ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னைத் தானே உண்ணும் உடல்

Go down

தன்னைத் தானே உண்ணும் உடல் Empty தன்னைத் தானே உண்ணும் உடல்

Post by கவின் Sun Sep 21, 2014 9:47 pm

இன்று சாப்பிட்டீங்களா…?
என்ன சாப்பிட்டீங்க…? சரி,
இது எல்லாம் போகட்டும், ஏன்
சாப்பிட்டீங்க என்று உங்களிடம்
கேள்வி கேட்டால் என்ன பதில்
சொல்வீர்கள்? பசி காரணமாக சாப்பிட்டேன் என்று சிலர்
சொல்வர். வேறு சிலர்
சக்தி பெறுவதற்காக
சாப்பிட்டேன்
என்று கூறுவர். மேலும்
சிலர் சொல்வார்கள் சாப்பிடாமல் விட்டால் நாம்
இறந்துவிடுவோம் என்று.


மூன்று காரணங்களுமே முற்றிலும்
உண்மைகள் தான். ஆனால்,
ஒரு வேளையோ அல்லது ஒரு நாளோ சாப்பிடாமல்
பட்டினி இருந்தால் இறந்து விடமாட்டோம்
என்பது உங்கள்
எல்லோருக்குமே தெரிந்த
விடயம் தான். ஆகவே,
பட்டினி என்றால் என்ன?
இப்படி பட்டினி இருந்தால் எம்மால் எவ்வளவு நாட்கள்
உயிர் வாழ முடியும்
என்பதும் அந்நேரம்
எமது உடலில் என்னவெல்லாம்
நடைபெறுகிறது என்று தெரியுமா?

மருத்துவ ரீதியில் பார்த்தால்
பட்டினி இருப்பது என்பது வேறு ஒன்றும்
இல்லை.
எமது உடலுக்கு தேவையான
கலோரி (கனலி, calorie) மற்றும்
ஊட்டக்கூறு (nutrient) குறைபாடு ஏற்படும்
போது,
அதை பட்டினி இருப்பது என்கிறோம்.
இப்படி பட்டினி இருக்கும்
போது உடலுக்கு தேவையான
உணவை முற்றிலும் கொடுக்காமல் விட்டால், அதன்
விளைவு கடைசியில்
இறப்பு தான். ஆனால், உங்கள்
எல்லோருக்குமே தெரியும்
சும்மா 1-2 நாட்கள்
சாப்பிடாமல் விட்டதும் நாம் இறந்து விட மாட்டோம்.
அப்படி விரைவில்
இறந்து விடுவோம் என்றால்
எமது மனித
இனமே இன்று வரை உயிர்
வாழ்ந்திருக்க முடியாது.

உணவை விட நாம்
உயிர்வாழ்வதற்கு
வேறு அத்தியாவசியமானவ
ை இருக்கின்றன.
உதாரணத்திற்கு பிராணவாயு (oxygen)
இல்லாமல் எம்மால் ஏறத்தாழ 5-10 நிமிடங்கள் மட்டுமே உயிர்
வாழ முடியும். இதுவே நீர்
அருந்தாமல் ஒரு சில நாட்கள்
(2-7 நாட்கள்) உயிர் வாழ
முடியும். ஆனால்,
உணவு இல்லாமல் எம்மால் (சூழ்நிலையைப்
பொறுத்து = நோய் இல்லாத,
ஆரோக்கியமான உடல்
என்றால்) இரண்டு மாதங்கள்
வரை உயிர் வாழ முடியும்!
நம்பவே முடியவில்லை அல்லவா?

சரி,
இப்படி தொடர்ந்து உண்ணாமல்
பட்டினி இருக்கும் நேரம்
எமது உடலில் என்னவெல்லாம்
நடைபெறுகிறது என்று பார்ப்போமா?

உணவு அருந்தாமல்
இருக்கும் போது எமது உடல்
மூன்று கட்டங்களைக்
கடக்கின்றது.


முதலாவது கட்டத்தில்
எமது உடல் அதற்கு தேவையான
சக்தியை எப்போதுமே கடைசியாக
சாப்பிட்ட உணவில்
காணப்படும் குளுக்கோஸ்
(glucose) ஊடாகப் பெறுகிறது.
இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை.
குளுக்கோஸ்
மூலமாகத்தான் எமது உடல்
மிக இலகுவான வழியில்
சக்தியைப் பெறுகிறது. இந்த
குளுக்கோஸ் பொதுவாக கிளைக்கோசன் (glycogen)
எனப்படும்
மூலக்கூற்றை (molecule)
உடைத்து உருவாக்கப்படுகி
றது. எமது மூளை ஒழுங்காக
வேலை செய்வதற்கு ஒரு நாளில் எமது உடலுக்கு தேவைப்படுகிற
சக்தியில் 25 சதவீதமான
சக்தியை எமது மூளை மட்டுமே உபயோகிக்கிறது.
இப்படி ஒவ்வொரு நாளும்
எமது மூளைக்கு 120 கிராம்
குளுக்கோஸ் தேவைப் படுகிறது. எமது உடலில் காணப்படும்
குளுக்கோஸ் முற்றிலும்
முடிவடைந்ததும்
எமக்கு பசி ஆரம்பித்துவிடும
்.

பசி வந்தும் நாம்
உணவு அருந்தாமல் இருந்தால் அடுத்ததாக
இரண்டாவது கட்டம்
ஆரம்பமாகிவிடும். இந்த
கட்டத்தில் எமது உடல் glycerolipids
எனப்படும்
கொழுமியத்தை (lipid) உடைத்து கிளிசரால் (glycorol)
மற்றும்
கொழுப்பு அமிலத்தை (fatty
acids) உருவாக்கத்
தொடங்கிவிடும். முதலில்
கிளிசரால் ஊடாக மேலும் குளுக்கோஸ்
உருவாக்கப்படுகின்றன.
கிளிசரால் முற்றிலும்
முடிந்ததும் எமது ஈரல்
கொழுப்பு அமிலங்களை ketone
bodies எனப்படும் உயிர்வேதியியல் பொருளாக
மாற்றிவிட்டு ketosis
எனப்படும்
செயல்பாட்டை ஆரம்பித்துவிடும
். இந்த ketosis நடைபெறும் நேரம்
குளுக்கோஸ்க்கு பதிலாக ketone bodies இல் இருந்து தான்
எமது உடல் சக்தியைப்
பெறுகிறது. இப்படி இந்த
இரண்டாவது கட்டத்தில்
மூளை, இருதயம் போன்ற
முக்கிய உடல் உறுப்புகளுக்கு சக்தி செல்கிறது.


இந்த காலகட்டத்திலும்
உணவு அருந்தாமல்
இருந்தால் ketone bodies உடன்
எமது உடல் ஒரு சில நாட்கள்
இருந்து கொஞ்ச கிழமைகள் வரை உயிர் வாழ
முயற்சிக்கும். அதற்கும்
காரணம் எமது மூளை தான்!
உணவு இல்லை என்று தெரியவந்ததும்
எமது மூளை தனது குளுக்கோஸ்
பாவனையைக் குறைத்துவிடுகிறது.
ஒரு நாளில் 120 கிராம்
குளுக்கோஸ் பாவித்த
மூளை 30 கிராம்
குளுக்கோஸ்
மட்டுமே பாவிக்கத் தொடங்கிவிடும். ஆனால்,
இந்த கட்டத்தில் எமது உடலும்
மிகவும் பலவீனமாகிவிடும். அனைத்து ketone bodies உம்
முற்றிலும்
முடிந்துவிட்டதும்


கடைசி கட்டமாகிய
மூன்றாவது கட்டம்
ஆரம்பித்துவிடும். இதில் எமது தசைகளில் காணப்படும்
புரதங்களை உடைத்து அமினோ அமிலங்கள்
(aminoacids) மூலம் எமது உடல்
சக்தியைப் பெறுகிறது. இந்த
கட்டத்தில் எமது தசைகள்
மெலியத் தொடங்கி விடுகின்றன.


இதற்கு என்ன அர்த்தம்
என்று புரிகிறதா?

!
எமது உடல் தன்னைத்
தானே உண்கிறது!!
இப்படி தசைகள் மெலிந்து போகும்போது ஒரு நேரத்தில்
எமது இருதயம்
தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். அதுமட்டும் இல்லை, மேலும் உடலின் நோய் எதிர்ப்பாற்றல்
முறைமை மிகவும்
பாதிக்கப்பட்ட
நிலையை அடைந்துவிடும்.
ஆகவே, ஒரு சிறிய நோய்
வந்தால் கூட அதன் விளைவு விபரீதமாக
இருந்துவிடும். இப்போ உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும
் எமது உடல் இயற்கையின் ஓர்
மாபெரும் அதிசயம் என்று.


உணவு இல்லாமல் போனால்
அதற்கு ஒரு Backup Plan மட்டும்
இல்லை, மூன்று Backup Plans வைத்திருக்கிறது
எமது உடல்!

பட்டினி இருந்து உடல்
எடையை குறைக்கலாம்
என்பது உண்மை தான்.
ஆனால்,
அப்படி மெலிவது உங்கள்
உடலுக்கு ஆரோக்கியமற்றது! சத்துள்ள உணவு உண்டு உடற்பயிற்சி செய்தாலே போதும்,
சும்மா Top Model போல் உங்கள்
உடல் வந்துவிடும். ஆனால்
அதற்கு பொறுமை தேவை...!


-அறிவு டோஸ்
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum