ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்து இலக்கியம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

 சிந்து இலக்கியம் - Page 4 Empty சிந்து இலக்கியம்

Post by சிவா Thu Sep 18, 2014 3:29 am

First topic message reminder :


1. பழனியாண்டவன் காவடிச் சிந்து

நூலாசிரியர்: முத்துக் கறுப்பணன்


பழனிப்பதி வாழும் - வேலர்
பாதம்தனை நாளும்
உளமேதினம் துதிக்க - வினை
ஒடுக்கும் கதிகொடுக்கும்
வளமேவிய பரனே - சுத்த
மடவாழு தந்திமுகனே
அழகாகிய குருவாய் - எனக்
கருள்வாய் முன்பு வருவாய்
1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர் 1

சிவகிரியில் வாழ்வோன் - எனைத்
தினமும் குடி ஆழ்வோன்
தவமேவிய குமரன் - புகழ்
தானே அடியேனே
நவமீறிய காவடிச் - சிந்து
நாடத் தினம் பாட
புவனச் சரசுவதியே - சிந்து
புகல வருவாயே
2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது.
நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம் 2

கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி
கானத் தினைப் புனத்தில்
உள்ளமே மகிழ்வாகிக் - கிழ
உருவாய்ப் பரண் ஏகி
தெள்ளிய தினை மாவை - பொசித்
திலகும் அண்டர் கோவை
வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும் 3

துண்ட வெண்பிறை அணிவோன் - அருள்
சுத்தனைப் பரிசுத்தனை
அண்டர் கோன் பயம் - தீர்ப்போன்
அடியாரைத் தினம்காப்போன்
எண்டிசை பணி நேசன் - தவம்
இலகும் கிரிவாசன்
வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு
வருவாய் தோகைமயிலே
4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன்
துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன்
அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன் 4

செய்ய தாண்டவ ராயன் - அருள்
சேயனைக் கார்த்தி கேயனை
துய்ய குஞ்சரி பங்கனை - அயில்
துலங்கும் கர துங்கனை
உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர்
உளத்தில் குடி இருப்போன்
வையகம் புகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான்
சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன்
குஞ்சரி - தெய்வயானை 5

ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக்
கழகாகிய கண்ணன்
ஞானதே சிக போதன் - நவ
வீரரும் பணி நீதன்
தேனுலா விய கடப்ப - மலர்
செறிவோன் அருள் புரிவோன்
வானவர் பணி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன்
நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்
நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன் 6

திங்கள் சேர் நுதல் - மீனாள்
தருதேனை முருகோனை
எங்கள் நாயகப் பொருளை - பணிந்
தேற்றார் மனத் திருளைத்
துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத்
தொழுதே நிதம் கும்பிட்டேன்
மங்களம் உயர் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி
ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன் 7

இச்செகம் தனில் அடியேன் - உனை
ஏற்ற தினம் போற்ற
மிச்சமாய்க் கலிவருத்த - நான்
மெலிவேனோ அலைவேனோ
அச்சமாய்த் துயர் ஓட - அருள்
நாடகக் கவி பாட
வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை
வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல் 8

பூசுரர் வெகுமானி - சிவப்
பொருப்பில் வளர் ஞானி
தேச மேழும் புகழ் - காவடிப்
பூசை சிறக்கும் தமிழ்புரக்கும்
$........ ......... ......... ........
........ ......... ......... ........
வாசனை வடி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும்.
பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும் 9

படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும்
மான புகழ் குமரன்
துடிமீறு மும்முரசன் - தெய்வம்
தொழுவாழ் கொலு வாசன்
வடிவேல் முருகனையே - கொண்டு
வருவாய் தோகை மயிலே
10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன்
பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ்
துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த
மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு 10

கர்த்தனாகிய முருகன் - அருள்
கனியும் திரு மருகன்
பத்தர்கள் மிக வாழி! - நிதம்
படிப்போர் தினம் வாழி!
சுத்தமா நகர் வாழும் - முத்துக்
கறுப்பணன் சொல் நாளும்
சித்தமேவிய பெரியோர் - தினம்
செழித்து மிக வாழி!
11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள்
முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம் 11

பழனியாண்டவன் காவடிச் சிந்து முற்றும்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 சிந்து இலக்கியம் - Page 4 Empty Re: சிந்து இலக்கியம்

Post by சிவா Thu Sep 18, 2014 3:44 am


பிலத்தழுத்திட - பாதாளத்தில் அழுத்துவது போல் அழுத்திட
குடோரி - கீறி மருந்திடும் முறை; குடத்துவாய் - தலையின் ஓடு
வேளை - மருந்துச் செடி; கடுக்கினில் - விரைவில்

விரிவாயோர் ஓட்டை வைத்து ஓட்டு
மேல் கொடுந்தணல் தானெரிக்கில்
அடங்கிக் கிடந்த உயிர் காய்த்த
போல்வரும் சபை மெய்ப்புவரும்
காலன்தனை எழுப்பத் தந்திரம்
கற்றுணர்ந்தோர் சொன்ன வேத்தியத்தை
மேலான தந்திரத்தை யானும்
விஸ்தார மாய்ச்சொல்லத் தத்தையரே
கேளாய்நீ ஆடவர்க்கு ஞாளம்
கேள்படி ஆறுவிரல் நீளம் 235
231 - 235
சூதம் - ரசம்; களஞ்சி - சூதபாடானாம்
வேத்தியம் - முறை; தத்தையர் - கிளியனையர்
ஞாளம் - தண்டு

தாளாத மங்கையர்க்கு ஞாளம்
தானெட்டுக் கைவிரல் நீளமுமாய்
செம்பில் தகட்டி லடித்துவளர்
சென்னெலின் தாளின் பருவமொன்றும்
நம்பும் சிறுவிரல்போல் ஒன்று
ஞாள மிரண்டும் திரட்டியதை
ஊமத்தம் பூப்போல மேலாய்
ஒருபுறமும் விரிவாய் இருக்கும்(படி)
நேமித்துத் தண்டினிலே செல்ல
நீளம் அறுவிரல் ஞாளமதைச் 240
236 - 240
சென்னெல் - செந்நெல்; நேமித்து - வட்டமாக

செலுத்திக் குளத்தலையில் ஒரு
தீபத்தணல்வைத் ததின்மேல் சூதம்
நிலத்தில் அரைக் கழஞ்சி விட்டு
ஞாள வழிசென்று கீழிறங்கி
கால்கடி கடித்தே யுயிர்க்கை
கடந்தே உள்மெய் அடங்கி
மாலாய்க் கிடந்திடினும் சீவன்
வந்து புகுந்து கலந்திடுமே
பெண்ணாட்கும் இப்படியே செய்யப்
பிழைப்பள் உனக்கும் அளப்பிதுவே 245
241 - 245
கழஞ்சு - பன்னிரண்டு பண எடை
மாலாய் - மயக்கமாய்
சீவன் - உயிர்
அளப்பிதுவே - கூறமுடியாது 0

பண்ணும் தைலமொன்று செய்து
பட்ட பிணத்தையும் தொட்டெழுப்பிச்
செய்யும் வகைகேளாய் வளர்
செங்குன்றித் தோடுமியும் கருதி
துய்ய பருப்பெடுத்துக் கொண்டு
சோதித் தொருபிடி யோரதிலே
எருக்கன் இலைச்சாறும் வீழி
இலைச்சாறும் இரண்டும் ஒன்றாக விட்டுப்
பருப்பை அதில்போட்டு வைத்துப்
பத்துநாள் ஊறியெடுத் தரைத்து 250
246 - 250
செங்குன்றி - குண்டுமணி; வீழி - ஒரு வகை மருந்துச்செடி

கடிதாய் இரண்டும்ஒன்றாய்க் கட்டிக்
கஞ்ச கலத்தினில் அப்பிவைத்து
வெயில்முகத் திருக்க வைத்து
வீழும் தைலத்தைத் தானெடுத்துப்
பைய நிறுத்திக்கொண்டே அதில்
பாதிதான் வால்உளு வைஅரிசி
பொடித்தே உடன்சேர்த்து சேர்த்த
போதில் தைலத்தில் நாற்கழஞ்சும்
துடித்தாடும் சூதமொன்று நாற்றம்
தோன்றிய கெந்திவிருகன் ஒன்றும் 255
251 - 255
கடிதாய் - வேகமாய்; கஞ்சக்கலம் - வெண்கலம்
வால் உளுவை - ஒரு மருந்து (பெருஞ்சீரகமாகவும் இருக்கலாம்)
கெந்திவிருகன் - கந்தகம்

கூட்டி உத்தாமணியின் பஞ்சில்
கொள்ளவே தோய்த்ததை மெள்ளவைத்து
நாட்டில் அடக்கமுற்ற பேர்க்கு
ஞாளத்தைத் தண்டினிலே செலுத்தி
இருப்புச் சிலாகையொன்று ஞாளம்
நின்றமட்டும் விட்டுக் கொண்டிருந்தால்
உடனே எழுந்திருந்து பேசும் உண்மை
என்றே சொன்னார் இன்னமொன்று
சுடர்நாறும் கந்தகமும் காயம்
சூதம் எருக்கம்பால் வார்த்து 260
அரைத்து வழித்தெடுத்து வெள்ளை
ஆடையில் பூசித் திரியாக்கி
திரித்தே அனல்கொளுத்தித் தண்டில்
சேர்ந்திடும் நாளம்புகவே புகைத்தால்
அடக்கம் எழுப்புமென்று சொல்லிப்
போதித்தார் ஆருடம் சோதித்தவர்

விருத்தம்

நச்சர வான தெல்லாம் நாட்டில்மா னிடரைத் தீண்டிக்
குச்சித விடங்கள் மிஞ்சிக் கொடுவிடம் தலைமேல் கொண்டால்
வெச்ச மந்திர தந்திரத்தால் மருந்தினால் தீரா விட்டால்
உச்சித மாகத் தீர்க்கும் கெருடனை உரைக்கல் உற்றேன்

சிந்து

வேதியர் குலத்தின்கண் காசிபர்க்கு
வினதை பயந்தெடுத்த கனயோகன்
சாதியில் பட்சிராசன் அருணனுக்குத்
தம்பியென உதித்த கம்பீரன் 265
261 - 265


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிந்து இலக்கியம் - Page 4 Empty Re: சிந்து இலக்கியம்

Post by சிவா Thu Sep 18, 2014 3:44 am


ஆருடன் சோதித்தவர் - முதல் நூல் ஆசிரியர்
நச்சரவு - நஞ்சினையுடைய பாம்பு
குச்சித - அசுத்தமான; உச்சிதம் - அருமை
வினதை - இவள் தட்சன் குமாரி; காசிபர் தேவி; கருடன், அருணன்,
சடாயு, சம்பாதி,சேநன் முதலியவர்களைப் பெற்றவள்.
கனயோகன் - கருடனின் பட்டப் பெயர்

அட்டமா நாகங்களைப் பாதாளம்
மட்டும் துரத்திவென்று வாகை புணைந்தோன்
துட்டனெனும் இந்திர ஜித்து தொட்ட நாகக்
கட்டுவிடந் தட்டுக்கெட விட்டபெரியோன்
பலத்தினில் சவுரியத்தில் ஒப்பில்லாப்
பலசாலி யானவெகு குணசாலி
குலத்தினில் பிரமகுலன் கீழ்க்கடல்
குடகடல் தென்கடல் வடகடலும்
நொடியினில் சுற்றிவருவோன் பாற்கடல்
நடுவினில் கண்வளரும் நாரணற்கு 270
266 - 270
துட்டனெனும்...பெரியோன் - இந்திரஜித்தின் நாகபாசத்தால்
கட்டுண்ட இலக்குவனைக் காப்பாற்றி நாகபாசத்தைப்
போக்கி இராமனின் அருளைப் பெற்ற கதை கூறப் பெறுகிறது.
சௌரியம் - வீரம்; நாரணர் - திருமால்

கொடிவாகன மானோன் தீவில்ஒரு
கோடிநிசா சரரைத் தேடி நுகர்ந்தோன்
கதியினில் நிலத்தின் காணும்நிலவும்
கனலியம் துதிசெய்யு மதிவேகன்
தாவில்நெடு மூக்கினாலும் சிறகாலும்
தடக்கையினாலும் இரு தாளினாலும்
மலைத்தவர் வெருண்டோட வென்றுசெய்
வாகை புனைந்து மனம் ஓகையுடன்
தலத்தினில் சிறுதாயாம் கத்துருமுன்
தங்கக் குடத்தமு தங்கே வைத்துச் 275
271 - 275
நிசாசரர் - இரவில் சஞ்சரிப்பவர்,அரக்கர் (பாம்பும் எனலாம்)
கனலி - ஞாயிறு
கருடன் தன் சிறிய தாயான கத்துரு என்பாள் முன் அமிர்தத்தைக்
கொண்டுவந்து வைத்து தன் தாயான வினதையின் இடுக்கண்
தீர்த்த வரலாறு கூறப்பெறுகிறது.
வினதையின் இடுக்கண்: இந்திரன் குதிரைவால் வெள்ளையா
யிருப்பது என்றும், அன்றாயின் நினக்கு அடிமையாவேன்
என்றும் வினதை கத்துருவினோடு பந்தயம் வைக்க, அவள்
அதனை வஞ்சனையால் கரிய தாக்க அஃதறியாது அவளுக்கு
அடிமையாகி வருந்துதல்.
அதனைக் களைதல்: இந்திரன் அமராவதிக்கண் கொண்டு
வைத்த அமிர்தம்தரின் அவள் அடிமை நிலை ஒழியுமென்று
கத்துரு சொல்ல அவளுக்குக் கருடன் அதைக் கொண்டு
வந்து கொடுத்துத் தாயை அடிமைத் தளையிலிருந்து மீட்டது.
(பரிபாடல் - உ.வே.சா பதிப்பு பக் 20)
ஓகை - உவகை - மகிழ்ச்சி 0

சாபத்தை அறத்தீர்த்த சுத்த வீரன்
தானும் தனக்கிணை தானானவன்
சிவதவநியமம் பெற்றோன் கெருட தியானம்
சிறகுரெண்டும் பச்சை நிறமாய்
விளர்சிவப்பாக மேனி முற்றிலும் (கண்டம்)
வெள்ளை நிறமாக விண்மண் ஒன்றாய்
அளவிடல் போலும் நிமிர்ந்த உருவமுமாக
அமுதகுடம் கரத்தில் வைத்து
திதிதரும் அசுரர்களும் அதிதி தரும்
சிறுவரும் பாற்கடல் அதனில் அமிர்தம் 280
276 - 280
நியமம் - நெறி
திதி - அசுரர்களின் தாய்
அதிதி - தேவர்களின் தாய்

கடைந்திட மேருவரையை வேரோடும்
பிடுங்கி மத்தாக நட்ட பெருமையினான்
மடந்தைக் கத்துருவெனும் தாய்சொல் சபத
மாற்றிட வேணுமென்று மனம் துணிந்து
பறந்து விண்ணுலகில் சென்று தெய்வேந்திரன்
பதியில் கருவூரில் மதிள்கதவைத்
திறந்துகொண்டு உள்புகுந்து காத்திருந்த
தேவ கணங்களையும் ஓட விரட்டி
பொற்குடம் நிறைந்திருக்கும் அமிர்தத்தைப்
பொற்புடனே எடுத்து வௌியில் வந்து 285
281 - 285
தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்தபோது மேருமலையை
மத்தாகக் கொண்டு வந்து நிறுத்தியவன் கருடன்;
தாயின் துன்பத்தைத் தீர்த்தவன்.
தெய்வேந்திரன் - தேவேந்திரன்

மாற்கெதிர் பொருளை அயிராபதம்
முதல் முப்பத்து மூன்று கோடி
தேவர் கின்னர முனிவர் கந்திருவர்
சித்தியர்களா சுத்தி வளைந்தோரைப்
பேறாக மணிகோடி செபம் செய்த
பலபணி வண்ணமாலை தரித்தவராய்
பொன்னாடை ரெத்தினமகுடம் நுதலிலும்
சென்னியிலும் தரித்த திறத்தினராய்
மாலோனைப் புயத்தில் வைத்துக் கருணைநீர்
வழிந் தொழுகிய திருநயனமுமாய் 290
286 - 290
மாற்கெதிர் - போர்செய்வதற்கு எதிர்ந்த
கின்னரர் - பதினெண் கணத்துள் ஒருவர்
சித்தியர் - தெய்வமங்கையர்
நுதல் - நெற்றி; சென்னி - தலை; மாலோன் - திருமால்

மேலான விண்ணிற்பறந்து திசையெட்டும்
விளங்கவே இருளெனும் களங்கமற
வருபவராக நினைந்து கருடனை
மனதினில் தியானம் செய்ய வல்விஷங்கள்
பருதியைக் கண்ட பனிபோல் தட்டுக்கெட்டுப்
பறந்திடுமே உயிர் சிறந்திடுமே

மருந்துப் புடலம்

விருத்தம்

துதித்திடும் பணிகள் நான்கின் தோற்றமும் ஒடுக்கம் தானும்
விதித்திடும் வெவ்வே றான சாயின விதங்கள் தானும்
பயிற்றிடும் எயிற்றால் உற்ற குணங்களூம் வகுத்தேன் இப்பால்
கதித்திடும் விஷத்துக் கெல்லாம் மருந்தினைக் கழற லுற்றேன்

சிந்து

அத்தர்தென் மருதூர் காரண
சித்தர்புர மெரித்த தேவதேவர்
மத்தொடு கடுக்கை தும்பை கங்கைபிற
வைத்த சடிலர் யோகத்த ரானோர் 295
291 - 295


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிந்து இலக்கியம் - Page 4 Empty Re: சிந்து இலக்கியம்

Post by சிவா Thu Sep 18, 2014 3:44 am


பருதி - சூரியன்; பணி - பாம்பு
எயிறு - பல்; கதித்தல் - மிகுதல்
புரம் - திரிபுரம்; மத்து - ஊமத்தை
கடுக்கை - பாம்பு; சடிலர் - சடையினை உடையவர்

கடுவமர்காள கண்டர் மான்மழுக்
கரத்தர்புலிச் சரமுரித் துடுத்தோர்
நடுவனை உரத்து தைத்தோர் தேடிமுன்
நாரண நான்முக ரானவர் காணாதவர்
சேடனுக்காக வந்நாள் சுயம்புதிரு
வுருவாக வந்த செகதீசர்
வேடனுக் கருள் புரிந்தோர் நாகய்யன்
வேதனுக்கன்று ரசவாதம் புகன்றோர்
தரித்திரந் தீரமதி மால் தனக்குமுன்
தந்தோலையர் திகிரிதனை யளித்தோர் 300
296 - 300
கடுவமர் - நஞ்சினையுடைய
காளகண்டர் - கரிய கண்டத்தை உடையவர்
புலிச்சரம் - புலித்தோல்; நடுவன் - யமன்
மார்க்கண்டேய வரலாறு இவ்வரியில் கூறப்பெறுகிறது.
சேடன் - ஆதிசேடன்; வேடன் - கண்ணப்பன்
நாகய்யன் - திருமரூதூர் இறைவன் பெயர்
திகிரி - சக்கரம்

கிரித்தளப் படையுடையோர் பணிமொழி
கிரியர சீன்றெடுத்த கிரிமகளும்
மலர்மகள் கலைமகளும் அருந்ததி
வனதுற்கை யகலிகை மாது
தவமுறு நெடுமாலும் கௌதமன்
சதுர்முகன் பருதி சந்திர முருகன்
பாணபத்திரன் கபில ெனெட்டு
மானாகர் அகஸ்தியர் திசைபாலர்
சேணிலத் தமரர்களும் முனிவரும்
தெரிசித்துப் பூசைசெய்யக் கதிகொடுத்தோர் 305
301 - 305
கிரித்தளப்படை - முத்தலைவேல்
கிரியரசன் - இமயத்தரசன்
கௌதமன் - முனிவன்
சதுர்முகன் - நான்முகன்; பருதி-சூரியன்
பாணபத்திரன் - மதுரையிலிருந்த பாடகன்

மெய்யென நம்பும் அடியார் தங்களுடை
வெய்யவினை யகற்றி விளங்கவைப்போர்
பொய்யெனச் சொல்வர்பால் ஒருநாளும்
புகுதாதவர் வினை கருதாதவர்
கலியுக வரதரென விளங்கிய
காரணத்தர் சதுரா ணத்தர்
மலைமகள் அழகிய நாயகிதனை
வலப்பாகம் வைத்துகந்த மகிமையாளர்
பத்தர்கள் பரிபாலர் நாகலிங்கர்
பாதமலர் எனது சிரத்தில் வைத்து 310
306-310
மலைமகள் - மலையத்துவசன் மகள், பார்வதி
பரிபாலர் - காப்பாற்றுபவர்

சித்தர்கள் அதிசயிக்கும் நாகமுதல்
சிற்றெறும் பாதியாய்ச் சேர்ந்த விஷயங்கள்
தீர்ந்திட நசியங்களும் ஒற்றிடச் செய்யும்
விஷமும் விடம் தீண்டினவுடன்
மாந்திடற்குள் மருந்து மாத்திரையும்
மையும் குழம்பும் கையிகிள்ளாக்கையும்
சோற்றினில் பாகில் கொடுக்கு மூலிகை
துவரும் முறுக்கும் கடிவாயில் பூச
மாற்றிடு...கா...ம் அஞ்சனமும்
வகைவகை யாகவேயான் பகருகின்றேன் 315
311 - 315
நசியம் - மூக்கில் இடும் மருந்து
மாந்துதல் - குடித்தல்; பாகில் - தேனில்
கடிவாயில் - பாம்பு கடித்த இடத்தில்

சோதனை பார்க்க வேளை வேர்தின்னத்
துவக்க கசக்க விஷமில்லை என்னலாம்
போதவே இனித்ததென்றால் நல்லபாம்பு
புளிக்கில் வழலை துவர்த்திடில் விரியன்
செருக்கிடில் மயக்கர் வரள்உப்பு
உறைக்கில் சிறிய புடையன் என்று அறிவாயே
நருக்குறு மிளகுரைக்கில் மண்டலியாம்
நாக்கில் கடுக்கில் மூர்க்கனாம்
இப்படி அறிந்திடுநீ சோதனை
எல்லா விடத்துக்கும் ஏக நசியம் 320
316-320
வேளை - ஒரு வகை மருந்துச்செடி
செருக்கிடில் - இருமிடில்; வரள்உப்பு - படிகாரம்
மிளகு - உணவுக்குரிய மிளகு 305

செப்பவும் கேளணங்கே வெற்றிலை
சிறியமிளகு கறியுப்பு நறுக்கிக்
கண்செவி மூக்கில் பிழியஉடல் விட்டுவிண்
புகுந்திட்ட உயிர் மீண்டு வருமே
பண்ணேர் மொழியினமே முருக்கிலை
படரும் எருக்கினில் தும்பை இலையும்
பிழிந்திடில் நாசிதனில் உடல்விட்டுக்
கழிந்த உயிரும் வந்து கலந்திடுமே
குளிர்ந்திடும் துளசியிலை தும்பையிலை
கொடிய மிளகும் கறியுப்பும் கசக்கி 325
321 - 325


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிந்து இலக்கியம் - Page 4 Empty Re: சிந்து இலக்கியம்

Post by சிவா Thu Sep 18, 2014 3:44 am


அணங்கு - பெண்
பண்ணேர் மொழியினம் - இசையினை ஒத்த
மொழியினை உடைய பெண் இனம்
எருக்கு - எருக்கஞ்செடி; கறியுப்பு - உணவுப்பு

நாசியில் பிழிந்திடவே உயிர்விட்டுப்
பேசாமல் கிடந்த பிரேத மெழுமே
வீசிய முதல்வேகம் கண்சிவக்கில்
வெள்ளுள்ளி பெருமரப்பட்டை வசம்பு
பீநாறிப்பட்டை சிறுநீர் மூக்கினில்
பிழிந்திட முதல் வேகம் ஒழிந்திடுமே
ஆனாவிரண்டு மூன்று வேகத்துக் காற்றும்
மிளகு சுக்கு கடுகு இந்துப்புச்
சாரணை வெற்றிலையின் சாற்றினில்
தட்டி நசியமிட விட்டோடுமே 330
326 - 330
பிரேதம் - உயிரற்ற உடல்
வெள்ளுள்ளி - வெள்ளைப்பூண்டு
பெருமரப்பட்டை - பெருங்கள்ளிப்பட்டை (தலைச்சுருளிஎன்றும் கூறுவர்)
பீநாறிப்பட்டை - மருந்துப் பட்டை

காரணமாக வேகம் நாலைந்து
கடுகுமோர் ஆறேழுக்கு நசியம்
புகன்றிடும் இலுப்பைக் கட்டி நறுக்கியே
பொடித்துச் சிறுநீர்விட்டு மூக்கில் பிழிய
அகன்றிடும் அந்தவேகம் அப்பாலெட்
டதிவேகம் வந்தெழுந்து மதி மயக்கில்
கெந்தகமுள்ளி வசம்பு மிளகுடன்
கெடியான தும்பை துளசியிலை
தந்திடு முலைப்பாலும் நாசியில்
தறுகாமல் பிழிந்திட மறுமறுகிடுமே 335
331 - 335
இலுப்பைக்கட்டி - இலுப்பைப் புண்ணாக்கு
சாரணை - ஒரு வகைப் பூண்டு
கெந்தகம் - கந்தகம்; உள்ளி - வெங்காயம்
மறுமறுகிடும் - விஷம் நீங்கிடும்

சீலையில் எருக்கலாம்பால் தைவேளை
சிறந்திடும் சாறும் பெரும்பறட்டைச் சாற்றொடு
வேலை வைத்துத் தீயிடு சிறுநீர்தனில்
விட விடம் அறுமே
கொடிக்கள்ளிப் பால்கறந்து சீலையில்
கொள்ளவே தோய்த்துலர்த்திச் சுக்கும் வசம்பும்
அடித்திடும் பச்சைப் பாம்பு மிளகுகாயம்
அம்புவில் வமும் சமன் கூட்டித்
திரித்திடு துணியில்வைத்துத் திரிதனதை
தீயில் கொளுத்தி நெடுமூக்கில் புகைக்க 340
336 - 340
சீலை - மருத்துவத்திற்குப் பயன்படும் காரச்சீலை
எருக்கலாம்பால் - எருக்கஞ்செடியின் பால்
தைவேளை - தைவளைச் செடி
கொடிக்கள்ளி - காரமுள்ள கள்ளி
அம்பு - திப்பிலி; சமன் - சமமாக

மரித்திடும் மரணமெனினும் சீக்கிரம்
கருத்துடனே எழுப்பும் காலனில்லையே

ஒற்றடம் துவாலை

ஒற்றிடும் வேலிப்பருத்தி தைவேளை
ஊருடன் முதலியார் பூனை வணங்கி
மற்றுள்ள வேர்குருந்தும் பொன்னிறமாய்
வறுத்துடன் ஒற்றஉயிர் நிறுத்திடுமே
கீழ்வாய் நெல்லி துளசி முருக்கிலை
கிளறுமொடு வடக்கியிவை நாலும்
தாழாமல் இடித்தெடுத்துப் பிழிந்திடும்
சாற்றினைச் சடலமெங்கும் தேய்த்திடப்போம் 345
341 - 345
மரித்திடும் - இறந்திடும்
வேலிப்பருத்தி, தைவேளை - மருந்துச் செடிகள்
பூனைவணங்கி - குப்பைமேனி; வடக்கி - வதக்கி
சடலம் - உயிரற்ற உடம்பு

பேய்ச்சுரை பேய்க்குமட்டி .... ளிசிலை
பேய்ப் பீர்க்கில் சிறுநீர் விட்டிடித் தெடுத்து
தேய்த்திடு சடமுழுது விடத்தினால்
செத்த பிணமும் எழுந்திருந்திடுமே
முறுக்கி ஆணைவணங்கி சமூலம் கொடுவந்து
துவைத்துப் பூசி முறுக்க
உள்ளுக்குத் தூள்மருந்து கொல்லன் கோவைக் கிழங்கு
குப்பைக் கிழங்கு கையெடுத்தொழுது முழுது
தெள்ளிய சுலை சுருளி வேரிவை
திருந்தவிடத்துத் தெள்ளி வெருகடித்தூள் 350
346 - 350


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிந்து இலக்கியம் - Page 4 Empty Re: சிந்து இலக்கியம்

Post by சிவா Thu Sep 18, 2014 3:45 am

பேய்ச்சுரை,பேய்க்கும்மட்டி,பேய்ப்பீர்க்கு - மருந்துச் செடிகள்
ஆனைவணங்கி - தேள்கொடுக்குப் பூண்டு
சமூலம் - வேர்முதல்; உள்ளுக்கு - உடம்பினுள்
கொல்லன் கோவை - ஒரு செடி

அள்ளியே எடுத்து வெந்நீர்தனில் கொள்ளக்
   கொள்ளை விடங்கள் எல்லாம் குடிபோமே
   பேயருசும் சமனாகக் கொண்டு வந்து
   பெரியகுந் தாணியில் துவைத்தெடுத்து
   காய்பிஞ்சுறு காராட்டின் நீர்விட்டு
   கலந்திரவு முழுதும் கலத்தூறில்
   பகலினில் நிழலுலர்த்தித் தூள் பண்ணிப்
   பலபல விடத்துக்கும் வெருகடித்தூள்
   சுகமுள்ள வெந்நீரில் கலக்கியே பயந்
   துடவிட மெல்லாம் சுருண்டிடுமே 355
351 - 355
கொள்ளைவிடங்கள் - மிகுதியான நஞ்சு
குடி - விலகி; குந்தாணி - பெரிய உரல்

சித்தராரூட நொண்டிச் சிந்து முற்றும்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிந்து இலக்கியம் - Page 4 Empty Re: சிந்து இலக்கியம்

Post by சிவா Thu Sep 18, 2014 3:47 am

5. எண்ணெய்ச் சிந்து

(ஆசிரியர் பெயர் தெரியவில்லை)


காப்பு

சீர்பூத்த தென்குடவை தேவி ஆனந்தவல்லி
பார்பூத்த செங்கமலப் பாதம் தனைப்போற்றி

1. சீர்புத்த - சிறப்பு மிகுந்த
பார்பூத்த ... பாதம் - அன்னையின் திருவடி உலகின்
தோற்றத்திற்குக் காரணம் என்றபடி. "இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன"- ஐங்குறுநூறு 1

செப்பரிய எண்ணெய்ச் சிந்து தனைப்பாட
கற்பகக் கன்றான கணபதி காப்பாமே
2. கற்பகக் கன்று - அருள் வழங்கும் இளங்களிறு 2

வெள்ளைக் கலையாளே வெண்டா மரையாளே
தெள்ளரிய ஞானத் திரவியமே வந்துதவாய் 3

வீறுதரு சூரர்களை வென்றுலகைத் தானாண்ட
ஆறுமுகனே அடியாற்கு வந்துத வாய் 4

தெள்ளரிய எண்ணெய்ச் சிந்து தனைப்பாட
வள்ளி தெய்வானை மலரடியே காப்பாமே 5

கடவுள் வாழ்த்து

பனிமதிச் சடையாள் ஈசன் பரமனார் பாதம் போற்றி
கனியிதழ் உமையாள் சோதி காரணி தன்னை வாழ்த்தி
6. காரணி - காரணமானவள் 6

புனிதமாம் எண்ணெய்ச் சிந்தைப் புவிமிசை பாடுதற்குத்
தனியொரு கடவுளான தந்தியைச் சிந்தை செய்வோம்
7. கடவுளான தந்தி - ஆனை முகக் கடவுள் 7

அடிமுடி இல்லான் பின்னும் யாவையும் படைத்தோன் என்றும்
படிநமக் களக்கும் ஈசன் பரமனார் கிருபை யாலே 8

மடிதனில் அமிர்த மூட்டி வளர்த்தாய் மனதி ரங்கி
சடுதியில் அனுப்பு மம்மா சரணம் சரணம் தாயே
9. மடிதனில் - கருவறையில்; சடுதியில் - விரைவில் 9

வேறு

மண்ணுலகும் விண்ணுலகும் மற்றும் புவிவாழ்க
எண்ணும் புவியில் இருநிதியம்தான் பெருக
10. இருநிதியம் - பெருஞ்செல்வம் 10

கோதில்லா ஞானக் குருதே சிகனருளால்
தீதில்லா எண்ணெய்ச் சிந்துதனைப் பாடுகிறேன்
11. கோது - குற்றம் 11

ஒன்றுமில்லாக் காலம் உலகம் யாவும் படைத்து
இன்றுநமை நடத்தும் ஏகன் திருவருளால்
12. ஒன்றுமில்லாக் காலம் - மகா சங்காரகாலம், கடையூழிக்காலம்
ஏகன் - ஒப்பற்ற ஒருவன் (ஏகன் அநேகன் - திருவாசகம்) 11

முட்டைக் கருவால் முடிந்து புவிதனிலே
விட்டஇறை யோன்இரக்கம் விள்ளமுடியாது
13. இறையோன் இரக்கம் - உலகினைப் படைத்த தனிப்பெருங்கருணை 13

எட்டாது புத்திதன்னால் பாவிக்கக் கூடாது
சட்டமெமைப் படைத்த சுவாமி கிருபையதால்
14. பாவிக்கக் கூடாது - பாவனைக்கு எட்டாது, நினைப்பரிது
சட்டமெனப் படைத்த என்றும் பாடம் 14

திட்டமதாய்ச் சூழுகின்ற தீவினைக்கெல் லாம்பிழைத்து
சட்டமாய் இப்போ தமிழறியும் காலமதில்
15. சட்டமாய் - சட்டம் - செப்பம்.
சட்ட - செப்பம் உணர்த்த நின்ற தோர் இடைச்சொல்
அது சட்டம் என மருவியது. (சிவஞானமுனிவர்) 15


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிந்து இலக்கியம் - Page 4 Empty Re: சிந்து இலக்கியம்

Post by சிவா Thu Sep 18, 2014 3:47 am



துட்டத் தனம்போக சூதுவஞ் சனையகல
பட்டமரம் தனிலே பச்சைத்தளிர் ஆனாற்போல 16

ஆவ லுடனே அண்ணாவி தன்னிடத்தில்
பாவ புண்ணிய மறியப்பள்ளிக்கு வைத்ததுவும்
17. அண்ணாவி - கூத்து முதலியன பழக்குவோர் -
இங்கு எழுத்தறிவிக்கும் ஆசிரியரைக் குறித்தது
பள்ளிக்கு வைத்தல் - பள்ளிக்கு அனுப்பல் 17

அண்ணாவி தாமும் அறிவித்த ஞானமது
நண்ணாகச் சொல்லுகிறேன் நாட்டிலெந்தன் மாதாவே 18

மண்ணும் புவியில் மணவாளனும் மாதும்
மின்னதிகச் செல்வம் மிகவாழ்ந் திருக்கையிலே
19. மணவாளன் - கணவன் 19

புத்திரனே வேணுமென்று புண்ணியம்செய் யத்துணிந்து
சத்திரங்கள் அம்பலங்கள் சாலை மடங்கள்செய்து
20. சத்திரம் - தங்கும் இலவசக் கூடம்
அம்பலம் - மன்றம்; சாலை - உணவிடுமிடம் 20

ஆதித்த வாரம் வாசி ஆதரித்து
நீதியுடன் தானதவம் நேராக வேபுரிய
21. ஆதித்த வாரம் - ஞாயிறு; வாசி - மூச்சோட்டம் 21

கண்டு சிவனார் கருணை மிகவிரங்கி
தொண்டு மிகச்செய்த தோகையாள் தன்வயத்தில்
22. வயத்தில் - வயிற்றில் 22

சற்புத் திரனாகத் தானருளிச் செய்தனராம்
விற்புருவ மாதுநல்லாள் மேன்மையுடன் பெற்றெடுத்த
23. சற்புத்திரனாக - உயர்ந்த மகனாக 23

வல்ல பிறையும் வளரும் வகைபோல்
செல்லக் குமரனையும் சீக்கிர மாய்வளர்த்து 24

பண்ணு தமிழைப் படிப்பிக்க வேணு மென்று
மன்னவனும் தேவியுமாய் மனதில் மிகநினைந்து
25. பண்ணு - ஓசை 25

காலுக்குத் தண்டை கழுத்துக்குக் காறையுடன்
கோலவர்ணச் சோமனையும் கொய்து மிகவுடுத்தி
26. காறை - கழுத்தணியுள் ஒன்று; சோமன் - வேட்டி
கொய்து - கொசுவி, மடித்து 26

வீரச்ச தங்கை விரலுக்கு மோதிரமும்
ஆரமிகப் பூட்டி அன்பாய் அலங்கரித்து
27. ஆரம் - மாலை 27

திரிபுண்ட ரீகத் திருநீறும் தான்பூசி
வெறிமாலை சுற்றி விளங்கு திலகமிட்டு
28. திரிபுண்ட ரீகம் - திரி புண்டரம், மூன்றுவரியாய்ப்
பூசும் திருநீறு; வெறிமாலை - மணமிக்க மாலை 28

காதில் கடுக்கனிட்டுக் கனத்த முருகும் தூக்கிச்
சீதநறும் வெள்ளி எழுத்தாணி தான்சேர்த்து
29. முருகு - காதணியில் ஒன்று; கனத்த - பருத்த 29

வாத்தியார் தன்னை வரவழைத்து அந்நேரம்
கோத்திரத்தில் உள்ளோரும் கூடி மிகஎழுந்து
30. கோத்திரத்தில் உள்ளோர் - சுற்றத்தார் 30


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிந்து இலக்கியம் - Page 4 Empty Re: சிந்து இலக்கியம்

Post by சிவா Thu Sep 18, 2014 3:47 am



பள்ளிக் கூடத்தில் பண்பாகச் சென்றுபுக்கு
விள்ளரிய ஞான விமலன் திருவருளால்
31. விள்ளரிய - கூறமுடியாத 31

சாணியைக் கொண்டு தரையை மிகமெழுகி
பேணியே தூபமிட்டுப் பிள்ளையா ரைநிறுத்தி
32. சாணி - பசுவின் சாணம் 32

வாசமலரும் மகிழருகும் தான் சார்த்தி
நேசமிகும் தாம்பூலம் நிறைநாழி தானும்வைத்து
33. மகிழருகு - அருகம்புல்
தாம்பூலம் - வெற்றிலை பாக்கு
நிறைநாழி - மங்கலக்குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி 33

கடலைஅவல் பயறு கனிவகைகள் சர்க்கரையும்
விடலையுயர் தரமிக்க வாழைப் பழமும்
34. விடலை - திண்ணிய 34

மாம்பழம் பலாப்பழமும் வரிசையா கப்படைத்து
சாம்பிராணி கற்பூரம் தாலத் திருவிளக்கும் 35

தாம்பிரம் வெள்ளிபொன் குருதட்சனை தானும்வைத்து
ஆம்பொருளான மத யானைமுகனைத் தொழுது 36

சீராக வாத்தியார் செய்யபனை ஓலைதனை
நேராகச் செப்பமிட்டு நிறைந்தமகு டம்பிடித்து
37. மகுடம் - தொடக்கத்தில் முழங்கும் பொருள் நிறைவுடைய
சொற்கள், அறிவோம் நன்றாக என்பது போல. 37

அரிஎன்ற எழுத்தை அப்போதி லேஎழுதி
தெரியப் படுத்தி சித்தரியும் தானெழுதி
38. அரி - கல்வி தொடங்குமுன் அறிவோம் நன்றாக
எனத் தொடங்குதலின் முன் எழுத்துக்கள்-அரி-
திருமாலைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது 38

கற்பகக் கன்றைக் கைதொழுது ஆதரித்து
அற்புதமாய் மைந்தனையும் அருகிலே தானிருத்தி
39. கற்பகக் கன்று - ஆனைமுகன் 39

கையைப் பிடித்து கதிபெறவே அண்ணாவி
மெய்யாக அண்ணாவி மெய்ஞ்ஞான மேவழங்க
40. கதி - பேறு; மெய்ஞ்ஞானம் - உண்மைஅறிவு 40

அரிவரி கொன்றைவேந்தன் அன்னையும் பிதாவுடனே
விரிவான எண்சுவடி மிக்க உலகநீதி
41. அரிவரி - அகரமுதலாகக் கோவை செய்யப்பட்ட
வரி வடிவ எழுத்துக்கள் 41

பிள்ளையார் விருத்தம் பெரியஅவ்வை மூதுரையும்
வள்ளுவமாலை வளம்குறள் நாலடியார் 42

நல்லபொருளை நவிலும் திவாகரமும்
சொல்லரிய நிகண்டும் சுப்பிரமண்யர் புகழும்
43. திவாகரம் - நிகண்டு. சேந்தன் எனும் அரசன் காலத்தில்
திவாகர முனிவரால் இயற்றப்பட்டது.
சுப்ரமண்யர் புகழ் - திருப்புகழ் 43

நல்பிள்ளைத் தமிழும் ராசரிசி பாடல்களும்
நல்ல புவியில் நலமுடனே எங்களுக்கு
44. ராசரிசி - ராஜரிசி - இளங்கோவடிகள் 44

படிப்பித்தார் வேறுபல சாஸ்திரம் தன்னையும்
படித்தோம்காண் மாதாவே பாருலகில் அண்ணாவி
45. சாஸ்திரம் - கலை நூல்; காண் - முன்னிலை அசை
அண்ணாவி நெடியோன் - அண்ணாவியாகிய பெரியோன் 45


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிந்து இலக்கியம் - Page 4 Empty Re: சிந்து இலக்கியம்

Post by சிவா Thu Sep 18, 2014 3:48 am


நெடியோன் திருவருளால் நிமிடமிது தட்சணமே
வடிவாக எண்ணெய்தனை வாங்கிவரச் சொன்னார்கள்
46. தட்சணம் - உடன் 46

என்றறிந்து நாங்கள் இயம்பியசொல் தட்டாமல்
சிந்தை மகிழ்ந்து திருத்தாள் கரம்குவித்து
47. திருத்தால் கரம் குவித்து - திருவடிகளைத் தொழுது 47

சனி எண்ணெய்க் கென்று வந்தோம் தாயே சலியாதே
இனிதான நல்லெண்ணெய் இலுப்பெண்ணெய் ஆனாலும் 48

நான்கெண்ணெய் ஆனாலும் நறுநெய் ஆனாலும்
மங்கெண்ணெய் முத்தெண்ணெய் பொதுவாய்ச் சேர்த்தெண்ணெய் 49

எந்தநோ வானதுக்கும் எருக்கிடுமே வேப்பெண்ணெய்முதல்
எந்தஎண்ணெய் ஆனாலும் இப்போதே விட்டனுப்பு
50. எருக்கிடும் - அழித்திடும் 50

பேரம்மை சிற்றம்மை பெரியதாய் உடன்பிறந்தாள்
அத்தைமகள் மதனி அன்பான மச்சினமார்
51. பேரம்மை - பெரிய தாய்; சிற்றம்மை - சிறிய தாய்
மதனி - மைத்துனி 51

இத்தனை பேரும் எமக்கிரங்கி எண்ணெய் தனைச்
சித்தம் மகிழ்ந்து சீக்கிரமாய்த் தந்தனுப்பும் 52

செல்லக் குமாரருங்கள் திண்ணையிலே வந்துநிற்க
அல்லற்படுத் தாதேஎங்கள் அன்புடைய மாதாவே
53. அல்லல் - துன்பம் 53

முத்துக் குமாரருங்கள் முத்தத்தில் வந்துநிற்க
சித்தம் இரங்கிச் சீக்கிரத்தில் எண்ணெய்தனைத்
54. முத்தத்தில் - முற்றத்தில் 54

தந்தனுப்பும் எங்களுக்குத் தாயேநீ மாதாவே
மைந்தன் தனக்கிரங்கி வார்த்துவிடு எண்ணெய்தனை
55. வார்த்தல் - கொடுத்தல் 55

பிள்ளை தனக்கிரங்கிப் பெற்றார் உதவிசெய்தால்
கொள்ளை தவம்பெறுவீர் கொற்றவன்போல் வாழ்ந்திடுவீர்
56. கொள்ளை - மிகுதி
கொற்றவன் - அரசன் 56

அன்ன மணியே அருமையுள்ள மாதாவே
சின்னஞ்சிறு பாலகர்மேல் சித்தம் இரங்கியன்பாய் 57

மாதா மகிழ்ந்தெண்ணெய் வார்த்திடுவார் என்று சொல்லி
ஆதலால் வந்தோம்காண் அன்னையரே நீர்கேளிர்
காண் - முன்னிலை அசை 58

சோதிதிரு அண்ணாவி சொன்ன மொழிதவறி
நீதியுடனே நெடுநேர மான துண்டோ 59

எங்களையும் அண்ணாவி எண்ணாம லேஅடிப்பார்
பங்கய முகத்தழகு பவளவிதழ்த் தாய்மாரே
60. பங்கயம் - தாமரை 60


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிந்து இலக்கியம் - Page 4 Empty Re: சிந்து இலக்கியம்

Post by சிவா Thu Sep 18, 2014 3:48 am


நன்னயமாய் எண்ணெய்தனை நலமாகத் தந்தனுப்பும்
இன்னமொரு சற்றுநேரஞ்சென்றால் எங்களையும் அண்ணாவி 61

கோவித் திடுவார் கொடிப்பிரம் பாலடிப்பார்
நாவூற நகட்டுவார் எங்க ளைத்தான்
62. நகட்டுவார் - நசுக்குவார் 62

அல்லாமல் சட்டம்பிள்ளை அவன்கொடுமை சொல்லரிது
செல்லப்பிள்ளை யானாலும் சினமே பொறுக்கறியான்
63. சட்டம்பிள்ளை - மாணவத்தலைவன் 63

கோதண்ட ராமனிலே கூசாமல் போட்டிடுவான்
மாதண்ட மாக வடுப்படவே தண்டிப்பான்
64. கோதண்டம் - பள்ளிச் சிறுவர் தண்டனையில் ஒன்று
கோதண்டந் தன்னிலே என்றும் பாடம்
வடுப்படவே - காயம்படவே 64

முட்டுக்கண்ணி போட்டு முதுகில்கல் எடுத்திடுவான்
கட்டியடிப்பான் கசையால் உரித்திடுவான்
65. கசையால் - சவுக்கால் 65

தூதுளை விளாறுவெட்டித் துடிக்க அடித்திடுவான்
மாதுளையம் கொம்பாலே மலர அடித்திடுவான்
66. தூதுளை விளாறு - தூதுவளை வளாறு 66

குட்டிப் பிரம்பாலே எட்டி அடித்திடுவான்
சட்டம்பிள்ளை துட்டனவன் சற்றும் இரக்கமில்லான்
67. துட்டன் - கொடியன் 67

காணிகன் கையாலும் காசினியி லண்ணாவி
தாணிகன் கையாலும் தானடியே பட்டுழன்று
68. தாணிகன் - உரிமை உடையவன் (ஸ்தாணிகன்) 68

பிள்ளை நாங்கள் புலம்பி அழுகையிலே
தள்ளைநீங்கள் கண்டால்தான் பொறுக்குமோ மனது
69. தள்ளை - தாய் 69

ஆதலினால் நாங்கள் அவசரமாய்ப் போவதற்கு
மாதாவே தாயே மனதிரங்கி யேயனுப்பும் 70

வந்தோம் வெகுநேரம் வருத்தமிகக் காணுதம்மா
தந்தை மனதிரங்கி தாய்மாரே நீங்களும்தான் 71

நிறுத்திவிட்டுப் பாராதே நீதியில்லாத் தாய்மாரே
சுறுதிதனில் அனுப்பும் சுகம்பெறுவீர் மாதாவே
72. சுறுதி - சுறுசுறுப்பு - விரைவு 72

உந்தனுட வீட்டிலெண்ணெய் உண்டில்லை யானாலும்
எந்த வீட்டிலானாலும் வாங்கிவிடு எண்ணெய்தனை
73. உந்தனுடைய - உன்தன் உடைய என்பதன் பேச்சுத் திரிபு 73

உண்டான எண்ணெய் ஒருகரண்டி குறையாமல்
கொண்டாந்து விட்டிடுவீர் கூர்மையுள்ள மாதாவே
74. கொண்டாந்து - கொண்டுவந்து என்பதன் பேச்சு வழக்கு 74

பழஞ்சோ றுண்ணாமல் வயிறு கொதிக்குதம்மா
குழைந்து விழுகுதம்மா கொவ்வையிதழ் மேனி யெல்லா
75. பழஞ்சோறு - நீரிட்டசோறு 75

வேர்த்து நடுங்குதப்பா மெய்சோர்ந்து காணுதிப்போ
ஆத்தில் நட்ட கோரைகள்போல் அலையுது சடலமெல்லாம்
76. ஆற்றில் நட்ட கோரை - அலைதலுக்கு உவமை 76

திண்ணக்க மில்லாமல் தியங்குதே என்னுடம்பு
அண்ணாவி தாமும் அடிப்பாரென் றென்மனது
77. திண்ணக்கம் - மனஉரம் 77

உள்ளம் பதறுதம்மா ஒளிச்சுதான் போகவென்று
கள்ளமனம் போலே கலங்குதம்மா உள்ளமெல்லாம்
78. ஒளிச்சு - ஒளிஞ்சு 78

சட்டமெழுதித் தயவுடனே தான்கணக்கு
திட்டம்தாய்ப் பார்க்கச் சிறுவர் தனக்கிரங்கி 79

ஆத்தாள் எனப்பயின்ற அன்னையே எண்ணெய்தனை
...... ....... ...... ....... ...... .......

...... ........ ........ ........ ...... ........
...... ........ ........ ........ ...... ........


(எண்ணெய்ச்சிந்து முற்றாகக் கிடைக்கப் பெறவில்லை)


சிந்து இலக்கியம் முற்றும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிந்து இலக்கியம் - Page 4 Empty Re: சிந்து இலக்கியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum