ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., Empty ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma Sun Oct 05, 2014 5:59 pm

பெங்களூரு: தமிழகத்தில் இருந்ததை விட பெங்களூரு சிறையில் இருக்கும் தற்போது தனது உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது என ஜெ., தெரிவித்ததாக சிறைத்துறை டி. ஐ.ஜி., ஜெயஷிம்ஹா கூறியுள்ளார் .

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்களாகிறது. சிறை வளாகம் வெளியே எப்போதும் காணப்படும் கூட்டம், பரபரப்பு எதுவுமில்லை. கூட்டவிடுமுறை நாள் என்பதால் ஜெயில் வளாகம் அருகே யாரும் அதிக அளவில் வரவில்லை. சில எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆங்காங்கே தரையில் அமர்ந்து இருப்பதை காண முடிகிறது.

சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயஷிம்ஹா இன்று நிருபர்களிடம் கூறுகையில், ஜெ., வின் உடல்நலம் நன்றாக உள்ளது. வழக்கமான சுழற்சி முறையிலான செக்அப் நடத்தப்படுகிறது. இவர் எந்த சிறைக்கும் மாற்றப்படவில்லை. முதலில் அடைக்கப்பட்டுள்ள சிறையிலேயேத்தான் உள்ளார். டி.வி., வழங்கப்படவில்லை. நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ஜெ., சசி, இளவரசி ஆகிய 3 பேரும் ஒரே சிறையில்தான் உள்ளனர். டாக்டர்கள் ஜெ., விடம் கேட்ட போது அதற்கு அவர் , " தமிழகத்தை விட பெங்களூருவில் நன்றாகத்தான் இருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு டி.ஐ.ஜி., கூறினார்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., Empty Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma Sun Oct 05, 2014 6:02 pm

//டாக்டர்கள் ஜெ., விடம் கேட்ட போது அதற்கு அவர் , " தமிழகத்தை விட பெங்களூருவில் நன்றாகத்தான் இருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு டி.ஐ.ஜி., கூறினார்.//

இங்க பெங்களூர் வெதெர் நன்னா ஒத்துக்கும் எல்லோருக்கும் புன்னகை மேலும் பாவம் இவ்வளவு வயசானவருக்கு நல்ல ஓய்வு தேவை தானே? புன்னகை .......ஆனால் ஒரு 10 நாளாய் வெயில் அதிகம் தெரிகிறது.அப்பப்போ மழை பெய்தாலும் fan போடும்படி இருக்கு .....இன்னும் குளிர் ஆரம்பிக்கலை ....என்றாலும் மெட்ராசை விட எவ்வளவோ நல்லா இருக்கு ஜாலி ஜாலி ஜாலி அது தான் அவங்களும் சொல்லி இருக்காங்க !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., Empty 'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன்!' டி.ஐ.ஜி-யிடம் மனம் திறந்த ஜெயலலிதா

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 4:23 pm

செப்டம்பர் 27-ம் நாள் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் ஜெயலலிதா. தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட யாரையும் அவர் சந்திக்கவில்லை. சிறைக்குள் அவர் எப்படி இருக்கிறார், என்ன நினைக்கிறார், என்ன செய்கிறார் என்று நேரடியாக பதில் சொல்லக்கூடிய ஒரே நபர் ஜெயசிம்ஹா!

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., P3a(1)



ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறையின் டி.ஐ.ஜி-யான அவரை நேரில் சந்தித்தோம்.

''பரப்பன அக்ரஹாரா சிறையில் மொத்தம் எத்தனை பெண் கைதிகள் இருக்கிறார்கள்?''

''விசாரணைக் கைதிகள் 89 பேர். குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிகள் 46 பேர். மொத்தம் 135 கைதிகள் இருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரும் அடக்கம். கர்நாடக மாநிலத்திலேயே அதிக அளவு பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறை இதுதான்.''

''எப்படி இருக்கிறார் ஜெயலலிதா?''

''அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். சுகர், பிரஷர் சீராக இருக்கிறது. 24 மணி நேரமும் சிறையில் உள்ள மருத்துவர்கள் குழு அலார்ட்டாக இருக்கிறது. 28-ம் தேதி ஒருநாள் மட்டும் அவருடைய பர்ஷனல் டாக்டர் அவரை பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டது. வெளியில் இருந்து மருந்துகள் எடுத்துவர அனுமதி கொடுத்தோம். அதன் பிறகு சிறை வளாகத்தில் உள்ள டாக்டர்கள்தான் அவரைக் கண்காணித்து வருகிறார்கள். அதிகாலையில் எழுந்துவிடுகிறார். காலை ஆறு மணிக்கு அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறை திறக்கப்படும். மாலை ஆறு மணிக்கு அந்த அறையை அடைத்துவிடுவோம். அவரது அறை திறக்கப்பட்டதும் அவர் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனாலும் அதிக தூரம் அவர் நடப்பதில்லை.''

''என்ன சாப்பிடுகிறார்?''

''பெரும்பாலும் பிரட், சான்ட்விச், பால், பழம் இவைகளைத்தான் சாப்பிடுகிறார். முதலில் வெளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு வெளியில் இருந்து உணவு வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறை உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பரப்பன அக்ரஹாரா சிறையில் விதவிதமான காலை உணவுகளை கர்நாடக அரசு வழங்கி வருகிறது. திங்கள்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை இடிச்ச அவல் சாதம், புதன்கிழமை எலுமிச்சை சாதம், வியாழக்கிழமை வெஜிடபிள் புலாவ், வெள்ளிக்கிழமை உப்புமா, சனிக்கிழமை இடிச்ச அவல் சாதம், ஞாயிற்றுக்கிழமை புளியோதரை ஆகியவை வழங்குகிறோம். வழக்கமாக நாங்கள் கைதிகளுக்கு இந்த வரிசைப்படிதான் காலை உணவு கொடுப்போம். அதையேதான் ஜெயலலிதாவும் சாப்பிடுகிறார்.''

''ஜெயிலுக்குள் ஜெயலலிதாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா?''

''அப்படி எதுவும் செய்து தரப்படவில்லை. வி.வி.ஐ.பி கைதிகளுக்கு என்ன வசதிகள் கொடுக்கப்படுமோ அவை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சிறைக் கைதிகளுக்கு கொடுக்கப்படும் யூனிஃபார்ம் மட்டும் அவருக்குக் கொடுக்கவில்லை. அவருடைய வீட்டில் இருந்து எடுத்துவந்த உடைகளை அணிய அனுமதி கொடுத்திருக்கிறோம். காலை 8 மணிக்குப் பிறகு இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளும் மூன்று ஆங்கில பத்திரிகைகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர் முழுமையாக வாசிக்கிறார்.''

''பார்வையாளர்கள் யாரையாவது ஜெயலலிதா சந்தித்தாரா?''

''ஜெயலலிதா அவரைச் சந்தித்தார்... இவரைச் சந்தித்தார் என்று யூகமாக பல செய்திகள் வெளி வருகின்றன. ஆண்டவன் மீது சத்தியமாகச் சொல்கிறேன்... உள்ளே வந்ததில் இருந்து இதுவரை அவர் பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவே இல்லை. ஜெயலலிதாவைச் சந்திக்க விரும்பி மனு போடும் அனைவரின் பட்டியலையும் அவரிடம் தினமும் கொடுக்கிறோம். வாங்கிப் படித்துப் பார்க்கிறார். 'யாரையும் மீட் பண்ண விரும்பலை!’ என்று சொல்லிவிடுகிறார். சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் ஜெயலலிதா இருக்கும் பகுதிக்கே மாற்றிவிட்டோம். பகல் முழுவதும் சசிகலாவும், இளவரசியும் ஜெயலலிதாவின் அறையில்தான் இருக்கிறார்கள். மூவரும் நன்றாகப் பேசியபடி இருக்கிறார்கள். மாலை ஆறு மணி ஆனதும் மூவரையும் தனித்தனி அறையில் அடைத்துவிடுகிறோம். சசிகலாவும், இளவரசியும் மட்டும் அவர்களது வழக்கறிஞர்களைச் சந்தித்துப் பேசினார்கள். சுதாகரன் ஆண்கள் சிறையில் இருப்பதால், இவர்களோடு அவர் பேசவோ, சந்திக்கவோ வாய்ப்பு இல்லை. சுதாகரனைப் பார்க்கவும் நிறையப் பேர் வருகிறார்கள். அவர்களை அவர் சந்திக்கிறார்.''
' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., P2a
''உங்களிடம் ஜெயலலிதா பேசினாரா?''

''நான் தினமும் ரவுண்ட்ஸ் செல்வேன். அப்போது அவரிடம் ஏதாவது ஜெயிலில் குறைகள் இருக்கிறதா... எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரித்தேன். 'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை. என் உடல் ஆரோக்யமாக இருக்கிறது’ என்று சொன்னார்.

''ஜெயலலிதா, சிறைக்குள் ஸ்பெஷலான ஓர் அறைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கே ஏ.சி உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வருகிறதே?''

''அத்தனையும் தவறான தகவல்கள். 27-ம் தேதி அவர் எந்த அறையில் அடைக்கப்பட்டாரோ அதே அறையில்தான் இப்போதும் இருக்கிறார். இந்தியாவில் எந்த ஜெயிலிலும் ஏ.சி கிடையாது. அப்படியிருக்க இங்கே மட்டும் எப்படி ஏ.சி இருக்கும்?''

-வீ.கே.ரமேஷ்

படம்: ரமேஷ் கந்தசாமி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., Empty Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by யினியவன் Wed Oct 08, 2014 4:32 pm

இந்த சிறை வாசம் வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்த்தி அதை அவர் நன்கு உணர்ந்தால் நன்று - செய்த தவறினை ஒத்துக்கொண்டு தன் வாழ்க்கை பாடத்தை மற்ற அரசியல்வாதிகளுக்கும் எடுத்துரைத்தால் அதனினும் நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., Empty Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 5:06 pm

அரசியல்வாதியாக அம்மையாரின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்குட்பட்டதாக இருந்தாலும்...தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த மன உறுதி மிக்கவர்..இல்லாவிட்டார்..தமிழ்நாட்டில் கருநாநிதி போன்ற குள்ளநரிகளை அவர் சமாளித்து ஒரு கட்சியின் வெற்றிகரமான தலைவராக வலம்வர முடிந்திருக்குமா...இழைத்த தவறுகளுக்கு கிடைத்த தண்டணை என்பதை நிச்சயம் உணர்ந்து கொள்வார்.. இந்த சறுக்கலை சமாளித்து மீண்டும் அடைமொழியில் மட்டும் மக்களின் முதல்வராக இல்லாமல் மக்கள் மனதிலும் நல்ல முதல்வர் என்ற பெயரெடுப்பார்..காலம் அதற்காக தந்திருக்கும் அவகாசமே இந்த சிறைவாசம்..

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., Empty Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 5:13 pm

அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு


Last edited by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 5:29 pm; edited 1 time in total
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., Empty Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma Wed Oct 08, 2014 5:17 pm

இது நான் ஏற்கனவே போட்டிருக்கேன் நேசன்........இணைத்துவிடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., Empty Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma Wed Oct 08, 2014 5:20 pm

இணைய இணைப்பு தான் பிரச்சனை என்று நினைக்கிறேன் நேசன்...என்னுடையதும் 2 முறை வந்து விட்டது, இதோ திருத்தி விட்டேன் புன்னகை
.
.
.
நன்றி நேசன், நோ ப்ரோப்ளேம் புன்னகை அன்பு மலர்


Last edited by krishnaamma on Wed Oct 08, 2014 5:42 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., Empty Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 5:32 pm

நான் இந்த பதிவை கவனிக்கவில்லை..இந்த செய்தியை இன்றுதான் விகடனில் படித்தேன் உடனே பதிவாக போட்டுவிட்டேன்...பதிவை இணைத்தமைக்கு நன்றி அம்மா... புன்னகை

இரண்டு முறை வந்த பதிவில் ஒன்றை நீக்க இயலவில்லை...திருத்த முடிந்தது ..திருத்திவிட்டேன்..இணைய இணைப்பு மெதுவாக உள்ளதால் அப்படி ஆகிவிட்டது... புன்னகை


Last edited by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 5:34 pm; edited 1 time in total
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., Empty Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by ayyasamy ram Wed Oct 08, 2014 5:32 pm

சிறை தண்டனை என்றதும் படுக்கையில் படுத்துக்
கொண்டு எல்லா அரசியல்வாதி களைப் போல
நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்ற அவர்
விரும்பவில்லை.

சசிகலா வும், அமைச்சர்களும் எவ்வளவோ எடுத்துக்
கூறியும் மருத்து வமனைக்குச் செல்லும் யோசனையை
ஜெயலலிதா ஏற்க வில்லை.

தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வதாக
கூறி, சிறைக்குச் செல்ல முடிவெடுத்தார்.
-
மக்கள் மனதிலும் நல்ல முதல்வர் என பெயரெடுப்பார்...
-

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ., Empty Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum