ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா?

Go down

பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Empty பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா?

Post by சிவா Thu Sep 11, 2014 1:20 am


''உயிர் கொடுத்தார் கடவுள். வெற்றுடலைப் பெற்றெடுத்து வளர்த்தாள் தாய். ஆனால், இன்று கற்றவரும் உற்றாரும் உறவினரும் புகழுரைக்க, பெற்ற தாய்க்கும் மேலாக பெரும்பேறு எனக்கும் என் குடும்பத்துக்கும் அளித்து, எங்களை எல்லாம் ஆளாக்கும், பாதுகாக்கும், எங்கள் குடும்ப தெய்வம் எங்கள் அம்மா!'' - பால்வளத் துறை மானிய கோரிக்கையின்போது ஜூலை 25-ம் தேதி சட்டசபையில் அமைச்சர் மாதவரம் மூர்த்தி உதிர்த்த வார்த்தைகள் இவை.

அமைச்சராக்கிய அம்மாவே இப்போது மூர்த்தியை முன்னாள் அமைச்சர் ஆக்கிவிட்டார்.

அம்மா கேபினட்டில் அமைச்சர்கள் வெளியேற்றப்படுவதற்கு உறவுகள், சொந்த பிரச்னைகள், கோஷ்டி அரசியல் ஆகியவைதான் தூக்கலான காரணமாக இருக்கும். ஆனால், மாதவரம் மூர்த்தியை வெளியேற்றியதற்கு பால் பிரச்னையும் முக்கியமான காரணமாம்.

''சகாயம் ஐ.ஏ.எஸ்-ஸை கோ-ஆப்டெக்ஸில் இருந்து மாற்றியதற்கு அமைச்சர் கோகுல இந்திராதான் காரணம் என்றால், அமைச்சர் மூர்த்தி மாற்றுவதற்கு ஆவின் நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால் ஐ.ஏ.எஸ். காரணமாகிவிட்டாராம்'' என முணுமுணுப்புகள் கோட்டையில் எதிரொலிக்கின்றன.

ஆவின் நிறுவன ஊழியர்களிடம் பேசினோம். ''மூர்த்தியின் தலை உருண்டதற்கு ஒரே ஒரு ஆள்தான் முக்கியக் காரணம்'' என முன்னோட்டம் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தனர். ''முன்பு தானியாங்கி பால் பூத்துகளை அரசு தொடங்கியபோது அங்கே தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தவர் அவர். சைதாப்பேட்டை ஏரியாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் அ.தி.மு.க-வில் சாதாரண உறுப்பினர். ஆனால் இன்றைக்கு அவருடைய வளர்ச்சி கண்டு அ.தி.மு.க-வில் இருப்பவர்களே ஆச்சர்யப்படுகிறார்கள். தொழில் அதிபர் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கும் இவரால்தான் இவ்வளவு பிரச்னையும். ஆவினில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கைப் பயன்படுத்தி உயர ஆரம்பித்தார். டேங்கர் லாரி மூலம்தான் பால் கொள்முதல் ஆகும். அப்படி லாரிகளை வாங்கி பால் கொள்முதல் செய்து வந்தார். பால் வைக்கவே தகுதி இல்லாத டேங்கர் லாரிகளை வைத்து பால் சப்ளை செய்து வந்தார். ஒரே பதிவு எண் கொண்ட லாரிகள் நிறைய வைத்திருந்தார். இப்படி 80 லாரிகளுக்கும் மேல் அவர் வைத்திருக்கிறார். இந்த லாரிகள் மூலம் திருடப்படும் பாலை தனியார் நிறுவனத்துக்கு விற்றுவந்தார். இப்படி ஆயிரக்கணக்கான லிட்டர் பால் தினமும் கொள்ளை போயின. இதற்கெல்லாம் ஆவின் அலுவலர்கள் சிலர் உடந்தையாக இருந்தார்கள்.

மாதவரம் மூர்த்தி பால்வளத் துறைக்குப் பொறுப்புக்கு வந்த பிறகு, அவர் எதையும் கண்டுகொள்ளாமல் இந்த நபருக்கு ஆதரவாக இருந்தார். பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளுக்கு அரசு பணம் தரும். இதற்கான தொகையை நிர்ணயிப்பது ஆவின் நிர்வாகம்தான். ஆனால், இந்தத் தொகையை இந்த நபர்தான் நிர்ணயித்து அதை மூர்த்தி மூலம் செயல்பட வைத்தார். கடந்த எம்.பி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-வில் ஸீட் கேட்டார். இவர் சொன்னால்தான் ஆவினில் எதுவும் நடக்கும். அவர் கட்டுப்பாட்டில் அதிகாரிகளே இருந்தார்கள். மற்றவர்களை ஆட்டுவிக்கும் அளவுக்கு அவர் அசுர சக்தி படைத்தவராக இருந்தார். இவரை விசாரித்தாலே மொத்த விவகாரமும் வெளிச்சத்துக்கு வரும்.

துணை மேலாளர் சுந்தரம் மகாலிங்கம் என்பவரை மாதவரம் மூர்த்தியின் அதிகாரபூர்வமற்ற பி.ஏ-வாக நியமித்தார்கள். ஆவின் நிறுவனத்தில் இருந்து கொண்டே ஆன் டூட்டியில் அவர் வேலை பார்த்து வந்தார். மற்ற பி.ஏ-க்களைவிட அவருக்குதான் அங்கே செல்வாக்கு. அவர் மூலம்தான் எல்லாம் நடைபெற்று வந்தது. ஆவின் நிறுவனத்தில் தனக்கு ஒரு ரூம் வேண்டும் என்று மூர்த்தி அடம்பிடித்தார். அங்கே சேர்மன் நியமிக்கப்பட்ட பிறகு அமைச்சருக்கு ரூம் ஒதுக்கப்படுவது இல்லை. ஆனால், அந்த ரூமை அடம்பிடித்து வாங்கினார் மூர்த்தி. ஆவின் நிறுவனத்தின் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்காக விஜிலன்ஸ் அதிகாரிகளை நியமிக்க முயன்றார்கள். 'துணை மேலாளர்களை வைத்தே பார்த்துக்கொள்ளலாம்’ என மறுத்துவிட்டார் மூர்த்தி. தகுதி இல்லாத மேலாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கு நியமிக்கப்பட்டதை சுனில் பாலிவால் விரும்பவில்லை. ஆனால், அந்த நியமனம் அவரை மீறி நடந்துவிட்டது. ஆவின் நிறுவனத்தை லாபத்தோடும் தரத்தோடு நடத்த வேண்டும் என்று சுனில் பாலிவால் முயற்சிகள் எடுத்து வந்தபோது, ஒரு கட்டத்தில் 'சுனில் பாலிவாலையே மாற்றிவிடுவேன்’ என அந்த நபர் சொல்ல ஆரம்பித்தார். இதுதான் மூர்த்தியின் பதவியை காவு வாங்கிவிட்டது'' என்றனர் வேதனையுடன்.

எத்தனையோ குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்த விவகாரம்தான் மூர்த்தியின் பதவி பறிப்புக்கு முக்கியக் காரணமாகச் சொல்கிறார்கள். ''டேங்கர் லாரி மூலம்தான் ஆவின் நிலையங்களுக்குத் தினமும் பால் சப்ளை ஆகி வருகிறது. சென்னைக்கு பெரும்பாலும் திருவண்ணாமலையில் இருந்துதான் தினமும் பால் வருகிறது. டேங்கர் லாரியில் வரும் இந்தப் பாலை சுங்குவார்சத்திரம் போன்ற சில மறைவான இடங்களில் நிறுத்தி, பாலை திருடிவிட்டு அதே அளவுக்குத் தண்ணீரை கலந்துவிடுகிறார்கள். இப்படி தினமும் பல ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் கொள்ளை போயின. கடந்த மாதம் 4,000 லிட்டர் பாலை திருடியதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். வந்தவாசி ரோடு, கோவிந்தாபுரம் ஏரியாவில் வாகன சோதனை நடந்தபோது பால் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம் திண்டிவனம் கோவிந்தாபுரத்தில், போலீஸ் நடத்திய சோதனையில் பாலில் தண்ணீர் கலப்படம் செய்தைக் கண்டுபிடித்தனர். இதை வைத்து வேலூர் ஆவின் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டு பேரை போலீஸ் கைது செய்தது. சென்னைக்கு வரும் பாலில் மட்டும் தினமும் 20 ஆயிரம் லிட்டருக்கும் மேல் தண்ணீர் கலப்படம் செய்து பால் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது. இந்த விவரங்களை எல்லாம் முதல்வருக்கு சி.பி.சி.ஐ.டி அறிக்கையாக அனுப்பி வைத்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். பாலின் உற்பத்தியும் பூர்த்தி ஆக வேண்டும் என்பதற்காகத்தான் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. இதுவரை மூன்று லட்சம் விலையில்லா கறவை மாடுகளை வழங்கிய நிலையில் பால் உற்பத்தி பெருகவில்லை'' என்றனர்.

சுனில் பாலிவாலிடம் பேசினோம். ''டேங்கர் லாரிகளில் இருந்து பால் கடத்தலைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்திருக்கிறது. இதற்காக நாங்கள் பெரும் முயற்சிகள் எடுத்திருக்கிறோம். பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளின் மூடிகளிலும் குழாய்களிலும் ஆவின் நிறுவனத்தின் சீல் வைக்கப்பட்டிருக்கும். அதை உடைத்து பாலைத் திருடுவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நீங்கள் குறிப்பிடும் நபரின் டேங்கர் லாரிகளை இப்போது நிறுத்திவிட்டோம்'' என்றார்.

பாலில் கலப்படம் செய்தால் பாவம்!


பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
»  கல்யாணத்துக்கும் ஹார்ட்டுக்கும் சம்பந்தம் உண்டா?
» சர்க்கரைக்கும் வியாதிக்கும் சம்பந்தம் உண்டா?
» வயதுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் உண்டா...?
» சிறுநீரகத்தில் கல் ஏன் தோன்றுகிறது? இதன் அறிகுறிகள் என்ன? இதற்கும் தொற்றுக்கிருமிகளுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum