புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
19 Posts - 49%
heezulia
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
1 Post - 3%
Guna.D
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
1 Post - 3%
Shivanya
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
10 Posts - 2%
prajai
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
9 Posts - 2%
Jenila
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
4 Posts - 1%
jairam
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10குப்பைத்தொட்டி'ல்'! Poll_m10குப்பைத்தொட்டி'ல்'! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பைத்தொட்டி'ல்'!


   
   

Page 1 of 2 1, 2  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 11, 2014 5:50 pm

குப்பைத்தொட்டி'ல்'! VQdTsC0TquQky47MklwB+untitled2



வெளியுலகம் கண்களுக்குப் புலப்படாவண்ணம் புழுதித்துகள்களால்
புடை சூழ்ந்த அந்த மகிழ்வுந்தின் பக்கவாட்டுக்கதவின் கண்ணாடியை
பிஞ்சுக் கரமொன்று கவனமாய்த் துடைத்துத் தூய்மைப்படுத்த,
பின்னதன் மறுபக்கம் வெளிப்பட்டது புன்னகைக்கும் சிறுவனின் பொன்முகம்.


ஆலமரத்தின் கிளைநுனிகள், கோணத்திற்கொன்றாய் திசையனைத்தும்
வியாபித்திருப்பதைப் போன்று, சூரியனின் கிரணங்கள் கிஞ்சித்தும்
பாகுபாடின்றி எண்திசையும் பாய்ந்தோடிப் பரவுதற்போன்று, அவன்
பரட்டைத் தலைமயிர்க்கால்கள் முரட்டுத்தனமாய் அனைத்துப்பக்கமும்
துளைத்துக் கொண்டிருந்தன.



மெதுவாய் சிரிக்கும் அவன் விழிகளின் ஆழத்துள் நுரைத்துத் தளும்பின
சோகத்தின் சுமைகள்.


பட்டினிப் போரால் துவண்டு, அதன் விளைவாய் கலங்க எத்தனிக்கும் தன்
கருவிழிகள் இரண்டைக் கட்டுக்குள் அடக்கி, "என் பசி போக்க
வரமொன்றைத் தாரும்" என்பதைப் போல், தன் கரம்தனைப் பக்கவாட்டுக்
கதவெதிரில் அவன் ஏந்த, நின்றிருந்த வண்டி, நிமிஷத்தில் காணாமற்போனது.

சட்!
காய்ந்து கருகிப்போன இந்தச் சிறுகுழந்தை, எத்தனை முறை தான்
காயம் தாங்கும்? ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் கட்டி, அதில் ஆட்டுவித்து அகமகிழும் ஆசைமிகு பெற்றோரும் இவனுக்கில்லை.


ஆதரவாய் அன்னமிட்டு அன்புடனே அள்ளிக்கொள்ள உற்றாரும்
இவனுக்கில்லை. இரும்பு மனத்துடன் விரும்பியோ விரும்பாமலோ குப்பைத்தொட்டியில் வீசி எறியப்பட்ட இவன் நிலையை சுருங்கச் சொன்னால், பெற்றோர் உற்றாரில்லா இவனோர் "அநாதைப் பிள்ளை"!
உண்பதற்கே வழியின்றி இங்குமங்கும் அலைந்து திரிந்து அவதிப்படும்
இப்பிள்ளைக்கு, அரைவயிறு சோறிட்டு ஆதரிக்க யாருமில்லை.
கால்நோக நடந்து இவன் அவசரமவசரமாய் குப்பைக் கூளங்களைக் கிளர,
எதிர்ப்படும் எச்சிலிலைகளில் மிச்சமில்லை.


இறுகிப்போன மனமும் இறுகிப்போன வயிறுமாய் தொடர்ந்து நடந்தவனின்
கண்களுக்குத் தேநீர்க் கடையொன்று தென்பட, முகமலர்ந்து வேகமாய்
ஓடினான் அவன். பிச்சையெடுக்க மனம் வரவில்லை. கடையெதிரில் பறந்துகொண்டிருந்த குப்பைகளையெல்லாம் அவன் கூட்டிக் கொட்டினான்.
முன்னே நின்ற கூட்டத்துள் புகுந்து, கடைக்காரனைக் கண்டுகொண்டான்.

"பசிக்கிறது, புசிப்பதற்கு ஏதாயினும் கொடுங்கள்" இவன் சைகையால்
கடைக்காரனை வேண்ட, கடைக்காரன் மனமோ, வற்றிப்போன வைகையை ஒத்திருந்தது.
அவன், "தள்ளிப் போ" என்றான்.

"சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு" ஏக்கமாய் இவன் வயிற்றைத் தொட்டுக்
காட்டினான்.

"உன்னை சாத்துவதற்குள்ளாக ஓடிப்போ!" வேகமாய் அவன் கைக்கரண்டியைத் தொட்டுக்காட்டினான்.

"டீயாச்சும் கொடுங்கண்ணே!" இவன் வாய்விட்டே கேட்டான்.
ஊற்றினான் கடைக்காரன்….. இவன் முகத்தின் மேலே. சுடும் தேநீரை அலறிக்கொண்டே வேகமாய் வழித்தவன், அதை உதற மனமில்லாமல் அதைவிட அதிகமாய் தகிக்கும் பசித்தீயைப் போக்கிக் கொள்ள வாயிலிட்டு விழுங்கினான்.


எல்லாமும் இருக்க, எல்லோரும் இருக்க, சோகத்தினூடே திண்டாடும்
கூட்டத்தினுள்ளே, எதுவுமேயில்லாத இந்தச் சிறுகுழந்தை என்ன தான் செய்யும்?

பாவம்.

ஆற்றுப்படுகையில் திடீர் வெள்ளத்தால் வெறுமனே நின்றிருக்கும்
மரங்கள் படுவேகமாய் அடித்துச் சென்று அலைகழிக்கப்படுவதைப்போல,
வாழ்க்கை வெள்ளத்தில் எதற்கென்றே அறியாமல் பிறர் தவற்றால்
தானாகவே அடித்துச் சென்று மூழ்கடிக்கப்படுபவர்கள் இவர்கள்.


உண்ண உணவும், உடுக்க உடையும், உயர்வதற்குக் கல்வியும் இல்லாது
ஏங்கி ஏங்கித்தானிவர்கள் சாக வேண்டுமோ?! கடைசியாய் பார்த்த திரைப்படத்தை விமர்சித்தும், விழுங்கிய விருந்தைப் பற்றிப் பீற்றிக்கொண்டும் திரிகின்ற வீணர்களின் மத்தியில், தினசரி வாழ்வையே போர்க்களமாய் கழித்துக் கொண்டிருக்கும் இவர்களின் வேதனையை என்னவென்பது?

காற்றடித்தாலும் சரி, மழையடித்தாலும் சரி. வெயில் வாட்டினாலும் சரி, கடுங்குளிர் தாக்கினாலும் சரி. ஒதுங்க இவர்கட்கு இடமொன்றுமில்லை.
தினம் சோறு இல்லை. திருவிழா இல்லை. புத்தாடையென்ன.... பொத்தல் ஆடைகூட இல்லை.

இவர்கள் விழித்தால், கதிரவன் கதிர்கள் இவர்களைப் ஸ்பரிசிக்குமோ இல்லையோ... கண்டதில் அமர்ந்து பசியாரும் ஈக்கள், நித்யமும் இவர்களை ஸ்பரிசிக்கத் தவறுவதில்லை. மழையிலும் நீரிலும் அமிழ்ந்தெழுந்து இவர்கள் இன்புறுகிறார்களோ இல்லையோ....நாகரீகமற்ற கனிவற்ற இரக்கமற்ற மனித ஓநாய்கள் காறி உமிழும் உமிழ்நீரில் இவர்கள் தினம் தினம் நனைந்து
துன்புறுகிறார்கள்.

பசியாறும் வழியறியாதுத் தவித்துக் கொண்டிருக்கும் இவனது கண்களுக்கு இதோ தெருநாயொன்று தின்று, மிச்சம் வைத்த ரொட்டித்துண்டு கண்ணிலகப்பட்டுவிட்டது.

ஓ!

ஓடி அதை எடுப்பதற்குள் மற்றோர் நாய் ஓடிவந்து அதை அபகரித்துக்கொண்டதே! துக்கத்தை இனியும் அடைத்து வைக்கவொண்ணாமல் ‘ஓ’வென்று அவன் கதறி அழ, அவன் அழுகுரலில் இளகிப்போய், கால் நடையாய் நடந்துச் சென்ற பெரியவர் ஒருவர்,


'தம்பி எதுக்கு அழற?"
என அவனிடம் நெருங்கி வந்து கனிவுடன் வினவ…,அவன் ஆழ்மனத்தின் வலியை வாரிக்கொண்டு பிரவகிக்கும் அவன் அழுகுரல் நிற்கவில்லை. இன்னும் தீனமாய் ஒலித்தது.

"அழாதே. இந்தா பழம்!"
தன் கைப்பையிலிருந்து பழமொன்றை எடுத்து அவர் அன்புடன் நீட்ட,
வேண்டாமென அவன் அதை வேகமாய் மறுத்தான்.

"பணம் வேணுமா?"

வேண்டாமென அவன் அதை வேகமாய் மறுத்தான்.
"எதுக்குதான் அழறே?"

"........."

"சொல்லு. சொன்னாதானே தெரியும்?"

அழுதவாறே நிமிர்ந்து பார்த்த இவன் பார்வைக்கு, பெரியவரின் கண்களுள்
இருந்த காருண்யம் என்னவோ செய்தது.

விம்மியவாறே சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்திருந்தவன், "நா ஒன்னு கேட்டா செய்வீங்களா தாத்தா?" என பெரியவரிடம் வினவினான்.

"என்ன செய்யனும்னு சொல்லு, முடிஞ்சா செய்யறேன்"
இதைக் கேட்டமாத்திரத்தில், அருகில் எரிந்தணைந்து போன
குப்பையிலிருந்து கரித்துண்டு ஒன்றை அவன் வேகமாய் ஓடிச்சென்று
எடுத்துவந்தான்.

"இது எதுக்குப்பா?" பெரியவர் புரியாமல் சிறுவனிடம் வினவினார்.
"இந்த கரியால நா சொல்றத அந்த குப்ப தொட்டிக்கு மேல
எழுதறீங்களா தாத்தா?" அவன் விம்மல் இன்னும் அவனிடமிருந்து
விடுபடவில்லை.

"என்ன எழுதணும்?"
“வாங்க சொல்றேன்”

என்ன எழுதச் சொல்வானோ என எண்ணியவாறே அவனைப்
பின்பற்றிச் சென்றார் பெரியவர். சென்றபின் அங்கே சிறுவன் சொல்ல, பெரியவர் அதனை எழுதி முடித்துத் திரும்ப, இதோ நம் புறக்கண்களுக்குப் புலப்படுவது,

“இங்கே குப்பையை மட்டும் போடுங்கள்” எனும் வலிதரும் வாசகம்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 11, 2014 6:06 pm

“இங்கே குப்பையை மட்டும் போடுங்கள்” எனும் வலிதரும் வாசகம்! wrote:

நிஜம் தான் சோகம்


பதிவை எங்கிருந்து எடுத்தீர்களோ அதற்கு பதிவின் கீழ் நன்றி சொல்லிடுங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 11, 2014 10:31 pm

நன்றி [b]ஜாஹீதாபானு[/b]


அன்பு மலர்


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 11, 2014 10:33 pm

குப்பைத்தொட்டி'ல்'! 3838410834 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 12, 2014 1:30 pm

jesifer wrote:நன்றி [b]ஜாஹீதாபானு[/b]


அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1086637

நான் சொன்னது புரியலயா ஜெசிபர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 6:56 pm

ஜாஹீதாபானு wrote:
jesifer wrote:நன்றி [b]ஜாஹீதாபானு[/b]


அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1086637

நான் சொன்னது புரியலயா ஜெசிபர்
மேற்கோள் செய்த பதிவு: 1086797

ம்................ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி நாம் போடும் பின்னுட்டங்களை அவர் சரிவர படிப்பதில்லை என்று நினைக்கறேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 12, 2014 9:02 pm

jesifer wrote:நன்றி [b]ஜாஹீதாபானு[/b]


அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1086637

Jessifer ,
நீங்கள் தந்துள்ள தகவல் , உங்களின் சொந்த தகவலா அல்லது மற்ற பத்திரிகைகளில் இருந்து தேர்ந்து எடுத்து இடப்பட்ட மறுபதிவா ? உங்களுக்கே சொந்தம் என்றால் உங்கள் ஒருவர் பெயரே இருக்கட்டும்.
மறுபதிவு என்றால் , மூல பதிவர் பெயருடன் அவருக்கு சிறு நன்றி .அவருடைய பதிவை கையாளுவதற்காக தினத்தாள் /.ஊடகத்தின் பெயர் , நன்றியுடன் .
இது ஒரு விதத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும் . சில சமயம் தவறான செய்திகளும் வரும் போது , தவறான செய்தியை நீங்கள் தான் தந்ததாக யாரும் குறைமாட்டார்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 16, 2014 5:07 pm

காலம் தாழ்த்தி பார்த்தி்ற்கு மன்னிக்கவும்.
இப்பதான் உங்கள் ரூல்ஸ் ரெகுலேஷன் எல்லாம் தெரிஞ்சிக்கி்ட்டேன்...
நன்றி அப்படியே செய்கின்றென்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 5:50 pm

நன்றி ,Jessifer !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 6:08 pm

jesifer wrote:காலம் தாழ்த்தி பார்த்தி்ற்கு மன்னிக்கவும்.
இப்பதான் உங்கள் ரூல்ஸ் ரெகுலேஷன் எல்லாம் தெரிஞ்சிக்கி்ட்டேன்...
நன்றி அப்படியே செய்கின்றென்.
மேற்கோள் செய்த பதிவு: 1088183

இப்பவாது புரிஞ்சுதே



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக