புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_m10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10 
32 Posts - 51%
heezulia
ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_m10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10 
27 Posts - 43%
mohamed nizamudeen
ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_m10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_m10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_m10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10 
32 Posts - 51%
heezulia
ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_m10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10 
27 Posts - 43%
mohamed nizamudeen
ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_m10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_m10ஆமையும் அழகிய பெண்ணும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமையும் அழகிய பெண்ணும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 12:48 am


ஓரு காலத்தில் நைஜீரிய தேசத்தை ஓர் அரசன் மிகுந்த ஆளுமையுடன் ஆண்டு வந்தான்.

குடிமக்கள் மட்டுமல்ல, விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தான். அவனுக்கு எக்பன்யான் என்ற மகன் இருந்தான். அவன் ஒரு நிலையில்லாத சிந்தனை உள்ளவன். அவனுக்கு நிறைய மனைவிகள் இருந்தும் யாரையும் விரும்பாமலும் நேசிக்காமலும் இருந்தான். அதனால் மன்னன், மகனின் கண்ணில் படும் அழகான பெண்களையெல்லாம் அவனுக்கு மனைவியாக்கி வைத்தான். பெண்ணின் தாயோ, தந்தையோ சம்மதிக்கவில்லையென்றால் அவர்களைக் கொன்று விடும் துர்க்குணம் கொண்டிருந்தான்.

அந்நாட்டில் மிகவும் புத்திசாலியான ஆமை ஒன்று இருந்தது. அந்த ஆமையின் மனைவியும், மகளும் மிகவும் அழகானவர்கள். மகள், இளவரசன் கண்ணில் பட்டுவிடாமல் இருக்க ஆமை, அவளைப் புதர்களில் ஒளிந்து இருக்க வைத்தது.

ஒருநாள் அந்த ஆமை, உணவுக்காக தனது வயலில் வேலை செய்வதற்காகத் தன் மனைவியுடன் சென்றிருந்தது.

அந்த நேரத்தில் பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த இளவரசன் ஒரு பறவையை நோக்கி அம்பைத் தொடுத்தான். அந்தப் பறவை பொத்தென்று புதர் அருகில் விழுந்தது. ஆமையின் மகள் அதைப் பார்த்து கலக்கம் அடைந்தாள். பறவையோ அவளின் அதீத அழகை ரசித்தபடி இருந்தது. அதை அவள் எடுத்து அன்புடன் தடவிக்கொண்டிருந்தாள். அப்போது பறவையைத் தேடி புதரின் அருகில் வந்த படைவீரன் ஒருவன், அழகின் உருவமாக இருந்த ஆமைப் பெண்ணைப் பார்த்து வியந்து போனான்.

அவன் ஓடிப் போய் இளவரசனிடம், அழகான பெண் ஒருத்தி புதருக்குள் ஒளிந்து இருக்கும் விஷயத்தைச் சொல்லி விட்டான்.

அதைக் கேட்ட இளவரசன் விரைந்து வந்து புதர் அருகில் சென்றான். அந்த அழகிய ஆமைப் பெண்ணை பார்த்ததும் அவனது கண்கள் விரிந்தன. அவன் வாழ்நாளில் அத்தகைய அழகிய பெண்ணைப் பார்த்ததேயில்லை. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த கணமே அந்த பெண்ணைத் தனது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான். அந்த அழகியும் அவனை உற்றுநோக்கிக் கொண்டிருந்தாள்.

பிறகு அவளுடன் பேச்சுக் கொடுத்தான். அவளும் அவனுடன் பேச ஆரம்பித்தாள். வெகு நேரம் அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த அவன், அவள் அவனை ஏற்றுக் கொண்டு மனைவியாகத் தயார் என்று சொல்லும் வரை பேசிக் கொண்டிருந்தான். பின்னர் அரண்மனைக்குத் திரும்பினான். மன்னரான தனது தந்தையிடம் அந்த ஆமையின் மகளைச் சந்தித்தது பற்றிக் கூறாமல் மறைத்து விட்டான்.

மறுநாள் காலையில் ஆறு துணித் துண்டுகள், முன்னூறு மரத்துண்டுகளைப் பரிசாக ஆமையின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அன்று பிற்பகலில், ஆமையின் வீட்டுக்குச் சென்ற இளவரசன் ஆமையிடம், தான் அந்தப் பெண்ணை மணக்க விரும்புவதாகவும் அவளுக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயார் என்றும் கூறினான். ஆனால் ஆமை மிகவும் பயந்தது. மன்னனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் தன்னை மட்டுமல்ல, மனைவி, மகள் என எல்லோரையும் கொன்று விடுவான் என்று பயத்தின் உச்சியில் சொன்னது.

ஆனால் இளவரசனான மன்னனின் மகனோ ஆமையிடம், அப்படி ஏதும் நடக்காமல் தன் பார்த்துக் கொள்வதாக சொல்லிச் சமாளித்தான். ஆமையும் அவனது வார்த்தையை நம்பியது. இளவரசனோ தன் தாயிடம் சென்று, ஆமை அழகி பற்றிக் கூறினான். அவருக்கும் அரசரின் பிடிவாத குணம் பற்றிய வெறுப்பு இருந்தது. அவர், அரசருக்குத் தெரியாமல் அந்த ஆமைக் குடும்பத்தின் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணைப் பார்க்க முடிவு செய்தார். உடை, உணவு வகைகள் மற்றும் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

தன் மகனான இளவரசன் திருமணம் செய்துகொள்ள விரும்பிய ஆமையின் மகளைப் பார்த்தார். தான் கொண்டு வந்திருந்த பொருட்களையும் கூடவே ஆலிவ் எண்ணெயையும் அந்த அழகிக்குப் பரிசளித்தார். அந்த ஆமையிடம், ""என் மகனே, உன் மகளை மணந்து கொள்வான், வேறு யாருக்கும் அவளை மணம் பேச வேண்டாம்"" என்று உறுதியாகக் கூறினாள். ஆமையும் அரசியிடம், அப்படியே தான் காத்திருப்பதாகவும் வேறு யாருக்கும் தனது அழகிய மகளை மணமுடித்துக் கொடுக்க மாட்டேன் எனவும் மறு உறுதி அளித்தது.

ஐந்து ஆண்டுகள், அரசி அந்த ஆமையையும் தன் மகனின் வருங்கால மனைவியான ஆமையின் அழகிய மகளையும் தொடர்ந்து சந்தித்து வந்தாள். அதெத் என்பது அந்த ஆமை அழகியின் பெயர். ஒரு நல்ல தருணத்தில் அவன் தன் தந்தையான மன்னரிடம் தான் ஆசைப்பட்ட ஆமை அழகி பற்றிச் சொன்னான். அதைக் கேட்டதும் மன்னன் கடும் கோபம் கொண்டான்.

உடனே மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதிக்கு அந்த ஆமைக் குடும்பத்தினை இழுத்து வரும்படி தன் படைத் தளபதிக்குக் கட்டளை இட்டான். படைத் தளபதியும் தன் வீரர்கள் சிலருடன், ஆமைக் குடும்பத்தை இழுத்து வரப் புறப்பட்டுச் சென்றான்.

நாட்டின் மக்கள் எல்லோரும், அதற்குள் செய்தி அறிந்து சந்தைப் பகுதியில் கூட்டமாகச் சேர ஆரம்பித்து விட்டனர்.

இளவரசனோ இருதலைக் கொள்ளி எறும்பாகத் துடிக்க ஆரம்பித்தான்.

ஆமை அழகியையும் அதன் குடும்பத்தினரையும் நிச்சயம் கொன்று விடுவார்கள் என்று வருந்தத் தொடங்கினான்.

மன்னனோ எந்த விதச் சலனமும் காட்டாமல் இருந்தான்.

படைத் தளபதியும் வீரர்கள் சிலரும் ஆமைக் குடும்பத்தை இழுத்து வந்தனர்.

என்னே ஆச்சர்யம்!

ஆமை அழகியின் அழகு எல்லோரையும் மயங்கச் செய்வதாய் இருந்தது.

இப்படி ஓர் அழகி இந்த நாட்டில் இருந்தாளா என்று மக்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

சிலரோ, இந்த அழகிய பெண் இவ்வளவு நாள் எங்கே ஒளிந்திருந்தாள் என்று வாய் விட்டே, பலரும் கேட்கும்படிக் குரல் எழுப்பினர். அதில் பல குரல்கள் வயிற்று எரிச்சலாய் தெரித்து விழுந்தன.

மன்னன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.

கொடுமைக்கார மன்னனான அவன் தன் முன்னால், படைத் தளபதி கொண்டு வந்த நிறுத்திய ஆமையின் மகளைப் பார்த்தான். அவனுக்கும் ஆச்சர்யம் தொற்றிக் கொண்டது. அவன் வாழ்நாளில் அப்படி ஒரு அழகியை அவன் பார்த்ததில்லை. உலகத்திலேயே இவள் தான் சிறந்த அழகி என்பதில் கொஞ்சமும் ஐயம் இருக்காது என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அவன் என்ன முடிவு எடுக்கப் போகிறான் என்பதைத் திகிலுடன் எதிர்நோக்கியவாறு இருந்தது ஆமைக் குடும்பம்.

இளவரசனுக்கும் பயமாகத்தான் இருந்தது.

மக்களோ மன்னன் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய ஆவலாய் இருந்தனர்.

மீண்டும் ஒரு முறை அந்த அழகிய பெண்ணைப் பார்த்த மன்னன், இவளை விட என் மகனுக்குப் பொருத்தமானவள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள், இவள்தான் என் மகனை மணக்கப் போகிறவள் என்று உரத்த குரலில் சொன்னான்.

தொடர்ந்து தன் அரசில் பாதியை ஆமைக்கு எழுதித் தருவதாகவும் மேலும் தன் பண்ணைகளையும் ஆமைக்கே அளிப்பதாகவும் அதைப் பராமரிக்க நூற்று ஒரு பெண்களை நியமிப்பதாகவும், இது தவிர முன்னூறு பெண்களை ஆமைக்கு அடிமைகளாக அளிப்பதாகவும் தெரிவித்தான்.

மக்கள் சந்தோஷம் அடைந்தனர். உடனேயே மன்னன் பெரிய விருந்து ஒன்றையும் அறிவித்தான். விருந்தில் பலவகை உணவுளும் பழங்களும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.

ஆமை தனக்கு அளிக்கப்பட்ட பகுதி நாட்டைத் திறம்பட ஆட்சி செய்தது.

நைஜீரிய நாட்டின் சிறுவர் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது இந்தக் கதை. இது பல்வேறு வடிவங்களில் நாடு முழுக்க உலா வருகிறது. பல குழுக்கள் இதை பொம்மலாட்ட நிகழ்வுகளாகவும் நிகழ்த்தி வருகின்றன.

இந்தக் கதையின் மையக் கருத்தே, வறுமை நிரந்தரம் அல்ல என்று உரக்கச் சொல்வதுதான்.




ஆமையும் அழகிய பெண்ணும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 7:12 am

ஆமையும் அழகிய பெண்ணும் 3838410834 ஆமையும் அழகிய பெண்ணும் 3838410834

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 14, 2014 8:32 am

அதுசரி, ஆமை எப்படி அழகாக அதுவும் சூப்பர் அழகாக இருக்கும்? இருந்தாலும் கதை சூப்பர்.


jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 10:34 am

உங்கள் கதை சூப்பர்..........ஆனால்.. ஆமையை எப்படி மனிதன் மனைவியாக ஏற்றுக்கொள்ளவது??
ஆமையை ஒரு கதாபாத்திரமாக எடுத்தது இக்கதைக்கு பொருத்தமில்லாமல் இருக்கிறது.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக