ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக தபால் தினம் ! - 09.10.14

2 posters

Go down

இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Empty இன்று உலக தபால் தினம் ! - 09.10.14

Post by krishnaamma Thu Oct 09, 2014 8:45 pm

இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 UxPPIVbgTriNz5Vwu07Y+Tamil_News_large_1087885

கல்லூரி வகுப்பில் உட்கார்ந்திருந்தேன்; கண்கள் என்னவோ வாசலையே பார்த்துக் கொண்டிருந்தன. கடைசி பெஞ்ச்சில் ஒரு வசதி, சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய பல விஷயங்களை சாதாரணமாக செய்யலாம். மதிய உணவு இடைவேளையை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். ''கிளாஸ் முடிஞ்சதும் ஹாஸ்டல நோக்கி வேகமா ஓடணும். எப்படியும் இன்னைக்கு வந்திருக்கும்... நேத்துத்தான் ஏமாந்துட்டோம்...'' வகுப்பு முடிந்ததும் விடுதியை நோக்கி வேகமாக ஓடிவந்து அறை சாவியை எடுத்து, பூட்டைத் திறந்து உள்ளே ஓடி, கையிலிருந்த நோட்டுகளை மேஜைமேல வச்சிட்டு (பொய்.. வீசிட்டு) கட்டில்ல படுத்து பரபரப்போடு கடிதத்தை படித்து... திரும்பத் திரும்ப படித்து முடித்த போது எடைக்கு எடை வியர்த்திருந்தேன்.


புரியலையா...?: பள்ளிப் படிப்பு வரை பக்கத்து ஊர்களில் படித்து விட்டு, கல்லூரிக்காக வீடு கடத்தப்பட்டு, விடுதியில் சேர்ந்து, அம்மாவையும் அப்பாவையும், பாசத்தோடு கத்தும் பசுமாடு போன்ற வாயில்லா ஜீவன்களையும் பிரிந்து கண்ணீரில் முகம் கழுவிய என் போன்றவர்களுக்குத் தான் புரியும் வீட்டிலிருந்து வரும் கடிதங்களின் அருமை. வெளியூருக்கு பேச வேண்டுமென்றாலே, தபால் அலுவலகத்திற்கு போய் டிரங்கால் புக்கிங் செய்துவிட்டு (அதுவும் நாம் பேச நினைக்கிற நபர் வசிக்கும் ஊரில் போன் இருந்தால்...) காத்திருக்க வேண்டிய எண்பதுகளின் தொடக்கத்தில் குடும்பத்தை பிரிந்து தொலை தூரங்களில் வசித்தவர்களுக்குத் தான் புரியும் கடிதங்கள் என்பவை அப்பாவின் தோள், அம்மாவின் மடி, மனைவியின் அரவணைப்பு, காதலியின் முத்தம், நண்பனின் வார்த்தைகள் என்ற உண்மை.

கடுதாசிக்காரர்கள் மீதான பாசம் : தந்தி, டிரங் கால், எஸ்.டி.டி., மொபைல், குறுஞ்செய்தி, இணைய தளம், இ-மெயில், பேஸ் புக், ஸ்கைப், வாட்ஸ் அப். இப்படி அடுக்கடுக்காய் வளர்ந்திருக்கும் அத்தனை தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் தாயாக இருந்த கடிதத்தின் பெருமை தனித்துவமானது. அந்த கடிதங்களை பரிமாறும் தபால்காரர்களுக்கு இருக்கும் வரவேற்பே அதற்கு அத்தாட்சி. பேங்க்காரரை பணமாகவும், ஏட்டையாவை பயமாகவும், முன்சீப்பை பவ்யமாகவும், வாத்தியாரை பணிவாகவும் பார்க்கும் எந்த கிராமமும் கடுதாசிக்காரரை பாசமாக பார்க்கும். எனக்கு தெரிந்து ரேஷன் கார்டில் சேர்க்கப்படாமல் எல்லா குடும்பங்களிலும் உறுப்பினராக இருக்கும் ஒரே ஜீவன் தபால்காரர் தான். தபால்காரர்களை தெய்வமாகவே பார்த்த எத்தனைக் காதலர்களை நாம் சந்தித்திருக்கிறோம்...!
பெரும்பாலான கிராமங்களில் படித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் வட்டமேசை மாநாடு பகலில் நடக்கும் இடமாகவும் தவறாமல் இருந்தது தபால் ஆபீஸ் தெரு தான். விண்ணப்ப படிவத்தில் தொடங்கி வேலை உத்தரவிற்காக காத்திருக்கும் இளைஞர்கள் சிலர் பையில் பேனாவும், கையில் எம்ளாய்மென்ட் நியூசும் வைத்திருக்க, காதலியிடமிருந்து வரும் கடிதங்களுக்காக காத்திருப்பவர்கள், பையில் சீப்பும் கையில் கர்ச்சிப்புமாக அமர்ந்திருப்பதை பார்க்கலாம்.

கடிதங்களுக்கே அதிக முத்தம் : பணத்தை சேமித்து விட்டு தேவைப்படும் போது எடுத்துக் கொள்கிற வசதிகளை செய்திருப்பவை வங்கிகள் என்றால் உணர்வுகளையும், நினைவுகளையும் எழுத்துக்களாக சேமித்து வைத்து தேவைப்படும் போது, மறுபடியும் மீட்டுக் கொள்கிற வசதிகளை செய்பவை... செய்தவை கடிதங்கள் தான்.உலகத்தில் குழந்தைகளையும், காதலர் களையும் விட அதிக முத்தம் வாங்கிய பெருமை கடிதங்களுக்கு மட்டுமே உண்டு.
இன்றும் கிராமங்களில் துருப்பிடித்த கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் காலாவதியான தபால் பெட்டிகள் தான், காலாவதியாகாத உறவுகளின் உணர்வுகள்.
தனிமனித எழுத்து திறனுக்கு ஒரு பயிற்சி பாசறையாக இருப்பதுவும், வெளிச்சத்திற்கு வராத கட்டுரையாளர்களையும், கவிஞர்களையும், விமர்சகர்களையும் உருவாக்கி தனக்குள்ளேயே ஒளித்து வைத்திருக்கும் ஒப்பற்ற ஊடகமாக இருப்பதுவும் கடிதங்களே!
கடிதங்களை பற்றி 'நேயர் விருப்பத்தில்' எழுதிய அப்துல்ரகுமானும், 'கண்ணீர்
பூக்களில்' எழுதிய மேத்தாவும், 'இதுவரையில் நானில்' எழுதிய வைரமுத்துவும் தான் காதல், கவிதை, கடிதம் என்ற மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பவை என்று என் போன்றவர்களுக்கு புரிய வைத்தார்கள்.

அடி பெண்ணே!
காதலை
மதத்தின் பெயரால்
மறுத்த
இந்த உன் கடிதத்தை
என்ன செய்வது...
உன் மதப்படி புதைப்பதா?
என் மதப்படி எரிப்பதா?
என்று மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நான் படித்த காலத்தில் வாசித்த என் கவிதைக்கு கிடைத்த
கைத்தட்டல் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு எனக்கு வந்த ஒரு கடிதம் எங்களுக்கு மட்டுமே தெரியும்.
நிலாச் சோறு, டூரிங் டாக்கிஸ், வில்லு வண்டி, அறுப்புக் கடை, ஊர் பஞ்சாயத்து, பம்பர விளையாட்டு... இன்னும் சிலவற்றை வாழ்க்கையாகவே பார்த்த எங்கள் தலைமுறை இதை வார்த்தையாகக் கூட பார்க்க முடியாமல் போன இன்றைய கணினித் தலைமுறையை பார்த்து பரிதாபப்பட மட்டுமே முடியும்.
மேற்சொன்ன வரிசையில் கடிதம் என்பதுவும் இணைந்துவிட்டதே
என்பது தான்
வலி தீரா வருத்தம்.

- கவிஞர் நெல்லை ஜெயந்தா


Last edited by krishnaamma on Thu Oct 09, 2014 11:03 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Empty Re: இன்று உலக தபால் தினம் ! - 09.10.14

Post by krishnaamma Thu Oct 09, 2014 8:47 pm

நானும் எக்கச்சக்கமாய் கடிதம் எழுதி இருக்கேன்....'இவருக்கு', அப்பா அம்மாக்கு, தாத்தா பாட்டிக்கு.....நண்பிகளுக்கு என்று பட்டியல் நீளும்....என் கடிதங்களுக்க்காகவே காத்திருந்தவர்களும் உண்டு புன்னகை அதாவது ரசிகப்பட்டாளம் இருந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Empty Re: இன்று உலக தபால் தினம் ! - 09.10.14

Post by krishnaamma Thu Oct 09, 2014 11:02 pm

நாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் என்று நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே (லைவ்) கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ பரிமாறப்படுகிறது. ஆனால் அன்று இத்தகைய வசதி கிடையாது. ஒரு தகவலை மற்றவருக்கு தெரிவிக்க வேண்டுமெனில் தபால் மூலமே தெரிவிக்கப்பட்டது.

தபால் துறையின் மகத்துவம் பற்றி, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது தபால் எழுதும் பழக்கம் இல்லாததால், சுயமாக எழுதும் பழக்கமும் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. இருப்பினும் இன்றும் லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் தபால் துறை ஏதாவது ஒரு வழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.
உலக தபால் அமைப்பு 1874ம் ஆண்டு சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் நகரில் தொடங்கப்பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,9, உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது. உலக தபால் அமைப்பில், இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்.,9ம் தேதி, உலக தபால் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக (அக்.,9 -- 15) கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகில் முதலிடம்:

இந்திய தபால் துறை 1764ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. 12 ஆயிரம் தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.

ஈடு தர முடியுமா:

ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால், விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ், சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை செய்கிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Empty Re: இன்று உலக தபால் தினம் ! - 09.10.14

Post by சிவனாசான் Fri Oct 10, 2014 7:17 am

தபால்துறையில் சிலபுல்லுரிவிகள் புழக்கடையில் தபால்களை பட்டுவாடா செய்த்தையும் செய்திதாளில் கண்டோமே ...!!! அவர்களை என்னென்பது....தபால்துறைதானேதகவலைபரிமாறசெய்ய ஓர்உன்னத துறை யாச்சே.....ஒலியில் (தந்தி)செய்தியை அனுப்பியதையும் மறக்கமுடியல என்னே விந்தையாய் செயல்பட்டது....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Empty Re: இன்று உலக தபால் தினம் ! - 09.10.14

Post by krishnaamma Fri Oct 10, 2014 11:10 am

ரொம்ப சரி ராஜன் அண்ணா புன்னகை உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Empty Re: இன்று உலக தபால் தினம் ! - 09.10.14

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum