ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதலில் பலியானோருக்கு நாளை மவுன அஞ்சலி

Go down

 அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதலில் பலியானோருக்கு நாளை மவுன அஞ்சலி Empty அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதலில் பலியானோருக்கு நாளை மவுன அஞ்சலி

Post by சிவா Wed Sep 10, 2014 6:26 pm

செப்டம்பர் 11, 2001 நியூயார்க் என்றாலே அமெரிக்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கும்.

அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவை பழிவாங்க 4 விமானங்களை கடத்தினர். அதில் 2 விமானங்கள் நியூயார்க்கின் இரட்டை கோபுர 100 மாடி கட்டிடத்தில் மோதி தகர்த்தன. ஒரு விமானம் பென்டகன் மீதும் மற்றொரு விமானம் தரையிலும் விழுந்தது.

4 விமானங்களில் இருந்த அனைவரும் பலியானார்கள் அவர்களில் 19 பயங்கர வாதிகள் நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.

2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதியன்று, பயங்கரவாத தாக்குதலுக்காக 19 தீவிரவாதிகளால், 4 வர்த்தக விமானங்கள் கைப்பற்றப்பட்டன. 757ம் எண் கொண்ட போயிங் விமானத்தை இருவரும், 767ம் எண் கொண்ட மற்றொரு போயிங் விமானத்தை இருவரும் கைப்பற்றினர். மேலும், லாஸ் ஏஞ்சல்சிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை மூவரும், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை ஒருவரும் கைப்பற்றினர்.

பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்துவதற்காகவே, அதிக எரிபொருளை சேமிக்கும் திறன் கொண்ட நீண்ட விமானங்களை கடத்தலுக்காக தெரிவு செய்தனர்.

தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட நான்கு விமானங்களின் விபரம்:

அமெரிக்க வான்போக்கு வரத்துக் கழகத்தின் விமான எண் 11

11 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 76 பயணிகளுடன், அதிகாலை 7:59 மணிக்கு பாஸ்டனிலிருந்து கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 8:46 மணிக்கு, உலக வர்த்தக மையத்தின் வடக்குக் கோபுரத்தைத் தகர்த்தனர்.

ஐக்கிய வான் போக்குவரத்துக் கழகத்தின் விமான எண் 175

9 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 51 பயணிகளுடன், காலை 8:14 மணிக்கு லோகன் விமான நிலையத்திலிருந்து லாஸ் பாஸ்டனிலிருந்து ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 9:03 மணிக்கு, உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தை தகர்த்தனர்.

அமெரிக்க வான் போக்குவரத்துக் கழகத்தின் விமான எண் 77

6 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 53 பயணிகளுடன், காலை 8:20 மணிக்கு வெர்ஜினியாவிலிருந்து ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 9:37 மணிக்கு, பென்டகன் மீது மோத வைத்தனர்.

ஐக்கிய வான் போக்கு வரத்துக் கழகத்தின் விமான எண் 175

7 விமானப் பணியாளர்கள் மற்றும் நான்கு கடத்தல்காரர்களைத் தவிர 33 பயணிகளுடன், காலை 8:42 மணிக்கு நீவர்க் விமான நிலையத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 10:03 மணிக்கு, பென்னி சிலாவனியா மாகாணத் திலுள்ள ஷான்க்ஸின் நிலப்பகுதியின் மீது மோத வைத்தனர்.

உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலுக்கு பிறகு நடந்த தாக்குதல்களை ஊடகங்கள், தொடர்ந்து தங்களது நேரடி ஒளிபரப்பு மூலம் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.

தாக்குதல்கள் நடந்த சில மணி நேரத்திற்குள் சந்தேகிக்கப்படும் படியான விமானிகள் மற்றும் விமான கடத்தல்காரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விவரங்களை எப்.பி.ஐ. வெளியிட்டது.

மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனமும், ஜெர்மனி உளவுத்துறையும், இத்தாக்குதலிற்கு ஒசாமா பின்லேடனிற்கும் தொடர்பு இருக்குமென சந்தேகித்தது

இதனிடையில், 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி, தாக்குதல் நடத்திய 19 விமானக் கடத்தல்காரர்களின் புகைப்படங்களை எப்.பி.ஐ. வெளியிட்டது.

தீவிரவாத தாக்குதலின் சூழ்நிலையை தொகுத்து அறிக்கை தயார்படுத்த 2002ம் ஆண்டு, அமெரிக்க நாடுகளின் தேசிய தீவிரவாத தாக்குதல் ஆணையம் (9/11 ஆணையம்), நியு ஜெர்ஸியின் முன்னாள் ஆளுனர் தாமஸ் கேனின் தலைமையில் உருவாக்கப்பட்டது.

ஜூலை 22, 2004 அன்று, 9/11 ஆணையம், தாக்குதலின் நிகழ்வுகளை விரிவாக ஒரு அறிக்கையாக வெளியிட்டது. அறிக்கையின் படி, தாக்குதல்களுக்கு அல் கொய்தா உறுப்பினர்கள் மேற்கொள்ளப்பட்ட சதிகள் கண்டறியப்பட்டது. மேலும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளை வலுப்படுத்துவதற்கான ஆய்வையும் மேற்கொண்டனர்.

சுயாதீன கட்சிக்குழுவால் பிரதிநிதிகள், ஆளுநர்கள் மற்றும் ஆணையர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆணையத்தின் படி சிந்தனை, கொள்கை, திறன்கள், மற்றும் மேலாண்மை ஆகிய காரணிகளால்தான் தாக்குதல் நடந்தேறியுள்ளது என நம்பப்படுகிறது.

மேலும், எதிர்கால தாக்குதல்களை தடுக்க வழிமுறைகளும் இவ் வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்டது. அதன் ஒரு சில பரிந்துரைகளை, 2011ல் அரசு நிறைவேற்றியது

இந்த தாக்குதலுக்கு தூண்டிவிட்ட அல்கொய்தா தலைவர் பின்லேடன் தன் ஆதரவாளர்கள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்தார். அமெரிக்கா அவரை பிடிப்பதற்காக பல நூறு கோடிகளை செலவழித்தது. அவரை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட வேட்டையில் பல நூறு பேர் பலியானார்கள்.

அவர் தலைக்கு ரூ.12 கோடியை விலையாக அமெரிக்கா நிர்ணயம் செய்து இருந்தது. இந்த பணத்துக்காக அவரை காட்டிக்கொடுக்க யாரும் முன்வரவில்லை.

ஈராக் போரின் போது அமெரிக்க படை சவுதி அரேபியாவில் முகாம் அமைத்து தங்கி இருந்தது. இது பின்லேடனுக்கு பிடிக்கவில்லை. அவர் சவுதி மன்னர் மீது கடும் கோபம் கொண்டார். அவரது கோபம் தங்கள் தொழிலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதால், அவரை குடும்பத்தினர் சூடானுக்கு மூட்டை கட்டி அனுப்பி விட்டனர்.

இந்த நிலையில் சோமாலியாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. அதை சமாளிக்க அமெரிக்கப்படை அங்கு இறங்கியது. முஸ்லிம் நாட்டில் அமெரிக்க படையா அதை அங்கிருந்து அகற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு பின்லேடன் சோமாலியா சென்றார்.

அப்போது அமெரிக்க கப்பல் சோமாலியாவில் நங்கூரம் பாய்ச்சி நின்றது. அதை பின்லேடன் படை தாக்கியது. இந்த தாக்குதல் 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ந்தேதி நடந்தது. இதில் 3 அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அந்த இடத்திலேயே இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் யுத்தத்துக்காக அமெரிக்கா கொடுத்த ஸ்டிங்கர் ஏவுகணைகளை சோமாலியாவில் அமெரிக்காவுக்கு எதிராக பின்லேடன் பயன்படுத்தினார். இந்த ஏவுகணைகளை அவர் பாகிஸ்தான் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து தருவித்தார்.

இதில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானார்கள். 70 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து 1994ம் ஆண்டு மார்ச் மாதம் 1ந்தேதி அமெரிக்க படைகள் சோமாலியாவில் இருந்து வெளியேறின. இதுதான் பின்லேடனின் புகழை உலகம் முழுவதும் பரவச்செய்தது.

2001–ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள 111 மாடிகள் கொண்ட இரட்டைகோபுர கட்டிடத்தை தகர்க்க பின்லேடன் சதித்திட்டம் தீட்டினார். இதுதான் அவரை பழி தீர்க்க வேண்டும் என்ற தீராக்கோபத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரியது. இதற்கு ஆப்கானிஸ்தான் மறுக்கவே அந்த நாட்டின் மீது அமெரிக்கா விமானத்தாக்குதல் நடத்தியது. இதில் தலீபான்கள் ஆட்சியை இழந்தனர். பின்லேடனும் ஓடி ஒளிந்தார். அவர் பாகிஸ்தானில் பதுங்கிக்கொண்டார்.

இதை நன்கு அறிந்து இருந்த பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷரப், சண்டையில் பின்லேடன் இறந்து இருக்கலாம் என்றும், பாகிஸ்தானில் இல்லை என்றும், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைகுன்றுகளில் அவர் பதுங்கி இருக்கலாம் என்று பொய்க்கதைகளை பரப்பினார்.

ஆனால் பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை அமெரிக்க படை கண்டு பிடித்து அவரை சுட்டு வீழ்த்தி பின்லேடனின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.


 அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதலில் பலியானோருக்கு நாளை மவுன அஞ்சலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி ; பலர் திரண்டு மரியாதை
» தாமிரபரணியில் விழுந்து உயிர் நீத்த 16 தொழிலாளர்களுக்கு நாளை அஞ்சலி
» இரட்டை கோபுரம் தகர்ப்பு: மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.3125 கோடி நஷ்ட ஈடு
» மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி
» இரட்டை இலை வழக்கு நாளை(ஏப்.,12) விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum