புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_m10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_m10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_m10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_m10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_m10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_m10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_m10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_m10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_m10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_m10தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 11, 2014 2:29 am

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தலைவர்களுள் பக்தவத்சலமும் ஒருவர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் பிறந்தது புரட்டாசி உத்திரட்டாதியில். 90 ஆண்டுகள் வாழ்ந்தவரோடு இறுதி 13 ஆண்டுகள் எனக்குப் பழக்கமுண்டு. அது எனக்கு மீண்டும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தது போலாயிற்று. அன்றைய தலைவர்களோடு இன்றைய தலைவர்களை வைத்துப் பார்த்தால், பகல் சுருங்கி இரவு கவிந்ததாகத் தெரியும்.

பக்தவத்சலம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலுமே நல்ல புலமையையும் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டை யும் கொண்டிருந்தார். “எனது தமிழாசிரியர் உ. வே. சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்” என்பார்.

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர்

முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன் 1978-ல் பக்தவத்சலத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில், “பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்து காட்டுபவர் பக்தவத்சலம்” என்று சொல்லியிருந்தார் அளகேசன்.

சென்னை ராஜாஜி மண்டபத்தில் 1987 மார்ச் 13-ம் நாள் பக்தவத்சலத்துக்கு நினைவுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசும்போது, “மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர். ஆனால், விமர்சனம் அவரை வருத்தாது” என்றார் கேரளத்தின் முன்னாள் ஆளுநர் பா. ராமச்சந்திரன். பக்தவத்சலத்தின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையையும் சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடிய இரு குறிப்புகளாக இவற்றைச் சொல்லலாம்.

சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு பக்தவத்சலம்தான் இலக்கணம். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் பக்தவத்சலம் வல்லவர் என்றும் சொல்வார்கள். கேள்வி களுக்குச் சட்டமன்றத்தில் ராஜாஜி பதில் சொல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், பதில் சொல்லும்படி தன்னைத்தான் அவர் தூண்டுவார் என்று சொல்லி, ராஜாஜி தன்மேல் வைத்த நம்பிக்கையைக் குறித்து பக்தவத்சலம் பெருமைப்பட்டுக்கொள்வார்.

மாற்றுக் கட்சியானாலும் நண்பர்தான்

அந்நாட்களில் பக்தவத்சலத்தின் பிறந்த நாளன்று காலையிலேயே வீட்டுக்கு வந்து, அவருக்கு நேரில் வாழ்த்து சொல்பவர்கள் பட்டியல் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பட்டியலில் முக்கியமானவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்படி வருபவரை அங்கு கூடியிருக்கும் பக்தவத்சலத்தின் நண்பர்கள் சற்று நேரம் உரையாற்றச் சொல்லி அவர் பேசுவதை ஆர்வமாகக் கேட்பார்கள். சொந்த ஊரிலிருந்த தனது பூர்வீக வீட்டை ஒரு நூலகமாக மாற்ற கருணாநிதி முடிவெடுத்தபோது, அதைத் திறந்துவைக்க அவர் அழைத்ததும் பக்தவத் சலத்தைத்தான். பக்தவத்சலம் சந்தோஷமாகச் சென்று திறந்துவைத்தார். பக்தவத்சலத்தின் கடைசிக் காலத்தில், மதுரையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தார் பி.டி.ராஜன். “இந்தத் தள்ளாத வயதில், உடல் நலமும் சரியில்லாத நிலையில், மதுரைக்குச் செல்ல வேண்டாம்” என்று எவ்வளவோ கூறினார்கள் பக்தவத்சலத்தின் உடனிருந்தோர். எதையும் பொருட்படுத்தாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தனக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவரின் பிறந்த நாள் விழாவுக்கு காரிலேயே சென்று, விழாவில் உரையாற்றிவிட்டுத் திரும்பினார் பக்தவத்சலம்.

ஐந்து லட்சம் கொடுத்தால் கல்லூரி

ஐந்து லட்சம் கொடுத்தால் கொடுப்பவர் பெயரால் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்று பக்தவத்சலம் காலத் தில் ஒரு திட்டம் இருந்தது. பெரியார் பார்த்தார், “இது நல்ல திட்டம். ஆனால், பணத்துக்கு நான் எங்கே போவேன்? திருச்சியில் எனக்கு இருக்கும் நிலத்தைத் தருகிறேன். ஒரு கல்லூரி தொடங்குங்கள்” என்று கொடுத்தார். அப்படிப் பிறந்த கல்லூரிதான் திருச்சி ஈ.வெ.ரா. அரசுக் கலைக் கல்லூரி.

தன்னிடம் வரும் எந்தக் கோப்பிலும், அதற்கான முடிவைத் தானே எடுத்து, குறிப்பு அனுப்புவது பக்தவத்சலத்தின் வழக்கம். “ஐரோப்பிய ஐ.சி.எஸ். அதிகாரிகள் நிறைய பேர் என்னிடம் பணியாற்றியிருக் கிறார்கள்; ஆனால், நான் ஒருபோதும் என்ன செய்யலாம் என்கிற முடிவை அவர்களிடம் கேட்டதில்லை” என்று பக்தவத்சலம் ஒருமுறை என்னிடம் கூறினார். கக்கனும் அப்படித்தான். “கக்கனிடமிருந்து ஏதேனும் வந்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும்; எங்களுக்குச் சங்கடம் ஏதும் இருக்காது” என்று முன்னாள் தலைமைச் செயலர் கார்த்திகேயன் சொல்வதுண்டு. ‘பரிசீலித்துப் பார்வைக்கு வைக்கவும்’ என்று மட்டுமே அமைச்சர்கள் குறித்து வைப்பதைத்தானே பின்னாட்களில் பார்க்கிறோம்?

பக்தி பழமைவாதியாக்கிவிடவில்லை

இறைப்பற்றாளர் பக்தவத்சலம். ஆனாலும், பக்தியை எங்கே நிறுத்திவைக்க வேண்டும் என்பதை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாட்களில், “கோயிலில் இருக்கும் தங்கக் குடங்களை நாட்டுக்குத் தரக் கூடாதா?” என்று கேட்டவர் அவர். கோயில்களுக்கு நிலச்சொத்து ஒத்துவராது. குத்தகை, பண்ணைச் சாகுபடியெல்லாம் பார்த்தாகிவிட்டது. பலனில்லை. காணி நிலத்துக்கு பாரதியார் ஏங்கவில்லையா? ஆண்டவனுக்கே நிவேதனம் என்ப தெல்லாம் அகம்பாவம். எனவே, நான்கு லட்சம் ஏக்கர் கோயில் நிலத்தை வைத்திருப்பவர்களிடமே விற்று முதலீடு செய்து, வட்டிப் பணத்தில் கோயில் களைப் பராமரிக்கலாம் என்பது 1976-ல் அவரது திட்டம். அதற்கு எழுந்த எதிர்ப்புக்கு, மயிலாப்பூர் அகாடமி கூட்டத்தில் பதில் சொன்னார், “நானேதான் நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து கோயில்களுக்கு விலக்களித்தேன். நானேதான் கோயில்களுக்கு நிலச் சொத்து சரிவராது என்றும் சொல்கிறேன்.”

துணியின் இழைகளைப் பிரிக்கலாமா?

இந்திய ஓர்மையில் தளராத நம்பிக்கையுள்ளவர் பக்தவத்சலம். இனவழி அரசியலைக் குறிப்பிட்டு “வடக்கத்தியர் எல்லோரும் ஆரியர்களா? அல்லது பிராமணர்கள் அல்லாத எல்லோரும் திராவிடர்களா? இனங்களும் பண்பாடுகளும் மதங்களும் சாதி களும்கூட கலந்து, நெருக்கி நெய்த துணியாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் இழைகளைப் பிரித்துக் குலைக்க வேண்டாம்” என்றார். “புஷ்கரம், பிருந்தாவனத்தில் உள்ள கோயில்களும் வழிபாடும் காஞ்சிபுரத்தில் உள்ளதுபோல் இருக்கும். ராஜஸ்தானில் நம்மைப் போன்றே பொங்கல் கொண்டாடுவார்கள். முற்கால வரலாற்றில் இந்தப் பிரிவுகள் இருந்திருக்கலாம். பின்னர் எல்லாம் ஒன்றாகிப்போனதும் வரலாறுதானே?” இப்படியெல்லாம் இந்திய ஒற்றுமையை விளக்குவார்.

நான் தனியாக நின்றேன்

காங்கிரஸ் வழியிலான அவரது மொழிக் கொள்கை, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அவர் கையாண்ட விதம், இவை இரண்டையும் குறைகூறுவார்கள். 1965 முதலாகவே மாறிவந்த அரசியல் சூழலை பக்தவத்சலம் கவனமாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் சொல்வார்கள். இந்த விமர் சனங்களுக்கு அவர் பதில் என்னவாக இருந்திருக்கும்?

1950 முதல் 15 ஆண்டுகளுக்கு இந்தியோடு ஆங்கிலமும் தொடர்வதை அரசியல் சாசனம் உறுதி செய்தது. அந்த ஏற்பாடு தற்போது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இருப்பவர்கள் இந்தியில் ஒரு அட்சரம்கூடக் கற்க வேண்டிய கட்டாயம் இல்லை. தமிழகத்தின் இருமொழிக் கொள்கை என்பது மூன்றாவதாக ஒரு மொழியையும் கற்கக் கூடாது என்பதல்ல. 1937-ல் நடந்ததைப் பார்த்திருந்ததால் இங்கே இந்திக்கு மாணவரிடையே ஒரு ஒவ்வாமை இருப்பது தெரிந்தது. எனவே, விரும்பினால் அந்த மொழியைக் கற்கலாம் என்பதாக மட்டுமே இருந்தது. எதற்கும் வழுக்கலாகப் பதில் சொல்லி அறியாத பக்தவத்சலத்தின் பதில் இதுவேதான்.

தன் கட்சிக்காரர்களே குறை சொல்வதைப் பற்றிக் கேட்டால், “இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள்? சூழ்நிலையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. நான் தனியாக நின்றேன்” என்பார். சரியா, தவறா என்பதெல்லாம் வரலாற்றுப் பொருளாக விவாதிக்கப்படும். ஆனால், இவர் கட்சியைக் கைவிட மறுத்தார், கட்சி இவரைக் கை விட்டது என்றுதான் எனக்குத் தோன்றியது.

- தங்க. ஜெயராமன்,



தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!- (பிறந்த நாள்: 09.10.1897) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 7:16 am

திரு பக்தவச்லம் காலத்தில் அரிசி விலையைக்
கட்டுப்படுத்த தவறி விட்டார்...
-
அதனால்தான் காங்கிரஸ் தோற்று, திமுக ஆட்சிக்கு வந்தது
-


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 11, 2014 8:22 am

பாராட்டத் தக்கதான பக்தவச்சலம் அவர்களின் பண்பு நலன்களை பதிவு செய்து அவரை நினைவு கொள்ள வைத்த மைக்கு நன்றி. எங்கே..... தற்போதுள்ள அதிகாரிகள் குமாஸத்தா எழுதிவைப்பதை பெறும்பாலும் பார்க்காமலே பார்த்து ஒப்பமிடும் அதிகாரிகள் தானே அதிகம் காணமுடிகிறது. பக்தவச்சலத்தின்ஆற்றலை உணர்ந்து செயல்பட்டால் நிர்வாகம் நேர் நிர்வாகமாக இருக்குமே.. இனியாவது.....சிந்திப்பார்களா....செயல்படுவார்களா......!!!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக