ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை.

3 posters

Go down

ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. Empty ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை.

Post by அகிலன் Sun Oct 05, 2014 5:52 am

ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. SMw3vx1zTeav6U6UeQMb+j


கோமளவள்ளி ஜெயராம் என்றால் யாருக்கும் தெரியாது அதே சமயம் ஜெயலலிதா என்றால் இன்றைக்கு உலகம் முழுவதும் பிரபலம். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் பறிகொடுத்த ஜெயலலிதாதான் இன்றைக்கு உலகம் முழுவதும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவிட்டார். ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று கூறப்படும் ஜெயலலிதா, கர்நாடக மாநிலத்தில் பெங்களூர்-- மைசூர் நெடுங்சாலையில் மாண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்தார். ஜெயலலிதாவின் சித்தி (தாய் சந்தியாவின் தங்கை), வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.

ஜெயலலிதா தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகியாக நடித்து 1965ம் ஆண்டில் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை"தான் அவரது முதல் தமிழ்ப்படம்.வெண்ணிற ஆடை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பி.ஆர்.பந்துலுவின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2 படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன. எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்ததுதான் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். இதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக 28 படங்களில் நடித்துள்ளார்.ஜெயலலிதாவின் நிறம், அழகு அவருக்கு என்று தனி ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. எம்.ஜி.ஆர்,,சிவாஜி,,ஜெமினி,,, என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன், ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

அடிமைப் பெண், அரசகட்டளை, எங்க வீட்டுப் பிள்ளை,ரகசியபோலீஸ், காவல் காரன்,,குடியிருந்த கோவில்,,ஒளி விளக்கு,,தனிப்பிறவி,,என் அண்ணன், பட்டிக்காடா பட்டணமா, கந்தன் கருணை, யார் நீ, நான்,,சூர்ய காந்தி ஆகிய படங்களில் ஜெயலலிதாவின் திரை உலகப் பயணத்தின் மைல்கல்.ஜெயலலிதாவின் 100 வது படமான "திருமாங்கல்யம்" 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார்.

1960, 70களில் அசைக்க முடியாத நாயகியாக திகழ்ந்த ஜெயலலிதா, சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார். 1980ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற திரைப்படம்தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் இயற்பெயர் `வேதா'. அவரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் ஜெயலலிதா.நடிகையாக இருந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் நடித்து, அவரின் அன்பிற்கு பாத்திரமாகி அவர் அதிமுகவை தொடங்கிய பின்னர் கட்சியில் இணைந்தார். ராஜ்யசபா எம்.பியானார்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று, பின்னர் 1991 ஆம் ஆண்டு முதன் முறையாக முதல்வரான அவர் 2001, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களி வெற்றி வெற்றி பெற்று மூன்று முறை முதல்வராக வெற்றி பெற்றார்.நடிகையின் மகளாக பிறந்து நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயலலிதா, கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளராக 7வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் களத்தில் எதிரிகளையே காணோம் என்று பேசினார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குப் போனதால், களத்தில் ஜெயலலிதாவையே காணோம் என்கின்றனர் எதிர்கட்சியினர்.

பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் அறையில்...7402 என்ற கைதி எண்ணுடன் ,,ஒரு படுக்கை, மின்விசிறி மட்டும் கொண்ட அறையில் தனி கழிவறை யுடனும்,குற்றவாளிகளுக்கான வெள்ளை உடையுடனும்,சிறையில் வாடுகிறார்...அன்றைய கனவுக் கன்னி...கலைமாமணி...கலைச்செல்வி ஜெயலலிதா.

ஆசை யாரைத்தான் விட்டது...எம்.ஜி.ஆர். போட்ட கணக்கில் தப்பிய கணக்கிது.....


நேர்மையே பலம்
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. Empty Re: ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை.

Post by ayyasamy ram Sun Oct 05, 2014 11:38 am

வெள்ளை உடை கொடுத்து விட்டார்களா...?
-
ராஜ வாழ்க்கைதான்..இன்னும்...
-
ஏனோ தானோ சாப்பாடு இல்லை....நல்ல சாப்பாடுதானான்னு
ஒருத்தர் சாப்பிட்டு பார்த்து (சாப்பிட்டவர் உயிரோடு இருந்தால்தான்)
அவங்களுக்கு அந்த சாப்பாடு தரப்படுகிறது..!!
-
ஒரு நாளைக்கு அவங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு செலவு
எவ்வளவு...? எல்லாம் கணக்கு பார்த்தால் அவங்களை வெளியே
விடறதே மேல்னு தோணும்..!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. Empty Re: ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை.

Post by krishnaamma Sun Oct 05, 2014 4:41 pm

இதென்ன பிரதமரின் அமெரிக்க பயணம் தள்ளிப்போடப்பட்டதாக மேலே குறிப்பிட்டு இருக்கீங்க அகிலன்...........இந்த அம்மா தீர்ப்பு வரும்போது அவர் அமெரிக்காவில்  தானே இருந்தார்?
.
.
வெண்ணிற ஆடை இல் ஆரம்பித்து வெண்ணிற ஆடை லேயே முடிக்கப்போகிறாரா ? கண்ணடி
.
.
ஜெ ., பெங்களூர் ஐயங்கார் என்று எங்க பாட்டி சொல்வார், ஜெவின் தாத்தா மேல்கோட்டை கோவில் அர்ச்சகர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. Empty Re: ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை.

Post by அகிலன் Sun Oct 05, 2014 9:08 pm

krishnaamma wrote:இதென்ன பிரதமரின் அமெரிக்க பயணம் தள்ளிப்போடப்பட்டதாக மேலே குறிப்பிட்டு இருக்கீங்க அகிலன்...........இந்த அம்மா தீர்ப்பு வரும்போது அவர் அமெரிக்காவில்  தானே இருந்தார்?
.
.
வெண்ணிற ஆடை இல் ஆரம்பித்து வெண்ணிற ஆடை லேயே முடிக்கப்போகிறாரா ? கண்ணடி
.
.
ஜெ ., பெங்களூர் ஐயங்கார் என்று எங்க பாட்டி சொல்வார், ஜெவின் தாத்தா மேல்கோட்டை கோவில் அர்ச்சகர்.
மேற்கோள் செய்த பதிவு: 1093031

ஆமாம் தவறுதலாக பதியப்பட்டுவிட்டது, என்னால் அதை திருத்த முடியவில்லை, முடிந்தால் அந்த வசனத்தை எடுத்துவிடவும்.
நன்றி அம்மா


நேர்மையே பலம்
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. Empty Re: ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை.

Post by krishnaamma Sun Oct 05, 2014 9:13 pm

அகிலன் wrote:
krishnaamma wrote:இதென்ன பிரதமரின் அமெரிக்க பயணம் தள்ளிப்போடப்பட்டதாக மேலே குறிப்பிட்டு இருக்கீங்க அகிலன்...........இந்த அம்மா தீர்ப்பு வரும்போது அவர் அமெரிக்காவில்  தானே இருந்தார்?
.
.
வெண்ணிற ஆடை இல் ஆரம்பித்து வெண்ணிற ஆடை லேயே முடிக்கப்போகிறாரா ? கண்ணடி
.
.
ஜெ ., பெங்களூர் ஐயங்கார் என்று எங்க பாட்டி சொல்வார், ஜெவின் தாத்தா மேல்கோட்டை கோவில் அர்ச்சகர்.
மேற்கோள் செய்த பதிவு: 1093031

ஆமாம் தவறுதலாக பதியப்பட்டுவிட்டது, என்னால் அதை திருத்த முடியவில்லை, முடிந்தால் அந்த வசனத்தை எடுத்துவிடவும்.
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1093106

நோ ப்ரோப்ளேம், நான் எடுத்துவிடுகிறேன் புன்னகை கவலைப்படாதீங்கோ அகிலன் ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. Empty Re: ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
» சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு
» பெங்களூர் சாலைகளில் இலவச 'வைஃபை'- முதல் கட்டமாக 5 இடங்களில் தொடக்கம்
» ராணா பட ஷூட்டிங்: ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum