Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜீவா – திரை விமர்சனம் !
3 posters
Page 1 of 1
ஜீவா – திரை விமர்சனம் !
தனது சிறு வயதிலிருந்தே ஒரு நாளாவது இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் வாழத் தொடங்கும் சாதாரண இளைஞரின் கனவு, லட்சியம். அது எவ்வாறு அரசியல் மற்றும் அதிகார மையத்தினால் பந்தாடப்படுகிறது என்பதும், இந்த அதிகார மையத்தின் பந்தாட்டத்தில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதும்தான் ஜீவா படத்தின் கரு.
எல்லோரையும் போலவே தனது வீட்டிலிருந்து, தெருவிலிருந்து தொடங்குகிறது கிரிக்கெட் விளையாட்டின் உலகம். தாயை இழந்தவரான விஷ்ணு(ஜீவா)விற்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் சார்லியும் அவரது குடும்பத்தின் ஆதரவும் ஆறுதலாய் அமைகிறது. சார்லியை அவரது தந்தையைப் போலவே கருதுகிறார்.
ஒருநாள் கடைத்தெருவில் உள்ள மளிகைக் கடையில் உள்ள தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்புகிறார்கள். ஜீவா, சச்சின் ஆட்டத்தைப் பார்கிறார். அங்கே ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் சச்சின் ஆட்டமிழந்ததும் டி.வி.-ஐ நிறுத்திவிடுகிறார்கள். அதிலிருந்து ஜீவாவுக்கு சச்சின் மீதும் கிரிக்கெட்டின் மீதுமான மரியாதை கூடுகிறது. இந்திய அணிக்காகத் தானும் ஆடவேண்டும் என்ற வேட்கையும் அதிகமாகிறது.
தொடரும்..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜீவா – திரை விமர்சனம் !
அதன் பிறகு ஜீவா தூங்கும்போதும் விழிக்கும்போதும், பள்ளியில் இருக்கும் போதும் கிரிக்கெட் பற்றிய சிந்தனையைத் தவிர வேறு எதுவும் இல்லை.
அந்தச் சமயத்தில் அவரது பக்கத்து வீட்டில் குடியேறுகிறார் ஸ்ரீதிவ்யா(ஜெனி). முதல் சந்திப்பிலிருந்தே விஷ்ணுவை ‘அண்ணா’ என்று அழைக்கத் தொடங்கும் ஸ்ரீதிவ்யா, விஷ்ணு மீதான நேசம் காதலாக மாறும் வரையில் அப்படித்தான் அழைக்கிறார். இடையில் விஷ்ணுவிடம் ஒயின் குடித்து மாட்டிக்கொள்வது, அப்பா சட்டைப் பையிலிருந்து பணத்தைத் திருடி, புத்தகத்தில் ஒளித்து வைத்திருப்பது தெரிய வருவது எனப் பள்ளிக் காலச் சேட்டைகள்.
இடையே விஷ்ணுவிற்கும் ஸ்ரீதிவ்யாவிற்குமான பழக்கம், காதலாக மாறுகிறது. பிறகு அது வீட்டிற்குத் தெரிய வருகிறது. ஸ்ரீதிவ்யா வேறு ஒரு பள்ளிக்கு மாறிச் சென்றுவிடுகிறார். உடனே விஷ்ணு மது அருந்துவதும் பெண்கள் இப்படித்தான் விட்டுப் போய் விடுவார்கள் என்ற பொருளில் பாடலும் பாடுகிறார். தமிழ் சினிமாவில் பெண்கள் மேல் பழிபோடும் படலம் முடியவே முடியாது போலிருக்கிறது. (இதற்கு சுசீந்திரனும் விதிவிலக்கல்ல).
விஷ்ணுவின் திறமையைக் கண்டுகொள்ளும் பயிற்சியாளர் ரவி, தனது அணியில் சேர்த்துக்கொண்டு கடுமையாகப் பயிற்றுவிக்கிறார். ‘முடியாததை முடிக்கும் போதுதான் அது ரெக்கார்டாக மாறும்’ என்று கூறித் தெம்பூட்டுகிறார். இடையில் விஷ்ணுவின் நண்பனாக வந்து சேர்கிறார் லட்சுமணன் (ரஞ்சித்). இருவரும் தங்களது அசாத்திய திறமையினால் அவர்களது அணி வெற்றி மேல் வெற்றியைக் குவிக்கிறது. மாநில அளவிலான போட்டியில், அவர்களது ஆட்டத்தைக் கண்டு கொள்கிறார்கள் அணித் தேர்வாளர்கள். அதன் பிறகுதான் கிரிக்கெட்டின் உண்மையான ஆ(சூதா)ட்டம் ஆரம்பமாகிறது.
...........................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜீவா – திரை விமர்சனம் !
அந்தப் போட்டியின் இறுதியில், தொடர் நாயகன் விருதுபெறும் விஷ்ணுவின் முதுகை, அணியின் தேர்வாளர் தட்டிக் கொடுப்பது போல் தடவிப் பார்த்து, சாதி அடையாளத்தைக் கண்டுகொள்வது, தவிர்க்கவே முடியாத பட்சத்தால் மட்டும் இவர்களைத் தமிழகத்திற்கான ரஞ்சி அணியில் தேர்வு செய்வது, அப்போதும்கூட அவர்களைக் களத்தில் இறக்காமல், வெளியில் இருந்து குளிர்பானங்கள் கொடுக்க மட்டுமே பயன்படுத்துவது, கடைசியில் இருவரையும் அணியிலிருந்து விலக்குவது வரையில் அதிகார மற்றும் ஆதிக்கக் குழுவினரின் மோசடியான ஆட்டத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார் இயக்குநர் சுசீந்திரன்.
விஷ்ணு, நல்ல கிரிக்கெட் வீரராகப் பின்னி எடுத்திருக்கிறார். உழைப்பும் ஈடுபாடும் நன்றாகத் தெரிகிறது. இயல்பிலேயே கிரிக்கெட் வீரராக அவர் இருப்பதும் ஒரு காரணமாக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார்.
ரஞ்சித் நல்ல வீரராகவும், நண்பனாகவும் வருகிறார். ‘நாம ரெண்டு பேரும் கண்டிப்பா இந்திய அணிக்காக விளையாடுவோம்’ என்று கூறும் போதும் சரி, இருவரையும் அணியில் இருந்து நீக்கிய பின்னர் ரஞ்சித், தமிழக கிரிக்கெட் வாரியத் தலைவரிடம், “இதுவரைக்கும் தமிழ்நாட்டிலிருந்து இந்திய அணிக்காக 14 பேர் தேர்வாகி இருக்காங்க, அதுல 12 பேர் உங்க ஆளுங்கதான். ஏன் சார்? எங்க ஆளுங்ககிட்டேயும் திறமையான ஆளுங்க இருக்காங்க சார்” என்று கோபப்படுகிறார்.
அதற்கு அதிகாரி “எங்க ஆளுங்களும் திறமையான ஆளுங்கதான்” என்று சொல்லும் போது, “அப்புறம் ஏன் சார் தமிழ்நாடு ரஞ்சி போட்டி ஃபைனலுக்கு போய் 10 வருஷம் ஆவுது” என்று கேள்வியெழுப்பும் போதும் சரி நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவரின் தற்கொலை, திறமையான ஆனால் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டிருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் தற்கொலை.
இதற்குப் பதிலாக சுசீந்திரனின், “எல்லா நாட்டுலேயும் பிளேயர்ஸ் விளையாடித்தான் தோத்து போறாங்க. ஆனா நம்ம நாட்டுல மட்டும்தான் வாய்ப்பு கிடைக்காமலே தோத்துப் போயிடுறோம்” என்ற வசனம் நிஜத்திலும் நிஜம்.
ஸ்ரீதிவ்யா தனது வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். கண்களில் குறும்பும் காதலும் மிளிர்கின்றன.
சூரி சீனியர் ஆட்டக்காரராக வந்து செல்லும் காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார். அதிலும் அவர் சொல்லும் வசனங்கள், சிரிப்பு வரவைப்பதைத் தடுக்க முடியவில்லை.
சாதாரண குடும்பத்துத் தந்தையாக நடித்துள்ள மாரிமுத்து, தன் மகனது ஆட்டத்தைக் காண வந்து அவன் வீரர்களுக்குக் குளிர்பானம் கொடுத்துவிட்டு வரும்போது ‘என்ன சார், அவன் இன்னைக்கு விளையாடவில்லையா என்று கேட்டு ஏங்கும் காட்சியிலும், ‘கிரிக்கெட்டு எல்லாம் பணக்காரங்க விளையாட்டு சார், நமக்கெல்லாம் அது சரியா வராது’, என்று எரிந்து விழும் காட்சியிலும் பிரமாதம்.
ஜீவாவின் இன்னொரு தந்தையாக, பக்கத்து வீட்டுக்காரராக வரும் சார்லி, நிறைய காட்சிகளில் நம்மை நெகிழ வைக்கிறார்.
இமானின் இசையில் ’ஒருத்தி மேலே மீண்டும்’ பாடலும் படமாக்கப்பட்ட விதமும் ரசிக்கலாம்.
இதுவரை யாரும் தொடாத, விளையாட்டில் நடக்கும் இன்னொரு கோர விளையாட்டைத் தொட்டதற்காக சுசீந்திரன் நன்றிக்கு உரித்தானவர். ஆனால் நாயகன் விஷ்ணு எல்லா ஆட்டங்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காத மட்டை ஆட்டக்காரராக வருவது கொஞ்சம் அதிகப்படியாகவும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது.
அணியை ஒற்றை ஆளாகக் காப்பாற்றுவது போல இருக்கிறது. இதனால் மற்ற ஆட்டக்காரர்கள் யாரையும் கண்டுகொள்ள முடியவில்லை. ’கடுமையாக உழைக்கும் ஒவ்வொரு வீரனுக்கும் மேஜிக் கண்டிப்பாக நடக்கும்’ என்று சொல்கிறார் சுசீந்திரன். அப்புறம் ஏன் சார், ரஞ்சித்திற்கு அந்த மேஜிக் வரவில்லை. உழைப்பிற்கும் மேஜிக்கிற்கும் சம்பந்தமே இல்லையே.
இதுபோன்ற ஒருசிலவற்றைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் ஜீவா, அருமையான ஆட்டம்.
நன்றி : வெப்துனியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜீவா – திரை விமர்சனம் !
நல்லா இருக்கு படம் கடைசி ஒரு சீன் ஆர்யா முகம் காட்டுகிறார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜீவா – திரை விமர்சனம் !
இது வரை தமிழில் கிரிக்கெட்டை மைய படுத்தி
வந்த எந்த ஒரு திரைப்படத்திலும் இது போன்ற
இட ஒதுக்கீட்டை மையபடுத்திபடம் வந்ததாக
நியாபகம் இல்லை.
நல்ல, துணிவான முயற்சிக்கு வாழ்த்துக்கள் சுசிந்தரன்.
-
Re: ஜீவா – திரை விமர்சனம் !
ஆமாம் ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜீவா – திரை விமர்சனம் !
தமிழ் சினிமாவில் பெண்கள் மேல் பழிபோடும் படலம் முடியவே முடியாது போலிருக்கிறது.
இளைஞர்களைக் கவர வேண்டும் என்ற நோக்கில் தான் இவ்வாறான காட்சிகள் திணிக்கப்படுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு?
» 83 -திரை விமர்சனம்
» The Nun - திரை விமர்சனம்
» யா யா - திரை விமர்சனம்!
» வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு?
» 83 -திரை விமர்சனம்
» The Nun - திரை விமர்சனம்
» யா யா - திரை விமர்சனம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|