புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
284 Posts - 45%
heezulia
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
19 Posts - 3%
prajai
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
7 Posts - 1%
mruthun
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!'


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 8:27 pm

'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!'
விபரீத விஜயபிரதாப் சிங்...


மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர் ஒருவர், சக வீரர்கள் மூன்று பேரை சுட்டுக்கொன்ற சம்பவத்தால் கல்பாக்கமே கலங்கிப் போயிருக்கிறது.

'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' P8
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' P8
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' P11

மத்திய அணுசக்தித் துறையின் கீழ் அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி ஆகியவை கல்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றன. சென்சிட்டிவ் ஏரியா என்பதால், சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு வளையத்தில் கல்பாக்கம் நகரியம் இயங்கி வருகிறது.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சி.ஐ.எஸ்.எஃப் படை வீரர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். கடந்த 8-ம் தேதி காலை 4.30 மணியளவில், வழக்கமாக நடைபெறும் அணிவகுப்புக்காக வீரர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். உ.பி மாநிலத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் விஜயபிரதாப் சிங், பதிவேட்டில் கையெழுத்திட்டு, தனக்கான 9 எம்எம் கார்பைன் ரக துப்பாக்கியைப் பெற்றுக்கொண்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளுக்கும் இவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு உள்ளது.

கோபத்துடன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த விஜயபிரதாப் சிங், மீண்டும் வேகமாக மாடிக்குச் சென்றார். அங்கு ஓர் அறையில், ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த தலைமைக் காவலர் மோகன் சிங்கை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு கூடுதல் உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் கோவர்தனன் பிரசாத், பிரதாப் சிங், சுப்புராஜ் ஆகியோர் ஓடி வந்தனர். விஜய பிரதாப் சிங்கை மடக்க முயற்சி செய்தனர். அவர்களை நோக்கியும் விஜயபிரதாப் துப்பாக்கியால் சுட்டார். கணேசனும், சுப்புராஜும் அதே இடத்தில் துடிதுடிக்க இறந்தனர்.

வயிற்றில் குண்டுகள் பாய்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரதாப் சிங் மற்றும் காலில் காயமடைந்த கோவர்தன் பிரசாத் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யார் இந்த விஜயபிரதாப் சிங்?

உ.பி மாநிலம் அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயபிரதாப் சிங். 52 வயதான இவர், 1990-ல் தொழில் பாதுகாப்பு படை வீரராகப் பணியில் சேர்ந்தார். வேறு மாநிலத்தில், காவலராகப் பணியாற்றிய அவர், கடந்த ஜூலையில் பதவி உயர்வு பெற்று கல்பாக்கம் வந்தார்.

விஜயபிரதாப் சிங் பின்னணி குறித்து, அவரிடம் விசாரணை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரிடம் கேட்டோம்.

''விஜயபிரதாப் சிங், ராஜஸ்தானில் உள்ள அணுமின் நிலையத்தில் பணியாற்றியபோது, ஏதோ பிரச்னை காரணமாக கல்பாக்கத்துக்கு மாற்றப்பட்டார். நல்ல கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு மிகவும் அமைதியாக இருக்கிறார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினோம்.

அவருக்கு மன ரீதியாக பிரச்னை இருந்துள்ளது. அதற்காக மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்திருக்கிறார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் தீவிர பக்தர். அந்த சாமியாரின் படத்தை எப்போதும் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருப்பாராம். நடக்காத ஒன்றை நடந்ததாகக் கற்பனை செய்துகொண்டு, விபரீதமாக நடந்துகொள்வது இவரிடம் உள்ள பிரச்னை. சக வீரர்களைப் பற்றி தலைமைக் காவலர் மோகன் சிங்கிடம் அடிக்கடி புகார் சொல்வாராம்.

'என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். சிரிக்கிறார்கள்.. கேலி செய்கிறார்கள்..' என்பதுதான் அவரது புகார்கள். முதலில் சீரியஸாக எடுத்துக்கொண்டு மோகன் சிங் விசாரித்து இருக்கிறார். பிரதாப் சிங் சொல்வது பொய் என்பது தெரிந்ததும், அவரைக் கூப்பிட்டு மோகன் சிங் கண்டித்தாராம். ஆனாலும், சக வீரர்களைப் பற்றி விஜயபிரதாப் தொடர்ந்து புகார் சொல்லியிருக்கிறார். மோகன்ராஜ் மௌனமாக இருந்திருக்கிறார். இது பிரதாப் சிங்குக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதாப் சிங், சம்பவத்தன்று இரவு முழுவதும் தூங்காமல் நடந்ததை அசைபோட்டிருக்கிறார். அதனால் கோபம் அதிகரித்து, நேராக மோகன் சிங்கை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். பிறகு, மற்ற இருவரையும் சுட்டிருக்கிறார்.

நாங்கள் விசாரித்த வரையில், கடந்த ஆறு வருடங்களாக சொந்த மாநிலத்தில் இல்லாமல், வெளி மாநிலங்களில் பணியின் நிமித்தம் விஜயபிரதாப் தங்கிவருகிறாராம். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர், 11-ம் வகுப்பும், இன்னொருவர் 9-ம் வகுப்பும் படிக்கிறார்கள். குடும்பத்தினருடன் வசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை மற்றவர்களிடம் அடிக்கடி வெளிப்படுத்துவாராம். பிரதாப் சிங்குக்கு ஹோம் சிக் இருந்திருக்கிறது. அதுதான் அவரை இந்த விபரீத முடிவுக்கு இட்டுச்சென்றுள்ளது'' என்று போலீஸார் கூறினர்.

போலீஸார் மேலும் கூறுகையில், ''கல்பாக்கத்தில் நடந்திருப்பது மூன்றாவது சம்பவம். இதற்கு முன்பாக, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த படைவீரர் ஒருவர், தொழிலாளி ஒருவரை சாதாரண விஷயத்துக்காகப் கோபப்பட்டு சுட்டுக் கொன்றார். அடுத்து, ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் பணியில் இருந்த ஒரு படைவீரர், திடீரென தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார். இவர்கள் மூவருமே உ.பி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மனரீதியில் பாதிக்கப்பட்டவர்கள்.

தமிழகத்தில் பணியாற்றும் வேறு மாநில படைவீரர்களின் பட்டியலை எடுத்து, அவர்களில் யாராவது மனஅழுத்தத்தில் இருக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு நடத்தி, உளவியல் பிரச்னை உள்ள நபர்களுக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்க வேண்டும். விடுமுறை, ஓய்வு போன்ற விஷயங்களில் கொஞ்சம் தாராளப் போக்கை அதிகாரிகள் காண்பித்தால், இதுமாதிரியான சம்பவங்களைத் தடுக்கலாம்'' என்றனர்.

ஆயுதம் கையாள்பவர்களை இப்படி மன அழுத்தத்தோடு விட்டு வைத்திருப்பது ஆபத்தானது.

- கனிஷ்கா, பா.ஜெயவேல்
விகடன்.காம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக