடம் கொடுத்தனர். பின்னர் அதில் ஒரு பாக்கெட் பால், தேங்காய், தலைக்கு 100 ரூபாய் என கொடுத்து ஊர்வலத்தைத் தொடங்கினர். சிம்மக்கல் முதல் மேலமாசி வீதி வரை இந்த ஊர்வலம் சிம்மக்கல்லில் தொங்கி மேலமாசி வீதி வரை நடந்தது. வீதியை அடைத்து நடந்த இந்த ஊர்வலத்தால் மதுரையே ஸ்தம்பித்துப் போனது. இப்போது தீபாவளி சமயம் என்பதால் கடைகளுக்கு வந்த மக்கள் இந்த அக்கப்போரைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டனர். போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போனது. ஆயிரக்கணக்கில் காசு இந்தக் கொடுமையின் முக்கிய விஷயம் என்னவென்றால் காவடியில் கலந்து கொண்ட பறவைக் காவடி எடுத்தவருக்கு தலா 10,000 ரூபாய் கொடுத்தனராம். அதேபோல் வேல் குத்திக் கொண்டவர்களுக்கு ரூ. 2000 கட்டணமாம். மொட்டை போட்டுக் கொண்டால் 500 ரூபாய் கொடுத்தார்களாம். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று பலரும் புலம்பினர்.. பலர் அமைச்சரைத் திட்டினர்!
செல்லூர் ராஜு நடத்திய 'செட்டப்' பால்குடம், காவடி.. ஸ்தம்பித்த மதுரை.. திட்டித் தீர்த்த மக்கள்!
மதுரை: அதிமுகவினரின் அட்டகாசங்களுக்கு சற்றும் குறைவு இல்லை. மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தினந்தோறும் அம்மாவுக்காக என்ற பெயரில் மக்களை துயரப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர். மக்கள் படும் அவதியைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் இவர்கள் நடத்தி வரும் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை தினந்தோறும் ஸ்தம்பிக்கும் அவலம் தொடர்கிறது. மதுரையைச் சேர்ந்தவரான அமைச்சர் செல்லூர் ராஜு நடத்திய காவடி திருவிழாவின் மதுரையின் மையப் பகுதி இன்று ஸ்தம்பிப்பிக்குள்ளானது. பொதுமக்கள் அமைச்சரை வாய் விட்டுத் திட்டும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. தீபாவளி பர்ச்சேஸ் உள்ளிட்டவற்றுக்காக வெளியில் வந்த மக்கள் இந்த கொடுமையான அதிமுக பேரணியால் பாதிப்புக்குள்ளானார்கள்.
ஜெ. பார்வையில் விழுவதற்காக நாங்களும் உங்களுக்காக செய்தோம் அம்மா என்று கணக்கு காட்டுவதற்காகவே அதிமுகவினர் தொடர்ந்து மக்களை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் தமிழகம் முழுவதும். மண் சோறு, தீச்சட்டி மண் சோறு சாப்பிடுவது, தீச்சட்டி ஏந்துவது, தீ மிதிப்பது, காவடி எடுப்பது, அங்கப்பிரதட்சனம் செய்வது, உண்ணாவிரதம், வாயில் கருப்புத் துணி கட்டிக் கொள்வது என விதம் விதமாக செய்தபடி இருக்கின்றனர் அதிமுகவினர். செல்லூர் ராஜுவின் காவடித் திருவிழா அந்த வகையில் மதுரையில் ஜெயலலிதாவுக்காக பெண்களை விட்டு பால் குடம் ஏந்தி பவனி, காவடி ஊர்வலம் என மக்களை ஸ்தம்பிக்க வைத்து விட்டார் அமைச்சர் செல்லூர் ராஜு. இலவசமாக குடம், பால் இதற்காக ஆயிரக்கணக்கான பெண்களை காசு கொடுத்து திரட்டிக் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அனைவரையும் வைகை ஆற்றில் இறக்கி விட்டு, ஆளுக்கு ஒரு சில்வர் குடம் கொடுத்தனர். பின்னர் அதில் ஒரு பாக்கெட் பால், தேங்காய், தலைக்கு 100 ரூபாய் என கொடுத்து ஊர்வலத்தைத் தொடங்கினர். சிம்மக்கல் முதல் மேலமாசி வீதி வரை இந்த ஊர்வலம் சிம்மக்கல்லில் தொங்கி மேலமாசி வீதி வரை நடந்தது. வீதியை அடைத்து நடந்த இந்த ஊர்வலத்தால் மதுரையே ஸ்தம்பித்துப் போனது. இப்போது தீபாவளி சமயம் என்பதால் கடைகளுக்கு வந்த மக்கள் இந்த அக்கப்போரைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டனர். போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போனது. ஆயிரக்கணக்கில் காசு இந்தக் கொடுமையின் முக்கிய விஷயம் என்னவென்றால் காவடியில் கலந்து கொண்ட பறவைக் காவடி எடுத்தவருக்கு தலா 10,000 ரூபாய் கொடுத்தனராம். அதேபோல் வேல் குத்திக் கொண்டவர்களுக்கு ரூ. 2000 கட்டணமாம். மொட்டை போட்டுக் கொண்டால் 500 ரூபாய் கொடுத்தார்களாம். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று பலரும் புலம்பினர்.. பலர் அமைச்சரைத் திட்டினர்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
அடப்பாவிகளா.................இது எங்கு போய் முடியும்? ....................//ஜெ. பார்வையில் விழுவதற்காக நாங்களும் உங்களுக்காக செய்தோம் அம்மா என்று கணக்கு காட்டுவதற்காகவே அதிமுகவினர் தொடர்ந்து மக்களை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் // இதற்கு யார் முடிவு கட்டப்போறா?????????????????
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு முடிவதற்குள் ...போராட்டம் நடத்திய ஊழல் என்று ஒன்று புதிதாக முளைத்துவிடப்போகிறது...யார் என்ன சொன்னாலும் இவர்களை திருத்த முடியாது.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
மேற்கோள் செய்த பதிவு: 1095715தமிழ்நேசன்1981 wrote:சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு முடிவதற்குள் ...போராட்டம் நடத்திய ஊழல் என்று ஒன்று புதிதாக முளைத்துவிடப்போகிறது...யார் என்ன சொன்னாலும் இவர்களை திருத்த முடியாது.
ஹை.............இது நல்லா இருக்கே..............நீங்களே எடுத்து கொடுக்கறீங்களே நேசன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
அதாவது போராட்டம் நடத்திய ஊழல் என்று சொல்லி எல்லா அமைச்சர்களையும் உள்ளே போட வேண்டும்
...
...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
மேற்கோள் செய்த பதிவு: 1095603krishnaamma wrote:அடப்பாவிகளா.................இது எங்கு போய் முடியும்? ....................//ஜெ. பார்வையில் விழுவதற்காக நாங்களும் உங்களுக்காக செய்தோம் அம்மா என்று கணக்கு காட்டுவதற்காகவே அதிமுகவினர் தொடர்ந்து மக்களை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் // இதற்கு யார் முடிவு கட்டப்போறா?????????????????![]()
தேர்தல்தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு
» ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது
» சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு
» மழை பெய்ய வேண்டி கிராம எல்லையில் அம்மிக்கல்–ஆட்டு உரலை வீசி பொதுமக்கள் வழிபாடு
» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு
» ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது
» சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு
» மழை பெய்ய வேண்டி கிராம எல்லையில் அம்மிக்கல்–ஆட்டு உரலை வீசி பொதுமக்கள் வழிபாடு
» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|