ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள்

3 posters

Go down

ஈகரை பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள்

Post by ஏ.புதியவன் Tue Sep 16, 2014 5:31 pm

இராஜஇராஜசோழன், இராஜேந்திர சோழன் போன்ற சோழ மன்னர்கள், தங்கள் தமிழ்ப் பெயர்களை வடமொழியில் மாற்றிக் கொண்ட தோடு, பார்ப்பனியத்தை பரப்புவதில் முனைந்து செயல்பட்ட வரலாற்றை பழ. நெடுமாறன் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். தமிழகத்தில் மலர்ந்த பக்தி இயக்கம் பல காலகட்டங்களில் இந்தியாவின் பிற மாநிலங் களுக்குப் பரவியது என்னும் கருத்தை பேராசிரியர்தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், அறிஞர் சுநீத் குமார்சாட்டர்ஜி போன்றோர் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், காலப்போக்கில் வர்ணாசிரம தர்மமும்வைதீக தர்மமும் படிப்படியாகத் தமிழகத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. பிற்காலச் சோழர் காலத்தில் வர்ணாசிரம தர்மம் மிக இறுக்கமாகப்பேணப்பட்டது என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பல்லவர் காலத்தில் தொடங்கி பிற்காலச் சோழர் காலம் வரை தமிழ்நாட்டில் ஏராளமான கற்கோவில்கள் எழுப்பப்பட்டன. அவற்றின் வெளிப்பாடுகளாக அரசர்களாலும் அவர்களின் குடும்பத்தினராலும் அரசு அதிகாரிகளாலும் பார்ப்பனர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன.

வடநாட்டிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் வரவழைக்கப்பட்டு சதுர்வேதி மங்கலங்களில் குடிவைக்கப்பட்டனர். அவர்களுக்குக் கிராமங்கள் இறையிலி (வரிகள்இல்லாத) தானங்களாக அளிக்கப்பட்டன. பக்தி இயக்கம் அதன் உச்சத்தை அடைந்தபோதுசைவ சமயம் நிறுவனம் அடையத் தொடங்கியது. கோவில்களை மையமாகக் கொண்ட இந்த நிறுவனங்களின் ஆதரவில் பார்ப்பனர்களும் சோழ மன்னர்களும் செயல்பட்டார்கள்.

கி. பி. 850 ஆம் ஆண்டிலிருந்து 11 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது. சங்ககாலச் சோழர்கள் கரிகாலன், நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் போன்ற தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருந்தனர். ஆனால், பிற்காலச் சோழர்கள் விசயாலயன், பராந்தகன், இராசராசன், இராசேந்திரன், குலோத்துங்கன் போன்ற வட மொழிப் பெயர்களை சூட்டிக் கொள்வதில் பெருமிதம் கொண்டார்கள். சோழர்களின் அரசாட்சியும் பார்ப்பனர்களால் நியாயப்படுத்தப்பட்டது.

சோழகுலம் சூரிய குலத்தோடும் புராணங்கள் ஆதிக்கத் தோடும் இணைக்கப்பட்டது. வேளாண்குடியைச் சேர்ந்த சோழர்கள் பார்ப்பனர்களால் சத்திரியர்களாக்கப்பட்டு அவர்களின் முடிசூட்டும் விழாவைத் தாங்களே நடத்தும் உரிமையைப் பெற்றனர்.

பிரம்மதேய விவசாய நிலங்களின் உடைமையாளர்களாகப் பார்ப்பனர்கள் மாறினார்கள். சமயக் கிரியை ஆற்றும் தகுதி காரணமாகவும் நில உடைமை யாளராக இருந்ததன் காரணமாகவும் அரசியல் செல்வாக்குக் காரணமாகவும் தமிழ்நாட்டில் பார்ப் பனர்கள் தலைமைச் சாதியினராக மாறினார்கள். அதுமட்டுமல்ல, அதுவரை வடநாட்டு வைதீக மதம் தமிழ்நாட்டில் செல்வாக்கற்று ஒதுக்கப்பட்டிருந்தது. தென்னாட்டில் பரவியிருந்த சமண, பௌத்த மதங்களை அடக்க - ஒடுக்கச் செய்த முயற்சிதோற்றது. எனவே, சமயம் (காலம்) நோக்கிக்காத்திருந்த வைதீக மதத்தினர் தமிழ்நாட்டில் பரவி வந்த பக்தி இயக்கத்தோடு இரண்டறக் கலந்தனர்.

தமிழ்த் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்தனர். தமிழ் முருகனுக்கு சுப்பிரமணியன், ஸ்கந்தன் முதலான புதுப் பெயர்களைச் சூட்டினர். வள்ளி என்னும் தமிழ் மனைவியோடு இருந்த முருகனுக்குத் தெய்வயானை என்னும் இந்திரன் மகளை மனைவியாகக் கொடுத்து ஆரிய தமிழர் தொடர்பை உறுதிப்படுத்தினர்.

தென்னாடுடைய சிவனும் வடநாட்டு உருத்திரனும் ஒன்றே எனக் கூறினர். சிசனத்தேவர் என வைதீர்களால் இழித்துரைக்கப்பட்ட சிவலிங்கத்தை உயர்ந்த தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். தமிழ்க் கொற்றவையைச் சிவனுடைய மனைவியாக ஆக்கிவிட்டனர். மாலவன் எனும்திருமால் வைதீகத் தெய்வமான விஷ்ணுவோடு இணைக்கப்பட்டார். ஆரியர்களுக்கே உரியஇந்திரன், சந்திரன், பலதேவன், சூரியன் முதலிய தெய்வங்கள் மறைக்கப்பட்டன.

விநாயகர் முதலியபுதிய தெய்வங்கள் புதிதாகக் கற்பிக்கப்பட்டன. இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிய பாடல்கள்எழுதப்பட்டன. இவ்வாறு தமிழ்நாட்டுச் சைவ வைணவம் ஆகியவற்றோடு வைதீக மதம் இரண்டறகலக்கப்பட்டது. இதன் விளைவாகத் தமிழர்களின் தெய்வ வழிபாட்டில் பல மாறுதல்கள் புகுத்தப்பட்டன. தொன்றுதொட்டு இருந்து வந்த சிறு தெய்வவழிபாடு இழிவாகக் கருதப்பட்டது. பூசை செய்யும்முறைகளும் வழிபாட்டு முறைகளும் மாற்றியமைக்கப்பட்டன.

நன்றி : “உருவாகாத இந்தியத் தேசியமும்உருவான இந்துபாசிசமும்” நூலிலிருந்து பக். 66.


ஏ.புதியவன்
ஏ.புதியவன்
ஏ.புதியவன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 18/02/2013

http://www.e-puthiyavan.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள்

Post by krishnaamma Tue Sep 16, 2014 7:05 pm

புதியவரே ! உங்கள் பதிவை 'இந்து' விற்கு மாற்றி விட்டேன்...........உங்கள் பதிவுகளை தலைப்புகள் பார்த்து பதிவிடுங்கள் புன்னகை சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள்

Post by யினியவன் Tue Sep 16, 2014 7:07 pm

அம்மா ஜாக்கிரதை - அவரு துப்பாக்கியோட இருக்காரு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள்

Post by krishnaamma Tue Sep 16, 2014 7:09 pm

யினியவன் wrote:அம்மா ஜாக்கிரதை - அவரு துப்பாக்கியோட இருக்காரு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088223

அதனால தான் இதை 'தூக்கிப் போடாமல் ' மாத்திப்போட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum