புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_lcapஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_voting_barஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_lcapஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_voting_barஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_lcapஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_voting_barஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_lcapஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_voting_barஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_lcapஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_voting_barஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_lcapஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_voting_barஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_lcapஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_voting_barஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_lcapஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_voting_barஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_lcapஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_voting_barஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Oct 06, 2014 7:18 am

தண்ணீர், தண்ணீர்' என்ற ஒரு தமிழ் சினிமாவில் அத்திப்பட்டுங்கிற கிராமத்தை காட்டி இருப்பார்கள். அதே போல தண்ணீர் பிரச்னையால் வாடும் ஒரு கிராமம் இஸ்ஸாபூர். இது டெல்லிக்கும், ஹரியானாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் திருமண வயதைத் தாண்டியும் முதிர் கண்ணன்களாக சோகத்துடன் திரிகிறார்கள். இவர்களுக்கு சொத்து பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இருந்தாலும்...



அப்படி என்னதாங்க பிரச்னை? தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பத்தியும், ஊரைப் பத்தியும் விசாரிப்பார்கள். இங்கென்னடான்னா அப்படியே ரிவர்ஸ்சாக இருக்கு... மாப்பிள்ளை நல்லவனா, சொத்து பத்தெல்லாம் இருந்தாலும், அந்த ஊர் பெயரைக் கேட்டதும் பொண்ணு வீட்டார், 'ஆள விடுங்க சாமி..!'னு ஒரு கும்புடு போட்டு எஸ்கேப் ஆகிறார்களாம். அதனால் அந்த கிராமத்தில் 32 வயதுக்கு மேல் ஆகியும் இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே திரிகிறார்கள்.

32 வயதாகும் நரேந்தருக்கு திருமணம் கைகூடி வரும். ஆனால் நின்றுவிடும். அதே போல ஐந்து முறை திருமணம் தட்டிப் போய்விட்டது. ஒவ்வொரு முறையும் திருமணம் நிச்சயித்தப் பிறகு கடைசியில் பொண்ணு வீட்டுக்காரர்கள், இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி நிறுத்தி விடுவது வாடிக்கையாகி விட்டது. இந்த தடவை திருமண நிச்சயம் செய்வதற்காக பெண்ணுடைய அப்பா ஊருக்கு நேரில் வந்து, நரேந்தரின் ஊர் சூழ்நிலையை நேரில் பார்த்ததும் இந்த சம்பந்தம் தேவையே இல்லை' என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டார். எல்லாமே தண்ணீர் படுத்துற பாடுதாங்க!

கிராமத்துக்குள் வராது வரும் தண்ணீர் லாரியின் பின்னால் குடங்கள், பக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு ஓடியதே நரேந்திரன் செய்த தவறு. இவர் மட்டும் இல்லீங்க அந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்குமே இதே நிலைமைதான்.



இந்த கிராமத்தில் பைப் லைன்கள் இருந்தும் தண்ணீர் வருவதில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டதால், கிணறுகளிலும் தண்ணீர் வறண்டுவிட்டது. அதனால் அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் வேண்டும் என்றால் ஊரின் எல்லையில் இருக்கும் ஹரியானா மாநிலத்துக்கு செல்லவேண்டும். அல்லது தண்ணீர் லாரி வரும் வரை காத்திருக்கவேண்டும். ஆனால் தண்ணீர் லாரி எப்ப வரும் என்று தெரியாது என்பதால் தெருக்களில் டிரம்கள், குடங்களை வைத்துக்கொண்டு காவல் காப்பதே இவர்களுடைய அன்றாட வேலையாகிவிட்டது.

தண்ணீர் லாரி வந்தாலும் சிலருக்கு ஒரு சொட்டு நீர்க் கூட கிடைக்காது. அதனால்தான் ஆண், பெண் பார்க்காமல் தண்ணீர் லாரியின் பின்னால் ஓடுகிறார்கள். லாரி மீது ஏறி பைப்புகளைக் கொண்டு டிரம்களிலும், பக்கெட், குடங்களிலும் தண்ணீரை நிரப்பிக் கொள்கிறார்கள். இஸ்சாபூர் மக்கள் தண்ணீருக்காக படாதபாடு படுவதைப் பார்த்துதான் இந்த கிராமத்தில் எவரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். 5,000 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், நரேந்தர் போல் 30 வயதை தாண்டிய இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருக்கிறார்கள்.



'நல்ல சம்பந்தம், சொந்த வீடும், சொத்தும் இருக்கிறது. தண்ணீர் பிரச்னைக்காக இந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்றீங்களா?' என்று யாராவது பெண் வீட்டாரைப் பார்த்துக் கேட்டால்... 'வாழறதுக்கு தண்ணீர் தானே முக்கியம், குடிக்க, குளிக்க, துணி துவைக்க, பாத்திரங்களை கழுவ... தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாதே. மற்ற வேலைகள் செய்யமுடியாமல் வாழ்க்கை முழுவதும் தண்ணீர்க்காகவே போராடவேண்டியிருக்குமே. அதனால்தான் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இல்லை என்றால் என் பொண்ணும் தண்ணீர் லாரி மீது ஏறி சர்க்கஸ் செய்யவேண்டுமே என்ற பயம்' என்கிறார் ஒரு பெண்ணின் தந்தை.

அவர் சொல்வதும் உண்மைதான்... அந்த ஊரின் ஜனங்களுக்கு தண்ணீர் லாரிமீது ஏறி தள்ளு முள்ளு ஏற்பட்டு கீழே விழுவதும் அடிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது. அந்தத் தண்ணீர் போதாமல், தனியார் டேங்கர் லாரிகளை வரவழைத்தும் தண்ணீர் வாங்கவேண்டிய சூழ்நிலை. இதையே காரணம் காட்டி தண்ணீர் வியாபாரிகள் 3000 முதல் 4000 ரூபாய் என்று தண்ணீரை விற்றுவிடுகிறாகள். நடுத்தர குடும்பத்தினர் அவ்வளவு பணம் கொடுத்து வாங்குவது மிகவும் கடினம். வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் இருவர் தண்ணீருக்காகாவே போராடவேண்டி இருப்பதால் வேலைக்குச் செல்லாமல் குடும்ப வருமானமும் குறைந்துவிடுகிறது. இதை எல்லாம் பார்த்து எந்த அப்பா தன் பொண்ணை அந்த ஊருக்கு மருமகளாக அனுப்புவார்.



தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல், சிலர் கிராமத்தை விட்டு சென்றுவிட்டார்கள். சொந்த வீட்டையும் ஊரையும் விடமுடியாமலும், வேறொரு ஊரில் வாடகை கொடுத்து வாழ முடியாதவர்கள் மட்டுமே இந்த ஊரில் இருக்கிறார்கள்.

இனி, பிள்ளைகளுக்கு கல்யாணப் பிரச்னையை சமாளிக்க தற்போது பணக் கஷ்டத்தைப் பார்க்காமல், வீட்டில் தண்ணீர் தொட்டியைக் கட்டிவருகிறார்கள். தனியார் தண்ணீர் லாரி மூலம் தண்ணீரை அதில் கொட்டி, அந்த தண்ணீரை மூன்று, நான்கு நாட்களுக்கு வரும்படி உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் இந்த வீட்டில் தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இருக்காது என்று நினைத்தாவது பெண் தரமாட்டார்களா என்று ஒரு நப்பாசை. அது மட்டும் இல்லை.. திருமணத்துக்காக சொத்து பத்துகளை காட்டுவது போல, தண்ணீர் தொட்டியையும் காண்பிப்பது இஸ்சாபூரில் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது.

தண்ணித் தொட்டி கட்டினால் டும் டும் டும் நிச்சயம்...

Nandri-Vikatan

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Oct 06, 2014 10:02 am

நல்ல பதிவு

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 06, 2014 10:14 am

உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? 103459460

தண்ணீர் பிரச்சனை இப்படியும் படுத்துகிறதா மக்களை ???



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 06, 2014 7:04 pm

//இனி, பிள்ளைகளுக்கு கல்யாணப் பிரச்னையை சமாளிக்க தற்போது பணக் கஷ்டத்தைப் பார்க்காமல், வீட்டில் தண்ணீர் தொட்டியைக் கட்டிவருகிறார்கள். தனியார் தண்ணீர் லாரி மூலம் தண்ணீரை அதில் கொட்டி, அந்த தண்ணீரை மூன்று, நான்கு நாட்களுக்கு வரும்படி உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் இந்த வீட்டில் தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இருக்காது என்று நினைத்தாவது பெண் தரமாட்டார்களா என்று ஒரு நப்பாசை. அது மட்டும் இல்லை.. திருமணத்துக்காக சொத்து பத்துகளை காட்டுவது போல, தண்ணீர் தொட்டியையும் காண்பிப்பது இஸ்சாபூரில் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது.

தண்ணித் தொட்டி கட்டினால் டும் டும் டும் நிச்சயம்...//


அடப்பாவமே, என்ன அநியாயம் இது.....தலைநகர் அருகில் இருந்தும் யாரும் கண்டுக்கலையா? இவர்களின் பிரச்னையை???????????சோகம்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 06, 2014 7:11 pm

இங்கும் சில நகராட்சிகளில் குடிதண்ணீர் ஒரு சில
பகுதிகளில் லாரியில் சப்ளை பண்ண வேண்டிய
நெருக்கடி இருக்கும்...
-
அங்கு குடிதண்ணீரை லாவகமாக
சாமார்த்தியமாக தண்ணீர் பிடித்து வரும்
பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைப்பது எளிது...!
-

-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக