ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ராஜ பேனாவின் கதை!

5 posters

Go down

ஒரு ராஜ பேனாவின் கதை! Empty ஒரு ராஜ பேனாவின் கதை!

Post by தமிழ்நேசன்1981 Sun Oct 12, 2014 10:43 pm


ஒரு ராஜ பேனாவின் கதை!
பாக்கியம் ராமசாமி


(கவித்துவமான தலைப்பு மாதிரி இருக்கிறதல்லவா? சூட்சுமமாக எதையோ மறைமுக மாக உணர்த்துவது போல் தோன்றுகிறதல்லவா? ஏமாந்து விடாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அசல் பேனா பற்றிய கதைதான் இது!)

எ னது பேனாக்களுக்குள் கடந்த சில நாட்களாகவே ஒரு பனிப் போர், பொறாமைப் போராட்டம் நடந்துவருவதை என்னால் ஊகிக்க முடிந்தது.

சில கூட்டுக் குடும்ப வீடுகளில் ஓரகத்திகளுக்குள் எப்போதுமே ஏதாவது போட்டி பொறாமை உணர்ச்சிகள் இருந்து வரும். ஆனால், அவர்கள் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் செய்கைகளிலேயே அது தெரிந்துவிடும். ஒருத்தி ரசம் நன்றாகச் செய்து, அதை எல்லோரும் ‘கமகமவென்று ஜோராக இருக்கிறதே’ என்று புகழ்ந்துவிட்டால் போச்சு... அந்த ரசத்தை மற்றவள் ஊற்றிக்கொள்ள மாட்டாள். மற்றவள் சிரமப்பட்டு நல்லதொரு அழகான கோலம் வாசலில் போட்டிருந்தால், இவள் அதைக் கண்டுக்கவே மாட்டாள். அதன் மேல் வாளித் தண்ணீரை ‘தற்செயலாக’ச் சிந்திவிட்டுப் போவாள்.

வாயுள்ளவர் களுக்குள் இது மாதிரி மௌனப் போர் நிகழ்வது போல, வாயில்லாத பொருள்களிடமும் போட்டி பொறாமை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

என்னிடம் ஏழெட்டு பேனாக்கள் இருந்து வருகின்றன. அவற்றில், தொண்ணூறு விழுக்காடு எழுதாதவை. ஆனாலும், தூக்கி எறிய மனமில்லாமல் சேர்த்து வைத்திருக்கிறேன்.

என் பேனாக்களில் ஒரு தடித்த பேனாவை மட்டும் ‘ராஜ பேனா’ என்று செல்லமாக அழைப்பேன். அதை ஒரு பிரத்யேகப் பெட்டியில்தான் (எந்த நகைக் கடையிலோ தந்த பிளாஸ்டிக் பெட்டி) எப்போதும் போட்டுவைப்பது வழக்கம். அதற்கு நான் தரும் தனி அந்தஸ்து அது.

வழவழவென்று எழுதும். வாரத்துக்கு ஒரு தரம் மை போட்டால் போதும். நிறையத் தீனி போட்டு வளர்ந்த புஷ்டியான டெல்லி எருது மாதிரி இருக்கும். புதிதாக அதைப் பயன்படுத்துகிறவர்களுக்கு கை விரல்கள் எல்லாம் நோகும். அந்தப் பேனாவைச் சதா காலமும் நான் சட்டைப் பையில் வைத்துக்கொள்வது இல்லை. வாக்கிங் போகிறபோது மட்டும் வெளியே எடுத்துப் போவது வழக்கம். அது என் சட்டைப் பையில் இருக்கும்போது, ஒருவித கம்பீரம் என்னையறியாமலே உண்டாகி விடுவதை என்னால் உணர முடிந் தது. கதை எழுத மட்டுமே அந்தப் பேனா. கரடுமுரடான மலைச் சாலையில்கூட மிலிட்டரி டாங்க் தங்கு தடையில்லாமல் போவது போல, எந்தவித முரட்டுக் காகிதத்தின் மீதும் அற்புதமாக எழுதிச்செல்ல அந்தப் பேனாவால் மட்டும்தான் முடியும்.

அந்தப் பேனா மீது மற்ற ஒல்லிப் பேனாக்களுக்கு ஒரு வகைக் காழ்ப்பு உணர்ச்சி இருப்பதை நான் சில நாட்களாக அறியத் தொடங்கினேன். ஆனால், வெளியே யாரிடமும் சொல்லவில்லை. ‘வயசாகிடுச் சில்லையா, கிராக் ஏதோ உளறு கிறது’ என்று பட்டம் கட்டி விடுவார்கள் என்கிற பயம்தான் காரணம்.

ராஜ பேனாவை நான் ஒரு தனி பிளாஸ்டிக் பெட்டியில் வைப்பது தான் வழக்கம் என்று சொன்னேனில் லையா? அவ்வளவு பத்திரமாக வைத்திருந்தாலும், சில சமயம் பெட்டிக்கு வெளியே அது விழுந்துகிடக்கும். அக்னி நட்சத்திர வெம்மை தாளாமல் மனிதர்கள் வீட்டுக்கு வெளியே படுப்பது போல், பெட்டிப் புழுக்கம் தாளாமல் அது வெளியே வந்து படுத்திருக்கிறதா? நிச்சயமாக நான் அதை வெளியே வைக்கவில்லை. பின்னே எப்படி அது வெளியே வந்தது?

சொன்னால் நம்ப மாட்டீர்கள். எல்லாம் மற்ற பேனாக்களின் திரிசமன் வேலைதான். ஒரு ஃப்ளவர்வாஸில் மற்ற ஒல்லிப் பேனாக்களைப் போட்டு வைத்திருந்தேன். அவையெல்லாம் (சில இங்க், சில பால்பாயின்ட்) கூட்டணி அமைத்துக்கொண்டு, சட்டமன்றத்தில் ரகளை செய்யும் எம்.எல்.ஏ-க்களை சபைக் காவலர்கள் குண்டுக் கட்டாகக் கட்டித் தூக்கிப் போய் வெளியே போடுவது போல, ராஜ பேனாவை வெளியே இழுத்துப் போட்டிருக்கின்றன. நான் செய்த முட்டாள் தனம், ராஜ பேனாவின் பெட்டியை மூடாமல் திறந்து போட்டுவிட்டுப் போனது.

ஒல்லிப் பேனாக்கள் ராஜ பேனாவை ஏதாவது கடித்துக் குதறித் துன்புறுத்தி இருக்கின்றனவோ என்று நிதானமாக ஆராய்ந்தேன். நான் பயந்தது சரியாகப் போய்விட்டது. ராஜ பேனாவின் பழுப்பு நிற மினுமினுப்பில், சில இடங்களில் கொத்தின அடையாளங்கள் தென் பட்டன. பதறிவிட்டேன்.

வலிக்காமல் கைக்குட்டையால் துடைத்தேன். மற்ற பேனாக்கள் என் ராஜாவைக் கடித்து, அடித்து வெளியே கொண்டுவந்து போட்டிருக்கின்றன. ‘ஐயோ... என்னைக் கொல்றாங்களே, கொல்றாங்களே’ என்று அது கதறியிருக்கும். நான் வெளியே போயி ருந்ததால், அந்தக் கூக்குரல் என் காதில் விழவில்லை. ஸ்தலத்துக்கு உடனே விரைய முடியவில்லை.

துடைக்கும்போது கவனித்தேன்... தழும்பு போல மேலே அங்குமிங்கும் ஏதோ ஒட்டியிருந்தது. முகர்ந்து பார்த்தேன். என்னவோ மாவு!

சரிதான். கிள்ளு பலமாக விழ, மாவைத் தடவிக் கிள்ளியிருக்கின்றனர். சாமர்த்தியமான எதிரிகள் தான். சே! அறிவற்ற ஜடப் பொருள் களுக்குள்ளே மனிதனைப் போல் இத்தனை சதி அறிவா?

கீழே காலை எதுவோ இடறியது. நேற்று மாலை டிபன் சாப்பிட்டுவிட்டு (கொழகொழ ரவா உப்புமா) தட்டை மேஜைக்கடியிலேயே போட்டுவிட் டேன் போலிருக்கிறது.

ராஜாவை முகர்ந்து பார்த்தேன். அதன் தேகத்தில் உப்புமா வாசனை அடித்த பின்புதான் எனக்கு உயிரே வந்தது. நல்லவேளை, நான் பயந்தது போல் அதை மற்ற பேனாக்கள் கடித் திருக்கவில்லை. அதன் உடலில் ஏற்பட்டிருந்த சொர சொரப்பு, கவனப் பிசகாக எச்சில் கையோடு நான் அதைத் தொட்டு எழுதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனாலும், நான் உஷாராகவே இருந்தேன். மற்ற பேனாக்கள் அணுக முடியாத இடமாக, புத்தக ஷெல்ப்பின் உச்சித் தட்டில் என் ராஜபேனாவை வைத்துவிட்டேன்.

ஒரு சனிக்கிழமை, பிற்பகல் இரண்டரை மணிக்குத் தடாலென்று ஒரு சத்தம்.

ஓடிப் போய்ப் பார்த்தால், என் ராஜ பேனா, பெட்டியுடன் தரையில் கவிழ்ந்தடித்து விழுந்து கிடந்தது. பெட்டி சிதறி, வேறோர் இடத்தில். இது ரயிலில் அடிபட்ட அனாதைப் பிணம் மாதிரி கோணா மாணாவென்று ஒரு ஓரமாக ஒதுங்கிக் கிடந்தது. பதறித் துடித்து, ராஜாவை அள்ளினேன்.

அதைப் பாதுகாத்த பிளாஸ்டிக் பெட்டி, மூடி தனி, அடி தனியாக மூலைக்கொன்றாகக் கிடந்தது. அந்த வரைக்கும் தன் உயிரைக் கொடுத்து, என் ராஜாவை அது காப்பாற்றிவிட்டது. கடமை உணர்ச்சி யுள்ள பெட்டி!

என் கண்களில் துளிர்த்த நீருடன், மேற்படி பெட்டியின் தியாகத்தை மெச்சி, அதைச் சகல மரியாதைகளுடன் ஓனிக்ஸ் தொட்டியில் போட்டு, மேலே ரெண்டு பூவும் போட்டு, கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே வந்தேன்.

நடந்தவை எல்லாமே ஒல்லிகளின் சதிதான் என்று எனக்குத் திட்டவட்டமாகப் புலனாயிற்று. தாங்கள் இருக்குமிடத்தில் இருந்துகொண்டே ஏகாதிபத்திய வெறியர்கள் ஏவுகணை மூலம் பிற நாடு களைத் தாக்குவது போல, ஒல்லிப் பேனாக்களின் கூட்டாட்சியில் விளைந்த காட்டாட்சி, ராஜ பேனாவைத் தாக்கியிருக்க வேண்டும். அது சாத்தியமா என்று யாரும் சந்தேகப்படவே தேவையில்லை. சாத்தியம்தான்.

எழுதவே எழுதாத ஒரு ரீஃபில் பேனா ராஜ பேனா வைத்திருந்த அலமாரியின் கீழே உடைந்து கிடந்தது. மேற்படி ஒல்லிகள் தங்களுக்குள் ஒருத்தரை களப் பலி கொடுக்கத் தேர்ந்தெடுத்து, மனித வெடிகுண்டு மாதிரி அந்த ரீஃபில் பேனாவை ராஜ பேனா இருந்த ஷெல்ஃபின் மீது வீசி எறிந்திருக்கின்றன. எதிர்பாராத விதமாகத் தாக்கிய தாக்கலில், ராஜ பேனாவின் பெட்டி கீழே விழுந்திருக்கிறது. பெட்டி மட்டும் மெல்லியதாக இருந்திருந்தால், ராஜ பேனா இந்நேரம் பீஸ் பீஸாகியிருக்கும்.

ஒல்லிப்பேனாக்களின் அரா ஜகத்துக்கு உடனடியாக ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்று உறுதி பூண்டேன். உருப் படாத கழுதைகள்! உடனடியாக நெருப்பு மூட்டி, எதிரிகளான அத்தனை பேனாக்களையும் ஈவிரக்கமில்லாமல் கொளுத்தியே விட்டேன்.

வீடு பூரா பிளாஸ்டிக் புகை. இருமல், இத்யாதி... ஆனாலும், ராஜாவைக் காப்பாற்றிவிட்டேன் என்கிற திருப்தி.

ராஜாவைக் கொண்டே இப்போது கதை மட்டுமல்லாது, பால் கணக்கு, லாண்டரிக் கணக்கு என என் சகல எழுத்துக்களையும் எழுத வேண்டியதாயிற்று.

ஒரு தினம் போஸ்ட் ஆபீஸுக்கு ராஜாவுடன் சென்றேன். பேரனின் ஆண்டு நிறைவுக்கான அழைப்பிதழ் களில் முகவரிகளை எழுதிக்கொண்டு இருந்தபோது, ஒரு பெரியவர் கனிவுடன் என்னருகே குனிந்து, ‘‘ஒரு நிமிஷம் பேனா தர முடியுமா?’’ என்றார். ஒல்லியாக இருந்தார்.

நான் கொளுத்திப்போட்ட ஒல்லிப் பேனாக்களில் ஒன்றை அவர் உருவம் ஞாபகப்படுத்தியது.

சிமென்ட் கலர் ஜிப்பா. மஞ்சள் வேட்டி. சின்ன தலை... அவர் தலையையே ஓர் அழுத்து அழுத்தி எழுதிவிடலாம் போலிருந்தார்.

இறந்துபோன ஒல்லிப் பேனாக் களின் ஆவிகளெல்லாம் இந்த ஆசாமியைத் தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கின்றனவா? எழுதித் தருவதாக என் ராஜ பேனாவை வாங்கி, என்னமாவது செய்துவிட்டால்..?

பயந்துகொண்டே கொடுத்தேன். அந்த ஆள் பேனாவை வாங்கி எழுதினார், எழுதினார்... ரொம்ப நேரம் எழுதினார். கையெல்லாம் நடுங்கியது. வயசு காரணமல்ல; செய்யப்போகும் சதி பற்றிய பயம்.

உஷாராக அவரையே கண்காணித்துக்கொண்டு இருந்தவன், சற்றே கவனப் பிசகாக ஸ்டாம்ப் கவுன்ட்டருக்குப் போய்விட்டேன். சிறிது நேரம் கழித்துச் சட்டென்று ஞாபகம் வந்து, அந்த ஆசாமியைத் தேடினால்... ஐயோ, காணோம்! என் ராஜ பேனாவுடன் மாயமாக மறைந்துவிட்டார் அந்த ஒல்லிப்பிச்சான் பெரியவர்.

அங்குமிங்கும் ஓடினேன். ‘மச்சா னைப் பார்த்தீங்களா, மலைவாழைத் தோப்புக்குள்ளே... என் பேனாவைப் பார்த்தீங்களா, பலாமரத் தோப்புக் குள்ளே...’ என்ற பழைய பாட்டைப் பாடியவாறு, பித்தன் மாதிரி எல்லாரை யும் விசாரித்தேன்.

என் ராஜ பேனா, என் அபிமான பேனா, என் லட்சியப் பேனா என்னை விட்டுப் பிரிந்தே பிரிந்துவிட்டது. ‘அனார்... அனார்...’ என்று அனார்கலியை நினைத்துக் கதறிப் புலம்பிய ஜஹாங்கீர் மாதிரி என் அருமைப் பேனாவை நினைத்து, நாளெல்லாம் புலம்பிக் கொண்டு இருந்தேன்.

மற்ற ஒல்லிப் பேனாக்களின் ஆவிகளின் கூட்டுச் சதியேதான் இதற்குக் காரணம் என்று இப்போதும் திடமாக நம்புகிறேன்.

நன்றியுள்ள நாய்க்குக்கூட நினைவு மண்டபம் கட்டியிருக்கிறார்கள். நன்றி யுள்ள பேனாவுக்கு யாரும் நினைவு மண்டபம் கட்டியதாகத் தெரியவில்லை. நான் கட்டத் தீர்மானித்தேன். அதை வைத்திருந்த இடத்தில் அழகாக ஒரு மண்டபம் அமைப்பது பற்றி, கார்பென்ட்டர் ஒருவருடன் டிஸ்கஸ் செய்துகொண்டு இருந்தேன்.

‘படீர்!’

திறந்திருந்த ஜன்னல் வழியே ஒரு பெரிய கல் வந்து, ப்ரபோஸ்டு ஸைட்டைத் தாக்கியது. புத்தகங்கள் சரிந்து விழுந்தன. பெரிய கல்.

கீழேயிருந்து எந்தப் பயலோ அடுத்த பங்களாவின் மாமரத்துக்குக் குறிவைத்து எறிந்திருக்கிறான். குறி தவறி, ஜன்னலில் நுழைந்து பேனாவின் உத்தேச சமாதி இடத்தைத் தாக்கிவிட்டிருக்கிறது.

சட்டென்று என் மூளையில் ஒரு மின்னல்! இதே மாதிரி சம்பவத் தால்தான் என் ராஜ பேனாவும் அன்றைக்குக் கீழே விழுந்து இருக்குமோ? ஒல்லிப் பேனாக்கள்தான் தாக்கியிருக்கும் என்று தவறாக முடிவெடுத்து, அவற்றுக்கு நான் மரணதண்டனை நிறைவேற்றியது அவசரச் செய்கையோ? அடடா..! என் அவசர புத்தி காரணமாக, ஒரு பாவமும் அறியாத நிரபராதிகளைத் தண்டித்து விட்டேனே! யானோ எழுத்தாளன்..? யானே மூடன்! விழுகிற பாவனையில் நாற்காலியிலிருந்து தளர்ந்து, சரிந்து, தரையில் இறங்கி அமர்ந்து, விசனப்படலானேன்.

பேனாக்களோடு இனி ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று முடிவெடுத்து, இப்போது நேரடியாகவே கம்ப்யூட்டரில் டைப் செய்து வருகிறேன். ஆனாலும், என் ராஜ பேனாவில் எழுதுகிற மாதிரி சுகம் எனக்கு இதில் கிடைக்கவே இல்லை.

அப்பிராணி பேனாக்களை அநியாயமாகத் தண்டித்ததற்குத் தண்டனையாக எனக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்!

விகடன்.காம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஒரு ராஜ பேனாவின் கதை! Empty Re: ஒரு ராஜ பேனாவின் கதை!

Post by krishnaamma Sun Oct 12, 2014 10:52 pm

ம்.........நல்லா இருக்கு நேசன் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
கம்ப்யூட்டர் இல் type செய்வதற்கு இவ்வளவு பெரிய சப்பை கட்டு வேண்டுமா? ஹா...ஹா...ஹா....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு ராஜ பேனாவின் கதை! Empty Re: ஒரு ராஜ பேனாவின் கதை!

Post by ayyasamy ram Mon Oct 13, 2014 6:03 am

சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு ராஜ பேனாவின் கதை! Empty Re: ஒரு ராஜ பேனாவின் கதை!

Post by M.Saranya Mon Oct 13, 2014 4:04 pm

அருமை அருமை !!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஒரு ராஜ பேனாவின் கதை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஒரு ராஜ பேனாவின் கதை! Empty Re: ஒரு ராஜ பேனாவின் கதை!

Post by ஜாஹீதாபானு Mon Oct 13, 2014 4:06 pm

அருமையான கதை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு ராஜ பேனாவின் கதை! Empty Re: ஒரு ராஜ பேனாவின் கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum