ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபணு மாற்றுப்பயிர்... விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதி!'

Go down

மரபணு மாற்றுப்பயிர்... விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதி!'  Empty மரபணு மாற்றுப்பயிர்... விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதி!'

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 11:33 am

'மரபணு மாற்றுப்பயிர்... விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதி!'
மரபியல் விஞ்ஞானியின் பகீர் குற்றச்சாட்டு!
த. ஜெயகுமார் படங்கள்: கு. பாலசந்தர்


நேர்காணல்
மரபணு மாற்றுப்பயிர்... விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதி!'  Pv38a
டாக்டர். சுமன் ஷாஹை, சர்வதேச அளவில் குறிப்பிடத்தகுந்த மரபியல் விஞ்ஞானி. மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்து, 40 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பலநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கௌரவப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது 'ஜீன் கேம்பெய்ன்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் இவர், இதன் மூலம் ஜார்கண்ட், பீஹார் மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கு உதவி வருகிறார். பத்மஸ்ரீ, போர்லாக் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், தொடர்ந்து, மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர். 'மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறார். சென்னையில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற, சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக, சமீபத்தில் வந்திருந்தார் சுமன் ஷாஹை. அப்போது அவருடனான சந்திப்பில் நம்முடைய கேள்விகளும்... அவருடைய பதில்களும் இங்கே...

''இந்தியாவுக்கு மரபணு மாற்று விதைகள் தேவையா?''

''தேவையே இல்லை. இங்கேயே பாரம்பரிய விதைகள், அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி விதைகள் என நிறைய இருக்கின்றன. 'விவசாயிகளின் தேவை என்ன?’ என்று ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வதில்லை. விவசாயத் துறையையும், தொழில்துறை போல உருவாக்கி விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். மரபணு மாற்று விதைகளால்தான் உற்பத்தியைப் பெருக்கமுடியும் என்கிற குருட்டு நம்பிக்கையில செயல்படுகிறார்கள், ஆட்சியாளர்கள். அவர்கள் நினைப்பது போல, மரபணு மாற்று விதைகளால் எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது. இதனால் பலன் அடையப் போகிறவர்கள் பன்னாட்டு கம்பெனிக்காரர்களே.''

''விளைச்சலைக் காரணம் காட்டித்தானே மரபணு மாற்று விதைகளை முன்னிறுத்துகிறார்கள்?''

''விளைச்சல் குறைவுக்குக் காரணம், போதுமான தண்ணீர் வசதி இல்லாததுதான். முன்பு 3 போகம் பயிர் செய்த விவசாயிகள், இன்று ஒரு போகம் பயிர் செய்வதே பெரிய விஷயமாக இருக்கிறது. 5 டன் விளைந்த இடத்தில், 1 டன்தான் விளைகிறது. அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து சரிசெய்யாமல், குறுக்கு வழியில் போக நினைக்கிறார்கள். குறுக்கு வழி நிரந்தரமல்ல.''

''மரபணு மாற்று விதைகளால் இந்தியாவில் என்ன மாதிரி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று பயப்படுகிறீர்கள்?''

''மரபணு மாற்று விதைகளை இந்தியாவுக்குள் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் அனுமதித்தாலும், ஒரு கட்டத்தில் மரபணுமாற்றப்பட்ட விதைகள் மட்டும்தான் பூமியில் இருக்கும். குறிப்பாக, இந்தியாவில் மான்சான்டோவின் மரபணு விதைகளை அனுமதித்தால், இந்திய விதை கம்பெனிகளும் அதையேதான் தயாரித்து விற்பனை செய்யும். எண்ணற்ற பாரம்பரிய ரகங்கள் அழியும். விவசாயிகள் விதைகளுக்கென்று அதிகத் தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்தியாவின் பல்லுயிரினப் பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். உயிரினச் சங்கிலியில் ஒன்றைச் சார்ந்துதான், இன்னொன்று. இந்தச் சமநிலை வெகுவாக பாதிக்கப்படும்.

கொசுவை ஒழிக்க, டி.டி.டி கொண்டு வந்தார்கள். ஆனால், கொசுக் களை ஒழிக்க முடியவில்லையே... அதுபோலத்தான் மரபணு மாற்றுப்பயிர்களும். ஏற்கெனவே, மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்ட தற்கொலைச் சாவுகளை நாடே அறியும். இந்த நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும்.''

''இவ்வளவு பிரச்னை இருந்தும், மரபணு மாற்று விதைகளை மத்திய அரசு தொடர்ந்து ஆதரிப்பது ஏன்?''

''அரசியல்... அரசியல்... அரசியல் என்பதைத் தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்கிற பூதத்தைக் கொண்டு வந்து, மக்களை மூளைச்சலவை செய்கிறார்கள். இதற்கு விஞ்ஞானிகளும் துணை போகிறார்கள். விஞ்ஞானிகளுக்கு உண்மை தெரிந்தாலும், வெளியே பேசமாட் டார்கள். அந்தளவுக்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இது அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் சேர்ந்து, இந்த தேசத்துக்கு எதிராக செய்யும் கூட்டுச்சதி! விஞ்ஞானிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விவசாயிகளைப் பற்றியோ, மண்ணைப் பற்றியோ அக்கறையில்லை.''

''ஆட்சியாளர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதைக் கொண்டு வருகிறார்கள்?''

''எந்த ஆதாரமும் கிடையாது. மரபணு மாற்றுப்பயிர்களை அரசியல் ரீதியாக அணுகுகிறார்களே தவிர, ஆராய்ச்சி ரீதியாக அணுகவில்லை. ஒரு புதிய தொழில்நுட்பம் என்று பார்க்கிறார்களே ஒழிய, அது ஏற்படுத்தப்போகும் விளைவுகளைப் பற்றி அறியவில்லை. ஆராய்ச்சியாளர்களும் மேலிடத்து உத்தரவுகளுக்கு ஏற்பவே செயல் படுகிறார்கள். அரசு எப்படியாவது இரண்டாம் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.''

''மரபணு மாற்றுப்பயிர்களை மக்களால் தடுக்க முடியாதா?''

''மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து, அறிவியல் ரீதியாக, முதலில் மக்களுக்கு விளக்க வேண்டும். மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டால் மட்டுமே, அதைத் தடுக்க முடியும். விவசாயம் தற்சார்பு உடையதாக மாற்றப்பட வேண்டும். பாரம்பரிய ரகங்கள், இயற்கை வேளாண்மை போன்றவற்றின் மூலமே இதைத் தடுக்க முடியும். இதோடு, மரபணு மாற்றுப்பயிர்களால் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.'

'தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளாரே... இது சாத்தியமா?'

''உத்தரப் பிரதேசம், பீஹார், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்த விதைகளை, தங்கள் மாநிலங்களில் அனுமதிக்காமல் இருக்க, மாநில முதல்வர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.

இன்றைக்கு விவசாயிகளுக்கு, மத்திய-மாநில அரசுகள் செய்யவேண்டியது ஆராய்ச்சிகளை அல்ல, ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சிகளைத்தான். விவசாயத்துக்கான தண்ணீர், பயிர் செய்வதற்கான தொழில்நுட்பங்கள், தரமான இயற்கை உரங்கள், பயிர்க் காப்பீடு, கடன் வசதி இவைதான் விவசாயத்துக்கான இன்றையத் தேவை. ரசாயன உரங்களோடே வாழும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதனால் கை அரிப்பு, மூச்சுத் திணறல் என நிறைய பக்க விளைவுகளைச் சந்திக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

பசுமை விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum