புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 9:25 am

First topic message reminder :

அன்பும் அரவணைப்பும் தடுக்கும் தற்கொலை எண்ணத்தை....! - இன்று தற்கொலை தடுப்பு தினம் !

விஞ்ஞானம் வேகமாக முன்னேறி வரும் இன்றைய அவசர உலகில், மனிதனுக்கு மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில் ஏமாற்றம், விரக்தியால் தன்னம்பிக்கையை முழுவதுமாக இழந்து ஒரு சில வினாடிகளில் எடுக்கும் தவறான முடிவு, தற்கொலையில் முடிகிறது. 'தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என்பதே சமீபத்திய ஆய்வில் கிடைத்த கசப்பான உண்மை.

உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8 0 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகளாவிய ஆய்வில் மக்கள் இறப்பதற்கான காரணங்களில் தற்கொலை 10 வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒருவர் இம்முயற்சியை மேற்கொள்கின்றனர்.

இந்தியாவில், ஒரு ஆண்டில் சுமார் 1.25 லட்சம் மக்கள் இம்முடிவால் இறக்கின்றனர். தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவு ஆய்வின்படி இந்தியாவில் தமிழகத்தில் தான் தற்கொலைகள் அதிகமாக பதிவாகியுள்ளன; 2012ம் ஆண்டில் 16,927 பேர் தற்கொலை செய்துள்ளனர். நடுவயது மற்றும் முதியவர்களிடம் அதிகமாக காணப்பட்ட இம்முயற்சி, தற்பொழுது மாணவர்கள் மற்றும் 15 29 வயதுக்கு உட்பட்டவர்களிடம் அதிகரிக்கிறது என்பது அதிர்ச்சியான நிலை. தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு அவர்களது மூளையில் ஒருவித ரசாயன மாற்றம் ஏற்படுகிறது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை.

காரணங்கள்

தினந்தோறும் நம் வீட்டிலும், சமுதாயத்திலும் நடக்கும் நிகழ்வுகளில், சில நிகழ்ச்சிகள் நம் மனதில் அதிர்வை ஏற்படுத்தும். அந்த நிகழ்வுகளின் ஆழம் அதிகமாகும் போது, மனதில் வலியும், சோர்வும் ஏற்படும். அத்தகைய மனச்சோர்வு தீவிரமாகும் போது, தற்கொலை எண்ணம் மிகும். மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் வாழ்க்கையில், தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு 8.6 சதவீதம். மேலும் மனநலப்பாதிப்புகளான மனச்சிதைவு நோய், தீவிர மனப்பதட்டம், மது, புகையிலை போன்ற போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களிடமும் தற்கொலை முயற்சிகள் அதிகமாக உள்ளது. மேலும் நாள்பட்ட நோய்களான புற்றுநோய், சிறுநீரக பாதிப்புள்ளாகி டயாலிஸ் செய்வோர், எச்.ஐ.வி., பாதித்தோர், தீராத வலி ஆகியவற்றால் உடல்நலம் பாதிக்கப்படுவோரிடமும் இம்முயற்சிகள் அதிகம்
காணப்படும்.

குடும்ப பிரச்னைகள்

நம் நாட்டு சூழ்நிலையில் 'குடும்பப் பிரச்னைகளே' முதலிடம் வகிக்கின்றன. முன்பு கூட்டுக்குடும்பங்களாக இருந்தபோது, ஒருவருக்கு பிரச்னை என்றால் அதற்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனத்தில் பிரச்னைகள் வரும் போது நீயா, நானா என்ற போட்டி மனப்பான்மை மேலோங்கி பிரச்னைகள் அதிகரிக்கின்றன. சகிப்புத்தன்மை குறைவு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இன்மை, கடன் பிரச்னை, சொந்தங்களின் இழப்பு, வேலையின்மை, தொழில் நஷ்டம், காதல் தோல்வி, ஏமாற்றம் இவையும் காரணமாகிறது. மாணவ சமூகத்தில் தேர்வைப் பற்றிய பயம், தோல்வி இவையும் இம்முயற்சியை அதிகப்படுத்துகிறது.

அறிகுறிகள்

தற்கொலை எண்ணம் உள்ளவரிடம் காணப்படும் மாற்றங்கள்: தனிமை விரும்புதல், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருத்தல், வேலையில் நாட்டமின்மை, விருப்பமின்மை, தூக்கமின்மை, பசி இன்மை, அழுகை, புலம்புதல், மகிழ்ச்சியான தருணத்திலும் வருத்தமாக இருத்தல், ஒருவித பயம், படபடப்பு, எதிர்காலம் குறித்த அச்சம்.

தவறான கண்ணோட்டங்கள்


தற்கொலை முடிவு எடுப்போர் அனைவருமே மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என்றும், இதைப்பற்றி பேசுபவன் செயலில் இறங்கமாட்டான் என்றும், ஒருவன் தற்கொலை முடிவை எடுத்துவிட்டால் யாராலும் என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது என்ற தவறான எண்ணம் பரவலாக காணப்படுகிறது; ஆனால் இவற்றில் எதுவும் உண்மை இல்லை.

தடுக்கும் முறைகள்

'மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்'

என்ற திருநாவுக்கரசர் வரிகளின்படி ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்து, பிரச்னைகளை கையாளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தனது பிரச்னைகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பகிர்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஒருவருடைய மனஅழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. குறைந்தது ஒரு மணிநேரமாவது குடும்பத்தில் உள்ள உள்ள அனைவரிடமும் ஒன்றாக இருந்து நேரம் செலவிட வேண்டும். வீட்டிற்குள் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக இருக்கக்கூடாது.

இதற்கு எளியவழி, இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டு வரலாம். அன்பும் அரவணைப்பும் இருந்தால் தற்கொலை எண்ணம் வெகுவாக குறைந்துவிடும். இசையை ரசிக்க வேண்டும்; புத்தகங்களை வாசிக்க வேண்டும். தற்கொலை எண்ணம் இருந்தால் மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகரிடம் சிகிச்சை எடுக்க வேண்டும். உளவியல் சிகிச்சை, யோகா, தியானம் ஆகியவற்றால் தற்கொலை எண்ணிக்கையை குறைக்க முடியும். மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 8:53 pm

தற்கொலை என்பது ஒரு நொடி சஞ்சலம்..குழம்பிய குட்டையில் மீனைப் பிடிக்க இயலாது..குழம்பிய மனதாலும் தெளிவான முடிவை எடுக்க இயலாது..தற்கொலை எண்ணம் தோன்றும் சமயங்களில் தனிமையைத் தவிர்த்துவிடுவதே முதலில் செய்யவேண்டிய செயல்..சுற்றியுள்ள மனிதர்களால்தான் பிரச்சினை என்றால் வேறு நண்பர்கள் இருக்குமிடமோ..கோயில்களுக்கோ சென்றுவிட வேண்டும்...கலங்கிய மனம் தானாகவே சரியாகத்தொடங்கும் நேரத்தில் தற்கொலை எண்ணங்கள் தோன்றா...யாருமற்ற மனிதர்தளுக்கு துணிவே துணை..

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக