Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
+11
சிவா
பாலாஜி
தமிழ்நேசன்1981
யினியவன்
T.N.Balasubramanian
rksivam
mmani15646
Aathira
பிஜிராமன்
ராஜா
krishnaamma
15 posters
Page 12 of 15
Page 12 of 15 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
First topic message reminder :
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
Last edited by krishnaamma on Sat Sep 27, 2014 8:16 pm; edited 7 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
அதி பயங்கர அரசியல்வாதி :
நிச்சயம் சாமியை யாருமே குறைத்து எடை போட முடியாது. காரணம், இவர் போட்ட வழக்குளில் பெரும்பாலானவற்றில் இவருக்கே வெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான் யார் மீதாவது இவர் வழக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் பீதியடைந்து போகிறார்கள். ஜெயலலிதாவை கடுமையாக பாதித்தவர் யாருக்கு எப்படியோ ஆனால் ஜெயலிதாவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியவர் சாமிதான்.
தமிழக அரசியல்வாதிகளின் கடும் எதிரி கிட்டத்தட்ட தமிழக அரசியல்வாதிகள் அத்தனை பேருக்குமே இவர் சிம்ம சொப்பனாக திகழ்ந்து வருகிறார். திமுக தொடங்கி அதிமுக வரை யாரையும் இவர் விட்டு வைக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்குக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 1996ம் ஆண்டு திமுக அரசுதான் போட்டது என்றாலும் கூட அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் இந்த சாமிதான்.
ஆளுநரிடம் கொடுத்த புள்ளிவிவரங்கள் : ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவரது சொத்து குவிப்பு தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் கோப்புகளாக்கி அப்போதைய ஆளுநரிடம் வழங்கி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரியிருந்தார் சாமி. வலுவான ஆதாரங்கள் உண்மையில் சாமி சேர்த்துக் கொடுத்த அத்தனை ஆதாரங்களுமே வலுவானவை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவுக்குக் கை கொடுத்த சாமி : இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் பின்னர் வந்த திமுக அரசு வழக்கைப் போட்டது. அந்த வகையில் சாமிக்குத்தான் திமுக நன்றி சொல்ல வேண்டும். அவர் சேகரித்து வைத்திருந்த அத்தனை ஆதாரங்களுமே ஜெயலலிதா வழக்கை மேலும் சிக்கலாக்கி விட்டது என்பதே உண்மை. மற்ற வழக்குகளில் சாமிக்குத் தொடர்பில்லை உண்மையில் ஜெயலலிதா மீதான பிற வழக்குகளை திமுக அரசுதான் போட்டது. அதை சாமி போடவில்லை. எனவே அந்த வழக்குகளில் ஜெயலலிதா எளிதாக வந்து விட்டார். ஆனால் சாமி போட்ட முடிச்சை அவிழ்க்கத்தான் அவரால் முடியாமல் போய் விட்டது.
தொடரும்.......................
நிச்சயம் சாமியை யாருமே குறைத்து எடை போட முடியாது. காரணம், இவர் போட்ட வழக்குளில் பெரும்பாலானவற்றில் இவருக்கே வெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான் யார் மீதாவது இவர் வழக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் பீதியடைந்து போகிறார்கள். ஜெயலலிதாவை கடுமையாக பாதித்தவர் யாருக்கு எப்படியோ ஆனால் ஜெயலிதாவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியவர் சாமிதான்.
தமிழக அரசியல்வாதிகளின் கடும் எதிரி கிட்டத்தட்ட தமிழக அரசியல்வாதிகள் அத்தனை பேருக்குமே இவர் சிம்ம சொப்பனாக திகழ்ந்து வருகிறார். திமுக தொடங்கி அதிமுக வரை யாரையும் இவர் விட்டு வைக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்குக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 1996ம் ஆண்டு திமுக அரசுதான் போட்டது என்றாலும் கூட அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் இந்த சாமிதான்.
ஆளுநரிடம் கொடுத்த புள்ளிவிவரங்கள் : ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவரது சொத்து குவிப்பு தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் கோப்புகளாக்கி அப்போதைய ஆளுநரிடம் வழங்கி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரியிருந்தார் சாமி. வலுவான ஆதாரங்கள் உண்மையில் சாமி சேர்த்துக் கொடுத்த அத்தனை ஆதாரங்களுமே வலுவானவை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவுக்குக் கை கொடுத்த சாமி : இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் பின்னர் வந்த திமுக அரசு வழக்கைப் போட்டது. அந்த வகையில் சாமிக்குத்தான் திமுக நன்றி சொல்ல வேண்டும். அவர் சேகரித்து வைத்திருந்த அத்தனை ஆதாரங்களுமே ஜெயலலிதா வழக்கை மேலும் சிக்கலாக்கி விட்டது என்பதே உண்மை. மற்ற வழக்குகளில் சாமிக்குத் தொடர்பில்லை உண்மையில் ஜெயலலிதா மீதான பிற வழக்குகளை திமுக அரசுதான் போட்டது. அதை சாமி போடவில்லை. எனவே அந்த வழக்குகளில் ஜெயலலிதா எளிதாக வந்து விட்டார். ஆனால் சாமி போட்ட முடிச்சை அவிழ்க்கத்தான் அவரால் முடியாமல் போய் விட்டது.
தொடரும்.......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
ஒரு காலத்தில் பாசம் காட்டியவர்தான் ஒரு காலத்தில் ஜெயலலிதா மீது நட்பாகத்தான் இருந்தார் சாமி. ஜெயலலிதாவும் கூட திமுகவுக்கு எதிராக சாமியைத்தான் பயன்படுத்தி வந்தார்.
சென்னா ரெட்டி மூலம் ஜெ.வை வீழ்த்திய சாமி :ஆனால் பின்னர் திடீரென எதிரியாகி விட்டனர் இருவரும். டான்சி ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி மூலம் அனுமதி வாங்கிய சாமியைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். அதுதான் சாமிக்கும் பெரிய ஹைலைட்டான அரசியல் வெற்றியாகும்.
அதே வேகத்தில் பல்டி :ஆனால் அதன் பின்னர் அதே வேகத்தில் பல்டி அடித்து மீண்டும் ஜெயலலிதாவுடன் நட்பானார் சாமி. அதுவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் தூதராகவும் மாறினார் சாமி. வாஜ்பாய் அரசில் ஜெயலலிதா இணைய சாமிதான் முக்கியக் காரணமும் கூட.
கார் கொடுத்த ஜெயலலிதா :தனக்கு எதிராக செயல்பட்டவர் என்பதையும் பாராமல், சாமியின் பிறந்த நாளன்று அவரது கட்சி அலுவலகத்துக்கே நேரில் போய் வாழ்த்தியவர் ஜெயலலிதா. சாமிக்கு போர்ட் ஐகான் காரைப் பரிசாகவும் கொடுத்தார்.
மதுரையின் எம்.பியாக்கி அழகு பார்த்தவர்: ஜெ. அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் சாமியை நிறுத்தி வெற்றி பெறவும் வைத்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் போயஸ் தோட்டத்தின் ராஜகுரு என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தவர் சாமி. உண்மையில் சாமியை அரசியல் ரீதியாக வளர்த்து விட்டவர் ஜெயலலிதா என்பதில் சந்தேகமே இல்லை.
வாஜ்பாய் கவிழ்ந்த கையோடு :ஆனால் வாஜ்பாய் ஆட்சியை மிகக் குறுகிய காலத்தில் கவிழ்த்த ஜெயலலிதா மீது கோபம் கொண்டார் சாமி. மீண்டும் இருவரும் எலியும் புலியுமாக மாறினர்.
கோர்ட்டில் வைத்து அதிமுக மகளிர் கொடுத்த வரவேற்பு :ஜெயலலிதாவுக்கு எதிராக அதன் பின்னர் தீவிரமாக செயல்பட்ட சாமியை, அதிமுகவினர் போகும் இடமெல்லாம் தூற்றி தாக்க முற்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த சாமியை, அதிமுக மகளிர் அணியினர் புடவையைத் தூக்கி கொடுத்த வரவேற்பு அப்போது அந்த இடத்தில் இருந்தவர்களால் இன்றைக்கும் மறக்க முடியாது.
தப்பிக்க முடியாது... :சாமி கருத்து இந்த வழக்கு குறித்து தீர்ப்புக்கு முன்பு ஏஎன்ஐக்கு சாமி அளித்த பேட்டியில், இந்த வழக்கிலிருந்து நிச்சயம் ஜெயலலிதா தப்ப முடியாது. காரணம், இதில் வலுவான ஆதாரங்கள் உள்ளன. முதல்வர் ஜெயலலிதா தவறு செய்திருப்பது உண்மை. இந்த வழக்கில் எல்லாமே தெளிவாக உள்ளன. எதையும் மூடி மறைக்க முடியாது. அவரால் இனியும் யாரையும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார் சாமி.
மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அரசியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த சாமி காரணமாகி விட்டார்.
நன்றி ஒன் இந்தியா
சென்னா ரெட்டி மூலம் ஜெ.வை வீழ்த்திய சாமி :ஆனால் பின்னர் திடீரென எதிரியாகி விட்டனர் இருவரும். டான்சி ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி மூலம் அனுமதி வாங்கிய சாமியைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். அதுதான் சாமிக்கும் பெரிய ஹைலைட்டான அரசியல் வெற்றியாகும்.
அதே வேகத்தில் பல்டி :ஆனால் அதன் பின்னர் அதே வேகத்தில் பல்டி அடித்து மீண்டும் ஜெயலலிதாவுடன் நட்பானார் சாமி. அதுவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் தூதராகவும் மாறினார் சாமி. வாஜ்பாய் அரசில் ஜெயலலிதா இணைய சாமிதான் முக்கியக் காரணமும் கூட.
கார் கொடுத்த ஜெயலலிதா :தனக்கு எதிராக செயல்பட்டவர் என்பதையும் பாராமல், சாமியின் பிறந்த நாளன்று அவரது கட்சி அலுவலகத்துக்கே நேரில் போய் வாழ்த்தியவர் ஜெயலலிதா. சாமிக்கு போர்ட் ஐகான் காரைப் பரிசாகவும் கொடுத்தார்.
மதுரையின் எம்.பியாக்கி அழகு பார்த்தவர்: ஜெ. அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் சாமியை நிறுத்தி வெற்றி பெறவும் வைத்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் போயஸ் தோட்டத்தின் ராஜகுரு என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தவர் சாமி. உண்மையில் சாமியை அரசியல் ரீதியாக வளர்த்து விட்டவர் ஜெயலலிதா என்பதில் சந்தேகமே இல்லை.
வாஜ்பாய் கவிழ்ந்த கையோடு :ஆனால் வாஜ்பாய் ஆட்சியை மிகக் குறுகிய காலத்தில் கவிழ்த்த ஜெயலலிதா மீது கோபம் கொண்டார் சாமி. மீண்டும் இருவரும் எலியும் புலியுமாக மாறினர்.
கோர்ட்டில் வைத்து அதிமுக மகளிர் கொடுத்த வரவேற்பு :ஜெயலலிதாவுக்கு எதிராக அதன் பின்னர் தீவிரமாக செயல்பட்ட சாமியை, அதிமுகவினர் போகும் இடமெல்லாம் தூற்றி தாக்க முற்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த சாமியை, அதிமுக மகளிர் அணியினர் புடவையைத் தூக்கி கொடுத்த வரவேற்பு அப்போது அந்த இடத்தில் இருந்தவர்களால் இன்றைக்கும் மறக்க முடியாது.
தப்பிக்க முடியாது... :சாமி கருத்து இந்த வழக்கு குறித்து தீர்ப்புக்கு முன்பு ஏஎன்ஐக்கு சாமி அளித்த பேட்டியில், இந்த வழக்கிலிருந்து நிச்சயம் ஜெயலலிதா தப்ப முடியாது. காரணம், இதில் வலுவான ஆதாரங்கள் உள்ளன. முதல்வர் ஜெயலலிதா தவறு செய்திருப்பது உண்மை. இந்த வழக்கில் எல்லாமே தெளிவாக உள்ளன. எதையும் மூடி மறைக்க முடியாது. அவரால் இனியும் யாரையும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார் சாமி.
மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அரசியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த சாமி காரணமாகி விட்டார்.
நன்றி ஒன் இந்தியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
தமிழ்நாட்டுக்குத்தான் பின்னடைவு.. ஜெயலலிதாவுக்கு அல்ல.... சொல்வது 'ராஜகுரு' சோ ராமசாமி !
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பால் தமிழ்நாட்டுக்குத்தான் பின்னடைவு என்கிறார் அவரது ஆலோசகராக இருக்கும் பத்திரிகையாளர் சோ. ராமசாமி. ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து 'சோ' ராமசாமி கூறியுள்ளதாவது:
"இந்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிரானது அல்ல. அவருக்கு நிச்சயம் அனுதாபத்தைத்தான் இந்த தீர்ப்பு வழங்கும். தற்போதைய நிலையில் ஜெயலலிதா இல்ல அரசியல் களம் என்பது தமிழ்நாட்டுக்குத்தானே பின்னடைவே தவிர ஜெயலலிதாவுக்கு அல்ல."
தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வெளியே வருவதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகள் ஜெயலலிதா முன்பு இருக்கின்றன. இவ்வாறு சோ ராமசாமி கூறியுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சர்ச்சைக்குரிய நிறுவனங்களின் இயக்குநராக சோ ராமசாமியும் பணியாற்றினார் என்ற ஆதாரங்களை வெளியிட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி இவரையும் வழக்கில் சேர்த்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பால் தமிழ்நாட்டுக்குத்தான் பின்னடைவு என்கிறார் அவரது ஆலோசகராக இருக்கும் பத்திரிகையாளர் சோ. ராமசாமி. ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து 'சோ' ராமசாமி கூறியுள்ளதாவது:
"இந்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிரானது அல்ல. அவருக்கு நிச்சயம் அனுதாபத்தைத்தான் இந்த தீர்ப்பு வழங்கும். தற்போதைய நிலையில் ஜெயலலிதா இல்ல அரசியல் களம் என்பது தமிழ்நாட்டுக்குத்தானே பின்னடைவே தவிர ஜெயலலிதாவுக்கு அல்ல."
தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வெளியே வருவதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகள் ஜெயலலிதா முன்பு இருக்கின்றன. இவ்வாறு சோ ராமசாமி கூறியுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சர்ச்சைக்குரிய நிறுவனங்களின் இயக்குநராக சோ ராமசாமியும் பணியாற்றினார் என்ற ஆதாரங்களை வெளியிட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி இவரையும் வழக்கில் சேர்த்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
ஜெயலலிதா இருக்கும் சிறையில் ஜனார்தனன் ரெட்டி, தெல்கி, 'சைகோ' ஜெய்சங்கர், மதானி!!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா இருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் யார், யார் இருக்கிறார்கள் என்று தெரியுமா? ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதே சிறையில் யார், யார் எல்லாம் இருக்கிறார்கள் என பார்ப்போம்,
தொடரும்...........
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா இருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் யார், யார் இருக்கிறார்கள் என்று தெரியுமா? ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதே சிறையில் யார், யார் எல்லாம் இருக்கிறார்கள் என பார்ப்போம்,
தொடரும்...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
ஜனார்தனன் ரெட்டி சுரங்க ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி பரப்பன அக்ரஹாரா சிறையில் தான் உள்ளார். இவர் சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளாராம். அனுமதி கிடைக்குமா என்பது தெரியவில்லை.
தொடரும்..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
அப்துல் கரீம் தெல்கி
அப்துல் கரீம் தெல்கி முத்திரை தாள் மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அப்துல் கரீம் தெல்கியும் பரப்பன அக்ரஹாராவாசி தான்.
தொடரும்................
அப்துல் கரீம் தெல்கி முத்திரை தாள் மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அப்துல் கரீம் தெல்கியும் பரப்பன அக்ரஹாராவாசி தான்.
தொடரும்................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
ஜெய்சங்கர்
ஜெய்சங்கர் பல்வேறு கொலை மற்றும் பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்பட்ட சேலத்தைச் சேர்ந்த சைக்கோ ஜெயசங்கரும் பரப்பன அக்ரஹாராவில் தான் உள்ளான்.
தொடரும்........
ஜெய்சங்கர் பல்வேறு கொலை மற்றும் பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்பட்ட சேலத்தைச் சேர்ந்த சைக்கோ ஜெயசங்கரும் பரப்பன அக்ரஹாராவில் தான் உள்ளான்.
தொடரும்........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
மதானி
மதானி 2008ம் ஆண்டு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியும் பரப்பன அக்ரஹாராவில் உள்ளார்.
மதானி 2008ம் ஆண்டு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியும் பரப்பன அக்ரஹாராவில் உள்ளார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யாரையும் ஜெ., சந்திக்கவில்லை ; சிறைத்துறை வட்டார தகவல்
இதுவரை சிறை இல் யாரையும் ஜெ., சந்திக்கவில்லை ; சிறைத்துறை வட்டார தகவல் !
பெங்களூரு: கடந்த சனிக்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெ., இதுவரை யாரையும் சிறை வளாகத்தில் சந்திக்வில்லை என சிறைத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து சிறை வளாக வட்டாரம் மேலும் தெரிவித்த தகவல் வருமாறு:
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் என பலரும் சிறையில் ஜெ., வை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் பொதுவாக சிறைக்கு கைதிகளை பார்க்க யார் வந்தாலும், வெளியில் இருந்து இன்னார் வந்திருக்கிறார். நீங்கள் சந்திக்க விருப்பமா? என்று கேட்கப்படும். கைதிகள் விரும்பினால் மட்டுமே கைதி அறையில் இருந்து அழைத்து வரப்படுவர். இதுபோல் சட்ட முறைகள் ஜெ.,விடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யாரையும் சந்திக்க விருப்பமில்லை என்று கூறி விட்டாராம். குறிப்பாக பன்னீர்செல்வம் ஒரு முதல்வராக இருந்து கொண்டு என்னை சந்திக்க கூடாது என்பதை அவரிடம் சொல்லி விடுங்கள் என்று கூறினாராம். இதனால் பலரும் பல மணி காத்திருந்ததுதான் மிச்சம்.
இட்லி, பொங்கல், சான்வெஜ்: சிறையில் ஜெ.,வுக்கு 15க்கு 20 என்ற அளவுள்ள அறை வழங்கப்பட்டுள்ளது. ஒரு டி.வி., உள்ளது. ஜெ., எப்போதும் இருக்கும் சவுகரியமான எஸ் டைப் சேர் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு சிறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. ஜெ., வுக்கு பெரிய அட்டை பெட்டிகளில் இட்லி, பொங்கல், சான்வெஜ், பிரட், என மதியம் காய்கறிகளுடன் சாப்பாடு, பழ வகைகள் அனுப்பி வைக்க அனுமதிக்கப்பட்டது. அளவுக்கு மீறி அதிக பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஜெ., வுக்கு போக எஞ்சியவை சிறையில் இருக்கும் ஏனைய பெண் கைதிகள் சாப்பிட்டு கொண்டனராம்.
சசிகலாவும், ஜெ.,வும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இளவரசி, சுதாகரன் தனித்தனி சிறையில் உள்ளனர். இளவரசி அவ்வப்போது ஜெ.,வை சந்தித்து பேசிக்கொள்வாரம்.
ஜெ.,வுக்கு உடல் உபாதைகள் அதிகம் இருப்பதால் இவருக்கென நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு டாக்டர்கள் 3 மணி நேரத்திற்கொரு முறை செக்கப் செய்கின்றனர்.
ஜெயிலில் 4 நாள் இரவு : கடந்த சனிக்கிழமை முதல் ஜெ., 4 நாள் இரவு ஜெயிலில் இருந்துள்ளார். இன்று ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்
பெங்களூரு: கடந்த சனிக்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெ., இதுவரை யாரையும் சிறை வளாகத்தில் சந்திக்வில்லை என சிறைத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து சிறை வளாக வட்டாரம் மேலும் தெரிவித்த தகவல் வருமாறு:
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் என பலரும் சிறையில் ஜெ., வை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் பொதுவாக சிறைக்கு கைதிகளை பார்க்க யார் வந்தாலும், வெளியில் இருந்து இன்னார் வந்திருக்கிறார். நீங்கள் சந்திக்க விருப்பமா? என்று கேட்கப்படும். கைதிகள் விரும்பினால் மட்டுமே கைதி அறையில் இருந்து அழைத்து வரப்படுவர். இதுபோல் சட்ட முறைகள் ஜெ.,விடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யாரையும் சந்திக்க விருப்பமில்லை என்று கூறி விட்டாராம். குறிப்பாக பன்னீர்செல்வம் ஒரு முதல்வராக இருந்து கொண்டு என்னை சந்திக்க கூடாது என்பதை அவரிடம் சொல்லி விடுங்கள் என்று கூறினாராம். இதனால் பலரும் பல மணி காத்திருந்ததுதான் மிச்சம்.
இட்லி, பொங்கல், சான்வெஜ்: சிறையில் ஜெ.,வுக்கு 15க்கு 20 என்ற அளவுள்ள அறை வழங்கப்பட்டுள்ளது. ஒரு டி.வி., உள்ளது. ஜெ., எப்போதும் இருக்கும் சவுகரியமான எஸ் டைப் சேர் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு சிறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. ஜெ., வுக்கு பெரிய அட்டை பெட்டிகளில் இட்லி, பொங்கல், சான்வெஜ், பிரட், என மதியம் காய்கறிகளுடன் சாப்பாடு, பழ வகைகள் அனுப்பி வைக்க அனுமதிக்கப்பட்டது. அளவுக்கு மீறி அதிக பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஜெ., வுக்கு போக எஞ்சியவை சிறையில் இருக்கும் ஏனைய பெண் கைதிகள் சாப்பிட்டு கொண்டனராம்.
சசிகலாவும், ஜெ.,வும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இளவரசி, சுதாகரன் தனித்தனி சிறையில் உள்ளனர். இளவரசி அவ்வப்போது ஜெ.,வை சந்தித்து பேசிக்கொள்வாரம்.
ஜெ.,வுக்கு உடல் உபாதைகள் அதிகம் இருப்பதால் இவருக்கென நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு டாக்டர்கள் 3 மணி நேரத்திற்கொரு முறை செக்கப் செய்கின்றனர்.
ஜெயிலில் 4 நாள் இரவு : கடந்த சனிக்கிழமை முதல் ஜெ., 4 நாள் இரவு ஜெயிலில் இருந்துள்ளார். இன்று ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
'சொத்துக்கள் வாங்கியதற்கு ஜெ.,யால் கணக்கு காட்ட முடியவில்லை' : நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவரம்!
பெங்களூரு: 'ஜெயலலிதாவும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், 53.6 கோடி ரூபாய் மதிப்புக்கு, அசையாச் சொத்துக்களை வாங்கி உள்ளனர். அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான கணக்கை, அவர்களால் காட்ட முடியவில்லை' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்து வந்தது?
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், கடந்த, 27ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பின் முழு விவரம்:கடந்த, 1991 முதல் 1996 வரை, ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில், அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், 53.6 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கி உள்ளனர். ஆனால், அந்தச் சொத்துக்களை வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கணக்கை, வருமான வரித்துறைக்கு, அவர்களால் சரியாக காட்ட முடியவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், அவரின் வருமானம், 9.91 கோடி ரூபாய். அதில், அவரின் செலவு, 8.49 கோடி ரூபாய். இந்த வருமானத்தை மீறியே, அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும், தங்கள் பெயரிலும், சில நிறுவனங்கள் பெயரிலும், 53.6 கோடி ரூபாய்க்கு அசையாச் சொத்துக்களை வாங்கி உள்ளனர்.இதுதொடர்பான, திருப்திகரமான கணக்கை அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துக்களை வாங்கி உள்ளதோடு, அதற்கான பணத்தை பெற, அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், கிரிமினல் சதிச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இதை, அரசு தரப்பு, சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது.எனவே, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120 - பி, 109 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 13 -1இ மற்றும் 13 -2ன் கீழ், தண்டனை பெறக்கூடிய குற்றம் புரிந்துஉள்ளனர். அதனால் அவர்கள் குற்றவாளிகளே.ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவிக்க, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் துணையாக இருந்துள்ளனர் என்பதையும், அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
எனவே, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தை அவர் கட்டத் தவறினால், கூடுதலாக ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.ஜெயலலிதாவுக்கு உடந்தையாக இருந்த, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கும், நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் படுகிறது. அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக ஓர் ஆண்டு சிறையில் இருக்க நேரிடும். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் மற்றும் நிரந்தர வைப்பு நிதிகள், அபராதத் திற்கு ஈடாக எடுத்துக் கொள்ளப்படும். இதுதொடர்பாக, தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். வங்கிக் கணக்கில் உள்ள பணமானது, அபராதத் தொகைக்கு ஈடாகவில்லை எனில், நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் தங்க, வைர நகைகள் விற்கப்பட்டு, மீதமுள்ள அபராத தொகைக்கு வரவு வைக்கப்படும்.அந்த நகைகளை, ரிசர்வ் வங்கிக்கோ அல்லது பாரத ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமாகவே விற்கலாம். விற்றது போக, மீதமுள்ள நகைகள் அரசால் பறிமுதல் செய்யப்படும். ஜெயலலிதா உட்பட, நான்கு பேர் மற்றும் சில கம்பெனிகள் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களை எல்லாம், மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும். குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் அபராதத் தொகையில், 5 கோடி ரூபாயை வழக்குச் செலவுகளுக்காக, கர்நாடக மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி குன்கா தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
குறைவான தண்டனை வழங்குங்க...:
தீர்ப்பு வழக்குவதற்கு முன், ஜெயலலிதா கூறியதாவது:அரசியல் பழிவாங்கும் நோக்கத் துடன் தொடரப்பட்ட வழக்கு இது. இந்த வழக்கு தொடரப்பட்ட போது, எனக்கு வயது, 48. தற்போது எனக்கு வயது, 66. கடந்த, 18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கால், நான் சொல்ல முடியாத மனவேதனைக்கும், துயரத்திற்கும் ஆளானேன்.மேலும், எனக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய் உபாதைகள் இருப்பதால், அதை கணக்கில் கொண்டு, குறைவான தண்டனை வழங்கும்படி வேண்டுகிறேன்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.
நன்றி : தினமலர்
பெங்களூரு: 'ஜெயலலிதாவும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், 53.6 கோடி ரூபாய் மதிப்புக்கு, அசையாச் சொத்துக்களை வாங்கி உள்ளனர். அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான கணக்கை, அவர்களால் காட்ட முடியவில்லை' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்து வந்தது?
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், கடந்த, 27ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பின் முழு விவரம்:கடந்த, 1991 முதல் 1996 வரை, ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில், அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், 53.6 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கி உள்ளனர். ஆனால், அந்தச் சொத்துக்களை வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கணக்கை, வருமான வரித்துறைக்கு, அவர்களால் சரியாக காட்ட முடியவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், அவரின் வருமானம், 9.91 கோடி ரூபாய். அதில், அவரின் செலவு, 8.49 கோடி ரூபாய். இந்த வருமானத்தை மீறியே, அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும், தங்கள் பெயரிலும், சில நிறுவனங்கள் பெயரிலும், 53.6 கோடி ரூபாய்க்கு அசையாச் சொத்துக்களை வாங்கி உள்ளனர்.இதுதொடர்பான, திருப்திகரமான கணக்கை அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துக்களை வாங்கி உள்ளதோடு, அதற்கான பணத்தை பெற, அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், கிரிமினல் சதிச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இதை, அரசு தரப்பு, சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது.எனவே, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120 - பி, 109 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 13 -1இ மற்றும் 13 -2ன் கீழ், தண்டனை பெறக்கூடிய குற்றம் புரிந்துஉள்ளனர். அதனால் அவர்கள் குற்றவாளிகளே.ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவிக்க, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் துணையாக இருந்துள்ளனர் என்பதையும், அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
எனவே, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தை அவர் கட்டத் தவறினால், கூடுதலாக ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.ஜெயலலிதாவுக்கு உடந்தையாக இருந்த, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கும், நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் படுகிறது. அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக ஓர் ஆண்டு சிறையில் இருக்க நேரிடும். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் மற்றும் நிரந்தர வைப்பு நிதிகள், அபராதத் திற்கு ஈடாக எடுத்துக் கொள்ளப்படும். இதுதொடர்பாக, தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். வங்கிக் கணக்கில் உள்ள பணமானது, அபராதத் தொகைக்கு ஈடாகவில்லை எனில், நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் தங்க, வைர நகைகள் விற்கப்பட்டு, மீதமுள்ள அபராத தொகைக்கு வரவு வைக்கப்படும்.அந்த நகைகளை, ரிசர்வ் வங்கிக்கோ அல்லது பாரத ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமாகவே விற்கலாம். விற்றது போக, மீதமுள்ள நகைகள் அரசால் பறிமுதல் செய்யப்படும். ஜெயலலிதா உட்பட, நான்கு பேர் மற்றும் சில கம்பெனிகள் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களை எல்லாம், மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும். குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் அபராதத் தொகையில், 5 கோடி ரூபாயை வழக்குச் செலவுகளுக்காக, கர்நாடக மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி குன்கா தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
குறைவான தண்டனை வழங்குங்க...:
தீர்ப்பு வழக்குவதற்கு முன், ஜெயலலிதா கூறியதாவது:அரசியல் பழிவாங்கும் நோக்கத் துடன் தொடரப்பட்ட வழக்கு இது. இந்த வழக்கு தொடரப்பட்ட போது, எனக்கு வயது, 48. தற்போது எனக்கு வயது, 66. கடந்த, 18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கால், நான் சொல்ல முடியாத மனவேதனைக்கும், துயரத்திற்கும் ஆளானேன்.மேலும், எனக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய் உபாதைகள் இருப்பதால், அதை கணக்கில் கொண்டு, குறைவான தண்டனை வழங்கும்படி வேண்டுகிறேன்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 12 of 15 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15
Similar topics
» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
» வந்து விட்டது சோலார் ஆர்ட்!
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
» வந்து விட்டது செயற்கை இதயம் : ஜப்பான் டாக்டர்கள் கண்டுபிடிப்பு
» வந்து விட்டது சோலார் ஆர்ட்!
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
» வந்து விட்டது செயற்கை இதயம் : ஜப்பான் டாக்டர்கள் கண்டுபிடிப்பு
Page 12 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|