ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதா அமிர்தானந்தமயி

Go down

மாதா அமிர்தானந்தமயி Empty மாதா அமிர்தானந்தமயி

Post by Admin Mon Feb 23, 2009 1:37 am

மாதா அமிர்தானந்தமயி Amirthananthamayi
மாதா அமிர்தானந்தமயி

இன்றைக்கு அமிர்தானந்தமயிக்கு உலகெங்கும் இருக்கும் சீடர்களையும், அன்பர்களையும் கணக்கிட்டால், எந்தக் காலத்திலும் வேறெந்தத் துறவிக்கும் இல்லாத அளவுக்கு அந்தப் பட்டியல் நீண்டிருக்கும்.

கேரள மாநிலத்தில் 1953-ம் வருஷம், ஒரு மிகச் சாதாரண மீனவக் குடும்பத்தில் பிறந்தவர் அமிர் தானந்தமயி. அவரது இயற்பெயர், சுதாமணி என்பது. எல்லாக் குழந்தைகளும் அழுது கொண்டே பிறக்கும் உலகில், ஒரு மாறுதலுக்கு சிரித்துக் கொண்டே பிறந்த குழந்தை, சுதாமணி. அவரது அம்மாவுக்கு அப்போதே ஆச்சர்யம். என்ன இந்தக் குழந்தை அழவே மாட்டேனென்கிறது? விடை அத்தனை சுலபத்தில் கிடைத்து விடுமா என்ன? அந்தக் குழந்தை ஆறாவது மாதத்தில் தடுமாற்றமின்றி நடக்கவும், பேசவும் ஆரம்பித்ததும் அதன் தாய்க்கு இன்னும் ஆச்சர்யம். மூன்று வயதில் சுதாமணி பாட ஆரம்பித்தாள். அது மேலும் ஆச்சர்யம்.

ஐந்தாவது வயதில் சுதாமணி பாடல் களைத் தானே புனையவும் ஆரம்பித்தாள். எல்லாமே பக்திச் சுவை சொட்டும் பாடல்கள். எல்லாமே கண்ணன் மீது உருகி உருகி எழுதப்பட்ட பாடல்கள். தானே இயற்றிய பாடல்களை, மெய் மறந்து தானே பாடிக்கொண்டிருந்தவள், சில நாட்களில் பாடியபடியே ஆடவும் ஆரம்பித்தாள். முதலில் தன் எளிய குடிசைக்குள் தொடங்கிய சுதாமணியின் பாட்டும், லயம் தோய்ந்த நடனமும் வீதிக்கு வந்தது. அப்படியே கடற்கரையோரம் ஆடிக்கொண்டே, கண்மூடி நகர்ந்தபடி இருப்பாள். அவள் ஒன்பதாம் பிராயத்தில் இருந்த போது அம்மாவுக்கு உடம்புக்கு சுகமில்லாமல் போகவே, பள்ளிக்குப் போக முடியாத நிலைமை ஏற்பட்டது.

ஏழு சகோதர, சகோதரிகள் உண்டு அவளுக்கு. அவள்தான் மூத்தவள். ஆகவே உடல்நலமில்லாத அன்னைக்குப் பணிவிடைகள் செய்வதுடன் சகோதர, சகோதரிகளையும் அவள்தான் பராமரிக்க வேண்டும். அதிகாலை இருள் சூழ்ந்திருக்கும் போதே சுதாமணியின் பொழுது விடிந்துவிடும். நள்ளிரவு வரை அவளுக்கு வீட்டுக்காரியங்கள் சரியாக இருக்கும். வீட்டிலிருந்த பசுவுக்கும் அவள்தான் பொறுப்பு.

பசுவுக்குப் புல் தேடிப் புறப்பட்ட அந்த ஒன்பது வயதுப் பெண்ணுக்கு வாழ்வின் துயரங்களுக்கு விடுதலை காண வேண்டும் என்கிற வேட்கை உண்டானது சற்று வியப்பூட்டும் விஷயமே. தன் மீனவக் குப்பத்து மக்கள் அத்தனை பேரையும் அவள் மிக நுணுக்கமாக கவனித்தாள். எல்லாருக்கும் ஏதாவது கஷடங்கள் இருந்தன. ஏழை மைக் கஷடங்கள், உடல்நலக் குறைவு, உறவுச் சிக்கல்கள், சமூக அங்கீகார மறுப்பு, கல்வியின் போதாமை. எத்தனையோ கஷடங்கள். யாரும் ஒரு பேச்சுக் குக்கூட சந்தோஷமாக இருப்பதாக ஏன் சொல்ல மறுக்கிறார்கள்?

அவள் புல் அறுக்கும்போதெல்லாம் இதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தாள். துன்பங் களிலிருந்து விடுதலை அடையச் செய்வதுதான் அனைத்து ஞானிகளுக் கும், இதுநாள்வரை சவாலாக இருந்திருக்கிறது. விடுதலை என்பதென்ன? மனத்துக்குள் தேடிப் பெறக்கூடிய ஆன்ம விடுதலை இதுநாள் வரை சவாலாக இருந்திருக்கிறது.
விடுதலை என்பதென்ன? மனத்துக்குள் தேடிப் பெறக்கூடிய ஆன்ம விடுதலை மட்டும்தான் நிஜமான விடுதலை. இது ஒன்பது வயதில் சுதாமணிக்குப் புரிந்தது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

மாதா அமிர்தானந்தமயி Empty Re: மாதா அமிர்தானந்தமயி

Post by Admin Mon Feb 23, 2009 1:38 am

கொஞ்சம் வளர்ந்தபின் சுதாமணியை அவளது பெற்றோர், தமது குடும்ப நிலை கருதி, உறவினர் வீடுகளுக்கு உதவியாக இருக்கும்படி அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டார்கள். வீட்டு வேலை செய்கிற பெண் மாதிரிதான். ஆனால் ஒருபோதும் சுதாமணி முகம் சுளித்ததேயில்லை. தானுண்டு, தன் வேலைகள் உண்டு. ஓய்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சதா சர்வ காலமும் ஸ்ரீகிருஷண ஜெபம் உண்டு. ஒரு கிருஷணர் போட்டோ ஒன்றை அவர் வைத்திருந்தார். எப்போதும் அவருடனேயே இருக்கும் அது. அந்த காலத்தில். போகிற இடங்களுக்கெல்லாம் அதை எடுத்துப்போய், தனக்குக் கிடைக்கும் உணவு எதுவானாலும் அதை அந்தக் கிருஷணர் புகைப்படத்துக்கு நைவேத்தியம் செய்யாமல் உண்ணமாட்டார். அதை ஒரு போட்டோவாகவே அவர் நினைக்க மாட்டார். நிஜமாகவே கிருஷணர் தன்னுடன் இருப்பதுபோன்ற உணர்வுதான். கிருஷண பாவம் என்று இதற்குப் பேர். கடவுளைத் தன்னுள் காணுதல். தன்னைக் கடவுளாகவே பார்த்தல். கடவுளுக் கும், தனக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் பரம்பொருளுடன் மனத்துக்குள் இரண்டறக் கலந்துவிடுதல்.

ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால், சுதா மணிக்கு கிருஷணர் காட்சி தரவில்லை. மாறாக ஒருநாள் அவர் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத் தில் சக்தி சொரூபமான பெண் தெய்வத்தின் காட்சி அவருக்கு சித்தித்ததாகச் சொல்லு வார்கள். அதுகாறும் தனது பக்தியால் பணிகள் எதுவும் பாதிக்காமல் பார்த்துக் கொண்ட சுதாமணியால், அந்தச் சம்பவத்துக்குப் பின் எந்த ஒரு புறப்பணியிலும் ஆர்வம் செலுத்த முடியாமல் போய்விட்டது. அவ்வளவு ஏன், அவருக்குத் தன் நினைவே இல்லாமல் போய்விட்டது. எப்போதும் இறைச் சிந்தனை மட்டுமே அவரை ஆட்கொண்டது. பாட்டும், நடனமும் பக்தியுமாகவே வாழ்நாள் முழுவதையும் கழிக்க அவர் விரும்பினார்.

அவரைச் சுற்றிலும் எப்போதும் ஒரு கூட்டமும் கூட ஆரம்பித்தது. அந்தச் சின்ன வயதில் அந்தப் பெண்ணுக்குத்தான் எப்பேர்ப்பட்ட பக்தி. என்னமாய்ப் பாடுகிறாள். அதைக் கேட்கவாவது பத்துப்பேர் கூடாமல் இருப்பார்களா?

ஆனால் தினசரி சோற்றுக்கே திண்டாடும் குடும்பத் துக்கு ஃபுல்டைம் பக்தியெல்லாம் எப்படிச் சரிப் படும்? சுதாம ணியை அவரது சகோதரர் எச்சரித் துப் பார்த்தார். ம்ஹும். கேட்கிற வழியாக இல்லை. அடித்துப் பார்த்தார். ம்ஹும். கோபம் தலைக்கேறி ஒருநாள் வீட்டை விட்டே துரத்தி விட்டார்கள். அதனாலென்ன? அவர் ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியிலும், கடற்கரையிலும் ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செய்ய ஆரம்பித்தார்.

அதன்பிறகு கேரளத்தில் பல பகுதிகளுக்குக் கால்நடையாகவே சென்று பாடியும், ஆடியும் பக்தி செய்து, கிட்டத்தட்ட அம்மாநிலத்தில் அவரை அறியாதவரே இல்லை என்கிற அளவுக்குத் தெரிந்தவரானார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

மாதா அமிர்தானந்தமயி Empty Re: மாதா அமிர்தானந்தமயி

Post by Admin Mon Feb 23, 2009 1:38 am

சுதாமணி, அமிர்தானந்தமயியானது திட்டமிட்டோ, ஒரு குறிப்பிட்ட நாளில் நிகழ்ந்ததோ அல்ல. அவரது ஆன்மீகப் பேச்சுகள் மக்கள் மொழியில் இருந்தன. பக்தி ஒன்றே சாமானிய மக்களுக்கு மோட்சம் அளிக்க வல்லது என்று அவர் திடமாக நம்பி, அதையே போதித்தார். வாழ்கிற காலமெல்லாம் அடுத்தவர்களுக்குத் தம்மால் இயன்ற
சிறு சிறு உதவிகளைச் செய்வதில் நமக்குக் கிடைக்கக்கூடிய ஆத்ம திருப்தியை எடுத்துக் காட்டி, அதன்மூலமே, அதனைக் கடந்து, ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்லும் அற்புதமான வழி அவருடையது. பெரிய பெரிய தத்துவங்களை அவர் போதிப்பதே யில்லை. பாடுங்கள், ஆடுங்கள். இறைவனை நினைத்துக் கொண்டிருங்கள். உங்கள் காரியங் களைக் குறைவின்றிச் செய்யப்பழகுங்கள். அதுபோதும். அவ்வளவுதான்.

எந்தச் சிறு குடிசையில் அவர் பிறந்தாரோ, அந்தக் குடிசை இருந்த இடம்தான் இன்றைக்கு அமிர்தபுரி என்று அழைக்கப்படு கிறது. அமிர்தானந்தமயியின் ஆன்மீக மையம் அங்கிருந்துதான் செயல்படுகிறது. உலகெங்கிலுமுள்ள அவரது கோடிக்கணக் கான பக்தர்களுக்கு அமிர்தபுரிக்கு வருவ தென்பது ஒரு புனித யாத்திரை மாதிரி.ஒருநாளில் இருப்பத்தி நாலு மணி நேரமும் அமிர்தானந்தமயி பிஸியாகவே இருக்கிறார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களை நேரில் சந்திக்கிறார். அவரவர் பிரச்சினைகளுக்குப் பிரார்த்தனை நிகழ்த்து கிறார். அறிவுரைகள் சொல்லுகிறார். அன்பாய் அணைத்து ஆறுதல் சொல்லுகிறார். உச்சி மோந்து ஒரு தாயின் பரிவைத் தன் அரவணைப்பில் வழங்குகிறார். உலகெங்கிலு மிருந்து வருகிற பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கடிதங்களுக்குத் தவறாமல் பதில் எழுதுகிறார். தினசரிப் பிரார்த்தனைகள், பஜனைகளிலும் கலந்துகொள்கிறார். கோடிக் கணக்கான சொத்து மதிப்புள்ள ஆசிரமத்தின் நிர்வாகப் பொறுப்பும் இருக் கிறது. அறக் கட்டளைப் பணிகள் வேறு. எத்தனை கல்வி நிறுவனங்கள். மருத்துவ மனைகள். தொழிற் கூடங்கள். இதெல்லாம் போகப் பயணங்கள் வேறு. கடந்த முப்பது ஆண்டுகளில் ஒருநாள் கூட உடல்நலக் குறைவு என்று சொல்லி அமிர்தானந்தமயி தன் பணிகளை ஒத்திப் போட்டதோ, அட்டவணையை மாற்றியதோ இல்லை.

உலக அமைதிக்காகவும், சகோதரத்துக்காகவும் தேசம் தேசமாகப் பயணம் செய்து சொற்பொழிவாற்றிவரும் அமிர் தானந்தமயிக்கு 2002-ம் ஆண்டு சர்வதேசப் பெருமைக்குரிய காந்தி-கிங் விருது வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் அவர் சொற்பொழிவாற்றிய சமயம் அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் சிலர் உலகை ஆளும் வாய்ப்பு உங்களுக்குத் தரப்பட்டால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். முதலில் சுத்தம் செய்யும் பணியைத்தான் மேற்கொள்வேன் என்றுபதில் சொன்னார்.

அதுதான் அமிர்தானந்தமயி. அந்த எளிமையும், பொதுநலச் சிந்தனையும்தான் அவரை உலக அரங்கில் மிக முக்கியமான பெண்மணியாக உயர்த்தியிருக்கிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

மாதா அமிர்தானந்தமயி Empty Re: மாதா அமிர்தானந்தமயி

Post by Muruges Mon Feb 23, 2009 9:31 am

NO OFFNESE TO ANYONE, BUT SHE SHOULD CLEAN KERALA FIRST. KERALA HAS ONE OF THE WORST HEALTH CARE IN THE COUNTRY. RECENT CHIKENGUNYA CAUSED 100S OF DEATHS IN KERALA WHICH WAS CONTROLLED VERY WELL IN OTHER STATES.
avatar
Muruges
Guest


Back to top Go down

மாதா அமிர்தானந்தமயி Empty Re: மாதா அமிர்தானந்தமயி

Post by Guest Sat Jun 27, 2009 4:26 pm

அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

மாதா அமிர்தானந்தமயி Empty Re: மாதா அமிர்தானந்தமயி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum