Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
3 posters
Page 1 of 1
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50: அனுபவங்களை பகிர்ந்து கொண்ட 'பயர்மேன்'கள்!
வயிறு முட்ட கரியை நிரப்பி, புகையை கக்கியபடி, தனக்கே உரிய சிறப்பு சப்தத்துடன், நீராவி இன்ஜின் மூலம், 1964 அக்டோபரில், தன் முதல் ஓட்டத்தை துவங்கியது, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்.சென்னை பெங்களூரு இடையிலான, 360 கி.மீ., தூரத்தை, ஐந்து மணி நேரத்திற்குள் கடக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் தான், தெற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல், 'இன்டர்சிட்டி ரயில்!'
நீராவி இன்ஜினில் இயங்கியபோதே, மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் 'பறந்த' அன்றைய காலம் முதல் இன்று வரை, இந்த ரயிலுக்கு பயணிகளிடம் மவுசு அதிகம். துவக்கத்தில், எட்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயில், இரண்டு ஆண்டுகள் முடிந்து, 1966ல் டீசல் இன்ஜினுக்கு மாறியது.அப்போது, 15 பெட்டிகளாக மாற்றப்பட்டு, படிப்படியாகக் கூட்டப்பட்டு, இன்று, 24 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.வேலை, வியாபாரம், படிப்பு என, தினமும் இந்த ரயிலில் பயணிப்போர் அதிகம். படிப்பதற்காக பிருந்தாவனில் பயணிக்கத் துவங்கி, வேலைக்கும் அந்த ரயிலிலே பயணிக்கும் பெரும்பாலான பயணிகளுக்கு, பிருந்தாவன் ரயில் என்றுமே செல்லப்பிள்ளை தான்.பயணிகளை கவர்ந்த பிருந்தாவன் ரயிலை, நீராவி இன்ஜினில் இயக்கியவர்கள் அகஸ்தபா, நிக்கோலஸ், டெனன்ட், பெஸ்ட்விட்ச் உள்ளிட்ட ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களே.அவர்களுக்கு துணையாக, நீராவியில் இன்ஜின் செயல்பட, நிலக்கரியை உடைப்பதும், அதை சரியான அளவில் போட்டு, வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைப்பதுமான பணியை, 'பயர்மேன்'கள் பார்த்துள்ளனர்.
பிருந்தாவன் ரயிலில், 'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரபோஸ் கூறியதாவது:ரயில்வே துறையில் பணி கிடைத்தவுடன், முதல் அனுபவமாக பிருந்தாவன் ரயிலில் வேலை பார்த்ததால், அதை என்றும் மறக்க முடியாது.இன்று, ரயில்களை இயக்குவது எளிது. அன்று, நீராவி இன்ஜினில் ரயிலை இயக்க, ஓட்டுனர், 'பயர்மேன்'கள் ஆகியோர் குழுவாக வேலை பார்ப்போம்.ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களிடம் உதவியாளராக வேலை பார்த்ததே, பணியில் சிறப்பாகச் செயல்பட உதவியது. அடுத்தடுத்து, பல ரயில்களில் ஓட்டுனராக பணிபுரிந்த போதிலும், இன்றும் நினைவில் வந்து செல்வது, பிருந்தாவன் ரயில் மட்டுமே.இவ்வாறு அவர் கூறினார்.
'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஞானசேகரன் கூறியதாவது:ஓட்டுனர், 'பயர்மேன்' என, தனித்தனி குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் ரயில் இன்ஜின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், அதன் பராமரிப்பில் அதிக கவனம் கொள்வோம்.பிருந்தாவன் ரயிலை இயக்கும்போது, நம் சொந்த காரை ஓட்டிச் செல்லும் போது உள்ள மனநிலை இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிருந்தாவன் ரயில் இயக்கத்தை தொடர்ந்து துவங்கியவை தான் சதாப்தி, டபுள் டக்கர் ரயில் போன்றவை. பிருந்தாவன் புறப்படுவதற்கு முன், டபுள் டக்கர் ரயிலை இயக்கிய போதிலும், பிருந்தாவனில் பயணிப்போர் தான் அதிகம். அந்த அளவிற்கு பயணிகளை கவர்ந்தது இந்த ரயில்' என்றார்.
இத்தனை சிறப்புகளை பெற்ற பிருந்தாவன் ரயிலில் அப்போது இருந்த, 'ஏசி' பெட்டிகள் வசதியும், உணவு தயாரித்து வழங்கும் வசதியும் இன்று இல்லை.ஒரு சில, 'ஏசி' பெட்டிகளுடன், தரமான உணவும் வழங்கும் பட்சத்தில், 'ஏசி' வசதி விரும்பும் பயணிகள் உட்பட வரும் தலைமுறையினருக்கும், 'பிருந்தாவன்' பிடிக்கத் தானே செய்யும்!
நன்றி தினமலர்
வயிறு முட்ட கரியை நிரப்பி, புகையை கக்கியபடி, தனக்கே உரிய சிறப்பு சப்தத்துடன், நீராவி இன்ஜின் மூலம், 1964 அக்டோபரில், தன் முதல் ஓட்டத்தை துவங்கியது, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்.சென்னை பெங்களூரு இடையிலான, 360 கி.மீ., தூரத்தை, ஐந்து மணி நேரத்திற்குள் கடக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் தான், தெற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல், 'இன்டர்சிட்டி ரயில்!'
நீராவி இன்ஜினில் இயங்கியபோதே, மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் 'பறந்த' அன்றைய காலம் முதல் இன்று வரை, இந்த ரயிலுக்கு பயணிகளிடம் மவுசு அதிகம். துவக்கத்தில், எட்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயில், இரண்டு ஆண்டுகள் முடிந்து, 1966ல் டீசல் இன்ஜினுக்கு மாறியது.அப்போது, 15 பெட்டிகளாக மாற்றப்பட்டு, படிப்படியாகக் கூட்டப்பட்டு, இன்று, 24 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.வேலை, வியாபாரம், படிப்பு என, தினமும் இந்த ரயிலில் பயணிப்போர் அதிகம். படிப்பதற்காக பிருந்தாவனில் பயணிக்கத் துவங்கி, வேலைக்கும் அந்த ரயிலிலே பயணிக்கும் பெரும்பாலான பயணிகளுக்கு, பிருந்தாவன் ரயில் என்றுமே செல்லப்பிள்ளை தான்.பயணிகளை கவர்ந்த பிருந்தாவன் ரயிலை, நீராவி இன்ஜினில் இயக்கியவர்கள் அகஸ்தபா, நிக்கோலஸ், டெனன்ட், பெஸ்ட்விட்ச் உள்ளிட்ட ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களே.அவர்களுக்கு துணையாக, நீராவியில் இன்ஜின் செயல்பட, நிலக்கரியை உடைப்பதும், அதை சரியான அளவில் போட்டு, வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைப்பதுமான பணியை, 'பயர்மேன்'கள் பார்த்துள்ளனர்.
பிருந்தாவன் ரயிலில், 'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரபோஸ் கூறியதாவது:ரயில்வே துறையில் பணி கிடைத்தவுடன், முதல் அனுபவமாக பிருந்தாவன் ரயிலில் வேலை பார்த்ததால், அதை என்றும் மறக்க முடியாது.இன்று, ரயில்களை இயக்குவது எளிது. அன்று, நீராவி இன்ஜினில் ரயிலை இயக்க, ஓட்டுனர், 'பயர்மேன்'கள் ஆகியோர் குழுவாக வேலை பார்ப்போம்.ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களிடம் உதவியாளராக வேலை பார்த்ததே, பணியில் சிறப்பாகச் செயல்பட உதவியது. அடுத்தடுத்து, பல ரயில்களில் ஓட்டுனராக பணிபுரிந்த போதிலும், இன்றும் நினைவில் வந்து செல்வது, பிருந்தாவன் ரயில் மட்டுமே.இவ்வாறு அவர் கூறினார்.
'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஞானசேகரன் கூறியதாவது:ஓட்டுனர், 'பயர்மேன்' என, தனித்தனி குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் ரயில் இன்ஜின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், அதன் பராமரிப்பில் அதிக கவனம் கொள்வோம்.பிருந்தாவன் ரயிலை இயக்கும்போது, நம் சொந்த காரை ஓட்டிச் செல்லும் போது உள்ள மனநிலை இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிருந்தாவன் ரயில் இயக்கத்தை தொடர்ந்து துவங்கியவை தான் சதாப்தி, டபுள் டக்கர் ரயில் போன்றவை. பிருந்தாவன் புறப்படுவதற்கு முன், டபுள் டக்கர் ரயிலை இயக்கிய போதிலும், பிருந்தாவனில் பயணிப்போர் தான் அதிகம். அந்த அளவிற்கு பயணிகளை கவர்ந்தது இந்த ரயில்' என்றார்.
இத்தனை சிறப்புகளை பெற்ற பிருந்தாவன் ரயிலில் அப்போது இருந்த, 'ஏசி' பெட்டிகள் வசதியும், உணவு தயாரித்து வழங்கும் வசதியும் இன்று இல்லை.ஒரு சில, 'ஏசி' பெட்டிகளுடன், தரமான உணவும் வழங்கும் பட்சத்தில், 'ஏசி' வசதி விரும்பும் பயணிகள் உட்பட வரும் தலைமுறையினருக்கும், 'பிருந்தாவன்' பிடிக்கத் தானே செய்யும்!
நன்றி தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
மேற்கோள் செய்த பதிவு: 1089971krishnaamma wrote:நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு
பகிர்வுக்கு நன்றிமா
அப்போது 2 ட்ரீட் இருக்கு எங்களூக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
நல்ல பதிவு அம்மா !!!
விருந்து எப்போது அம்மா !!!
விருந்து எப்போது அம்மா !!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
மேற்கோள் செய்த பதிவு: 1090063ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1089971krishnaamma wrote:நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு
பகிர்வுக்கு நன்றிமா
அப்போது 2 ட்ரீட் இருக்கு எங்களூக்கு
பெங்களூர் வந்தால் தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
மேற்கோள் செய்த பதிவு: 1090066M.Saranya wrote:நல்ல பதிவு அம்மா !!!
விருந்து எப்போது அம்மா !!!
பானுக்கு சொன்னது தான் உங்களுக்கும் , எங்காத்துக்கு வாங்கோ சரண்யா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» 22 வயது பிரதாப், 20 வயது புஷ்பா… முதல் இரவில் மாரடைப்பு; ஒரே நேரத்தில் மரணம்
» செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» பயணிகளின் கவனத்திற்கு…..
» சென்னையில் தொடரும் வேட்டை-104 வயது தந்தையை புறக்கணித்த 54 வயது மகன் கைது
» செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» பயணிகளின் கவனத்திற்கு…..
» சென்னையில் தொடரும் வேட்டை-104 வயது தந்தையை புறக்கணித்த 54 வயது மகன் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|