Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார்
2 posters
Page 1 of 1
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார்
ஆண்டவராகிய கடவுள் எப்போதுமே ‘மன்னிக்கிறவராக’ இருக்கிறார், ஆனால் அவரது படைப்பாக இருக்கும் மனிதர்கள் அவரைப்போல் எப்போதும் மன்னிப்பதில்லை என்று சங்கீதப் புத்தகம்(86:5) குறிப்பிடுகிறது.
நம் உறவுகளோ, நண்பர்களோ, நமக்கு எதிராக செய்த தவறுகளை அவரோடு பேசித் தீர்க்காவிட்டால், மனக்கசப்பு உருவாகும். இறுதியில் அவர்கள் செய்த தவறுகள் மன்னிக்கவே முடியாததுபோல் நமக்குத் தோன்றும்.
இதனால்தான் மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யும் தவறுகளை, காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் மன்னிக்க வேண்டும் என்கிறது விவிலியம். குறிப்பாக ரத்த உறவுகள் செய்யும் தவறுகளை எத்தனை விரைவாக மன்னிக்க முடியுமோ அத்தனை விரைவாக மன்னிப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அமைதியைக் கொண்டுவரும்.
அதனால்தான் “ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்” என கொலோசெயர்(3:13) எடுத்துச் சொல்லுகிறது.
குடும்ப வாழ்வில், தம்பதியர் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். மாறாக தவறுகளை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு “நீங்கள் எப்போதுமே இப்படித்தான் என்றோ, நான் சொல்வதை நீ காதுகொடுத்துக் கேட்பதே இல்லை என்றோ பரஸ்பரம் குத்திக்காட்ட மாட்டார்கள்.
“குற்றத்தை மன்னிப்பது மகிமை” என்பதைக் கணவன், மனைவி இருவருமே நம்புவார்கள் என்கிறது நீதிமொழி(19:11). ஆனால் இந்த மகிமையை பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தபிறகே பலரும் உணரத் தலைப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருமே பேசா மடந்தைகளாகிவிடுகிறார்கள்; வாழ்க்கைத் துணையின் உணர்ச்சிகளை மதிக்காத கல்நெஞ்சக்காரர் ஆகிவிடுகிறார்கள். பாசமோ பிணைப்போ இல்லாத ஒரு பந்தத்திற்குள் சிக்கிவிட்டதாக இருவரும் நினைக்கிறார்கள்.
ஆனால் ஒருவருக்கு ஒருவர் தவறிழைத்து விட்டதாக நினைத்தால் அதை மறப்பதும் மன்னிப்பதும், இல்லற வாழ்வை இன்னும் இனியதாக்கி விடுகிறது.
மன்னிப்பின் அவசியத் தேவை
நம்மைப் புண்படுத்துகிறவர்கள் அல்லது நமக்கு எதிராக பாவம் இழைப்பவர்கள் யாராயினும் அவர்களை மன்னிக்க நாம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்; அப்போதுதான் சமாதானத்தின் அமைதி உங்களை ஒரு அரணாகக் காக்கும்.
மற்றவர்கள் எத்தனை முறை புண்படுத்தினாலும் அத்தனை முறையும் மன்னிப்பதே உயர்ந்தது. மன்னிப்பதே மனித இனத்தின் மகத்தான குணமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு கதை மூலம் விளக்கினார் இயேசு.
கடன் வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தமுடியாமல் அல்லல் பட்டுவந்த ஒரு அடிமையைப் பற்றிய கதை அது.
அரசனும் அடிமையும்
ஓர் அடிமை தன் ராஜாவுக்கு ஆறு கோடி தினாரி கடன்பட்டிருந்தான்; ஆறு கோடி நாட்கள் அவன் வேலை செய்தால்தான் அந்தக் கடனை அவனால் அடைக்க முடிந்திருக்கும் என்பது யதார்த்தம்.
அவன் நிலையை உணர்ந்த ராஜா அவ்வளவு பெரிய கடனை ரத்து செய்தார். அத்தனை பெரிய கடனிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த அடிமையோ, தனக்கு வெறுமனே நூறு தினாரி கடன்பட்டிருந்த சக அடிமை ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து, தனக்குக் கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பித் தரச்சொல்லி அவன் கழுத்தை நெரித்தான்.
அவனோ, கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் கடனைக் கொடுத்துவிடுவதாகச் சொல்லி, அவன் காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தான்; அவனது கண்ணீருக்கு இரங்காத அந்த அடிமை தன் சக அடிமையைச் சிறையில் அடைக்கச் செய்தான்.
இதைக் கேள்விப்பட்ட ராஜா கொதித்துப்போனார். “நான் உனக்கு இரக்கம் காட்டியதைப் போல் நீயும் உன்னுடைய சக அடிமைக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்று அவனிடம் கோபத்துடன் கேட்டார். பிறகு, “அவன் எல்லாக் கடனையும் அடைக்கும்வரை சிறைக் காவலர்களிடம் அவனை ஒப்படைத்தார்”(மத்தேயு-18:21-34).
மேலும் இயேசு இந்தக் கதையைச் சொல்லி முடித்தபின் “அவ்வாறே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரரை மனமார மன்னிக்காவிட்டால் என் பரலோகத் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று அவர் சொன்னார்(மத். 18:35).
மன்னிப்பதே ஆரோக்கிய வாழ்வு
மன்னிக்கும் மனம் இல்லாவிட்டால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது, உறவுகளில், தோழமையில் விரிசல் உண்டாகிறது. தகவல் தொடர்பு அறுந்துவிடுகிறது.
தாராளமாய் மன்னிக்கும்போதோ அநேக நன்மைகள் விளைகின்றன. மோசமான உடல்நிலைக்குக் காரணமாய் இருக்கிற மனக் கொந்தளிப்புகள், குமுறல்கள் ஆகியவற்றுக்கு மாபெரும் வடிகாலாக மன்னிப்பு அமைகிறது; ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது, அடுத்துவரும் நாட்களை மகிழ்ச்சியின் தொடர்ச்சி
மிக்கதாக மாற்றிவிடுகிறது. நீங்கள் மன்னிக்காதவர் எனில் நீங்கள் வராக்கடன்களின் அதிபதி. வராக்கடன்கள் உங்கள் பேரேட்டில் இருந்தாலும் அவை உங்கள் பொக்கிஷ அறையில் இருப்பதில்லை. அவற்றால் உங்களுக்குப் பயனில்லை.
மன்னிப்பவர் எனில் உறவுகளின், நண்பர்களின் வரவு உங்கள் பொக்கிஷத்தை ரத்தினங்கள்போல் ஜொலிக்கச் செய்கிறது.
நீங்கள் மன்னிப்பதன் மூலமே உங்களை மன்னிப்பவராக இருக்கும் பரலோகத் தந்தையுடன் உங்களுக்கான பந்தத்தை உறுதி செய்கிறது.
அ. ஹென்றி அமுதன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார்
![நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
-
•கடந்த காலம் என்ற சுமையை இறக்கி வைத்துவிட்டு,
எதிர்காலத்தைப் பார்க்க எழுந்து நிற்பதே மன்னிப்பு.
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர்
» கடவுள் உங்களை காப்பாற்றுவாரா?
» உங்களை நீங்கள் நம்புங்கள்
» மாப்பிள்ளை, நீங்கள் பத்திரமாக உங்களை பார்த்துக்கோங்கோ "
» நீங்கள் கண்டுபிடிக்கும் முதல் 4 வார்த்தை உங்களை பற்றி சொல்லும்
» கடவுள் உங்களை காப்பாற்றுவாரா?
» உங்களை நீங்கள் நம்புங்கள்
» மாப்பிள்ளை, நீங்கள் பத்திரமாக உங்களை பார்த்துக்கோங்கோ "
» நீங்கள் கண்டுபிடிக்கும் முதல் 4 வார்த்தை உங்களை பற்றி சொல்லும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|