Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
+5
M.Saranya
SajeevJino
அகிலன்
யினியவன்
சிவா
9 posters
Page 3 of 8
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
First topic message reminder :
ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை
ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.
ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை
ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.
ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
Last edited by சிவா on Mon Sep 15, 2014 10:21 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்து விட்டோம் – ஒபாமா
ஐஎஸ் தீவிரவாதிகளின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்து விட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். சிபிஎஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“ஈராக், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை குறைத்து மதிப்பிட்டு அமெரிக்கா தவறு செய்து விட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து விட்டோம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையேயான மோதலை தடுக்க அரசியல் ரீதியிலான அணுகுமுறை அவசியமாகிறது.
ஈராக், சிரியா ஆகிய இரு நாடுகளுக்குமே இந்த கருத்து பொருந்தும். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதற்காக 50 நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வந்தாலும் ஐஎஸ் அமைப்புக்கு வெளியில் இருந்து வரும் நிதி ஆதாரத்தை முடக்க வேண்டும்.
அதேபோல வெளியில் இருந்து கிடைக்கும் ஆயுதம், வெளிநாடுகளில் இருந்து வந்து ஐஎஸ்ஐஎஸ்சில் சேரும் நபர்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் அளவு சுருங்கி விடும். உலக வரலாற்றிலேயே அமெரிக்க ராணுவம் மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.
உலகில் எந்த நாடுகளில் தீவிரவாதிகளால் பிரச்சனை ஏற்பட்டால், அந்த நாடுகள் முதலில் அணுகுவது அமெரிக்காவை தான். ரஷ்யாவையோ, சீனாவையோ அந்த நாடுகள் அணுகுவதில்லை என ஒபாமா கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சிறிது காலம் வான்தாக்குதல் நடத்திவிட்டு பின்வாங்கிவிடுவார்கள் அதன் பின் ஐ எஸ் படைகள்தான் ஆட்சிசெலுத்தும்.
Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
இங்கிலாந்து நாட்டவர் தலை துண்டித்து படுகொலை: ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு டேவிட் கேமரூன் கண்டனம்!
லண்டன்: மேலும் ஒரு இங்கிலாந்து நாட்டவர் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் துண்டித்து படுகொலை செய்துள்ளதற்கு பிரதமர் டேவிட் கேமரூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைத்துள்ளனர். அவர்களின் வளர்ச்சியை தடுத்து தாக்குதல் நடத்தும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை மிரட்ட இரு நாட்டு குடிமகன்களை பிணைக் கைதிகளாக்கி தலையை துண்டித்து கொலை செய்து வருகின்றனர்.
சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை திரட்டி வந்த அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் 2 பேரையும், இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகிய 3 பேரையும் தலை துண்டித்து படுகொலை செய்தனர். மேலும், அந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்படுத்தினர்.
இதற்கிடையே, இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் ஆலன் ஹென்னிங் என்பவரையும் கொலை செய்யப் போவதாக கடந்த வாரம் தீவிரவாதிகள் அறிவித்தனர். இந்நிலையில், அவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ''மற்றவர்களுக்கு உதவி செய்யப்போன ஆலன் ஹென்னிங்கை கடத்திச் சென்று கொன்றதில் இருந்து இந்த தீவிரவாதிகள் எவ்வளவு காட்டு மிராண்டித்தனமானவர்கள் என்பது தெளிவாகிறது. இவர்களை வேட்டையாடி, நீதியின் முன்பு நிறுத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்வோம்" என்று கூறியுள்ளார்.
லண்டன்: மேலும் ஒரு இங்கிலாந்து நாட்டவர் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் துண்டித்து படுகொலை செய்துள்ளதற்கு பிரதமர் டேவிட் கேமரூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைத்துள்ளனர். அவர்களின் வளர்ச்சியை தடுத்து தாக்குதல் நடத்தும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை மிரட்ட இரு நாட்டு குடிமகன்களை பிணைக் கைதிகளாக்கி தலையை துண்டித்து கொலை செய்து வருகின்றனர்.
சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை திரட்டி வந்த அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் 2 பேரையும், இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகிய 3 பேரையும் தலை துண்டித்து படுகொலை செய்தனர். மேலும், அந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்படுத்தினர்.
இதற்கிடையே, இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் ஆலன் ஹென்னிங் என்பவரையும் கொலை செய்யப் போவதாக கடந்த வாரம் தீவிரவாதிகள் அறிவித்தனர். இந்நிலையில், அவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ''மற்றவர்களுக்கு உதவி செய்யப்போன ஆலன் ஹென்னிங்கை கடத்திச் சென்று கொன்றதில் இருந்து இந்த தீவிரவாதிகள் எவ்வளவு காட்டு மிராண்டித்தனமானவர்கள் என்பது தெளிவாகிறது. இவர்களை வேட்டையாடி, நீதியின் முன்பு நிறுத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்வோம்" என்று கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்த அரசு அதிகாரி கைது
மலேசியா: கோலாலம்பூர் - ஐ,எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் பசுமைத் தொழில் நுட்பம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சின் மூத்த உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக அவர் ஐ,எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் இருந்து பணம் பெற்றதாகவும் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கர் தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரும் சிரியா செல்வதற்காக அத்தொகை பெற்றதாக குறிப்பிட்ட அவர், ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கும் மேலும் பலர் விரைவில் பிடிபடுவர் என்றார்.
“இது தொடர்பான நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். சிரியாவுக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று பொது மக்களுக்கு உறுதி அளிக்கிறோம்,” என்றார் காலிட்.
கடந்த திங்கட்கிழமை தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய 14 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களில் மூவர் ஐ,எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
மூன்று பேரில் ஒருவர் அரசு அதிகாரி, ஒருவர் முகநூல் வழி ஐ,எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் குறித்து பரப்புரை செய்த வேலையில்லா நபர், மற்றொருவர் சிரியா போராளிக் குழுவில் இணைந்து பணியாற்றி பின்னர் நாடு திரும்பியுள்ள 34 வயது ஆடவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா: கோலாலம்பூர் - ஐ,எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் பசுமைத் தொழில் நுட்பம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சின் மூத்த உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக அவர் ஐ,எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் இருந்து பணம் பெற்றதாகவும் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கர் தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரும் சிரியா செல்வதற்காக அத்தொகை பெற்றதாக குறிப்பிட்ட அவர், ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கும் மேலும் பலர் விரைவில் பிடிபடுவர் என்றார்.
“இது தொடர்பான நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். சிரியாவுக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று பொது மக்களுக்கு உறுதி அளிக்கிறோம்,” என்றார் காலிட்.
கடந்த திங்கட்கிழமை தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய 14 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களில் மூவர் ஐ,எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
மூன்று பேரில் ஒருவர் அரசு அதிகாரி, ஒருவர் முகநூல் வழி ஐ,எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் குறித்து பரப்புரை செய்த வேலையில்லா நபர், மற்றொருவர் சிரியா போராளிக் குழுவில் இணைந்து பணியாற்றி பின்னர் நாடு திரும்பியுள்ள 34 வயது ஆடவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
வாழ்த்துகள் ரெஹானாவுக்கு
இந்த குர்திஷ் பெண்மணி இதுவரை 100 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்திருக்கிறாராம். இவர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வீரப் பெண்மணிக்கு வாழ்த்துகள்.
இந்த குர்திஷ் பெண்மணி இதுவரை 100 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்திருக்கிறாராம். இவர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வீரப் பெண்மணிக்கு வாழ்த்துகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
யினியவன் wrote:வாழ்த்துகள் ரெஹானாவுக்கு
இந்த குர்திஷ் பெண்மணி இதுவரை 100 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்திருக்கிறாராம். இவர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வீரப் பெண்மணிக்கு வாழ்த்துகள்.
அவ்வாறு இவர் கொல்லப்பட்டிருந்தால் அது வீரமரணம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
.
தற்போதைய தகவல் படி சிரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைபற்றிய Mig 21 Su 22 மற்றும் L 159 போன்ற போர் விமானங்களை பயன்படுத்த ISIL திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது .இதற்கான ஆரம்ப கட்ட பயிற்சியில் அவர்கள் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது
தற்போதைய தகவல் படி சிரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைபற்றிய Mig 21 Su 22 மற்றும் L 159 போன்ற போர் விமானங்களை பயன்படுத்த ISIL திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது .இதற்கான ஆரம்ப கட்ட பயிற்சியில் அவர்கள் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் மேலும் ஒரு எரிவாயு வயலை கைப்பற்றினர்
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியதோடு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் தங்கள் படைகளை ஈராக்கிற்கு அனுப்பி வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
தற்போது இந்த தாக்குதலில் கனடா ராணுவமும் பங்கேற்று உள்ளது. இந்தநிலையில் கனடா நேற்று முதல்முறையாக போர் விமானங்களை ஈராக்கிற்கு அனுப்பி வான்வழி தாக்குதல் நடத்தியது. 2 சி.எப்.18 ரக போர் விமானங்களை அனுப்பி ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து பலுஜா பகுதியில் 4 மணிநேரம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
பல்வேறு நாடுகள் கூட்டாக தக்குதலில் ஈடுபட்டாலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் மத்திய மாகாணத்தில் உள்ள ஹோம்ஸ்சில் உள்ள ஜகர் பகுதியில் உள்ள இரண்டாவது எரிவாயு வயலை அரசுபடையினருடன் போரிட்டு கைபற்றினர். ஐ.எஸ் தீவிரதிகள் தங்கள் சமூக வளைதலத்தில் 18 போட்டோகளை வெளியிட்டு உள்ளனர். அதில் ஜகரில் ஐ.எஸ் இயக்க கொடி பறப்பது போலவும் மேலும் போரில் கைப்பற்றிய வாகனங்களையும் படம் பிடித்து போட்டு உள்ளனர்.
சிரியாவின் 3ல் ஒரு பகுதி தீவிரவாதிகள் கட்டுபாட்டுக்கு வந்து உள்ளது. கடந்த் அக்டோபர் மாதம் 30 மாதம் மிகப்பெரிய ஷார் எரிவாயு வயலை கைப்பற்றினர். மேலும் .இன்று ஜகர் கிராமத்தில் உள்ள மக்ர் எரிவாயும் நிலையத்ததையும் கைப்பற்றினர்.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியதோடு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் தங்கள் படைகளை ஈராக்கிற்கு அனுப்பி வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
தற்போது இந்த தாக்குதலில் கனடா ராணுவமும் பங்கேற்று உள்ளது. இந்தநிலையில் கனடா நேற்று முதல்முறையாக போர் விமானங்களை ஈராக்கிற்கு அனுப்பி வான்வழி தாக்குதல் நடத்தியது. 2 சி.எப்.18 ரக போர் விமானங்களை அனுப்பி ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து பலுஜா பகுதியில் 4 மணிநேரம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
பல்வேறு நாடுகள் கூட்டாக தக்குதலில் ஈடுபட்டாலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் மத்திய மாகாணத்தில் உள்ள ஹோம்ஸ்சில் உள்ள ஜகர் பகுதியில் உள்ள இரண்டாவது எரிவாயு வயலை அரசுபடையினருடன் போரிட்டு கைபற்றினர். ஐ.எஸ் தீவிரதிகள் தங்கள் சமூக வளைதலத்தில் 18 போட்டோகளை வெளியிட்டு உள்ளனர். அதில் ஜகரில் ஐ.எஸ் இயக்க கொடி பறப்பது போலவும் மேலும் போரில் கைப்பற்றிய வாகனங்களையும் படம் பிடித்து போட்டு உள்ளனர்.
சிரியாவின் 3ல் ஒரு பகுதி தீவிரவாதிகள் கட்டுபாட்டுக்கு வந்து உள்ளது. கடந்த் அக்டோபர் மாதம் 30 மாதம் மிகப்பெரிய ஷார் எரிவாயு வயலை கைப்பற்றினர். மேலும் .இன்று ஜகர் கிராமத்தில் உள்ள மக்ர் எரிவாயும் நிலையத்ததையும் கைப்பற்றினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
ஜோர்டான் விமானி பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிப்பு
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டான் விமானி
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது.
அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர்.
தீவிரவாதிகள் கெடு
இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அல்–கசாஸ்பெயை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது.
அவரை சிறை வைத்த தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர். விமானி அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.
அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதை உறுதிசெய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைத்து விடுகிறோம் என்று ஜோர்டான் அரசு கூறியது. இதற்கிடையே ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோவை தலையை வெட்டி படுகொலை செய்தனர். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை.
விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இந்நிலையில் தீவிரவாதிகள் விமானி முயாத்தை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அந்த வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
விமானி முயாத் அல்–கசாஸ்பெக்கு ஆரஞ்சு நிறஉடை அணிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் முகத்தை மூடிக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்கின்றனர். தீவிரவாதிகள் முயாத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்கும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூரச் செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொன்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டு தாக்குதலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பக்ரைன் ஆகிய நாடுகள் பங்குபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டான் விமானி
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது.
அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர்.
தீவிரவாதிகள் கெடு
இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அல்–கசாஸ்பெயை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது.
அவரை சிறை வைத்த தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர். விமானி அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.
அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதை உறுதிசெய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைத்து விடுகிறோம் என்று ஜோர்டான் அரசு கூறியது. இதற்கிடையே ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோவை தலையை வெட்டி படுகொலை செய்தனர். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை.
விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இந்நிலையில் தீவிரவாதிகள் விமானி முயாத்தை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அந்த வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
விமானி முயாத் அல்–கசாஸ்பெக்கு ஆரஞ்சு நிறஉடை அணிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் முகத்தை மூடிக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்கின்றனர். தீவிரவாதிகள் முயாத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்கும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூரச் செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொன்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டு தாக்குதலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பக்ரைன் ஆகிய நாடுகள் பங்குபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» செய்திகள் ....
» செய்திகள்
» செய்திகள்
» உலக செய்திகள்
» செய்திகள் ....
» செய்திகள்
» செய்திகள்
» உலக செய்திகள்
Page 3 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|