ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஜிட்டல் இந்தியா சாத்தியமா?

Go down

டிஜிட்டல் இந்தியா சாத்தியமா? Empty டிஜிட்டல் இந்தியா சாத்தியமா?

Post by சிவா Mon Sep 08, 2014 11:18 pm



அண்மையில் நம் பிரதமர் மோடி, தன் முதல் சுதந்திர நாள் உரையில், இந்தியாவை ஒரு டிஜிட்டல் இந்தியாவாக, அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்தும் அனைவரின் கம்ப்யூட்டர் மானிட்டர்கள் வழியே தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் அமைந்த இந்தியாவாக மாற வேண்டும் என்ற தன் லட்சியத்தை வெளியிட்டார். இன்றைய இந்தியா இந்த வகையில் இன்று என்ன நிலையில் உள்ளது?

வறண்ட பெரிய பாலை வனங்களைக் கொண்ட இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரிலிருந்து வட கிழக்கே 170 கி.மீ. தூரத்தில், ஆழ்வார் மாவட்டத்தில் உள்ளது சந்தாலி என்ற கிராமம். இங்கு அமைக்கப்பட்டுள்ளது ஒரு கம்ப்யூட்டர் இணைய மையம். இருபது மாணவர்கள், பல வயதுடைய சிறுவர்களாய், அங்கு கம்ப்யூட்டரில் இணைய இணைப்பில் பேஸ்புக் தளத்தில் தங்கள் அக்கவுண்ட் தளத்தைப் பார்த்து, தங்களின் பதில்களை பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். ஆங்கிலத்தில் தங்கள் பதிலைப் பதிவு செய்கின்றனர். சிறுவர்களுக்கே உரிய தவறுகள் அனைத்தும் அதில் உள்ளன. இருந்தாலும், தகவல் முழுமையாகச் சென்றடையும் வகையில் பதிவுகள் உள்ளன. ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அந்தச் சிறுவர்கள் உடன் கூகுள் மொழி பெயர்ப்பு டூலைப் பயன்படுத்தி, சரியா எனப் பார்த்துக் கொள்கின்றனர்.

இன்னும் சிலர் தங்கள் பள்ளி தேர்வு முடிவுகளை இணையத்தில் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர். சற்றுத் தள்ளி உள்ள மையம் ஒன்றில், கல்லூரி மாணவர், தன் வேலைத் திட்டத்திற்காக, எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், பைல் ஒன்றைத் தயார் செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவு வேலைகளும், எங்கோ தொலை தூரக் கிராமத்தில் தான் நடைபெறுகின்றன. இது எப்படி சாத்தியமாயிற்று? கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கி வரும் அரசு சாரா, லாப நோக்கமற்ற டிஜிட்டல் எம்பவர்மெண்ட் பவுண்டேஷன் அமைப்பு தான் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து கடைக் கோடி கிராமங்களும், இணையத்தின் அனைத்து பலன்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற உன்னதமான லட்சியத்துடன் இது செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு 20 மாநிலங்களில், 5-0 கம்ப்யூட்டர் மையங்கள் வழியாக, மக்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் இயக்க பயிற்சியை இலவசமாகவும், குறைந்த கட்டணம் பெற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்து வருகிறது. மன்மோகன் அரசு, 2011ல் தேசிய அளவிலான ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்கினை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய கிராமங்களுக்குக் கம்ப்யூட்டர் மற்றும் இணைய பயன்பாட்டினைக் கொண்டு செல்லவே இந்த நெட்வொர்க் அமைப்பு ஏற்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல கோணங்களிலிருந்து பிரச்னைகள் வந்ததால், திட்டம் மிக மெதுவாகச் செயல்பட்டது.

ஆனால், இன்றைய பிரதமர் இதனைத் தன் தனி கவனத்தில் கொண்டு, டிஜிட்டல் இந்தியா என்னும் இலட்சியத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளார். அதன்படி, இந்தியாவில் உள்ள 6.41 லட்சம் கிராமங்களில், முதல் கட்டமாக, 2.5 லட்சம் கிராமங்களுக்கு, விரைவில் இணைய வசதி தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019க்குள், முடிந்த அளவிற்கு பள்ளிகளில் வை பி என்னும் வயர் இணைப்பில்லா இணைய தொடர்பினை அமைத்துக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும், மற்றும் புதிதாகத் தொடங்கப்பட இருக்கும் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடு ரூ.1.13 லட்சம் கோடி எனக் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமங்களை விடுத்து, பொதுவாகவே, இந்தியாவில் இணைய இணைப்பின் நிலை, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியதாகவே உள்ளது. இந்தியாவில் இணையத்தினைப் பயன்படுத்தும் 25.20 கோடி பயனாளர்களில், மூன்றில் ஒரு பங்கினரும், மொபைல் போன் பயன்படுத்துபவர்களில், நான்கில் ஒரு பங்கினரும் கிராமப் புறங்களில் வாழ்கின்றனர். நகரங்களில் வாழ்பவர்களில், 37.4% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், கிராமப் புறங்களில் உள்ளவர்களில், 8.6% பேர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய இணைய இணைப்பு என்பது குறைந்த பட்சம் நொடிக்கு 512 கிலோ பிட்ஸ் வேகம் கொண்ட்து என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த இந்திய மக்களில், 2% பேர் தான் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் அறிவிக்கையில் அண்மையில் தெரிவித்துள்ளபடி, ஒரு நாட்டில் 10% இணையப் பயன்பாடு வளர்ச்சி இருந்தால், அதன் பொதுவான உள்நாட்டு உற்பத்தி 1.38% ஆக இருக்கும். எனவே தான், அரசு, இந்தியாவில் ஏற்கனவே நடைபெற்று வருகின்ற டிஜிட்டல் மாற்றத்தை, இன்னும் அதிவேக புரட்சியாக மாற்ற வேண்டும் என திட்டமிடுகிறது.

இந்தியாவின் இந்த 2019 ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தில், தெளிவான இலக்குகள் இல்லை என்று, ட்ராய் அமைப்பின் தலைவர் ராஹுல் குல்லார் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் இந்தியா உருவாக்கப்படும் என்ற இலக்கு அதிக பேராசை கொண்டதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்போது கூட, தலைநகர் டில்லியில் ஒரு இறப்பு அல்லது பிறப்பு சான்றிதழை இணையம் வழியாக வாங்க இயலாத நிலை இருக்கும்போது, எந்த மென்பொருள் கொண்டு, டிஜிட்டல் இந்தியாவை நாம் உருவாக்கப் போகிறோம் என்று கேள்வி கேட்டுள்ளார். மின்னியல் கட்டமைப்பை ஏற்படுத்தும் அதே நேரத்தில், இணையத்தில் உள்ள தகவல்களை தேவையான அளவிற்கு உருவாக்கிப் பதிய வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா என்பது ஓர் அணை கட்டுவதைப் போல் அல்ல. அரசு நிதி ஒதுக்கினால், பொறியாளர்கள் திட்டங்களை வரையறை செய்து, அணையை விரைவாக்க் கட்டிவிடலாம். ஆனால், இந்தியாவில் எங்கும் இணையத்தைக் கொண்டு வருவதில், அனைத்து பிரிவினரும் பங்கேற்க வேண்டும்.

கல்வி, மருத்துவம், நிதி, நீதி, வங்கிகள் மற்றும் சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் தங்களிடம் மக்களுக்கென உள்ள தகவல்களை டிஜிட்டல் வடிவில் தயாராக உருமாற்றித் தர வேண்டும். இதற்குத் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அதிகம் தேவைப்படும் என்று ட்ராய் தலைவர் தெரிவித்துள்ளார்.

கம்ப்யூட்டர் மலர்


டிஜிட்டல் இந்தியா சாத்தியமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum