ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன?

Go down

போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Empty போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன?

Post by யாழவன் Thu Nov 05, 2009 6:23 pm




போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Gandhi5
மாவொயிஸ்ட்டுகள் இயக்கம் இப்பொழுது இந்தியாவில் தடை செய்ய்பட்ட ஒரு இயக்கம், ஏற்கனவே நக்சல்களை தடை செய்துவிட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இதன் பின்னனி என்ன? ஆராய்ந்து பார்த்தால் அரசு, மக்கள், போராளி இயக்கக்ங்களின் கருப்பு பக்கங்கள் நம்மை முகம் சுளிக்க வைக்கும்.நமக்கு தெரியததல்ல, தெரிந்தவற்றின் மீது இன்னொரு பார்வை...

யார் போராளி?

ஒட்டிய வயிற்றுடன், கோபமாக பேசிக்கொண்டு, வீட்டில் தண்ணீர் தெளித்துவிட்ட, எதையாவது படித்துக்கொண்டு, சமுதாயத்தை மாற்றிவிட துடிக்கும் ஒருவன் அல்லது ஒரு கூட்டம். அடிப்படையில் பாதிக்கபட்டவர்கள், கோபமாக அந்த வலிக்கு மருந்து தேடுபவர்கள், சற்றே கோபமிருந்தாலும் கொஞ்சம் பொதுநலம் கொண்ட கோபம் உடையவர்கள்.நிச்சயமாக அவர்களை உடனடியாக புரிந்துக்கொள்ள முடியாது.

மனிதன் வாழ்கையில் போராட்டம் என்பது அடிப்படை. விந்து, கரு முட்டயை அடைய செல்லும் போதே போராட்டம் தொடங்கி விடுகிறது, போராடுவது மனிதனின் இயல்பு. அது தன் சுயநலத்திற்க்காகவும் இருக்கலாம் அல்லது அதில் பொது நலமும் கலந்திருக்கலாம்.ஆனால் அவர்கள் போராடுவது உறுதி.

ஏன் கடவுளும் போராளி தான் அல்லது ஒரு காலத்தில் போராடியவர்களை நாம் கடவுளாக கும்மிடுகிறோம்.யூத மதத்தின் சடங்கை எதிர்த்த ஏசு, தன் மக்களிடம் சகோதர உணர்வை வளர்க்க போராடிய நபி, போலி சடங்குகளை எதிர்த்த புத்தர், ஏன் அநியாயத்தை எதிர்க்க ஒரு சித்தாந்த்தை போதித்த கண்ணன் என கடவுளரும் போராளிகள் தான்.

குறிப்பாக இளைஞர்கள் உடனடியாக உணர்சியின் வசம் வீழ்வார்கள், மனநலரிதியாக கனவு காணும் அவர்களுக்கு உலகத்தை புரட்டி போடும் எண்ணம் வசியபடுத்துகிறது, எந்தவித பொருப்புகளும் சுமக்காத சூழ்நிலையில், நான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற வெறியும், இதனை, இதற்க்கு முன்பு செய்தவர்களின் வழியையும் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

போராட்டம் என்றால்?

தன்னை சுற்றியிருக்கும் சமுதாயத்திற்கு கொடுக்கபடும் ’சங்கொலி’, உறங்குபவர்களை தட்டியெழுப்புவது, ஒரு குறிபிட்ட ஆபத்தை தெரியபடுத்துவது சுருக்கமாக சொன்னால் ஒரு விஷயத்தை பற்றிய கவன ஈர்ப்பும் அதற்கான எதிர்ப்பு முறையும்.

சில உதரணங்கள் ஒரு இனம் கேட்கும் விடுதலை, சுயராஜ்ஜியம், ஆளும் முறையை அல்லது சட்டத்தை எதிர்ப்பது, அல்லது ஆதரிப்பது.

போராட்ட முறை:

போராட்டம் என்பது கவன ஈர்ப்பு, அதை எப்படி செய்வது அதற்கான முறை என்ன? பொதுவாக சொன்னால், அது அந்த போராட்டத்தின் அவசரநிலையை பொருத்தது.உயிருக்கும் போராடும் ஒருவருக்கு மருத்துவம் செய்ய சொல்லி போராடும் போது அதன் அவசரத்தை கருதி போரட்ட முறை தீர்மானிக்கபபடுகிறது.பல நேரங்களில் போராட்ட முறை தேர்தெடுக்கபடும் காரணங்கள்,

1.இதற்கு முன்பு வெற்றி பெற்ற முறை.

2.மக்களின் கவனத்தை பெற உதவும் முறை.

3.வன்முறைக்கு பதிலாக தரப்படும் எதிர்-வன்முறை (Counter Terrorism)

பயன்பாட்டில் உள்ள முறைகள்:

1.உண்ணாவிரதம், சத்தியாகிரகம், ஒத்துழையாமை,ஊர்வலம் போன்ற காந்திய வழிமுறை
2.எரிப்பது,குண்டு வீசுவது, குறிப்பிட்டவர்களை கொலை செய்வது போன்ற வன்முறை .

3.கவனயீர்பிற்க்கு மாத்திரம் ஆளே இல்லாத இடத்தில் குண்டு வைப்பது, தீக்குளிப்பது போன்ற அதிரடி முறைகள்.

இவையனைத்தும் குழுவாகவோ தனி நபராகவோ செய்வது.

அரசின் நிலைப்பாடு:

பொதுவாக அரசின் கவனயீர்ப்பு கிடைத்தவுடன் குறிபிட்ட அந்த குழுவுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தும் பிரச்ச்னைகளை அரசு சுயநலமோ அல்லது ஈகோ அல்லது கையாளும் போது போராட்டம் வெற்றிபெறுகிறது.ஆனால்,

தொடர்ந்து போராடி ஒரு குழு வெற்றிபெறும் பொழுது ஆளும் கட்சி பதவி பயத்தால் அந்த குழுவையோ அல்லது அவர்களின் போராட்டத்தையே ஒழிக்க பார்க்கலாம்.

ஒரு குழுவை தங்கள் சுயலாபத்திர்க்காக அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.


அரசியல் இருக்கும் குறிபிட்ட நபர் அந்த குழுவையோ அல்லது அதில் இருக்கும் சிலரை தன் சுயலாபத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

மக்களின் நிலைபாடு:

பொதுவாக மக்கள் அமைதியாக எந்தவித தடங்களும் இன்றி வாழவே விரும்புவார்கள். அவர்களின் மிகபெரிய மனநிலையே ’அடாப்ட்டபிலிடி’ ஆதாவது எற்றுக்கொள்ளுதல். அவர்கள் அடிமை வாழ்வை ஏற்றுக்கொள்ளுவார்கள் சுத்ந்திர மனிதனை பார்க்கும் வரை, பசியை ஏற்றுக்கொள்ளுவார்கள் நன்றாக உண்பவனை பார்க்கும் வரை.மக்கள் நம்பிக்கை வரும் வரை போரடும் குழுவையோ அல்லது போராடும் நபரையோ ஏற்றுக்கொள்ளுவது கடினம், ஏற்றுகொண்ட பின் அவர்களை வெறுப்பது கடினம்.போரட்டத்தின் அல்லது போராளிகளின் அடிநாதமே அவர்கள் எவ்வறு மக்களை கவறுகிறார்கள் என்பதில் தான்.போராட்டம் என்பது ஒருவரிடமிருந்து தான் பிறக்கிறது, அவன் நம்பிக்கை அவன் கனவு அதன் பின் இன்னொருவர், இன்னொருவர் என தொற்றிக்கொள்ள்கிறது.

ஒன்று மட்டும் உறுதி இதுவரை மக்களை கவராத,மக்கள் அதரவில்லாத எந்த ஒரு போராட்டம் வென்றதாக சரித்திரமில்லை.

போராளிகளின் வாழ்க்கை முறை:

போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Martin_luther_king
ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அந்த நொடி,

1.அவனுக்கு மரணம் எப்பொழுது வேணுடுமானலும் வரலாம், உயிர் பையம் கூடாது.

2.மக்கள் அவனை கவனிப்பார்கள் வாய் சொல்லில் உறுதியும் உண்மையும் வேண்டும்.

3.பதவியாசை கூடாது,

4.சுய ஒழக்கமும், சுய கட்டுபாடும் அவசியம்.

5.அவன் கொள்கைகள் ,சித்தாந்தங்கள் மீது உறுதியான ஈடுபாடு வேண்டும்.

6.நம்பிக்கையும் கனவுகளும் தான் அவனை துடிப்புடனும் வெறியுடனும் இருக்க வைக்கும்.

7.மக்களிடம் தன் போராட்டத்தையும், அரசிடம் அவன் கோரிக்கைகளையும் தெளிவாக எடுத்து சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.

8.எடுக்கும் முடிவில் உறுதி வேண்டும்.

எங்கே போராளிகள் தீவிரவாதிகளாகுகின்றனர்?:

1.தங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஒவ்வாத போராட்ட முறையை தேர்தெடுக்கும் போது.

2.போராட்டத்தை ஒழுங்காக மக்களிடம் சேர்க்காத போது.


3.பணம் என்கிற விஷயம் வரும் போது அதற்காக சில தவறான காரியங்களில் ஈடுபடும் போது.

4.ஒழுக்கமில்லாதவர்களை குழுவில் வைத்திருக்கும் போது,

5.கால மாற்றத்திர்கேற்றவாரு தங்களை மாற்றிக்கொள்ள மறுக்கும் போது.

6.உணர்ச்சியின் அடிப்படையில் மாத்திரம் இயங்கும் போது

7.கட்டுபாடாற்ற, குழப்பமான தலமை,

8.உட்சுத்ந்திரமோ, கருத்து சுத்ந்திரமோ இல்லாத இயக்கம்.

9.தவறுகளுக்கு மன்னிப்பு கோராமல் , அதை தொடரும் போது,

10 தங்கள் மீது வைக்கப்டும் விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் இருப்பது, அமைதி காகக் வேண்டிய நேரத்தில் பேசும் போது, பதவியாசை சுகமான வாழ்க்கை என திடிர் மனமாற்றம்.

11. திடிர் உயிர் பையம்.

12 அரசின் மோசமான நிலைபாடு (மேலே படிக்கவும்)

சரி கொஞ்சம் தற்போதய போராட்டங்களை பற்றி பார்ப்போம்:

1.பல நகசல் குழுக்களிடம் அரசியல் நிலைபாடும், ஆளும் திறமையும் போதுமான அளவில்லை.

2.பல இளைஞர் குழுக்களிடம் கோபமோ போராட்ட குணமோ இருக்கமளவு, அடுத்து அவர்களின் நிலை என்ன என்பதில் குழப்பம் இருக்கிறது.

3.பொதுஜன ஊடங்கங்களான தொலைகாட்சி, பத்திரிக்கை போன்றவற்றை முறையாக பயன்படுத்தாமல் , தங்கள் அளவில் ஒரு சிறு பத்திரிக்கையென தனிமை படித்துக்கொள்வது.

4. பொதுஜன ஊடகங்களின் வழியே மக்களை சந்திக்க மறுப்பது.

5. தங்கள் மேல் மக்கள் கொண்டுள்ள வெறுப்பை நீக்காமல் இருப்பது, மக்களிடமே த்ங்களின் சர்வாதிகாரத்தை காண்பிப்பது.

6. தங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு களையாமல் இருப்பது.

7 உணர்ச்சியின் அடிப்படையில் மாத்திரம் மக்களை அனுகுவது.

அரசு என்ன செய்யலாம்?

ஒழுங்காக ஆள வேண்டும், மக்களிடயே ஏற்ற தாழுவுகள் இருக்கும் போது போராட்ட்ங்களும் கொலைகள் , திருட்டு , கொள்ளை என பல விஷ்யங்கள் தொடருகின்றன.

சட்டம் முறையாக மக்களை திருப்த்தி படுத்தாமல் இருப்பது.

பதவியாசை கொண்ட அரசியல் வாதிகள்.

கடைசியாக

ஒருவன் பசித்திருக்க - இன்னொருவன்
உணவை ஒளித்து வைக்க,
பசித்தவன் போராளியாகிறான்.

அநியாயத்தை எதிர்க்காத
மௌனம் – மிக பெரிய தீவிரவாதம்.

எனக்கு பிடித்த சில போராளிகள்


போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Untitled

சே குவாரா – தன் இனமென்றில்லாமல் உலக மக்களுக்காக போராடியவன்.உன்னதமானவன்.
காந்தி – எதிரியை அவமான படுத்த அறப்போராட்டத்தை உருவாக்கியவர்.
மார்டின் லூதர் கிங் – தன் இனம் தலை நிமிர ஏகாதிபத்தியத்தை அர வழியில் எதிர்த்தவர்.
ஹோ சி மின் – தன் வலுவான தலமையில் அமஎரிக்காவின் கண்களில் விரல்விட்டு ஆட்டியவர்.
சூ கீ – 21ம் நூற்றாண்டிலும் அறப் போராட்டத்தை வழிநடத்தி செல்பவர்..
லெனின் – ஒரு சித்தாந்தத்தை மக்களிடம் சேர்த்து அவர்களை போராட தூண்டி, வென்றவர்.
பெரியார் – அறவழியில் ஒரு இனத்தையே நிமிர வைத்தவர்.
பிராபாகரன்-தழிழன் என்ற இனம் இருக்கு என்ரு உலகை வியப்பில் ஆழ்த்திய ஒழுக்கமான் போராளி.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum