ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

2 posters

Go down

போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Empty போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Post by krishnaamma Sun Oct 05, 2014 6:08 pm

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் மனதை குளிர்விப்பதற்காக, அமைச்சர்கள் முதல் கட்சியின் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் வரை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை. இதனால் அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை பொதுச்செயலர் ஜெயலலிதா மட்டுமே முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவராக இருந்து வருகிறார். பதினெட்டு ஆண்டுகள் நடந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதையோ ஜாமின் பெற விசாரணை நடந்து வருவதையோ, கட்சியினர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். சட்ட ரீதியாக அணுக வேண்டிய பிரச்னையை போராட்டங்களாக அ.தி.மு.க.,வினர் மாற்றுகின்றனர் என, தமிழக கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் அனைத்தும் கண்டிக்கின்றன. இது குறித்து தமிழக கவர்னர் ரோசய்யாவிடமும் தமிழக கட்சிகள் மனு அளித்துள்ளன. சமூக ஆர்வலர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். இதற்கு கட்சியினரை வழிகாட்ட அடுத்த தலைமை இல்லாததே காரணம் என, அ.தி.மு.க.,வினரே புலம்புகின்றனர்.

கட்சியில் மூத்த நிர்வாகி ஒருவர், கூறியதாவது:சிறையில் இருக்கும் தலைவரை வெளிக்கொணர எடுக்க வேண்டிய சட்ட வழிமுறைகள் குறித்து போதிய அறிவுரை இல்லாமல் முக்கிய நிர்வாகிகள் தவிக்கின்றனர். நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் விமர்சிப்பது, கடையடைப்பு, மறியல், பஸ் எரிப்பு போன்ற செயல்களால் மிரட்டலாம் என நினைப்பது தவறான போக்கு. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு தடை செய்யப்பட்ட மெரீனா

கடற்கரையில் எம்.ஜி.ஆர்., நினைவிடம் முன்பு, நேற்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கு யார் அனுமதி கொடுத்தது?எம்.பி.,க்கள் டில்லியில் தனியாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். பெங்களூருவில் சிறை வாசலில் அ.தி.மு.க.,வினர் தினமும் குவிகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது?

வழக்கை திறமையாக நடத்த சிறந்த ஏற்பாடுகளை செய்யக்கூடிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட கட்சியில் இல்லை. இருந்த ஒரு சிலரும் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு விட்டனர். அவர்கள் அறிவுரையைகேட்கக்கூட யாரும் கட்சியில் முன்வருவது இல்லை.இதுவெல்லாம் கட்சித் தலைவரின் வழக்குக்கு பாதகமாகவே முடியும். ஆனால் மாவட்டச் செயலர்கள், ஒன்றிய, நகரச் செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அமைச்சர்கள் என அனைவரும் கட்சித் தலைவர் சிறையில் இருக்கும்போது அதை கண்டித்து வெளியில் என்ன செய்தோம் என்பதை பதிவு செய்யவே விரும்புகின்றனர்.

இதற்காக அவர்கள் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களை போராட்டங்களை நடத்தச் சொல்கின்றனர். தனியார் பஸ் உரிமையாளர்கள், கேபிள் ஆபரேட்டர்கள், வணிகர் சங்கங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள், தோழமை கட்சிகள், இந்திய வாழ் ஈழத் தமிழர் அமைப்புகள், தமிழ் சினிமா துறையினர் போன்றவர்கள் மூலம் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர்.இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு போன்றவற்றால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வெறுப்பை ஏற்படுத்துவதாகவே இவை உள்ளன.

தடுமாற்றம்...: புதிய முதல்வரும் இவற்றையெல்லாம் தடுக்க முடியாமல் தடுமாறுகிறார். தலைமை சிறையில் இருக்கும்

நேரத்தில் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது. இதன் மூலம் கட்சித் தலைமையின் அதிருப்தியை சம்பாதித்து விடுவோமா என்ற அச்சத்தில், எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். கட்சியினருக்கு இதெல்லாம் சாதகமாக இருப்பதால், அவர்கள் இஷ்டத்துக்கும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இரண்டாம் கட்டத் தலைவர்கள், தொண்டர்களை வழி நடத்தும் அளவுக்கு இல்லை. ஒவ்வொருவரும் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஒற்றுமையின்றி செயல்படுகின்றனர். டில்லியில், எம்.பி.,க்கள் பங்கேற்ற உண்ணாவிரதத்தில் கூட இந்த நிலை தான் காணப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

காரணம்: அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு பொதுச்செயலருக்கு அடுத்த நிலையில், கட்சியை வழிநடத்த அனுபவம் உள்ளவர்களை வைத்திருக்காததும், அவ்வப்போது தோன்றும் திடீர் பொறுப்பாளரும் தான் காரணம் என்கின்றனர் கட்சித் தொண்டர்கள்.இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாகாமல் இருக்க கட்சித் தலைமையும் ஒரு காரணம். பலம் பொருந்திய இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாவதை விரும்புவதும் இல்லை என்ற கருத்து அ.தி.மு.க.,வில் நிலவுகிறது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Empty Re: போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Post by krishnaamma Sun Oct 05, 2014 6:11 pm

தினமலரில் ரசித்த பின்னுட்டங்கள் :

1. அடிமைகள் திமுக வில் அம்மாஜியை தவிர மற்றவர் எல்லாம் அடிமைகளே.அம்மாஜியை தவிர மற்றவர் யாரும் ஆறாவது அறிவை பயன்படுத்தக்கூடாது என்பது அடிமைகள் திமுக வின் கட்சி கொள்கைகளில் ஒன்று.இவர்கள் போராடும் லச்சனத்தை பார்த்தாலே தெரியவில்லையா..காவேரியை எடு அம்மாவை கொடு..காவிரி அடிமைகளின் அப்பன் வீட்டு சொத்தா இவர்கள் கொடுப்பதற்கு.. நீதி தேவைதைக்கே தண்டனையா.. அன்னமிட்ட தாய்க்கு அநியாய தண்டைனையா..இதெல்லாம் இவர்களை ஐந்தறிவு அடிமைகள் என்றே காட்டுகிறது. இப்படி தலையில் ஒன்றும் இல்லாதவர்களை எப்படி தலைவர்கள் ஆக்குவது?
tony - dubai,ஐக்கிய அரபு நாடுகள்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Empty Re: போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Post by krishnaamma Sun Oct 05, 2014 6:12 pm

2. கர்நாடக செய்தி சானலில் ஜெயலலிதா கைது பற்றிய ஓர் தொகுப்பு செய்தியில்....ஜெயலலிதா ஓர் குட்டி யானைக்கு அருகே சென்று தொட முற்பட்டபோது ...அந்த யானை கோபம் கொண்டு ஜெயலலிதாவை தள்ளி...தாக்க முற்பட்டது...சாதுவான அந்த குட்டி யானை இதுவரை யாரிடமும் அப்படி நடந்து கொண்டது இல்லை...அனைவரிடமும் அன்பாக ..அமைதியாக பழககூடிய அந்த யானை ஏன் ஜெயலலிதாவை மட்டும் தாக்க முற்பட்டது ? பொதுவாக அந்த காலத்தில்...சில நேரங்களில்....நாட்டை வழி நடத்த கூடிய ஒரு தலைவனை ...ஒரு அரசரை யானைகளே மாலையிட்டு தேர்வு செய்யும்...காரணம்...யானைகளுக்கு மட்டுமே தலைவனை அடையாளம் காணும் சக்தி உண்டு....தகுதி இல்லாதவரை தள்ளிவிடும்... அதனாலயே தகுதி இல்லாத ஜெயலலிதா மீது கோபம் கொண்ட அந்த குட்டி யானை தள்ளியது...அதுவே சிறை செல்ல காரணம் என்று .....அந்த செய்தி சானல் ஒளிபரப்பியது.....உடனே வாசகர்கள் அனைவரும்....அனைத்து அரசியல் தலைவர்களையும் யானை அருகே செல்ல வைக்கலாமா என்று கிண்டலாக கேள்வி கேட்டு விடாதிர்கள்...நான் பார்த்த செய்தியை உங்களடன் பகிர்கிறேன்.


tamilselvan - london,யுனைடெட் கிங்டம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Empty Re: போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Post by krishnaamma Sun Oct 05, 2014 6:13 pm

3. நடிகன் என்றால் அவனுக்கு ரசிகர்கள். அரசியல் என்றால் தொண்டர்கள். ஆனால் இந்த அ.தி.மு.க. விற்கு மட்டும் ஏன் எல்லோரும் அடிமைகளாக இருக்கின்றனர்? முதுகெலும்பு இல்லாத கூனர்கள்..... இந்த அடிமைகளின் செய்கையால் வெளியிடங்களில் வசிக்கும் எல்லா தமிழரையும் ரொம்ப கேவலமாக பார்க்கின்றனர் அடுத்த மாநிலத்தவர். கேவலம்.... தூ....

Thamilan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Empty Re: போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Post by krishnaamma Sun Oct 05, 2014 6:14 pm

4. சர்வதிகார தொனியில் ஆட்சி செய்த ஜெயலலிதா ஊழல் குற்றசாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளே போயிட்டாங்க. வெளியே உள்ள கட்சிகாரர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்று புரியவில்லை. போராட்டம் பண்ணினால் குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலை செய்யுமா. கண்ணதாசன் சொன்ன மாதிரி பாராட்ட சில பேர் இருந்துவிட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு என்பது தெளிவாகிறது.

kavitha - newark,யூ.எஸ்.ஏ


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Empty Re: போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Post by ayyasamy ram Sun Oct 05, 2014 7:22 pm

குட்டி யானைக்கு எல்லாம் ஐந்தறிவுதான்...!
-
தேசிய கவி பாரதி யானைக்கு வாழைப்பழம்
கொடுக்கப் போய், அதனால் தள்ளப்பட்டு வீழ்ந்தார்
-
உடல் நலம் கெட்டு இறந்தார்...!
-
ஆக அவரவர் விதிப்பயன் எப்படியோ அப்படியே
அமையும்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Empty Re: போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை
»  எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
» அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு
» எந்த கலாச்சாரத்தை பின்பற்றுவது? அமெரிக்க வாழ் இந்தியர்கள் குழப்பம்!
» நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை; எந்த இடஒதுக்கீடும் வேண்டாம்! -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum