புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_m10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_m10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_m10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_m10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_m10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_m10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10 
19 Posts - 3%
prajai
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_m10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_m10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_m10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_m10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_m10மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 7:38 am




கடந்த சில ஆணடுகளாக, தமிழ்நாட்டின் மிக முதன்மையான பிரச்னையாகவே பிரகாசித்து வருகிறது, மின் பற்றாக்குறை. தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தியதில் மின் வெட்டுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. நீர் மின்சாரமும், காற்றாலை மின்சாரமும் அடிக்கடி கையை விரித்து விடுகிறது. நிலக்கரியின் விலை உயர்வாலும் பற்றாக்குறையின் காரணமாகவும் அனல்மின் நிலையங்களும் அடிக்கடி நம்பிக்கை துரோகம் இழைத்துவிடுகிறது. அணுமின் நிலையங்களோ பெரும் அபத்தானது என மக்கள் அபயக்குரல் எழுப்புகிறார்கள். மின்பற்றாக்குறையை நிரந்தரமாக எப்படி தான் சமாளிப்பது?

இந்த கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கும் போது, உங்களுக்கு ஷாக் அடித்தது போல் இருக்கும். அடப் பாவிகளா, கைல வெண்ணையை வச்சிக்கிட்டு, நெய்க்கு அலைஞ்ச கதையாக இருக்கே என நீங்கள் ஆதங்கப்படுவீர்கள். ஒரு கல்லுல பல மாங்காய்கள் அடிக்கக்கூடிய எளிமையான வழி இருக்கும்போது, ஆட்சியாளர்கள் ஏன் இதுல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்காமல் அடக்கி வாசிங்கிறாங்க என நீங்கள் கொந்தளித்துப் போவீர்கள்.
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Sugar%20factory01
சர்க்கரை ஆலை முதலாளிகளை பொறுத்தவரை, சர்க்கரையைவிட, சக்கையே உயர்வானது. தற்போது இதுதான் அவர்களை வளமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. கரும்பில் இருந்து சர்க்கரையை எடுத்த பிறகு எஞ்சியிருக்கக்கூடிய சக்கையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, கோடியாக லாபம் பார்த்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் உள்ள அம்பிகா சர்க்கரை ஆலை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு விற்பனை செய்து வருகிறது. இதன் உற்பத்தி திறன்... மணிக்கு 40 மெகாவாட்.

தஞ்சை மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை 1999 ஆம் ஆண்டு சுமார் 31 கோடி ரூபாய் முதலீட்டில் மின் உற்பத்தி நிலையத்தை துவக்கியது. இதில் 27 சதவீத தொகையை மானியமாக, மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை வழங்கி விட்டது. கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் அப்போதே இந்த ஆலைக்கு கிடைத்துவிட்டது.
மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Sugar%20factory02
இதைத்தவிர, மின்சாரம் விற்பனை மூலமாக, இந்த ஆலைக்கு இதுவரை கிடைத்துள்ள மொத்த தொகை 250 கோடி ரூபாயை தாண்டும் என்கிறார்கள், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், சாக்கோட்டையில் உள்ள துணை மின் நிலையம் மூலமாக, கும்பகோணம் நகரத்திற்கு வழங்கப்படுகிறது. இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைகிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீதனலட்சுமி ஸ்ரீனிவாச சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான், பெரம்பலூர் மாவட்டத்தின் மின் தேவையில் ஒர் கனிசமான அளவினை நிறைவு செய்து வருகிறது. இதுபோல் இன்னும் ஏராளமான உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். தமிழகத்தில் 25 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் பெரும்பாலானவற்றில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்த தனியார் ஆலைகள் உற்பத்தி மின்சாரம் அனைத்துமே, தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு யூனிட்டுக்கு கொள்முதல் விலையாக, ரூ.3.75ல் இருந்து 4 ரூபாய் வரை தரப்படுகிறது. இதன் மூலம் தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் பெரும் லாபம் பார்த்து வருகிறார்கள்.

ஆனால் சாபகேடாக, தமிழ்நாட்டில் உள்ள ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலையிலோ, கூட்டுறவு சர்க்கரை ஆலையிலோ இதுவரையில் கூட மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இதில் மிகப்பெரும் அதிர்ச்சி என்னவென்றால், தனியார் ஆலைகளை விட, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு தான் வயது அதிகம். பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் 18 உள்ளன.

இவை அனைத்திலும் மின் உற்பத்தி நடைபெற்றால், தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையில் கனிசமான அளவை நிறைவு செய்யலாம். இதில் கிடைக்கக்கூடிய லாபத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை, விவசாயிகளின் கரும்புக்கு கூடுதல் கொள்முதல் விலையாக கொடுக்கலாம். கிராமப்புறங்களில் தலைவிரித்தாடும் மின்வெட்டு பிரச்னையை முழுமையாக தீர்க்கலாம்.

இதனை விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பலனாக, கடந்த திமுக ஆட்சியில் 2009ஆம் ஆண்டு முதல்கட்டமாக 12 பொதுத்துறை மற்றும் கூட்டுறவு ஆலைகளில் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து தரக்கூடிய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு, அதற்குரிய பணத்தையும் அரசு வழங்கிவிட்டது. அதிகப்பட்சமாக 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி துவங்கப்படும் என அப்போது அரசு அறிவித்தது.

ஆனால் இதுவரை ஒரு ஆலையில் கூட மின் உற்பத்தி தொடங்கப்படவே இல்லை. மின் நிலையம் அமைத்து தருவதற்கு பணத்தை பெற்றுக் கொண்ட தனியார் நிறுவனங்கள் அலட்சியமாகவே இருக்கிறது. இதை தட்டிக்கேட்க வேண்டிய அதிகாரிகளோ மெத்தனமாக இருக்கிறார்கள்.

தஞ்சை மாவட்டம், குருங்குளத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க, சுமார் 115 கோடி ரூபாய் நிதி வழங்கியது தமிழக அரசு. இதைத் தவிர, கரும்பு விவசாயிகளிடம் இருந்து பங்கு தொகையாக, 9 கோடியே 87 லட்சம் ரூபாய் வாங்கப்பட்டது. நான்காண்டுகளாகியும் இந்த தொகை கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது. மின் உற்பத்தி துவங்கப்படாததால், விவசாயிகளுக்கு டிவிண்டட் கிடைக்கவில்லை. வட்டியும் கிடைக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, குருங்குளம், திருக்கானூர்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடக்கூடிய மின் வெட்டு இன்று வரை தொடர்கிறது. இங்கு மின் உற்பத்தி நடைபெற்றால், தங்கள் கிராமங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான், இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கு தொகையாக பணம் கொடுத்தார்கள்.

ஆனால் ஏமாற்றத்தினால் இருள் தொடர்கிறது. பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் அனைத்திலும் உடனடியாக மின் உற்பத்தி தொடங்கப்படுவதோடு, புதிதாக சர்க்கரை ஆலைகளை அதிக எண்ணிக்கையில் தமிழக தொடங்கி, அவைகளில் மின் உற்பத்தியை துவக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒளிமயமான வாழ்வு கிடைக்கும். காற்றும், தண்ணீரும், நிலக்கரியும் அவ்வபோது கிடைக்காமல் போகலாம். ஆனால் கரும்பு சக்கை, பைசா செலவில்லாமல் எப்போதும் கிடைக்கும். மக்களுக்கு குறைந்த விலையில் சர்க்கரையும் கிடைக்கும்.

-கு.ராமகிருஷ்ணன்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Oct 09, 2014 7:53 am

நல்ல யோசனை ராமகிருஷ்ணன் நன்றி....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக