ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

+4
M.Saranya
Powenraj
யினியவன்
krishnaamma
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Empty இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

Post by krishnaamma Sat Oct 11, 2014 2:03 pm

வந்தாள் மகாலட்சுமியே...! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

'வந்தாள் மகாலட்சுமியே!
இனி என்றும் அவள் ஆட்சியே...'

என பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும் 'ஆதி பராசக்தி' எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு. பழமைவாதம், உணர்வுகளை ஒரு காலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டு பயணிக்காமல் பெண்ணுக்கு பெண்ணை எதிரியாக்காமல்... எந்த திசை நோக்கி பயணித்தால் அவர்களை வழிநடத்தலாம் என்று எண்ணி அந்த பெண் குழந்தைகள் தடம் மாறி கீழே விழுவதை விட, அவர்களையும் அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் அவர்களுடன் நாம் பயணிக்க வேண்டும்.

இந்தியாவில் பெண் குழந்தைகளை வழி நடத்தும் விதம் காலம் காலமாக அன்புடனும், அரவணைப்புடனும் தொடர்கிறது. வாசலில் கோலமிடுவது முதல் பெரியோரை மதிப்பது வரை எந்த ெவளிநாட்டினராலும் சொல்லி கொடுக்க முடியாத, சொல்லி கொடுக்காத சமூக சிந்தனைகளையும் பெண் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறோம்.சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாசார போர்வையில் கம்ப்யூட்டர், மொபைல் போன் மூலம் அவர்கள் தற்காலிகமாக பாதை மாறலாம்.

ஆனால் அவர்களின் அடிமனதில் ஒளிந்திருக்கும் நம் கலாசாரம் மற்றும் பண்புகள் ஆன்மிக பலத்துடன் ஆழமாக பதிந்து இருப்பதால் அவர்களால் அவர்களை பாதுகாத்து கொள்ள முடிகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் இந்த பெண் குழந்தைகளை பேணி காக்கும் வகையில் நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். எந்த நேரத்திலும், எந்த காலத்திலும் பெண் குழந்தைகளை நாம் கொண்டாட மறுப்பதில்லை. நவராத்திரி காலத்தின் போது பெண்கள் கொலு வைப்பது அவர்களின் முழு ஆளுமை திறனை வளர்த்து கொண்டு வரத் தான். கொலு வைப்பதன் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு தேவையான நல்ஒழுக்கம், பண்பு, பணிவு, ஆன்மிக வாழ்க்கை நெறி, உழைப்பு, ஆளுமை, கட்டுப்பாடு, கலாசாரம் போன்றவற்றை புரிய வைக்கிறோம்.

கல்வியும், ஆளுமையும் அவசியம் :

பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்த கல்வி மூலம் எளிதாக தந்து விடலாம். அவர்களை சரியான பாதையில் கால் பதிக்க வைத்து, அவர்களுடன் கை கோர்த்து, அவர்கள் பயணிக்கும் பாதையை பெற்றோர் உருவாக்கி கொடுக்க வேண்டும். செல்லும் பாதையை செம்மைப்படுத்தி, வழித்தடங்களில் இருக்கும் கரடுமுரடுகளையும், முட்புதர்களையும் அகற்றி விட்டாலே போதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி பெண் குழந்தைகளிடம் உள்ளது.நரியோடு தான் வாழ்க்கை எனில் ஊளையிட கற்று கொடுக்க வேண்டும்... பருந்துடன் தான் வாழ்க்கை எனில் அதை விட ஒரு சிறந்த உயரத்தை அடைய கற்று கொடுக்க வேண்டும். எந்த வித கேள்விகளுக்கும் அவளாகவே ஒரு சிறந்த திறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து... எந்தவித சூழ்நிலை சிக்கிலிலிருந்தும் சிறப்பாக ெவளிவந்து வெற்றி வாகை சூடும் ஒரு சிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கல்வியில், வழிகாட்டுதலில் பயிற்றுவிப்பதில் கஷ்டப்படுத்தாத சிறந்த வழிமுறைகளை கற்று கொடுக்க வேண்டும். கல்வி தான் சிறந்த பாதுகாப்பை பெண் குழந்தைகளுக்கு தரும்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு:

பொதுவாக பெண் குழந்தைகள் எல்லாவித சூழ்நிலையையும் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அறிய வைப்பது நல்லது. ஆறுதல் தரும், சுகமான இளைப்பாறும் மடியை யார் மூலம் பெறுவது என உறுதிபட சொல்லி தெரிய வைக்க வேண்டும். அந்த இடம் தான் தன் கோபதாபங்களையும், விருப்பு வெறுப்புகளையும் ெவளிப்படுத்தும் இடமாக வைத்து கொள்ள கற்று கொடுக்க வேண்டும். அந்த இடம்... அந்த மடி... ஒரு தாயாகவோ... தந்தையாகவோ... சிறந்த நண்பராகவோ... உண்மையான பண்பான நபராகவோ இருக்க வேண்டும் என சொல்லி கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் தான் போலி எது? அசலுடன் கூடிய உண்மை எது? என அறிந்து புதை மணலில் சிக்காமல் தீர்க்கமாக முடிவு எடுக்கும் வகையில் பெண் குழந்தைகளை தயார் செய்ய முடியும்.

அடிப்படை வசதிகள் தேவை:

கல்விக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு அடிப்படை வசதிகளும் தேவைகளும், அரசு தரும் வெற்று இலவசங்களை விட முக்கியமான தேவை. அதை அரசுகள் புறக்கணிக்க கூடாது.வெறும் கவர்ச்சி மற்றும் அழகுப்பதுமைகளாக பெண் குழந்தைகளை காட்டாமல் தோல்வி கண்டாலும் அதை எதிர்த்து போரிடும் குணத்தை கற்று கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளை பல வித பொறுப்புகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ வைக்க முடியும். மகாராணியாகவும், சிறந்த நாயகியாகவும் தன்னை தானே செதுக்கி கொண்டு ஒரு குடும்பத்தையும், ஒரு பாரம்பரியத்தையும், ஒரு சமூகத்தையும் அவள் ஒருவரால் மட்டும் துாக்கி வைத்து போற்ற முடியும். அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.பெண் குழந்தைகள் அழகுப் பதுமைகள் அல்ல... அறிவின் ஜோதிகள். ஊக்குவிப்போம். நல்திசை காட்டுவோம். நல்வழி நடத்துவோம்.

எம்.டி.விஜயலட்சுமி,
குடும்ப நல கவுன்சிலர்,
மதுரை


Last edited by krishnaamma on Sat Oct 11, 2014 7:43 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Empty Re: இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

Post by krishnaamma Sat Oct 11, 2014 2:07 pm

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! CddQBdTSX6l80ZDVpDJy+Girl-child-day(1)

நம் தளத்தில் உள்ளவர்களின் பெண்குழந்தைகளுக்கு என் அன்பான வாழ்த்துகள் புன்னகை

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! JTu3mkGaS92DM85lTU6v+girl-child-day

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! K0PYPM1SvKhZyHND0j5P+91e2d7c2df61216aeda344b3ad7b8ec0


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Empty Re: இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

Post by யினியவன் Sat Oct 11, 2014 2:14 pm

வாழ்த்துகள் அனைத்து பெண் குழந்தைகளுக்கும், அவர்களை பெற்ற பெற்றவர்களுக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Empty Re: இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

Post by krishnaamma Sat Oct 11, 2014 2:24 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் அனைத்து பெண் குழந்தைகளுக்கும், அவர்களை பெற்ற பெற்றவர்களுக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1095066

உங்களை நீங்களே வாழ்த்திக்கறீங்களா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Empty இன்று உலக பெண்குழந்தைகள் தினம்! சிறப்பு பகிர்வு!!

Post by Powenraj Sat Oct 11, 2014 3:10 pm

பெண் குழந்தைகளைப் பொத்தி பொத்தி வளர்த்த காலம் போய், '10 வயசுதான் ஆகுது அதுக்குள்ள வயசுக்கு வந்துட்டா... என்னத்தைச் சொல்ல...' என்று அனைவரிடமும் பகிரங்கமாகப் புலம்பும் நிலை இன்று பரவலாக இருக்கிறது. தவிரவும், தன் பெண்ணுக்கு எட்டு வயது ஆகிவிட்டது என்றாலே 'எப்போ வயசுக்கு வருவாளோ?’ என்று இன்றைய நவீன அம்மாக்கள் கவலைப்பட ஆரம்பித்துவிடுகின்றனர். தான் யார் என்பதையே அறிந்து, புரிந்துகொள்வ தற்குள் பூப்பெய்திவிட்ட ஒரே காரணத்தால் 'இவள் பெண்’ என்ற முத்திரை இன்றைய சிறுமிகளின் மீது குத்தப்படுவதுதான் மிகவும் வேதனை. என்றாலும் காலமாற்றம் என இதுவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.



பெண் குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்திவிட காரணங்கள் என்ன? தடுக்க வழிமுறைகள் உள்ளனவா? மாறி வரும் இன்றைய உணவுப் பழக்கங்களும் ஒரு காரணமா? என்ற பல்வேறு சந்தேகங்கள் குறித்து மகப்பேறு சிறப்பு மருத்துவர் சித்ரா ரவிசங்கர் பேசினார்.

'அந்தக் காலத்தில் 1216 வயதில்தான் பெண் குழந்தைகள் பூப்பெய்துவார்கள். ஆனால், 10 வயதுக்குள் பூப்பெய்துவது என்பது இன்று சர்வசாதாரணம். உடலும், உள்ளமும் முழுமையான வளர்ச்சி யடையும் குறிப்பிட்ட வயதுக்கு முன்பு பூப்பெய்துவதையே 'முன் பூப்படைதல்’ என்கிறோம். இந்தியாவில் 2010க்குப் பிறகு பூப்பெய்தும் சராசரி வயது பத்தரைக்கும் கீழாக மாறிவிட்டது.

நம் மூளையில் உள்ள 'ஹைப்போ தாலமஸ்’ மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் தூண்டலினால் சினைப் பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான் பூப்பெய்துவதற்கு முக்கியமான காரணம். தற்போது, நம் அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தும் பொருட்களில், கண்

களுக்குத் தெரியாமல் இருக்கும் வேதிப்பொருட்கள், இந்த ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால் முன்கூட்டியே பூப்பெய்துதல் நிகழ்கிறது.

இன்று உணவு உற்பத்தியை செயற்கை முறையில் அதிகரிக்க பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் நம் உடலிலுள்ள ஈஸ்ட்ரோஜென் போன்றே வேலை செய்து இளம் வயதில் பூப்படைய வைக்கிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும் பொரித்த கோழி இறைச்சி மற்றும் துரித உணவுகள் மற்றும் உடல் பருமனும் இளம் வயதில் பூப்படையத் தூண்டுகின்றன. இறைச்சிக்காகவே வளர்க்கப் படும் கோழிகளுக்கு அபரி மிதமான வளர்ச்சிக்காக ஈஸ்ட்ரோஜென் ஊசிகள் போடப்படுகின்றன. இதை குழந்தைகள் அதிகமாக உண்ணும்போது நம் உட லிலுள்ள ஈஸ்ட்ரோஜென் இரு மடங்காக அதிகரிக்கிறது. அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்களில் உள்ள வேதிப்பொருட் களும், பிளாஸ்டிக்கிலுள்ள பிஸ்பீனால் (ஙிவீsஜீலீமீஸீஷீறீ) என்ற வேதிப்பொருளும் ஈஸ்ட்ரோ ஜென் சுரப்பை அதிகரிக் கின்றன. அதீத ஊட்டச் சத்துக்கள் மூலம் நம் குழந்தை களின் உடலில் சுரக்கும் லெப்டின் என்ற ஹார்மோன் அளவு அதிகரிப்பதும் இளம் வயதுப் பூப்படைதலுக்கு ஒரு காரணம்தான்.

தடுக்கும் முறைகள்

நம் உணவுப்பழக்கத்தில், சிறிது கவனம் செலுத்தினாலே இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும். வேதிப்பொருட்கள் நிறைந்த உணவை உண்பதையும், பயன்படுத்துவதையும் தவிர்த்தாலே போதும். ஓடி விளையாட குழந்தைகளை பெற்றோர்கள் அனுமதிக்க

வேண்டும். இதனால், உடலுக்கு வேலை கொடுக்கப்பட்டு, வளர்ச்சி ஹார்மோன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளியில் நின்றால் வைட்டமின் 'டி’ குறைபாட்டினால் ஏற்படும் இளம் வயது பூப்படைதலைத் தவிர்க்கலாம். குழந்தைகள் பூப்படைந்தபின் வரும் மாதவிடாய் பிரச்னை களைத் தவிர்க்க மாதம் ஒரு முறை ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்துகின்றனர். தவிர்க்க இயலாத நிலையில் இதுவும் சிறந்த தடுப்பு முறையே.

உடல் ரிதியான பாதிப்புகள்

மிக இளம் வயதிலேயே பூப் படைவதனால் அந்த வயதி லேயே அவர்களுக்கு பாலுணர்வு தூண்டப்படுகிறது. ஈஸ்ட்ரோ ஜென், ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின்போதும் ரத்தத்தை அடர்த்தியாக்கும். இதனால் மற்ற பெண்களைவிட சீக்கிரமே பூப்படையும் பெண் களுக்கு மார்பக புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவை வர வாய்ப்புகள் அதிகம். மேலும், சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத் துவது பற்றிய போதிய விழிப்பு உணர்வை குழந்தை களுக்கு ஏற்படுத்த இயலாத காரணத்தால் பல தொற்று நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்' என்கிறார்.

உளவியல்ரீதியான பாதிப்புகள்

இளம் வயதிலேயே பூப்படைவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்புகள் குறித்து மனநல மருத்துவர் ஆ.நிஷாந்த் கூறுகையில், 'இளம் வயதிலேயே பூப்படைவதால், மற்ற குழந்தைகளிடம் இருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். மேலும், மற்றவர்களின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகும் சூழலில் தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். இதனால் கவனச் சிதறல் ஏற்பட்டு படிப்பில் கவனம் குறையும். எனவே, பெற்றோர்கள்தான் இது குறித்த புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தவேண்டும். ஏழு வயதுக்கு முன்பே குழந்தைகளின் உடல் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கினால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த மாற்றம் இயல்பானதுதானா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

7 வயது மகள் பருவமடைந்துவிட்டால் அவளுக்குப் புரியவைப்பது கடினம். இருந்தாலும் நாம் அவர்களுக்குக் கற்றுத்தரும் அடிப்படையான பாலியல் கல்விதான் அவளது எதிர்காலத்தைக் கட்டமைக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. இளம் வயதில் பூப்படைந்த ஒரே காரணத்தால் அவளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது தவறு. அவளிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்து பூப்படைதல் குறித்த குழந்தைகளின் சந்தேகங்களை தெளிவுபடுத்தவேண்டும்.

எது குட் டச், எது பேட் டச்?’ என தொடுதலைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தவேண்டும்். அவர்களின் விருப்பம் இல்லாமல் யாரும் தொடக்கூடாது என்பதனை உணரவைக்க வேண்டும். குழந்தைகளுக்கு இது தொடர்பாக மனச்சோர்வு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால், உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.'

நன்றி:விகடன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Empty Re: இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

Post by M.Saranya Sat Oct 11, 2014 3:12 pm

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Kd46lndmStmQJYmPvDFp+bridesmile


அன்பும் அரவணைப்பும்
அதிகம் தருவேன்
என் அன்பே !!!
அறிவையும் ஆற்றலையும்
பெற்று பெண்ணின் பெருமை
பட வாழ்ந்து காட்டுவாய் என் செல்வமே !!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Empty Re: இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

Post by krishnaamma Sat Oct 11, 2014 3:18 pm

M.Saranya wrote:இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Kd46lndmStmQJYmPvDFp+bridesmile


அன்பும் அரவணைப்பும்
அதிகம் தருவேன்
என் அன்பே !!!
அறிவையும் ஆற்றலையும்
பெற்று பெண்ணின் பெருமை
பட வாழ்ந்து காட்டுவாய் என் செல்வமே !!!
மேற்கோள் செய்த பதிவு: 1095104

ஹேய்............உங்க பெண்ணா சரண்யா? அழகாய் இருக்கா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Empty Re: இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

Post by M.M.SENTHIL Sat Oct 11, 2014 3:25 pm

மிக, மிக அவசியமான பதிவு, நன்றி நண்பரே... அன்பு மலர் அன்பு மலர்

குட்டிச் செல்லங்கள் எல்லோருக்கும் என் இன்றைய தின வாழ்த்துகள்.. அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Empty Re: இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

Post by M.Saranya Sat Oct 11, 2014 3:30 pm

இல்லை அம்மா !!!

எனக்கு இருவரும் ஆண் குழந்தைகள் தான். பெண் குழந்தை இல்லாத ஏக்கம் அதான் வலைதளத்தில் இருந்து எடுத்தேன்..

என் அக்காவின் குழந்தை இவ்வாறு தான் இருப்பாள்...

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! A2giR4OmRze8K7HKx45F+Image0096

இவன் பெரியவன்...
சிறியவன் புகைப்படம் இன்னும் கணினியில் இறக்கம் செய்யவில்லை அம்மா ...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Empty Re: இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

Post by krishnaamma Sat Oct 11, 2014 3:35 pm

ஏற்க்கனவே நான் போட்டுவிட்டேன்.....எனவே, இணைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! Empty Re: இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம்
» இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்
» இன்று சர்வ தேச பெண் குழந்தைகள் தினம்.--அக்டொபர் 11

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum