புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 1:20 am


''உயிர் கொடுத்தார் கடவுள். வெற்றுடலைப் பெற்றெடுத்து வளர்த்தாள் தாய். ஆனால், இன்று கற்றவரும் உற்றாரும் உறவினரும் புகழுரைக்க, பெற்ற தாய்க்கும் மேலாக பெரும்பேறு எனக்கும் என் குடும்பத்துக்கும் அளித்து, எங்களை எல்லாம் ஆளாக்கும், பாதுகாக்கும், எங்கள் குடும்ப தெய்வம் எங்கள் அம்மா!'' - பால்வளத் துறை மானிய கோரிக்கையின்போது ஜூலை 25-ம் தேதி சட்டசபையில் அமைச்சர் மாதவரம் மூர்த்தி உதிர்த்த வார்த்தைகள் இவை.

அமைச்சராக்கிய அம்மாவே இப்போது மூர்த்தியை முன்னாள் அமைச்சர் ஆக்கிவிட்டார்.

அம்மா கேபினட்டில் அமைச்சர்கள் வெளியேற்றப்படுவதற்கு உறவுகள், சொந்த பிரச்னைகள், கோஷ்டி அரசியல் ஆகியவைதான் தூக்கலான காரணமாக இருக்கும். ஆனால், மாதவரம் மூர்த்தியை வெளியேற்றியதற்கு பால் பிரச்னையும் முக்கியமான காரணமாம்.

''சகாயம் ஐ.ஏ.எஸ்-ஸை கோ-ஆப்டெக்ஸில் இருந்து மாற்றியதற்கு அமைச்சர் கோகுல இந்திராதான் காரணம் என்றால், அமைச்சர் மூர்த்தி மாற்றுவதற்கு ஆவின் நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால் ஐ.ஏ.எஸ். காரணமாகிவிட்டாராம்'' என முணுமுணுப்புகள் கோட்டையில் எதிரொலிக்கின்றன.

ஆவின் நிறுவன ஊழியர்களிடம் பேசினோம். ''மூர்த்தியின் தலை உருண்டதற்கு ஒரே ஒரு ஆள்தான் முக்கியக் காரணம்'' என முன்னோட்டம் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தனர். ''முன்பு தானியாங்கி பால் பூத்துகளை அரசு தொடங்கியபோது அங்கே தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தவர் அவர். சைதாப்பேட்டை ஏரியாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் அ.தி.மு.க-வில் சாதாரண உறுப்பினர். ஆனால் இன்றைக்கு அவருடைய வளர்ச்சி கண்டு அ.தி.மு.க-வில் இருப்பவர்களே ஆச்சர்யப்படுகிறார்கள். தொழில் அதிபர் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கும் இவரால்தான் இவ்வளவு பிரச்னையும். ஆவினில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கைப் பயன்படுத்தி உயர ஆரம்பித்தார். டேங்கர் லாரி மூலம்தான் பால் கொள்முதல் ஆகும். அப்படி லாரிகளை வாங்கி பால் கொள்முதல் செய்து வந்தார். பால் வைக்கவே தகுதி இல்லாத டேங்கர் லாரிகளை வைத்து பால் சப்ளை செய்து வந்தார். ஒரே பதிவு எண் கொண்ட லாரிகள் நிறைய வைத்திருந்தார். இப்படி 80 லாரிகளுக்கும் மேல் அவர் வைத்திருக்கிறார். இந்த லாரிகள் மூலம் திருடப்படும் பாலை தனியார் நிறுவனத்துக்கு விற்றுவந்தார். இப்படி ஆயிரக்கணக்கான லிட்டர் பால் தினமும் கொள்ளை போயின. இதற்கெல்லாம் ஆவின் அலுவலர்கள் சிலர் உடந்தையாக இருந்தார்கள்.

மாதவரம் மூர்த்தி பால்வளத் துறைக்குப் பொறுப்புக்கு வந்த பிறகு, அவர் எதையும் கண்டுகொள்ளாமல் இந்த நபருக்கு ஆதரவாக இருந்தார். பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளுக்கு அரசு பணம் தரும். இதற்கான தொகையை நிர்ணயிப்பது ஆவின் நிர்வாகம்தான். ஆனால், இந்தத் தொகையை இந்த நபர்தான் நிர்ணயித்து அதை மூர்த்தி மூலம் செயல்பட வைத்தார். கடந்த எம்.பி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-வில் ஸீட் கேட்டார். இவர் சொன்னால்தான் ஆவினில் எதுவும் நடக்கும். அவர் கட்டுப்பாட்டில் அதிகாரிகளே இருந்தார்கள். மற்றவர்களை ஆட்டுவிக்கும் அளவுக்கு அவர் அசுர சக்தி படைத்தவராக இருந்தார். இவரை விசாரித்தாலே மொத்த விவகாரமும் வெளிச்சத்துக்கு வரும்.

துணை மேலாளர் சுந்தரம் மகாலிங்கம் என்பவரை மாதவரம் மூர்த்தியின் அதிகாரபூர்வமற்ற பி.ஏ-வாக நியமித்தார்கள். ஆவின் நிறுவனத்தில் இருந்து கொண்டே ஆன் டூட்டியில் அவர் வேலை பார்த்து வந்தார். மற்ற பி.ஏ-க்களைவிட அவருக்குதான் அங்கே செல்வாக்கு. அவர் மூலம்தான் எல்லாம் நடைபெற்று வந்தது. ஆவின் நிறுவனத்தில் தனக்கு ஒரு ரூம் வேண்டும் என்று மூர்த்தி அடம்பிடித்தார். அங்கே சேர்மன் நியமிக்கப்பட்ட பிறகு அமைச்சருக்கு ரூம் ஒதுக்கப்படுவது இல்லை. ஆனால், அந்த ரூமை அடம்பிடித்து வாங்கினார் மூர்த்தி. ஆவின் நிறுவனத்தின் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்காக விஜிலன்ஸ் அதிகாரிகளை நியமிக்க முயன்றார்கள். 'துணை மேலாளர்களை வைத்தே பார்த்துக்கொள்ளலாம்’ என மறுத்துவிட்டார் மூர்த்தி. தகுதி இல்லாத மேலாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கு நியமிக்கப்பட்டதை சுனில் பாலிவால் விரும்பவில்லை. ஆனால், அந்த நியமனம் அவரை மீறி நடந்துவிட்டது. ஆவின் நிறுவனத்தை லாபத்தோடும் தரத்தோடு நடத்த வேண்டும் என்று சுனில் பாலிவால் முயற்சிகள் எடுத்து வந்தபோது, ஒரு கட்டத்தில் 'சுனில் பாலிவாலையே மாற்றிவிடுவேன்’ என அந்த நபர் சொல்ல ஆரம்பித்தார். இதுதான் மூர்த்தியின் பதவியை காவு வாங்கிவிட்டது'' என்றனர் வேதனையுடன்.

எத்தனையோ குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்த விவகாரம்தான் மூர்த்தியின் பதவி பறிப்புக்கு முக்கியக் காரணமாகச் சொல்கிறார்கள். ''டேங்கர் லாரி மூலம்தான் ஆவின் நிலையங்களுக்குத் தினமும் பால் சப்ளை ஆகி வருகிறது. சென்னைக்கு பெரும்பாலும் திருவண்ணாமலையில் இருந்துதான் தினமும் பால் வருகிறது. டேங்கர் லாரியில் வரும் இந்தப் பாலை சுங்குவார்சத்திரம் போன்ற சில மறைவான இடங்களில் நிறுத்தி, பாலை திருடிவிட்டு அதே அளவுக்குத் தண்ணீரை கலந்துவிடுகிறார்கள். இப்படி தினமும் பல ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் கொள்ளை போயின. கடந்த மாதம் 4,000 லிட்டர் பாலை திருடியதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். வந்தவாசி ரோடு, கோவிந்தாபுரம் ஏரியாவில் வாகன சோதனை நடந்தபோது பால் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம் திண்டிவனம் கோவிந்தாபுரத்தில், போலீஸ் நடத்திய சோதனையில் பாலில் தண்ணீர் கலப்படம் செய்தைக் கண்டுபிடித்தனர். இதை வைத்து வேலூர் ஆவின் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டு பேரை போலீஸ் கைது செய்தது. சென்னைக்கு வரும் பாலில் மட்டும் தினமும் 20 ஆயிரம் லிட்டருக்கும் மேல் தண்ணீர் கலப்படம் செய்து பால் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது. இந்த விவரங்களை எல்லாம் முதல்வருக்கு சி.பி.சி.ஐ.டி அறிக்கையாக அனுப்பி வைத்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். பாலின் உற்பத்தியும் பூர்த்தி ஆக வேண்டும் என்பதற்காகத்தான் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. இதுவரை மூன்று லட்சம் விலையில்லா கறவை மாடுகளை வழங்கிய நிலையில் பால் உற்பத்தி பெருகவில்லை'' என்றனர்.

சுனில் பாலிவாலிடம் பேசினோம். ''டேங்கர் லாரிகளில் இருந்து பால் கடத்தலைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்திருக்கிறது. இதற்காக நாங்கள் பெரும் முயற்சிகள் எடுத்திருக்கிறோம். பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளின் மூடிகளிலும் குழாய்களிலும் ஆவின் நிறுவனத்தின் சீல் வைக்கப்பட்டிருக்கும். அதை உடைத்து பாலைத் திருடுவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நீங்கள் குறிப்பிடும் நபரின் டேங்கர் லாரிகளை இப்போது நிறுத்திவிட்டோம்'' என்றார்.

பாலில் கலப்படம் செய்தால் பாவம்!



பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக