புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_m10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_m10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_m10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_m10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10 
2 Posts - 4%
heezulia
சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_m10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_m10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_m10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_m10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_m10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 9:55 pm


""பிளேன்ல குண்டு இருக்குன்னு செக் பண்ணிட்டிருந்தாங்களே, என்னாச்சு...?''

""சும்மா யாரோ குண்டைத் தூக்கிப் போட்டிருக்காங்க...!''



""எதுக்கு என்னை எக்ஸ்பிரஸ் ரயில்ல ஏறி வந்து சேர்னு சொல்றே?''

""அதான் எங்க ஊர்ல நிக்காது!''



""பக்கத்து வீட்டுக்காரருக்குத் தூக்கத்திலே நடக்கிற வியாதி''

""இருக்கட்டுமே. உனக்கு என்ன கவலை?''

""கூட நடந்துவான்னு என்னையும் கூப்பிடறாரே!''



""எதுக்குங்க குப்பைத் தொட்டியைக் கொண்டு வந்து என் முன்னாடி வைக்கிறீங்க?''

""நீங்கதான உங்க மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டப் போறேன்னு சொன்னீங்க. அதான்!''



""என்ன! அந்நிய செலவாணியிலதான் வண்டி ஓடுதுன்னு சொல்றே?''

""அக்கம் பக்கம் வாங்குற கடனில்தான் காலத்த ஓட்டுறேன் ன்னு சொன்னேன்!''



""வாய்க்குள்ளே ஒரே குரூப் டான்ஸ்!''

""குரூப் டான்ஸா?''

""நாலஞ்சு பல்லா சேர்ந்து ஆடுது!''



""நேத்து உண்ணாவிரதம் இருந்த தலைவருக்கு நம்ம தலைவரும் எதிர் சவால் விட்டிருக்கார்''

""என்னன்னு?''

""உண்ணாவிரதம் மட்டும்தான் உன்னால இருக்க முடியும். நான் நினைச்சா நாள் முழுக்க உண்ணும் விரதமே இருக்க முடியும்னுதான்''



""உள்ளே நுழைந்ததும் முன்னாடியே பொண்டாட்டி போட்டோவை பெரிய சைஸ்ல மாட்டியிருக்கியே எதுக்கு?''

""ஏதாவது காத்துக் கறுப்பு வந்தா அப்படியே போகதான்''.



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 9:57 pm

""பெண்ணுக்கு என்னென்ன போடுவீங்கன்னு கேட்டது தப்பா போச்சா? ஏன்?''

""காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசத்தோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்திட்டாங்க''



""என் மாமியார் மாடிப் படியிலிருந்து இறங்கும்போது விழுந்ததுலே ஐயாயிரம் ரூபா செலவாயிடுச்சு''

""அவ்வளவு தூரத்துக்கு அடிபட்டுடுச்சாடி?''

""ஆமாடி 4 படிகள் உடைஞ்சு போச்சு''.



""எதுக்குடா கால்குலேட்டருடன் அந்தப் பொண்ணு பின்னாடி சுத்துற?''

""கணக்குப் பண்ணிட்டு இருக்கேன்''




""பாராட்டு விழாவில் என்ன கசமுசா?''

""சகல கலா வல்லின்னு சொல்ல நினைச்சவர் வாய் தவறி, சகல கலா பல்லின்னு சொல்லிட்டார்''



""உங்க ஆபிஸ்ல நாலைந்து அடியாட்கள் உலாவுறாங்களே, ஏன்? ''

""வேலை செய்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான். தூங்குறவங்களை தட்டி கொட்டி எழுப்புவாங்க''



""பைசா காசு தராம வெளியே அனுப்புறியே... வழியில வழிப்பறிக்காரன் மிரட்டினா என்ன செய்வேன்?''

""வீட்டுக்கு வந்து வாங்கிக்கன்னு விலாசத்தைக் கொடுத்துட்டு வாங்க''



கணவர்: ஏன்டி... கடு... கடுன்னு இருக்கே?

மனைவி: பின்ன என்ன பக்கத்து வீட்டுக்குத் திருட வந்தவன், நம்ம வீட்டுக்கு வரலையே... நம்மை ஒண்ணுமில்லாதவங்கன்னு நினைச்சுட்டானே... ச்சீ...



""சர்க்கஸ் தொழிலாளியை சாட்சியாக் கூட்டிப் போனது தப்பாப் போச்சுன்னு சொல்றீங்களே... ஏன்?''

""சாட்சி கூண்டிலே ஏறினதுமே பல்டி அடிச்சிட்டார்''

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 10:00 pm

"டாக்டர் என் கணவர் தூக்கத்தில் நடக்கிறார்''

""தூக்கத்திலாவது அவர் இஷ்டப்படி நடக்கட்டும். பாவம்.... விட்டுடுங்க மேடம்''




கணவன்: புவருஷத்துல என்னோட கை ஓங்து கும்ன்னு ராசி பலன்ல போட்டிருக்கு.

மனைவி: எப்படி ஒங்கும்ன்னு நானும் பார்த்துடறேன்.




""மன்னா இன்று நமக்கு டபுள் தமாக்கா''

""என்ன மந்திரி?''

""ஓரே நேரத்தில் இரண்டு புறாக்கள் ஓலை கொண்டு வருகின்றன''



""மன்னர் ஏன் கோபமா இருக்கார்?''

""பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் போன அவரைப் பார்த்து இந்த டிரஸ்ஸில் சூப்பரா இருக்கீங்கன்னு யாரோ ஒருத்தன் சொல்லிட்டானாம்''



""என்னய்யா இது... பாம்புக் கூடையைத் திறந்து வச்சிட்டு வர்றே?''

""பயப்படாம ஆட்டோவை ஓட்டு... நீ தானே ஆட்டோ பின்னால "சீறும் பாம்பை நம்பு'ன்னு எழுதியிருக்கே''




""உங்க வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும் எங்க ஹோட்டல் சாப்பாடு''

""ஏன் சர்வர் சாப்பிடுறதுக்கு முன்னாடி வயித்துல புளியைக் கரைக்கிறீங்க?''



""எதுக்காக அபாயச் சங்கிலியை உத்துப் பார்த்து உட்கார்ந்து இருக்கே?''

""நீங்கதானே சொன்னீங்க... ரயில்ல ஏறினதும் சங்கிலியைப் பத்திரமா பார்த்துக்கோன்னு''



""வெளியே வாக்கிங் போயிட்டு வர்றது ரொம்ப நல்லது''

""அப்பத்தான் உடம்பு இளைக்குமா?''

""வீட்ல இருக்கிறவங்க அப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க''

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 10:04 pm

சிறுவன்1: என்னோட சைக்கிளை எவனோ திருடிகிட்டு ஓடிட்டான்.

சிறுவன் 2 : என்னடா உளர்றே... சைக்கிளை திருடியவன் ஓடியா போவான்? ஓட்டிக்கிட்டுப் போயிட்டான்னு சொல்லு.


""இந்த பேஷண்ட் "ஆ' காட்டமாட்டேங்கிறாரே சிஸ்டர்?''

""ஒரு போண்டாவைக் கையில் எடுங்க... தன்னால "ஆ' காட்டுவார்.''



இவர்: மாட்டுக்கு அநியாய விலை சொல்ற. எலும்பையெல்லாம் எண்ணிடலாம் போலயிருக்கே?

அவர்: வேணும்ன்னா எண்ணிப் பாருங்க. ஒரு எலும்பு கூடக் குறையாது!



""திட்டி முடிச்சாச்சுன்னா ஒரு வார்த்தை சொல்லு''

""எதுக்குச் சொல்லணும்?''

""எழுந்து போகிறதுக்குத்தான்''




""டாக்டர் எப்ப வந்து பார்த்தா உங்களைப்

ஃப்ரீயா பார்க்கலாம்?''

""எப்ப வந்தாலும் ஃப்ரீயா பார்க்க முடியாது. ஃபீஸ் வாங்குவேன்''




""மருத்துவமனையில் நம்ம தலைவர் எதுக்குத் தகராறு செய்றார்?''

""யூரின் டெஸ்ட், பிளட் டெஸ்ட், சுகர் டெஸ்ட், எல்லாம் நம்ம தலைவருக்கு எடுத்தாங்களாம். எடுத்த எல்லா டெஸ்ட்லயும் தலைவர் பாஸ் ஆயிட்டாருன்னு சர்டிபிகேட் கேட்டுத் தகராறு பண்ணுகிறார்''




""சீரியல் பைத்தியமாவே ஆயிட்டா என் மனைவி...''

""எப்படி? ''

""சமையல் முடிச்சிட்டியா?ன்னு கேட்டா, அடுத்த எபிúஸôடுல முடிச்சிடுவேன்ங்கிறாளே''



""நல்லவேளை கடவுள் மாதிரி வந்து என்னைக் காப்பாத்தீட்டீங்க டாக்டர்''

""மாதிரி இல்லே... கடவுளேதான். எங்கிட்டே வந்துட்டீங்க. உங்க கணக்கு வழக்கை எமலோகத்துல கேட்டிருக்கேன். இன்னும் வரலே ''



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 10:07 pm

""வரவு எட்டணா''

""செலவு பத்தணாவா?''

""செலவுக்குப் பத்தலேண்ணா''


""ஏன் சார்.... தூங்குற போது கூட கண்ணாடியைப் போட்டுக்குறீங்க?''

""கனவுல வர்றதெல்லாம் சரியா தெரியலை''


""டாக்டருக்கு ஏன் இப்படி கை நடுங்குது?''

""அவரோட மனைவிக்கு ஊசி போடுறாரே''


""எண்ணெய், நெய்யை எல்லாம் குறைச்ச பிறகு பலன் ஏதாச்சும் தெரியுதா?''

""ஓ... நல்லாத் தெரியுது டாக்டர். விருந்தாளி யாரும் சாப்பிட வரமாட்டேங்குறாங்க''


""அடியே போனஸ் பணத்தில் உனக்கு நெக்லஸ் வாங்கி வந்திருக்கேன்''

""எனக்குத்தான் நகைங்க இருக்கே... அதுக்குப் பதிலா டி.வி. வாங்கியிருக்கலாம்''

""வாங்கியிருக்கலாம்... ஆனா கவரிங் டி.வி. கிடைக்காதே!''


டாக்டர்: இப்ப நான் கொடுத்த மருந்திலே வியாதி குணமாயிடுச்சுன்னா என்கிட்டே வந்து சொல்லுங்க...

நோயாளி: ஏன் டாக்டர்?

டாக்டர்: எனக்கும் அதே வியாதி இருக்குது.


""தேள் கொட்டினதுக்கு இப்போதானே மருந்து வாங்கிக்கிட்டுப் போனீங்க. மறுபடியும் எதுக்குக் கேக்குறீங்க?''

""மருந்து கொட்டிடுச்சு. அதனாலேதான்''


சுரேஷ்: எங்க வீட்டுல எல்லார்ட்டயும் இருக்கு. ஆனா ஒரு டீ, காபிக்குக் கூட வழி இல்லே!

ரமேஷ்: என்ன?

சுரேஷ்: சர்க்கரை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 10:08 pm

""சர்வர், பேப்பர் ரோஸ்ட்டை சாப்பிட்டுட்டு அவர் பணம் குடுக்காமப் போறாரே''
""அவர் ஆண்டுச் சந்தா கட்டியிருக்காரு சார்''


* டிரைவர்: பெட்ரோல் டிரை ஆயிட்டது சார்... இனி ஒரு அடி கூட கார் முன்னே போகாது சார்
கார் சொந்தக்காரர்: அப்ப காரை ரிவர்ஸ்ல எடு... வீட்டுக்குப் போவோம்.

* ""ஜவ்வு மிட்டாய் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தீங்களே.... இப்ப என்ன செய்யறீங்க?''
""மெகா சீரியல் டைரக்டரா இருக்கேன்''


* ""டாக்டர் எனக்கு என் மனைவியைப் பார்க்கும்போதெல்லாம் கை, கால் எல்லாம் உதறுது? ''
""அதனால் என்ன? உதறாவிட்டாத்தானே தவறு?''


* ""நடு ராத்திரியிலே உங்க குழந்தை அழுதா முதல்ல யார் எழுந்திருப்பீங்க? நீயா? உன் கணவரா? ''
""ரெண்டு பேருமே இல்ல. எங்க பக்கத்து வீட்டுக்காரங்கதான்''.

* "எங்க பொண்ணு கிளாஸ் போட்டுக்கிட்டு இருக்கும்... பரவாயில்லையா?''
""பரவாயில்லை... ஏன்னா என் பையனும் தினம் ரெண்டு கிளாஸ் போட்டுக்குவான்''

* மனைவி: நம்ம கல்யாண நாள்ங்க இன்னிக்கி... கோழி அடிச்சு, குழம்பு வைக்கட்டுமா?
கணவன்: பலி ஓரிடம், பாவம் ஓரிடமா? நான் செஞ்ச தப்புக்கு, எதுக்காக கோழிக்கு தூக்குத் தண்டனை தர்றே?


* ""மாப்பிள்ளை கோடியில் புரள்றவருன்னு சொல்றீங்க. அப்புறம் ஏன் அவருக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறாங்க?''
""தண்ணி அடிச்சுட்டு எப்பப் பாரு தெருக்கோடியில் புரள்றவனுக்கு யார் சார் பொண்ணு கொடுப்பாங்க?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 10:10 pm

""நான் ஒரு படம் எடுக்கப்போறேன். நல்ல டைட்டிலா ஒண்ணு சொல்லுங்க!''

""வேறவேலை இல்லையா உங்களுக்கு!''

""அட இது கூட நல்ல டைட்டிலா இருக்கே!''


அவர்: நம்ம கட்சி தேர்தலில் தோல்வியடைஞ்சதுக்கு தலைவரோட பேச்சுதான் காரணமா... எப்படி?

இவர்: வாக்களிக்கும் முன்னர் நன்றாக சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்ன்னு சொன்னதுதான்!


""இவர்தான் மிஸ்டர். கேசவன்...''

""ஏற்கெனவே ஒருத்தரை, "கேசவன்' அறிமுகப்படுத்தினீங்களே...?''

"" அது ஆதிகேசவன் சார்!''


டாக்டர்: ஏம்மா! நேத்து சாயங்காலம் உங்க கணவர் "வாக்கிங்' போயிட்டு வந்தாருனு சொன்னீங்க... ஆனா, அவரைக் கேட்டா, இல்லைன்னு சொல்றாரே?!

பெண்மணி: நான்தான் சொன்னேனே, டாக்டர்! அவருக்கு "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுதுனு?


""என்னப்பா சர்வர் உங்க ஹோட்டல்ல விலைப்பட்டியலே வைக்கலை!

""சாப்பிடுறதுக்கு முன்னாடியே மயக்கம் வரக் கூடாதுன்னுதான்''.


நண்பர்: உங்க பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்த பையனை என்ன பண்ணீங்க?

ஆசிரியர்: லவ்லெட்டர்ல ஏகப்பட்ட தப்புக இருந்தது. இனிமே இப்படி தப்புத் தப்பா எழுதினா கையை முறிச்சிடுவேன்னு மிரட்டி அனுப்பிட்டேன்!


இவள்: ஹலோ... சத்தமா பேசுங்க; கிணத்துக்குள்ளே இருந்து பேசற மாதிரி கேட்குது...!

அவள்: அங்கிருந்துதான்டி பேசறேன்; வந்து காப்பாத்து...


மனைவி: என்னங்க நல்ல வெயிலா இருக்கு ஆபீஸ்க்கு லீவு போடுங்க!

கணவன்: சொன்னா கேளு கமலா. எனக்கு வடகம் எல்லாம் பிழியத் தெரியாது!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 10:11 pm

பேஷண்ட்: ""இருட்டில் எதைக் கண்டாலும் பயமாக இருக்கிறது டாக்டர்''

டாக்டர்: ""என்ன இது முட்டாள் தனமா பயப்படறீங்க? இருட்டில்தான் எதுவுமே தெரியாதே அப்புறம் எதைக் கண்டு பயப்படறீங்க''!


""சாமி நான்தான் ஆன்மீகத்துக்கு "ராஜா'னு டிவியில பேட்டி கொடுத்தீங்களா ?''

""ஆமாம்''

""போருக்குத் தயாரா'னு வடநாட்டு சாமியார் ஒருத்தர் ஓலை அனுப்பியிருக்கிறார் சாமி''!



""கபாலியின் பையன் சிறந்த புட்பால் வீரர்ஆக வருவான் என்று எப்படிச் சொல்ற?''

""பள்ளிக் கூடத்தில் அவன் வகுப்பு தோழர்களையெல்லாம் கடிக்கின்றானாம்''!


கஸ்டமர்: ""என்னப்பா வடையில ஓடு இருக்கு?''

சர்வர்: ""இது ஆமைவடை சார். ஓடு இருக்கத்தான் செய்யும்''


""சர்வர், காபியிலே ஈ ஆடிகிட்டு இருக்கு''

""பின்னே, நீ கொடுக்கிற ஏழுரூபா காசுக்கு சமந்தா, தமன்னாவா டான்ஸ் ஆடுவாங்க?''


""எனக்கு சர்க்கரை இல்லேன்னு சொல்லிட்டாங்க''

""நல்லதுதானே''

""வயிற்றெரிச்சலை கிளப்பாதீங்க, சர்க்கரை இல்லேன்னு சொன்னது ரேசன் கடையிலே''!


மனைவி: ""ஏங்க நம்ம வீட்டில் திருடன் நுழைந்துவிட்டான், எழுந்திருங்க!''

போலீஸ்காரக் கணவர்: ""நான் இப்போது டூட்டியிலே இல்லேடி''

மனைவி: ?!?!?!


""டாக்டர் எனக்கு மூலம்''

""பேஷ்... பேஷ்... நானும் அதே ராசிதான் ஆனால் பூராடம் நட்சத்திரம்''



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 10:12 pm

"எதுக்கு அந்தம்மா குண்டு மல்லின்னா வேண்டாங்கிறாங்க?''

""அவங்க வீட்டுக்காரு "பாம் ஸ்குவாடா' இருக்காறாம். தலைவரே!''


""நீங்க தக்க நேரத்திலே பணம் கொடுக்கலேன்னா என்னாலே ஒண்ணும் பண்ணி இருக்க முடியாது!''

""நான் எப்ப உங்களுக்குப் பணம் கொடுத்தேன்?''

""சரி! ஞாபகமில்லேன்னா இன்னும் ஒரு 5000 கொடுங்க. இதாவது ஞாபகம் வருதான்னு பார்ப்போம்!''


""வார பலன் கேட்டவர் இன்னும் ஏன் நிக்கறார்?''

""கொசுறா ஒரு தினப்பலனும் வேணுமாம்!''


பஸ் பயணி: ஸார்! பஸ்ûஸ நிறுத்துங்க ஒருத்தன் பையைப் புடுங்கிட்டு தவ்வி ஓடுறான்.

கண்டக்டர்: இதுக்கெல்லாம் பஸ்ûஸ நிறுத்த முடியாதுய்யா.

பஸ் பயணி: சார் அது உங்க பை ஸார்.



""உரிச்ச வாழைப்பழம் கேட்கிற சோம்பேறிக்கு இப்ப என்ன வேணுமாம்?''

""உடைச்ச தேங்காய்!''



""நீங்க வேணா பாருங்க. அடுத்த முறை நாம கண்டிப்பா ஜெயிக்கிறோம்!

""அப்படியா, எப்படி?''

""அனுதாப ஓட்டு விழுமே''


""இங்கே 10 அடுக்கு மாடி கட்ட பூமி பூஜை போட்டாங்களே?''

""எதுக்கு வம்புன்னு "மேலே' இருந்து, கீழே கட்டிக்கிட்டு இருக்காங்க!''


""காணாமல் போகாமலேயே உங்க மனைவியை கண்டுபிடித்துத் தரும்படி புகார் கொடுக்கறீங்களே இது தப்பில்லையா?''

""போனமுறை என் மனைவி காணாமல் போனபோது, தாமதமாய் வந்துட்டேன், முன்னாடியே வந்து சொல்லியிருக்கணும்னு நீங்கதானே இன்ஸ்பெக்டர் சொன்னீங்க... அதான்!''

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 28, 2014 10:20 pm

ரொம்ப சிரிச்சுட்டேன் நேசன் புன்னகை ........................ சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  433338962 சிப்பு வருது
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக