Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..!
3 posters
Page 1 of 1
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..!
![சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%201%20height](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/sindu%201%20height.jpg)
'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்' என்று சிந்துதாயியிடம் (Sindhutai Sapkal) கேட்டால் அவர் உடனே தயங்காமல் ''1,500 பேருக்கு மேல்" என்பார். 'உங்கள் குடும்பம்...? ''207 மருமகன்கள், 36 மருமகள்கள், பேரன் பேத்திகள் 1000 த்தும் மேலே இருக்கும்" என்பார். கேட்டாலே பிரமிப்பாக இருக்கா..? இத்தனைக்கும் சிந்துதாய்க்கும் அவர்களுக்கும் எந்த ரத்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இவர்களுக்கு எல்லாமே சிந்துதாயிதான்.
65 வயதாகும் சிந்துதாய் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வேலையே சாலைகளில் திரியும் ஆதரவற்ற குழந்தைகளையும், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளையும் தான் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொண்டுவந்துவிடுவார். அவர்களுக்கு அம்மாவாக, அப்பாவாக இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் சிந்துதாயி. ஆதரவற்ற குழந்தைகள் மீது இத்தனை பரிவு எதற்கு? என்ற கேள்விக்கு, வாழும் தெரசாவாவாக உலவி வரும் இவருடைய பிளாஷ்பேக்கை கேட்டால் மனது உருகிவிடும்.
நவம்பர் 14, 1948-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்தில் பிம்ப்ரி மேகி (Pimpri Meghe) கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள், பத்து வயது இருக்கும்போதே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார்கள். கொஞ்ச நாட்களில் திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இதில் கொடுமை என்வென்றால் மாப்பிள்ளைக்கும் சிந்துதாயிக்கும் இருபது வயசு வித்தியாசம்.
போதாதற்கு கணவர் இவரை தினமும் மாட்டை அடிப்பதுபோல் அடித்து சித்ரவதை செய்தார். கணவர் தனக்கு செய்யும் கொடுமைகளை அக்கம் பக்கத்தாரிடம் சொல்லி ஆறுதல் தேடவும் வழி இல்லை. ஏன் என்றால்? இவர்களின் வீடு இருப்பது ஊருக்கு வெளியே. சிந்துதாய் இருபது வயதில், 9 மாத கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவர், சிந்துதாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார். வயற்றில் குழந்தை இருப்பது தெரிந்தும் கூட இரக்கம் காட்டவில்லை.
வழியில் ஒரு மாட்டு கொட்டகையிலேயே பெண் குழந்தையை பிரசவித்து, குழந்தையைத் தூக்கிக்கொண்டு 10 கி.மீ தூரம் நடந்தே தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார் சிந்துதாயி, ஆனால் பிரச்னை தீரவில்லை. சிந்துதாயின் அப்பா அவரை வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். இனி மரணம்தான் ஒரே வழி என்று தீர்மானித்தவர், தன் பிஞ்சு குழந்தையின் முகத்தைப் பார்த்து அந்த முடிவை மாற்றிக்கொண்டார்.
![சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%203](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/sindu%203.jpg)
தங்குவதற்கு நிலையான இடம் இல்லாததால் புனேவுக்கு வந்து ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளில் பிச்சை எடுத்து தன் மகளை காப்பாற்றி வந்தார். அப்போது சாலை ஓரங்களில் தன்னைப் போல ஆதரவற்று இருக்கும் நூற்றுக் கணக்கான அனாதை குழந்தைகளைப் பாக்கும்போதெல்லாம் சிந்துதாயிக்கு இதயம் துடித்துவிடும். அவர்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணினார். அனாதைக் குழந்தைகளை ஆதரிக்க, அவர்களுக்காக தானே பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.
சிறிது காலம் கழித்து அனாதை குழந்தைகளை அழைத்துக்கொண்டு பல தொண்டு நிறுவனங்களை சந்தித்துப் பேசினார். சிந்துதாயின் நேர்மை, அவருடைய சேவை மனப்பான்மையை தெரிந்துகொண்ட சில நிறுவனங்கள் சிந்துதாயிக்கு உதவ முன் வந்தது. அவர்கள் செய்த உதவியால் அனாதை குழந்தைகளுக்காக முதலில் ஒரு வீட்டைக் கட்டினார்.
காலம் செல்லச் செல்ல சிந்துதாயின் சேவை புனே நகரத்தில் பலருக்கும் தெரியவந்தது. பொருளுதவி அதிகம் கிடைத்தது. புனே நகர வாசிகள், தாங்களாவே எங்காவது அனாதை குழந்தைகளைப் பார்த்தால் அவர்களை கூட்டி வந்து சிந்துதாயின் அனாதை ஆஸ்ரமத்தில் கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள்.
என்ன விசேஷம் என்றால் சிந்துதாயி, தற்போது அவருடைய கணவரையும் மன்னித்து தன் அனாதை இல்லத்தில் இடம் தந்துள்ளார். தான் வளர்த்த அனாதை குழந்தைகளில் சிலர் இப்பொழுது டாக்டர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் இருக்கிறார்கள். சிலர் உயர்ந்த படிப்புகளை முடித்திருக்கிறார்கள். தற்போது சிந்துதாயி, ஆறு டிரஸ்ட்டுகளை நடத்திவருகிறார். தினமும் பல்வேறு நிகழ்சிகளில் பங்குகொண்டு அனாதைகளுக்காக நிதி சேகரித்துவருகிறார்.
சிந்துதாயின் சேவையை பாராட்டி ஐநூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருதுகளை தந்துள்ளன. ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார். இவரது சேவையை நேரில் பாராட்டி நிதியளிக்காத பிரபலங்கள் மும்பையில் குறைவு.
![சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%202](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/sindu%202.jpg)
எதிர்காலத்தில் நிறைய விடுதிகளைக் கட்டி ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்பது இவருடைய விருப்பம், சிந்துதாயின் சொந்த மகளும் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி வருகிறார். அனாதைகளின் தாய் என்று பெயர் பெற்றிருக்கும் சிந்துதாயின் வாழ்க்கையை மராத்தியில் 'சிந்துதாயி சப்கால்' எனற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். அதற்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.
அனாதைகளை காப்பாற்றும் சக்தியை தனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி என்று சிம்பிளாகச் சொல்கிறார் சிந்துதாயி!
-என்.மல்லிகார்ஜுனா
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..!
சாலை ஓரங்களில் தன்னைப் போல ஆதரவற்று இருக்கும் நூற்றுக் கணக்கான அனாதை குழந்தைகளைப் பாக்கும்போதெல்லாம் சிந்துதாயிக்கு இதயம் துடித்துவிடும். அவர்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணினார். அனாதைக் குழந்தைகளை ஆதரிக்க, அவர்களுக்காக தானே பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.
-என்.மல்லிகார்ஜுனா[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1090598
என்ன ஒரு பெண்மணி !!! இவரின் குணம் யாருக்கு வரும் !!!
வாழ்க இவர் தொண்டு !!!
-என்.மல்லிகார்ஜுனா[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1090598
என்ன ஒரு பெண்மணி !!! இவரின் குணம் யாருக்கு வரும் !!!
வாழ்க இவர் தொண்டு !!!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..!
அனாதைகளை காப்பாற்றும் சக்தியை தனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி என்று சிம்பிளாகச் சொல்கிறார் சிந்துதாயி! wrote:
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாடகைத் தாய் மசோதா மற்றும் இந்தியாவில் வாடகைத் தாய் சந்தையை எப்படி ஒழுங்குபடுத்த முன்மொழிகிறது
» என் கண்ணும்மா எனும் தாய்
» தாய் எனும் வைரம்
» தாய் எனும் தெய்வம்! | சிறுகதை
» பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்!
» என் கண்ணும்மா எனும் தாய்
» தாய் எனும் வைரம்
» தாய் எனும் தெய்வம்! | சிறுகதை
» பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|