ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1

Go down

கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Empty கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1

Post by கொ.பெ.பி.அய்யா. Thu Sep 18, 2014 6:06 pm

கரிசல் மண்ணில் ஒரு காவியம்

அத்தியாயம்--1

பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்,பள்ளி முடிந்து வந்தததும் அவளும் நானும்தான் விளையாடுவோம்.எங்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டே அப்பா அம்மா விளையாட்டுத்தான்.அப்போதே அதன் அர்த்தங்கள் புரிந்துதான் இருந்தது.ஆனாலும் அதை விளையாட்டாகத்தான் விளையாடினோம்.ஓடிப்பிடிப்போம் கட்டித்தழுவுவோம்.ஆனாலும் அப்போது ஆணென்ன பெண்ணென்ன பால் வேற்றுமை புரியவில்லை.
வேறு யாரையும் விளையாட்டுக்குச் சேர்ப்பது இல்லை.வேறு யாரும் எங்களையும் சேர்ப்பது இல்லை.ஏனெனில் எனக்காக அவளும் அவளுக்காக நானும் எவரிடமும் விட்டுக் கொடுப்பது இல்லை.

பக்கத்துப் பக்கத்து வீடு.நானும் என் அம்மாவும்தான்.என் அம்மா விடிந்து வேலைக்குப் போனால் அடைந்துதான் வீடு திரும்புவாள்.தினமும் கம்மஞ் சோறுதான்.பச்சை மிளகாயை கடித்துக் கொண்டு கஞ்சியாய்க் கரைத்துக் குடித்தால் அவ்வளவு ருசியாக இருக்கும். என் ஏழ்மை புரிந்து கொண்ட அவள் எனக்காக தேங்காய் துவையல் அரைத்து எடுத்துக் கொண்டு வந்து தருவாள்.

“ஏன் கரைத்துக் குடிக்கிறாய் துவையல் தொட்டுச்சாப்பிட வேண்டியதுதானே”
எனச்செல்லமாகக் கூறி நான் சாப்பிடுவதை பாவம்போல் பார்த்துக் கொண்டே இருப்பாள் .அவள் ஓரளவுக்கு வசதியானவள்தான். அவள் வீட்டில் தினமும் நெல்லுச்சோறு காலை மாலை இட்லி தோசைதான்.என் வீட்டில் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் தோசை,இட்லி.நெல்லுச்சோறு எல்லாம்..அதனால் நான் சாப்பிடும் இந்தக் கம்மஞ் சோறு அவளுக்கு ஆசையாக இருக்கும்போலும்.
“டேய் எனக்கும் கொஞ்சம் தாயேண்டா”
எனக் கேட்பாள்.நானும் மறுக்காமல்
“இந்தா நீயும் கொஞ்சம் குடி”
என்று ஒரு அலுமினியத் தம்ளரில் ஊற்றிக் கொடுப்பேன்.அப்போது அவள் ரசித்துக் குடிப்பதை பார்த்து நான் ஆனந்தம் அடைவேன்.

அவள் வீட்டில் என்ன பலகாரம் செய்தாலும் எனக்குக் கொடுக்காமல் அவள் சாப்பிட மாட்டாள்.அவளுடைய அம்மா நல்லவர்தான்.அவளுடைய ஆச்சிதான் சிடுமூஞ்சி.என்னோடு அவள் சேர்ந்து விளையாடுவதைக் கண்டாலே அவளுடைய ஆச்சி முனுமுனுப்பாள்`பள்ளிக்குப் போனாலும் வந்தாலும் சேர்ந்தே போவோம் சேர்ந்தே வருவோம்.அதைக்கண்டு எங்கள்வயதிலுள்ளவர்கள்.எங்களைப் பார்த்து புருஷன் பொண்டாட்டி எனவும் கேலி பேசுவார்கள் அதையெல்லாம் நாங்கள் கண்டு கொள்வதும் இல்லை.சில நேரங்களில் கேலி கிண்டல் அதிகமாகும் போது அவள் அழுவாள் .அப்போது சக மாணவர்களோடு நான் சண்டை கட்டுவதும் உண்டு.அடிபடுவதும் உண்டு.ஆனால் அந்த அடியும் வலியும் அவள் தடவிக்கொடுக்கும்பொழுது காணாமல் போய்விடும்.ஒரு நாள் ஆசிரியர் நான் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று என்னை அடித்து விட்டார்.அந்த வலியை நான் தாங்கிக் கொண்டேன் .ஆனால் அவளால் என்வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.அப்படியொரு இனம் புரியாத பாசம்.

தினமும் இரவுப் பாடம் படிக்க அவளுடைய வீட்டுக்குத்தான் பையை தோளில் போட்டுக்கொண்டு போவேன்.என் பாடங்களை எல்லாம் அவள்தான் எழுதிக்கொடுப்பாள்.அந்த நாளில் மின்சாரம் என்றால் நகரங்களில்தான் காணமுடியும்.கிராமங்களில் மண்ணெண்ணை விளக்குத்தான்.ஒரு விளக்கைக் கொளுத்தி வைத்துக்கொண்டு அதைச்சுற்றி வட்டமாக உட்கார்ந்துகொண்டு படிப்போம்.போதாத வெளிச்சம்தான்.குனிந்துகொண்டு மிகவும் உற்றுக்கவனிதுதான் பாடங்களைப் படிக்கவேண்டும்.தெருவிளக்குகள் கூட இல்லை அப்போது, நிலாக் காலம் மட்டும்தான் இரவில் வெளிச்சம்..மற்ற நாட்களில் வான் நட்சத்திரங்கள் மட்டுமே மங்கலான ஓரளவுக்கு உருவம் புரியும் அளவுக்கு மெல்லிய இருளாக இருக்கும்.எனக்கு இருள் என்றால் அப்போதே பயம்.அதனால் அவள்தான் என்னை வீடுவரை துணைக்கு வந்து உதவுவாள்.

வழக்கம்போல் பள்ளிக்குப் புறப்பட்டு தோளில் புத்தகப்பையை தூக்கிப் போட்டுக்கொண்டு "அவள் எனக்காகக் காத்திருப்பாள்" என நான் அவசர அவசரமாக வீட்டைவிட்டு வந்தேன்..எனக்குப் பள்ளிக்குச்செல்ல வேண்டுமே என்ற அக்கறையைவிட அவளோடு சேர்ந்து போவதில்தான் என்னையும் அறியாமல் எனக்குள் இருந்த துடிப்பு.இது எனக்கு அப்போது புரியவில்லை.இப்போது அதை எண்ணிப்பார்க்கும்போது அது பாலியல் ஈர்ப்புதான் எனப்புரிகிறது.எனக்கு ஆண் மாணவ நண்பர்களே இல்லை.அதை நான் விரும்பவும் இல்லை .எனக்கு எல்லாமே அவள்தான் எனும் ஒரு பற்று.அவளைக்காணாமல் என்னால் தனியே பொழுதைத் தள்ள இயலாது எனும் நிலை.அவள் ஒரு நாள் ஊரில் இல்லை என்றால்கூட அவள் வீட்டின் முன்ப்பாக உள்ள அந்த முருங்கை மரத்தைப் பிடித்துக்கொண்டு அவளோடு அதைச்சுற்றிச்சுற்றி அவளோடு விளையாடுவதுபோல் விளையாடிக்கொண்டு அவள் வீட்டு வாசலிலேயே கிடப்பேன்..இப்படியொரு பந்தம் எப்படி என நான் சிந்திக்கவும் பக்குவப்படவில்லை.அப்படியொரு முயற்சி எனக்குள் தோன்றவும் இல்லை.அது எல்லாமே அனிச்ச செயலாகத்தான் இருந்துள்ளது.

பள்ளிக்குச்செல்வதற்காக வேகமாக அவளைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்குள் அவள் பெயரைச்சொல்லி அழைத்துக்கொண்டு நுழைய முயன்றேன்.அவளுடைய ஆச்சி வாசலில் நின்றுகொண்டு
“டேய் எங்கடா போற “என அவசரமாகத் தடுத்து---
“அவள் இனிமேல் உன்னோடு வரமாட்டாள்”நீ போடா”என என்னை விரட்டுவதுபோல் அதட்டினாள்.
நானும் புரியாதவனாய்
“ஏன் ஆச்சி அவளுக்கு காய்ச்சலா”என் வினவினேன்.
அதற்கு ஆச்சி –
“ஆமாம் அப்படித்தான்.....நீ போடா!”என என்னை விரட்டிவிடுவதிலேயே குறியாக இருந்தாள்`
அதற்குள் என் அம்மா பின்னாலயே வேகமாக வந்து
“டேய் ராசா அவள் வரமாட்டாள்.இன்னுமே நீ மட்டுந்தான் தனியா பள்ளிக்கூடம் போகணும்.”
எனக்கூறி என் கையைப் பிடித்து இழுத்து அழைத்துப்போனாள் .
நானும் விடவில்லை மாறி மாறி என் அம்மாவிடம் கேட்டேன்
“ஏம்மா......ஏம்மா வரமாட்டாள் ,அவளுக்கு என்னம்மா,.....சொல்லும்மா .....சொல்லும்மா “ என அவசரப்பட்டேன்.
புரிந்து கொள்ளாத வயதில் அம்மா என்ன சொல்லுவாள்.!
“டேய் ,,நீ..சின்னப் பையன் ,உனக்கு இதெல்லாம் புரியாது. சொன்னாக் கேளு !
அம்மா சொல்ரேன்ல்ல.நீ மட்டும் போ ராசா” என என்னைச்சமாதானபடுத்தி அனுப்பிவைத்தாள்`
அப்புறம் கமலா என்னைப் பார்ப்பதும் இல்லை பேசுவதும் இல்லை. என்னை மறந்தாளோ நினைந்தாளோ தெரியவில்லை.

கொ.பெ.பி.அய்யா.


(தொடரும்.)
கொ.பெ.பி.அய்யா.
கொ.பெ.பி.அய்யா.
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 05/09/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum