Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மக்கள் பாதிக்காதவாறு மானியம் வழங்கப்படும்: ஜெ. உறுதி!
2 posters
Page 1 of 1
மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மக்கள் பாதிக்காதவாறு மானியம் வழங்கப்படும்: ஜெ. உறுதி!
Posted Date : 17:46 (23/09/2014)Last updated : 17:53 (23/09/2014)
சென்னை: மின் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தினாலும், மக்கள் பாதிக்காத வகையில் மானியம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''மின்சாரம் என்றாலே வாழ்வாதாரம் என்று சொல்லும் அளவுக்கு, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் மின் உற்பத்தியின் வளர்ச்சி பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்ட எனது தலைமையிலான அரசு, 2011ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டு காலமாக மின் உற்பத்தியைப் பெருக்கவும், சீர்குலைந்து கிடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீர்திருத்தவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மின்தடை முழுமையாக ரத்து செய்யப்பட்டதோடு, கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் சீரான மின்சாரம் தங்கு தடையின்றி தமிழக மக்களுக்கு கிடைத்து வருகிறது. மின் உற்பத்தி என்று எடுத்துக் கொண்டால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,793 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், நடுத்தரக் கால அடிப்படையில், 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுவன்றி, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து தற்போது 562 மெகாவாட் மின்சாரமும்; நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 224 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்றது. மொத்தத்தில், 4,079 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைத்து வருகிறது. புதிய மின் திட்டங்கள் மூலமாக 1,430 மெகாவாட் மின்சாரம்; நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 776 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 2,206 மெகாவாட் மின்சாரம் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் நமக்கு மேலும் கிடைக்க இருக்கிறது.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சீர்குலைந்து கிடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீட்டெடுப்பதற்காக 25,255 கோடி ரூபாய் நிதியுதவியினை எனது தலைமையிலான அரசு செய்துள்ளது. இதில், மின் நுகர்வோருக்கான மின் கட்டண மானியமாக 11,149 கோடி ரூபாயை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. மேலும், 2014-2015 ஆம் ஆண்டிற்கு 10,575 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம் தயாரிப்பதற்கு ஏற்படும் எரிபொருள் செலவு, தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பெறப்பட்ட கடனுக்கான வட்டித் தொகை மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண விகித மாறுதல் கேட்டு அதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டு மின் கட்டண ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக மின் கட்டண நிர்ணயத்தை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மின்சார மேல் முறையீட்டு தீர்ப்பாயமும், தனது 11.11.2011 நாளிட்ட தீர்ப்பில், மின்பகிர்வு உரிமைதாரர்கள் மின் கட்டண நிர்ணயத்திற்கான மனுவினை சமர்ப்பிக்காமல் ஒரு மாதத்திற்கு மேல் தாமதம் செய்தால், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் தன்னிச்சையாக மின் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசால் இயற்றப்பட்ட 2003 ஆம் ஆண்டு மின்சார சட்டமும், மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரத்தை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அளித்துள்ளது.
இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டைய மத்திய மின்சார சட்டம், 2005 ஆம் ஆண்டைய மின் கட்டண நிர்ணய விதிகள் மற்றும் மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில், மின் கட்டணங்களை மாற்றி அமைக்கும் விதமாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது அறிவிப்பு ஒன்றினை இன்று (23.9.2014) வெளியிட்டுள்ளது.
உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் விலை டன் ஒன்றிற்கு தற்போது 3,298 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; வெளிநாட்டு நிலக்கரியின் விலை 6,896 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; பணியாளர் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கான செலவு நடப்பு ஆண்டில் 4,370 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான மேம்பாட்டுப் பணிகளுக்காக பெறப்பட்ட கடன்களின் மீதான வட்டிச் செலவினம் 8,463 கோடி ரூபாய் என உள்ளதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் நுகர்வோர்களுக்கான உத்தேச மின் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், அதன் மீது பொதுமக்கள் மற்றும் நுகர்வோரின் கருத்துகள் கேட்கப்பட்டு; நுகர்வோர் நலன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நலன், எதிர்கால மின் திட்டங்கள் மற்றும் கட்டமைப்பிற்கான செலவினங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண நிர்ணயம் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும்.
மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும், அதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாத வகையில், அதற்குத் தேவைப்படும் கூடுதல் மானியத்தை எனது தலைமையிலான அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மக்கள் பாதிக்காதவாறு மானியம் வழங்கப்படும்: ஜெ. உறுதி!
மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மற்ற
மாநிலங்களை விட குறைவாகத்தான் இங்கு
உள்ளது என்பதற்கான புள்ளி விபரங்களும்
சேகரிக்கப்பட்டு வருகின்றன...
-
மாநிலங்களை விட குறைவாகத்தான் இங்கு
உள்ளது என்பதற்கான புள்ளி விபரங்களும்
சேகரிக்கப்பட்டு வருகின்றன...
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு
» இரு மாத கட்டணம் ரூ.9 : மின் நுகர்வோர் மகிழ்ச்சி!
» யாருடைய லாபத்திற்காக மின் கட்டண உயர்வு?மின் வாரியத்தை சரி செய்யாமல் மக்கள் மீது சுமை ஏற்றுவது சரியா?
» சென்னையில் டிசம்பர் வரை 600 மி.லி. குடிநீர் வழங்கப்படும் : ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி
» சூரியசக்தி மின் நிலையத்திற்கு மானியம்:வீடுகளில் அமைத்தால் தருகிறது மத்திய அரசு
» இரு மாத கட்டணம் ரூ.9 : மின் நுகர்வோர் மகிழ்ச்சி!
» யாருடைய லாபத்திற்காக மின் கட்டண உயர்வு?மின் வாரியத்தை சரி செய்யாமல் மக்கள் மீது சுமை ஏற்றுவது சரியா?
» சென்னையில் டிசம்பர் வரை 600 மி.லி. குடிநீர் வழங்கப்படும் : ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி
» சூரியசக்தி மின் நிலையத்திற்கு மானியம்:வீடுகளில் அமைத்தால் தருகிறது மத்திய அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|