புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ட்ரோன்... - கில்லர் ரோபோ
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
உலகமே தீவிரவாதிகளைப் பார்த்துப் பயந்தால், அந்தத் தீவிரவாதிகளைப் பயமுறுத்துவது 'கில்லர் ரோபோ’. 'ட்ரோன்’ (Drone) எனப்படும் ஆள் இல்லா உளவு மற்றும் தாக்குதல் விமானம். 'டெர்மினேட்டர் 3 ரைஸ் ஆஃப் தி மெஷின்ஸ்’ படத்தில் 'ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்’ மூலம் எதிரிகளை இனம்கண்டு ஆள் இல்லா விமானங்கள் தாக்குதல் நடத்தும். கிட்டத்தட்ட அதே மாதிரி துல்லியமாகத் தாக்குதல் நடத்தி ஆட்களைக் கொல்கிறது இந்த ட்ரோன்!
உண்மையில், இந்த ட்ரோன் நிலங்களை அள க்க, காட்டுத் தீயைக் கண்காணிக்க, மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க, பைலட்கள் பயிற்சி எடுக்க... எனப் பலவித சமூக பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் அதை உளவு வேலைகளுக்காகப் பயன்படுத்தினார்கள். ஒரு ட்ரோன் விமானம் மேகக் கூட்டங்களிடையே பறந்து நிலங்களைப் படம் பிடித்து அனுப்பும். அதில் தீவிரவாத முகாம்கள் இருந்தால், அடுத்ததாக போர் விமானங்கள் கிளம்பிச் செல்லும். ஜெகஜ்ஜாலக் கில்லாடிகளான அல்கொய்தாவினர், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைத்தளத்துக்கு அருகிலேயே தங்களது சோர்ஸை வைத்திருப்பார்கள். ஒரு அமெரிக்கப் போர் விமானம் அரக்கப்பரக்கக் கிளம்பினால், ஊர்சுற்றிப் பார்க்கவா கிளம்பும்? நிச்சயம் தாக்குதல் நடத்தத்தானே! உடனே அல்கொய்தா டீம் தங்கள் கேம்ப்பை காலி செய்துவிடுவார்கள். அப்புறம் என்ன... ஒருவரும் இல்லாத இடத்தில் குண்டுகளை வீசிவிட்டுத் திரும்பும் அமெரிக்கப் போர் விமானம். தீவிரவாதிகள் தப்பிவிட்டார்கள் என்பது ஒரு பக்கம்... தேவை இல்லாத செலவு மற்றொரு பக்கம். (போர் விமான எரிபொருள் அவ்வளவு காஸ்ட்லி. அமெரிக்காவின் எஃப்-22 போர் விமானத்தை ஒரு முறை இயக்க, சுமார் 40 ஆயிரம் டாலர் செலவு ஆகும். இந்திய ரூபாயில் சுமார் 24 லட்சம்!)
அத்தனை டாலர் வீணாகிப்போவதில் அமெரிக்காவுக்குக் கோபம் வரவேண்டுமே? 'அடேய் உங்களை...’ என்று டென்ஷனாகி யோசித்து, பிடித்த ஐடியாதான்... ட்ரோன்களில் சிறிய ஏவுகணைகளைப் பொருத்திவிடுவது. ஏவுகணைகளைத் தூக்கிச்செல்லும் அளவுக்கு ட்ரோன்களைப் பெரிதாக வடிவமைத்தார்கள். அதன் மூக்கில் செம பவர்ஃபுல் கேமராவைப் பொருத்தினார்கள். அதை சேட்டிலைட்டோடு இணைத்தார்கள். இப்போது 'கில்லர் ரோபோ’ தயார்.
இதைவைத்து எப்படி தீவிரவாதிகளைக் கொல்ல முடியும்? தீவிரவாதிகளின் பேச்சை ஒட்டுக்கேட்பது முதல் வேலை. அதற்கு தீவிரவாதத் தலைவர்கள் பயன்படுத்தும் செல்போன் எண் வேண்டும். எக்கச்சக்க டாலரைக் கொட்டி, தீவிரவாத அமைப்போடு நெருக்கமாக உள்ள பணத்தாசை பார்ட்டி யாரையாவது பிடித்து, தலைவர்களின் நம்பரை வாங்கிவிடுவார்கள். அதை ஒவ்வொரு விநாடியும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் 'கோடிங்’ வார்த்தைகளில் பேசுவதை 'டி-கோடிங்’ செய்வார்கள். 'நாளைக்கு இந்த இடத்தில் இருந்து இந்த இடத்துக்குப் போறேன்’ என்பதுபோல ஒரு வரி கேட்டால் போதும்... பட்டன் தட்டி ட்ரோனைத் தயார் நிலைக்குக் கொண்டுவருவார்கள். ஜீப்பிலோ, வேனிலோ செல்லும் தீவிரவாதத் தலைவருக்கு ஆறு மைல்களுக்கு மேலே ட்ரோன் சத்தம் இல்லாமல் பறக்கும். ஆஃப்கானில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தளத்தில் இருந்து, ஏன் சில சமயம் அமெரிக்காவில் இருந்தும்கூட ட்ரோனை இயக்க முடியும். தீவிரவாதிகள் ஜீப்பில் இருந்தால், இன்னும் வசதி. ட்ரோனில் இருக்கும் சக்திவாய்ந்த கேமரா மூலம், ஜீப்பில் பயணம் செய்பவர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்களா என்பது வரை பார்க்க முடியும். இதுதான் அவர்கள் பேசிய ரூட்டா? ஆமாம்! இந்த செல்போன் அலைவரிசைதான் உளவாளிகள் கொடுத்ததா? ஆம்... பொருந்துகிறது! அப்புறம் என்ன... ஃபயர்!
தங்கள் தலைக்கு மேலே சத்தமே இல்லாமல் திடீர் எனச் சீறிவரும் ஏவுகணைகளால் அல்கொய்தா பார்ட்டிகள் நிறையவே நிலைகுலைந்துபோனார்கள். 'இது என்ன புது டெக்னாலஜி?’ என்று அவர்கள் தெரிந்துகொள்வதற்குள், எக்கச்சக்க முக்கியமான தலைகளைப் போட்டுத்தள்ளியது அமெரிக்கா. அதில் நிறைய அப்பாவிப் பொதுமக்களும் பலியானார்கள். ஒரு குடியிருப்புப் பகுதியில் தீவிரவாதத் தலைவர் ஒருவர் பதுங்கியிருக்கிறார் என்று அமெரிக்காவுக்குத் தெரிந்தால், உடனே ஒரு ட்ரோன் பறந்து வந்து ஏவுகணைகளை வீசிவிடும். தங்களுக்குப் பக்கத்தில் ஒரு தீவிரவாதி இருக்கிறான் என்பதைக்கூட அறியாத அப்பாவிகளும், அந்தத் தாக்குதலில் இறக்க ஆரம்பித்தார்கள். இதனால் அமெரிக்காவுக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்காவிலேயே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஒரு போர் விமானத்தை இயக்குவதைவிட 300 மடங்கு இதில் செலவு குறைவு. வானில் 30 மணி நேரம் வரைகூடத் தொடர்ந்து பறக்க வைக்கலாம். இலக்கு தப்பவே தப்பாது. தீவிரவாதிகள் பயப்படுகிறார்கள். இத்தனை 'பாசிட்டிவ்’ காரணங்கள் இருக்கும்போது, ஊர் திட்டினால் என்ன... உலகம் திட்டினால் என்ன? சி.ஐ.ஏ., ட்ரோன்களைக் கொண்டாடத் தொடங்கியது. எக்கச்சக்க நிதி ஒதுக்கி ட்ரோன்களை மெருகேற்றத் தொடங்கியது.
இப்போது தீவிரவாதிகள் முறை. அவர்களும் ட்ரோன்களைப் பற்றி தெரிந்துகொண்டார்கள். பழைய 'ஏர்போர்ட் சோர்ஸ்’ முறையை உடனடியாகக் கையில் எடுத்தார்கள். ஒரு ட்ரோன் கிளம்பினால், அங்காளி, பங்காளி அமைப்பைச் சேர்ந்த அத்தனை பேரையும் அலர்ட் செய்தார்கள். பங்கர், குகை, கட்டடங்கள் எனப் பாதுகாப்பான இடங்களில் பதுங்கினார்கள். விமானத்தளத்தில் இருந்து கிளம்பினால்தானே தெரிந்துவிடுகிறது? ட்ரோனை ஏழெட்டு பீஸ்களாகக் கழற்றி, வேறு இடத்துக்குக் கொண்டுசென்று மாட்டி, அங்கே இருந்து ஏவியது அமெரிக்கா. வில்லில் இருந்து அம்பு எய்வதுபோல, உளவு ட்ரோனை மாட்டிப் பறக்கவைக்கிற டெக்னிக் எல்லாம் வந்துவிட்டது. அதிகபட்சம் ஐந்தடி தூரம் இடம் இருந்தாலே போதும்!
இப்போது தீவிரவாதிகள் சுதாரித்துக்கொண்டார்கள். செல்போன் நம்பர் எப்படி வெளியே போகிறது? யார் கொடுக்கிறார்கள் என்று தேடிப்பிடித்து அவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். செல்போன் இருந்தால்தானே கண்டுபிடிப்பார்கள் என்று, பல அல்கொய்தா தலைவர்கள் கடிதங்களில் தகவல்களை அனுப்ப ஆரம்பித்தார்கள். மலைக் குகைகளில் அமர்ந்துகொண்டு தேடித்திரியும் ட்ரோன்களைச் சுட்டுத் தள்ளினார்கள். இப்போது அமெரிக்கா, ட்ரோன்கள் பறக்கும் உயரத்தை அதிகப்படுத்தியது. தீவிரவாதிகள் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். ஆனால் மூளை இல்லாதவர்கள் இல்லையே? ரஷ்யாவின் 'ஸ்கை கிராப்பர்’ என்கிற கருவியை வைத்து, சத்தம் இல்லாமல் தங்களுக்கு மேல் ட்ரோன் பறந்தால், அறிந்துகொண்டார்கள். உடனே ஆளுக்கொரு திசையாகப் பிரிந்துபோய்விடுவார்கள். இதில் யார் தலைவன், யார் தொண்டன் என்று ட்ரோன் குழம்புவதற்குள் இடத்தைவிட்டு எஸ்கேப். இன்னும் டெக்னிக்கலாக 'ராகல்’ என்கிற கருவி மூலமாக ட்ரோனின் அலைவரிசையைக் குழப்பினார்கள். நிலத்தில் கூடினால்தானே கண்டுபிடிக்கிறார்கள்! மரங்கள் அடர்ந்த பகுதி என்றால் பச்சைக் கூரைகள் அமைப்பது, மலைப்பாங்கான இடங்கள் என்றால் பாறைகளின் நிறத்திலேயே கூரைகள் அமைப்பது, மழை மேகமான நாட்களில் கூட்டம் நடத்துவது, நிலத்தில் பஞ்சடைத்த பொம்மைகளையும், டம்மி துப்பாக்கிகளையும் வைப்பது போன்ற வியூகங்கள் மூலம் ட்ரோன்களைக் குழப்பினார்கள். ட்ரோன்கள் தப்பான இடங்களில் குண்டு போட்டன. வண்டிக் கூரை மீது, வீட்டுக் கூரை மீது கண்ணாடிகளைப் பொருத்தினார்கள். எதிரொளியில் ட்ரோன்கள் ஏமாந்தன!
இருந்தாலும் அமெரிக்காவின் விடாமுயற்சி காரணமாக சுமார் 2,000 அல்கொய்தாவினரை ட்ரோன்கள் கொன்றுகுவித்தன. கூடவே இறந்த அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதற்குச் சமம். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், நவீன உத்திகளுடன் எக்கச்சக்க ட்ரோன்களைத் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா.
ராணுவச் செலவைப் பலமடங்கு குறைப்பதால், எதிர்காலப் போர்களில் ட்ரோன்களின் பங்கு மிக அதிகமாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள் போர் நிபுணர்கள். இப்போது உலக நாடுகள் பலவும் ட்ரோன் தயாரிப்பில் ஆர்வம்காட்ட ஆரம்பித்திருக்கின்றன. தங்கள் அணு உலைகளைப் படம் எடுக்க வந்த இஸ்ரேலின் ட்ரோன் ஒன்றைக் கொஞ்சமாகச் சுட்டு வீழ்த்தி, அதன் பொறியியல் தொழில்நுட்பத்தைப் படித்து, சொந்தமாக ட்ரோன்களை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது ஈரான். ஈராக்கில் அமெரிக்காவின் ட்ரோன் ஒன்றைக் கைப்பற்றி இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், அதிலுள்ள கேமரா மூலம் சிரியாவின் விமானத்தளம் ஒன்றை உளவு பார்த்துக் கச்சிதமாக அடித்துக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் டெக்னிக்கல் கில்லிகளாக இருப்பதால், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பறிகொடுத்த கவலையில் இருக்கிறது அமெரிக்கா.
சரி... உண்மையில் ட்ரோன் ஹீரோவா... வில்லனா? அது அதன் ரிமோட் யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தது!
ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டர் போன்ற ஒரு வகை ட்ரோன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று, ஆர்டர் கொடுத்த பீட்ஸாவை 10 நிமிடங்களில் வீட்டு வாசலில் தரையிறக்குகிறது. சினிமாவில் எக்கச்சக்க செலவு பிடிக்கும் ஜிம்மிஜிப் போன்ற கேமராக்களுக்குப் பதிலாக ட்ரோன்களைப் பயன்படுத்துகிறார்கள். டாப் ஆங்கிள் ஷாட், கழுகுக் கண் ஷாட், ரயில் சண்டை போன்ற காட்சிகளை ட்ரோன்களை வைத்து சுலபமாக முடித்துவிடலாம். சில நாடுகளில் மருந்து தேவைப்படும் எமர்ஜென்சி நேரங்களில் ட்ரோன்களின் மூலம் சில நிமிடங்களில் மருத்துகளை அனுப்பிவைக்கிறார்கள்.
ஆளைக் காலி செய்யும் ஆட்கொல்லி பாம், தலைவலிக்குத் தடவும் ஜண்டு பாம்... இவற்றில் எதை வேண்டுமானாலும் ட்ரோன்களே எதிர்காலத்தில் வீடு தேடி கொண்டுவந்து தரப் போகின்றன. அந்தவகையில் 'எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்று ட்ரோன்களைக் கை காட்டலாம்!
உண்மையில், இந்த ட்ரோன் நிலங்களை அள க்க, காட்டுத் தீயைக் கண்காணிக்க, மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க, பைலட்கள் பயிற்சி எடுக்க... எனப் பலவித சமூக பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் அதை உளவு வேலைகளுக்காகப் பயன்படுத்தினார்கள். ஒரு ட்ரோன் விமானம் மேகக் கூட்டங்களிடையே பறந்து நிலங்களைப் படம் பிடித்து அனுப்பும். அதில் தீவிரவாத முகாம்கள் இருந்தால், அடுத்ததாக போர் விமானங்கள் கிளம்பிச் செல்லும். ஜெகஜ்ஜாலக் கில்லாடிகளான அல்கொய்தாவினர், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைத்தளத்துக்கு அருகிலேயே தங்களது சோர்ஸை வைத்திருப்பார்கள். ஒரு அமெரிக்கப் போர் விமானம் அரக்கப்பரக்கக் கிளம்பினால், ஊர்சுற்றிப் பார்க்கவா கிளம்பும்? நிச்சயம் தாக்குதல் நடத்தத்தானே! உடனே அல்கொய்தா டீம் தங்கள் கேம்ப்பை காலி செய்துவிடுவார்கள். அப்புறம் என்ன... ஒருவரும் இல்லாத இடத்தில் குண்டுகளை வீசிவிட்டுத் திரும்பும் அமெரிக்கப் போர் விமானம். தீவிரவாதிகள் தப்பிவிட்டார்கள் என்பது ஒரு பக்கம்... தேவை இல்லாத செலவு மற்றொரு பக்கம். (போர் விமான எரிபொருள் அவ்வளவு காஸ்ட்லி. அமெரிக்காவின் எஃப்-22 போர் விமானத்தை ஒரு முறை இயக்க, சுமார் 40 ஆயிரம் டாலர் செலவு ஆகும். இந்திய ரூபாயில் சுமார் 24 லட்சம்!)
அத்தனை டாலர் வீணாகிப்போவதில் அமெரிக்காவுக்குக் கோபம் வரவேண்டுமே? 'அடேய் உங்களை...’ என்று டென்ஷனாகி யோசித்து, பிடித்த ஐடியாதான்... ட்ரோன்களில் சிறிய ஏவுகணைகளைப் பொருத்திவிடுவது. ஏவுகணைகளைத் தூக்கிச்செல்லும் அளவுக்கு ட்ரோன்களைப் பெரிதாக வடிவமைத்தார்கள். அதன் மூக்கில் செம பவர்ஃபுல் கேமராவைப் பொருத்தினார்கள். அதை சேட்டிலைட்டோடு இணைத்தார்கள். இப்போது 'கில்லர் ரோபோ’ தயார்.
இதைவைத்து எப்படி தீவிரவாதிகளைக் கொல்ல முடியும்? தீவிரவாதிகளின் பேச்சை ஒட்டுக்கேட்பது முதல் வேலை. அதற்கு தீவிரவாதத் தலைவர்கள் பயன்படுத்தும் செல்போன் எண் வேண்டும். எக்கச்சக்க டாலரைக் கொட்டி, தீவிரவாத அமைப்போடு நெருக்கமாக உள்ள பணத்தாசை பார்ட்டி யாரையாவது பிடித்து, தலைவர்களின் நம்பரை வாங்கிவிடுவார்கள். அதை ஒவ்வொரு விநாடியும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் 'கோடிங்’ வார்த்தைகளில் பேசுவதை 'டி-கோடிங்’ செய்வார்கள். 'நாளைக்கு இந்த இடத்தில் இருந்து இந்த இடத்துக்குப் போறேன்’ என்பதுபோல ஒரு வரி கேட்டால் போதும்... பட்டன் தட்டி ட்ரோனைத் தயார் நிலைக்குக் கொண்டுவருவார்கள். ஜீப்பிலோ, வேனிலோ செல்லும் தீவிரவாதத் தலைவருக்கு ஆறு மைல்களுக்கு மேலே ட்ரோன் சத்தம் இல்லாமல் பறக்கும். ஆஃப்கானில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தளத்தில் இருந்து, ஏன் சில சமயம் அமெரிக்காவில் இருந்தும்கூட ட்ரோனை இயக்க முடியும். தீவிரவாதிகள் ஜீப்பில் இருந்தால், இன்னும் வசதி. ட்ரோனில் இருக்கும் சக்திவாய்ந்த கேமரா மூலம், ஜீப்பில் பயணம் செய்பவர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்களா என்பது வரை பார்க்க முடியும். இதுதான் அவர்கள் பேசிய ரூட்டா? ஆமாம்! இந்த செல்போன் அலைவரிசைதான் உளவாளிகள் கொடுத்ததா? ஆம்... பொருந்துகிறது! அப்புறம் என்ன... ஃபயர்!
தங்கள் தலைக்கு மேலே சத்தமே இல்லாமல் திடீர் எனச் சீறிவரும் ஏவுகணைகளால் அல்கொய்தா பார்ட்டிகள் நிறையவே நிலைகுலைந்துபோனார்கள். 'இது என்ன புது டெக்னாலஜி?’ என்று அவர்கள் தெரிந்துகொள்வதற்குள், எக்கச்சக்க முக்கியமான தலைகளைப் போட்டுத்தள்ளியது அமெரிக்கா. அதில் நிறைய அப்பாவிப் பொதுமக்களும் பலியானார்கள். ஒரு குடியிருப்புப் பகுதியில் தீவிரவாதத் தலைவர் ஒருவர் பதுங்கியிருக்கிறார் என்று அமெரிக்காவுக்குத் தெரிந்தால், உடனே ஒரு ட்ரோன் பறந்து வந்து ஏவுகணைகளை வீசிவிடும். தங்களுக்குப் பக்கத்தில் ஒரு தீவிரவாதி இருக்கிறான் என்பதைக்கூட அறியாத அப்பாவிகளும், அந்தத் தாக்குதலில் இறக்க ஆரம்பித்தார்கள். இதனால் அமெரிக்காவுக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்காவிலேயே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஒரு போர் விமானத்தை இயக்குவதைவிட 300 மடங்கு இதில் செலவு குறைவு. வானில் 30 மணி நேரம் வரைகூடத் தொடர்ந்து பறக்க வைக்கலாம். இலக்கு தப்பவே தப்பாது. தீவிரவாதிகள் பயப்படுகிறார்கள். இத்தனை 'பாசிட்டிவ்’ காரணங்கள் இருக்கும்போது, ஊர் திட்டினால் என்ன... உலகம் திட்டினால் என்ன? சி.ஐ.ஏ., ட்ரோன்களைக் கொண்டாடத் தொடங்கியது. எக்கச்சக்க நிதி ஒதுக்கி ட்ரோன்களை மெருகேற்றத் தொடங்கியது.
இப்போது தீவிரவாதிகள் முறை. அவர்களும் ட்ரோன்களைப் பற்றி தெரிந்துகொண்டார்கள். பழைய 'ஏர்போர்ட் சோர்ஸ்’ முறையை உடனடியாகக் கையில் எடுத்தார்கள். ஒரு ட்ரோன் கிளம்பினால், அங்காளி, பங்காளி அமைப்பைச் சேர்ந்த அத்தனை பேரையும் அலர்ட் செய்தார்கள். பங்கர், குகை, கட்டடங்கள் எனப் பாதுகாப்பான இடங்களில் பதுங்கினார்கள். விமானத்தளத்தில் இருந்து கிளம்பினால்தானே தெரிந்துவிடுகிறது? ட்ரோனை ஏழெட்டு பீஸ்களாகக் கழற்றி, வேறு இடத்துக்குக் கொண்டுசென்று மாட்டி, அங்கே இருந்து ஏவியது அமெரிக்கா. வில்லில் இருந்து அம்பு எய்வதுபோல, உளவு ட்ரோனை மாட்டிப் பறக்கவைக்கிற டெக்னிக் எல்லாம் வந்துவிட்டது. அதிகபட்சம் ஐந்தடி தூரம் இடம் இருந்தாலே போதும்!
இப்போது தீவிரவாதிகள் சுதாரித்துக்கொண்டார்கள். செல்போன் நம்பர் எப்படி வெளியே போகிறது? யார் கொடுக்கிறார்கள் என்று தேடிப்பிடித்து அவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். செல்போன் இருந்தால்தானே கண்டுபிடிப்பார்கள் என்று, பல அல்கொய்தா தலைவர்கள் கடிதங்களில் தகவல்களை அனுப்ப ஆரம்பித்தார்கள். மலைக் குகைகளில் அமர்ந்துகொண்டு தேடித்திரியும் ட்ரோன்களைச் சுட்டுத் தள்ளினார்கள். இப்போது அமெரிக்கா, ட்ரோன்கள் பறக்கும் உயரத்தை அதிகப்படுத்தியது. தீவிரவாதிகள் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். ஆனால் மூளை இல்லாதவர்கள் இல்லையே? ரஷ்யாவின் 'ஸ்கை கிராப்பர்’ என்கிற கருவியை வைத்து, சத்தம் இல்லாமல் தங்களுக்கு மேல் ட்ரோன் பறந்தால், அறிந்துகொண்டார்கள். உடனே ஆளுக்கொரு திசையாகப் பிரிந்துபோய்விடுவார்கள். இதில் யார் தலைவன், யார் தொண்டன் என்று ட்ரோன் குழம்புவதற்குள் இடத்தைவிட்டு எஸ்கேப். இன்னும் டெக்னிக்கலாக 'ராகல்’ என்கிற கருவி மூலமாக ட்ரோனின் அலைவரிசையைக் குழப்பினார்கள். நிலத்தில் கூடினால்தானே கண்டுபிடிக்கிறார்கள்! மரங்கள் அடர்ந்த பகுதி என்றால் பச்சைக் கூரைகள் அமைப்பது, மலைப்பாங்கான இடங்கள் என்றால் பாறைகளின் நிறத்திலேயே கூரைகள் அமைப்பது, மழை மேகமான நாட்களில் கூட்டம் நடத்துவது, நிலத்தில் பஞ்சடைத்த பொம்மைகளையும், டம்மி துப்பாக்கிகளையும் வைப்பது போன்ற வியூகங்கள் மூலம் ட்ரோன்களைக் குழப்பினார்கள். ட்ரோன்கள் தப்பான இடங்களில் குண்டு போட்டன. வண்டிக் கூரை மீது, வீட்டுக் கூரை மீது கண்ணாடிகளைப் பொருத்தினார்கள். எதிரொளியில் ட்ரோன்கள் ஏமாந்தன!
இருந்தாலும் அமெரிக்காவின் விடாமுயற்சி காரணமாக சுமார் 2,000 அல்கொய்தாவினரை ட்ரோன்கள் கொன்றுகுவித்தன. கூடவே இறந்த அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதற்குச் சமம். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், நவீன உத்திகளுடன் எக்கச்சக்க ட்ரோன்களைத் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா.
ராணுவச் செலவைப் பலமடங்கு குறைப்பதால், எதிர்காலப் போர்களில் ட்ரோன்களின் பங்கு மிக அதிகமாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள் போர் நிபுணர்கள். இப்போது உலக நாடுகள் பலவும் ட்ரோன் தயாரிப்பில் ஆர்வம்காட்ட ஆரம்பித்திருக்கின்றன. தங்கள் அணு உலைகளைப் படம் எடுக்க வந்த இஸ்ரேலின் ட்ரோன் ஒன்றைக் கொஞ்சமாகச் சுட்டு வீழ்த்தி, அதன் பொறியியல் தொழில்நுட்பத்தைப் படித்து, சொந்தமாக ட்ரோன்களை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது ஈரான். ஈராக்கில் அமெரிக்காவின் ட்ரோன் ஒன்றைக் கைப்பற்றி இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், அதிலுள்ள கேமரா மூலம் சிரியாவின் விமானத்தளம் ஒன்றை உளவு பார்த்துக் கச்சிதமாக அடித்துக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் டெக்னிக்கல் கில்லிகளாக இருப்பதால், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பறிகொடுத்த கவலையில் இருக்கிறது அமெரிக்கா.
சரி... உண்மையில் ட்ரோன் ஹீரோவா... வில்லனா? அது அதன் ரிமோட் யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தது!
ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டர் போன்ற ஒரு வகை ட்ரோன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று, ஆர்டர் கொடுத்த பீட்ஸாவை 10 நிமிடங்களில் வீட்டு வாசலில் தரையிறக்குகிறது. சினிமாவில் எக்கச்சக்க செலவு பிடிக்கும் ஜிம்மிஜிப் போன்ற கேமராக்களுக்குப் பதிலாக ட்ரோன்களைப் பயன்படுத்துகிறார்கள். டாப் ஆங்கிள் ஷாட், கழுகுக் கண் ஷாட், ரயில் சண்டை போன்ற காட்சிகளை ட்ரோன்களை வைத்து சுலபமாக முடித்துவிடலாம். சில நாடுகளில் மருந்து தேவைப்படும் எமர்ஜென்சி நேரங்களில் ட்ரோன்களின் மூலம் சில நிமிடங்களில் மருத்துகளை அனுப்பிவைக்கிறார்கள்.
ஆளைக் காலி செய்யும் ஆட்கொல்லி பாம், தலைவலிக்குத் தடவும் ஜண்டு பாம்... இவற்றில் எதை வேண்டுமானாலும் ட்ரோன்களே எதிர்காலத்தில் வீடு தேடி கொண்டுவந்து தரப் போகின்றன. அந்தவகையில் 'எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்று ட்ரோன்களைக் கை காட்டலாம்!
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
டிரோன்களை தீயவற்றிர்க்காக பயன்படுத்தாமல் இருந்தால் , அப்பாவி மக்களுக்கு நல்லது
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|