Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று நாள் சுற்றுப் பயணமாக சீன அதிபர் இன்று இந்தியா வருகிறார்
Page 1 of 1
மூன்று நாள் சுற்றுப் பயணமாக சீன அதிபர் இன்று இந்தியா வருகிறார்
3 நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜின்பிங் இன்று ஆமதாபாத் வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி விருந்து கொடுக்கிறார்.
இன்று வருகிறார், ஜின்பிங்
சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கை சென்றுள்ள அவர் கொழும்பிலிருந்து, இன்று (புதன்கிழமை) குஜராத் மாநிலம், ஆமதாபாத் வந்தடைகிறார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை தருகின்றனர்.
ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தனி விமானத்தில் பகல் 2½ மணிக்கு வந்திறங்கும் சீன அதிபரை மாநில கவர்னர் ஓ.பி.கோலி, முதல்- மந்திரி ஆனந்தி பென் படேல், வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். பாரம்பரிய முறைப்படி குஜராத் நடனங்களும் இதில் இடம்பெறும். அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்படுகிறது.
மோடி சந்திப்பு
வரவேற்புக்கு பின்னர் சீன அதிபர் ஜின்பிங், நேராக வஸ்திராபூர் ஹயாத் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஒரு ஒப்பந்தம், குவாங்டாங் மாகாணத்துக்கும், குஜராத் மாநில அரசுக்கும் இடையேயும், இன்னொன்று குவாங்ஜவ் நகருக்கும், ஆமதாபாத் மாநகராட்சிக்கு இடையேயும் கையெழுத்தாகின்றன. மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம், குஜராத்தில் தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக கையெழுத்தாகும்.
சீன அதிபர் ஜின் பிங், பிரதமர் நரேந்திர மோடி இரு பெரும் தலைவர்களும் ஒரே நேரத்தில் ஆமதாபாத்தில் இருப்பதால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களை வரவேற்று நகரில் பல்வேறு இடங்களில் தட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அறுசுவை விருந்து
சீன அதிபர் ஜின் பிங், மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தி, கஸ்தூரிபா தம்பதியர் பல்லாண்டு காலம் வாழ்ந்த வரலாற்று பெருமைமிக்க சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார். இதையொட்டி அந்த ஆசிரமத்துக்கு புத்துயிரூட்டப்பட்டுள்ளது. அங்கு அவரை பிரதமர் மோடி, முதல்-மந்திரி ஆனந்தி பென் படேல் வரவேற்கின்றனர்.
இதையடுத்து சபர்மதி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள பூங்காவுக்கு சீன அதிபர் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் சிறிது தொலைவுக்கு நடந்து செல்கின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜின்பிங்குக்கு மோடி அறுசுவை சைவ விருந்து அளித்து கவுரவிக்கிறார்.
அதை தொடர்ந்து இரு தலைவர்களும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
கணக்குகளை தாண்டி...
சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று சீன பத்திரிகையாளர் களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய-சீன உறவு மைல்களை நோக்கி அங்குலம், அங்குலமாக முன்னோக்கி செல்கிறது. முன்னோக்கி செல்கிற ஒவ்வொரு அங்குலமும், நாம் புதிய வரலாற்றை எழுதுவோம். இந்த பூமி கிரகத்தை ஒரு சிறந்த இடமாக ஆக்க ஏற்ற வகையில், ஒவ்வொரு மைலையும் நாம் கடந்து செல்வோம்.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வெற்று கணக்குகளை தாண்டிச் செல்லும். இரு தரப்புக்கும் இடையே தனித்துவமான தொடர்பு உள்ளது. அது புதிய தருணத்தை வரையறுப்பதாக அமையும்.
நம்பிக்கை
நமக்கிடையேயான உறவுகளில் உள்ள கணக்கும், தொடர்பும் வரலாற்றினை நம்மை எழுத வைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
இந்திய-சீன உறவுகள் பல மைல் தொலைவுக்கு செல்வதோடு, இரு தரப்பு உறவினை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்லும். அது மட்டுமல்ல, ஆசியாவுக்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக் கும் அது முன்னேற்றத்தையும், நல்லிணக்கத்தையும் அளிக்க முன்னெடுத்து செல்லும்.
35 சதவீத மக்கள் தொகை
உலக மக்கள் தொகையில் 35 சதவீதத்தை நாம் இரு நாடுகளும் பெற்றுள்ளோம். நமது உறவுகள் வலுப்படுகிறபோது, உலகின் 35 சதவீத மக்களும் நெருக்கம் ஆவார்கள்.
இதே போன்று, இந்தியா- சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு பெருகுகிறபோது, 35 சதவீத உலக மக்கள் தரமான மாற்றங்களை சந்திப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாளை பேச்சு
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் விதத்தில் அதிகாரபூர்வ பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
இந்தப் பேச்சு வார்த்தையில் எல்லைப்பிரச்சினை, புதிய முதலீடுகள், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.
எல்லை பிரச்சினைக்கு தீர்வு
சீன அதிபர் ஜின்பிங்கின் இந்திய வருகை தொடர்பாக இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதர் லி யுசெங், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இரு நாடுகளும் நாகரீகத்தின் நீண்ட வரலாறு கொண்டவை. இரு நாடுகளும் வரலாற்றிடமிருந்து சில பிரச்சினைகளையும் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், இரு தரப்பிலும் தெளிவாக புரிந்து கொண்ட உறவினை உருவாக்குகிறபோது, அந்த விவேகத்தை கொண்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். நான் அதை நம்புகிறேன். எல்லைப்பிரச்சினைக்கு நம்மால் சரியான தீர்வு காண முடியும்” என கூறினார்.
இன்று வருகிறார், ஜின்பிங்
சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கை சென்றுள்ள அவர் கொழும்பிலிருந்து, இன்று (புதன்கிழமை) குஜராத் மாநிலம், ஆமதாபாத் வந்தடைகிறார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை தருகின்றனர்.
ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தனி விமானத்தில் பகல் 2½ மணிக்கு வந்திறங்கும் சீன அதிபரை மாநில கவர்னர் ஓ.பி.கோலி, முதல்- மந்திரி ஆனந்தி பென் படேல், வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். பாரம்பரிய முறைப்படி குஜராத் நடனங்களும் இதில் இடம்பெறும். அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்படுகிறது.
மோடி சந்திப்பு
வரவேற்புக்கு பின்னர் சீன அதிபர் ஜின்பிங், நேராக வஸ்திராபூர் ஹயாத் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஒரு ஒப்பந்தம், குவாங்டாங் மாகாணத்துக்கும், குஜராத் மாநில அரசுக்கும் இடையேயும், இன்னொன்று குவாங்ஜவ் நகருக்கும், ஆமதாபாத் மாநகராட்சிக்கு இடையேயும் கையெழுத்தாகின்றன. மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம், குஜராத்தில் தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக கையெழுத்தாகும்.
சீன அதிபர் ஜின் பிங், பிரதமர் நரேந்திர மோடி இரு பெரும் தலைவர்களும் ஒரே நேரத்தில் ஆமதாபாத்தில் இருப்பதால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களை வரவேற்று நகரில் பல்வேறு இடங்களில் தட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அறுசுவை விருந்து
சீன அதிபர் ஜின் பிங், மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தி, கஸ்தூரிபா தம்பதியர் பல்லாண்டு காலம் வாழ்ந்த வரலாற்று பெருமைமிக்க சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார். இதையொட்டி அந்த ஆசிரமத்துக்கு புத்துயிரூட்டப்பட்டுள்ளது. அங்கு அவரை பிரதமர் மோடி, முதல்-மந்திரி ஆனந்தி பென் படேல் வரவேற்கின்றனர்.
இதையடுத்து சபர்மதி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள பூங்காவுக்கு சீன அதிபர் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் சிறிது தொலைவுக்கு நடந்து செல்கின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜின்பிங்குக்கு மோடி அறுசுவை சைவ விருந்து அளித்து கவுரவிக்கிறார்.
அதை தொடர்ந்து இரு தலைவர்களும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
கணக்குகளை தாண்டி...
சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று சீன பத்திரிகையாளர் களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய-சீன உறவு மைல்களை நோக்கி அங்குலம், அங்குலமாக முன்னோக்கி செல்கிறது. முன்னோக்கி செல்கிற ஒவ்வொரு அங்குலமும், நாம் புதிய வரலாற்றை எழுதுவோம். இந்த பூமி கிரகத்தை ஒரு சிறந்த இடமாக ஆக்க ஏற்ற வகையில், ஒவ்வொரு மைலையும் நாம் கடந்து செல்வோம்.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வெற்று கணக்குகளை தாண்டிச் செல்லும். இரு தரப்புக்கும் இடையே தனித்துவமான தொடர்பு உள்ளது. அது புதிய தருணத்தை வரையறுப்பதாக அமையும்.
நம்பிக்கை
நமக்கிடையேயான உறவுகளில் உள்ள கணக்கும், தொடர்பும் வரலாற்றினை நம்மை எழுத வைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
இந்திய-சீன உறவுகள் பல மைல் தொலைவுக்கு செல்வதோடு, இரு தரப்பு உறவினை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்லும். அது மட்டுமல்ல, ஆசியாவுக்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக் கும் அது முன்னேற்றத்தையும், நல்லிணக்கத்தையும் அளிக்க முன்னெடுத்து செல்லும்.
35 சதவீத மக்கள் தொகை
உலக மக்கள் தொகையில் 35 சதவீதத்தை நாம் இரு நாடுகளும் பெற்றுள்ளோம். நமது உறவுகள் வலுப்படுகிறபோது, உலகின் 35 சதவீத மக்களும் நெருக்கம் ஆவார்கள்.
இதே போன்று, இந்தியா- சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு பெருகுகிறபோது, 35 சதவீத உலக மக்கள் தரமான மாற்றங்களை சந்திப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாளை பேச்சு
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் விதத்தில் அதிகாரபூர்வ பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
இந்தப் பேச்சு வார்த்தையில் எல்லைப்பிரச்சினை, புதிய முதலீடுகள், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.
எல்லை பிரச்சினைக்கு தீர்வு
சீன அதிபர் ஜின்பிங்கின் இந்திய வருகை தொடர்பாக இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதர் லி யுசெங், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இரு நாடுகளும் நாகரீகத்தின் நீண்ட வரலாறு கொண்டவை. இரு நாடுகளும் வரலாற்றிடமிருந்து சில பிரச்சினைகளையும் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், இரு தரப்பிலும் தெளிவாக புரிந்து கொண்ட உறவினை உருவாக்குகிறபோது, அந்த விவேகத்தை கொண்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். நான் அதை நம்புகிறேன். எல்லைப்பிரச்சினைக்கு நம்மால் சரியான தீர்வு காண முடியும்” என கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|