புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_m10புரட்டாசி மாத ராசி பலன்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரட்டாசி மாத ராசி பலன்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:08 pm

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் உங்களை சீண்டினால், எரிமலையாய் பொங்கி எழுவீர்கள். அரண்மனையில் வேலைக்காரனாய் இருப்பதை விட குப்பத்தில் தலைவனாய் இருப்பதையே விரும்புவீர்கள். 26ந் தேதி முதல் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6ல் மறைவதால் மனைவியின் உடல்நிலை பாதிக்கும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்துவலி, முதுகு வலி வந்துபோகும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படும். குரு 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல் இருந்தாலும் குரு உச்சம் பெற்றிருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு.

கண்டகச் சனி நடைபெறுவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். வீண் சந்தேகத்தால் பிரிவு ஏற்படக்கூடும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 6ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். சூரியன், ராகுவுடன் நிற்பதால் பிள்ளைகளின் ஆரோக்யம் பாதிக்கும். அவர்களுடன் சின்னச் சின்ன விவாதங்கள் வந்துபோகும்.

கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களின் ராசிநாதனான செவ்வாய் 8ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். கனவுத் தொல்லை அதிகரிக்கும். சகோதரர்களுடன் மோதல் வரும். 13ந் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டிற்கு செல்வதால் அலைச்சல் குறையும். ராகு சாதகமாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். கேது 12ல் மறைந்து கிடப்பதால் உள்ளுணர்வுத் திறன் அதிகரிக்கும்.

மாணவ-மாணவிகளே! விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டு படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். அலர்ஜி, இன்ஃபெக்ஷன் வந்து போகும்.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். அவசரப் பட்டு பெரிய முதலீடுகளை தொழிலில் போட வேண்டாம். வேலையாட்களாலும் பிரச்னைகள் வரக்கூடும். பங்குதாரர்களிடம் பணிந்து போவது நல்லது. கமிஷன், புரோக்கரேஜ், கெமிக்கல் வகைகளாலும் லாபம் வரும். சட்டத்திற்கு புறம்பான வகையில் உதவிகள் கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

உத்யோகத்தில் அதிகாரி உங்களை புரிந்து கொள்ளமாட்டார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உத்யோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். வேலையில் இருப்போமோ, இருக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சஉணர்வு தினந்தோறும் வந்துபோகும்.

கலைத்துறையினரே! வருவதாக இருந்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். வயதில் குறைந்த கலைஞர்களால் உதவிகள் கிடைக்கும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் பாதிக்கும். செயற்கை உரங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள். சிக்கனமும், பொறுமையும் தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்: செப்டம்பர் 18, 24, 25, 26 அக்டோபர் 3, 4, 5, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 28ந் தேதி மாலை 4.30 மணி முதல் 29 மற்றும் 30ந் தேதி வரை எதிலும் நிதானித்து செயல்படுவது நல்லது.

பரிகாரம்: மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் தலத்தில் சுதர்சன மூர்த்தியை தரிசியுங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:09 pm

ரிஷபம்: எடுத்த எடுப்பிலேயே எதையும் முடிக்க விரும்பும் நீங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருப்பீர்கள். ஒரு குடும்பத்தையோ, இயக்கத்தையோ, தொழிற்கூடத்தையோ திறம்பட வழிநடத்தும் தலைமைப் பண்பு உங்களிடம் உண்டு. உங்களின் பூர்வ புண்யாதிபதியான புதன் 5ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் சோம்பல், களைப்பு நீங்கும். சூரியன் 5ம் வீட்டில் நுழைந்திருப்பதால் குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைகளுக்கு தீர்வு காண வழி வகை பிறக்கும்.

ஆனால், கண் எரிச்சல், தொண்டை வலி, கழுத்து வலி வந்து நீங்கும். ராகு 5ம் வீட்டிலேயே நிற்பதால் அவ்வப்போது எதிர்காலம் பற்றிய பயம் வந்து விலகும். பிள்ளைகளின் படிப்பு, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட அச்சமும் வரக்கூடும். செவ்வாய் வலுவாக நிற்பதால் உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். சமையலறையை நவீனப்படுத்துவீர்கள்.

ஆனால், 13ந் தேதி முதல் செவ்வாய் 8ல் அமர்வதால் அலைச்சல், செலவினங்கள் அதிகரிக்கும். உங்களுக்கு அஷ்டமாதிபதியான குரு 3ம் வீட்டில் மறைந்திருப்பதால் கடினமான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். ஆன்மிகவாதிகள் அறிமுகமாவார்கள். கேது லாப வீட்டில் நிற்பதால் குடும்ப வருமானம் உயரும். சிலர் உத்யோகத்தில் இருந்து கொண்டே வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

மாணவ-மாணவிகளே! வகுப்பாசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். படிப்பில் மட்டுமல்லாமல் கலைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். சிலருக்கு விளையாட்டில் பதக்கம் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! மாதவிடாய்க் கோளாறு சரியாகும். எதிர்பார்த்த உதவிகள் பழைய நண்பர்களிடமிருந்து கிடைக்கும். புதிய நண்பர்களாலும் உற்சாகமடைவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடியும்.

அரசியல்வாதிகளே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உணவு, மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். அனுபவமுள்ள நல்ல வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். அரசால் ஆதாயமடைவீர்கள்.

வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். அழகுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். சக ஊழியர்களும் மதிப்பார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் கூடி வரும். புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். பழைய கடனை பைசல் செய்ய வழி கிடைக்கும். கரும்பு மற்றும் மரப்பயிர்களால் ஆதாயமடைவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 19, 20, 26, 27, 29, அக்டோபர் 6, 7, 10, 15, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: திருத்தணி முருகப்பெருமானை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு இயன்ற அளவு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:09 pm

மிதுனம்: வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்க மாட்டீர்கள். பலருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கும் நீங்கள் அதிகம் ஆசைப்பட மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் செவ்வாய் செல்வதால் தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகளெல்லாம் நீங்கும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். செல்வாக்கு கூடும். வழக்கு சாதகமாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பணவரவு கணிசமாக உயரும்.

உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 26ந் தேதி முதல் நீசபங்கம் அடைவதால் பழைய வாகனத்தை தந்துவிட்டு புதியதாக வாங்குவீர்கள்.

பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கூடுதல் அறை கட்டுவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் நன்றாக இருக்கும். 5ம் வீட்டிலேயே சனி நிற்பதால் பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். ஆனாலும், பூர்வீகச் சொத்து, பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். சிலருக்கு காதல் திருமணம் முடியும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்க்கட்சியினரால் ஆதாயமடைவீர்கள். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக வருவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்களை ஆதரிப்பார்கள்.

கமிஷன், புரோக்கரேஜ், உணவு, லாட்ஜிங், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆனால், ராசிநாதனான புதன் ராகுவுடன் சேர்ந்து நின்று கொண்டிருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். வெளிநாட்டு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.

கலைத்துறையினரே! புதுப்பட வாய்ப்புகள் வரும். படத்தை வெளியிட முடியாமல் தவித்தவர்களுக்கு படத்தை வெளியிடும் அமைப்பு உண்டாகும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை குறையும். மகசூல் பெருகும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். அதிரடி முன்னேற்றங்கள் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 19, 20, 21, 22, 29, 30, அக்டோபர் 1, 10, 12, 17.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பணப்பற்றாக்குறை ஏற்படும்.

பரிகாரம்: கும்பகோணம் கும்பேஸ்வரரை தரிசித்து விட்டு வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:09 pm

கடகம்: மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே! துவண்டு வரு வோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங்கிகளே! உங்கள் ராசிக்குள்ளேயே குரு நிற்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். உங்களைப் பற்றியே நீங்கள் குறைவாக மதிப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். சின்னச் சின்ன விஷயங்கள்கூட தடைப்பட்டு முடியும். என்றாலும் குரு உச்சம் பெற்று நிற்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். எதிர்ப்புகள் ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவும் பெருகும்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. செரிமானக் கோளாறு, முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும். ஜென்ம குரு நடைபெறுவதால் பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்கு 2ல் நின்ற சூரியன் இப்போது 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசால் ஆதாயம் உண்டு. பார்வைக் கோளாறு நீங்கும். ஆனால், பல் வலி வந்துபோகும். தொண்டை புகைச்சல் அதிகமாகும். புதன் சாதகமாக இருப்ப தால் நட்பு வட்டம் விரிவடையும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் சிலருக்கு புதுவேலை கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கம் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

மாணவ-மாணவிகளே! வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். கணிதப் பாடத்தில் முன்னேறுவீர்கள். அறிவியலில் ஆய்வக பரிசோதனைகளிலும் முன்னேறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! நீண்ட கால கனவு நனவாகும். ரசனைக் கேற்ப வரன் அமையும். சிலருக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கட்சித் தலைமையுடனான மோதல்கள் விலகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். ஒருசிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். புது பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள்.

உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார்.வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். சனி உத்யோக ஸ்தானத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் உத்யோகத்தில் இடமாற்றங்கள் வரக்கூடும். அலைச்சலும் அதிகரிக்கும். மறைமுக அவமானங்களும் வந்து போகும். பணியில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமா என்ற சந்தேகமும் வந்துபோகும்.

விவசாயிகளே! மரப்பயிர்களால் ஆதாயமடைவீர்கள். பழுதான பம்பு செட்டை மாற்றுவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். அறிவுப் பூர்வமான முடிவுகளால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 24, 25, 26, 27, 28, அக்டோபர் 3, 4, 5, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 7, 8 மற்றும் 9ந் தேதி காலை 9 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம்: சென்னை - திருமுல்லைவாயில் பச்சையம்மனை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:10 pm

சிம்மம்: யார்க்கும் அஞ்சாமல் அடிமனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே செய்து சாதிக்கும் நீங்கள், மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப்பவர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். உங்கள் தனாதிபதியான புதன் உச்சம் பெற்று காணப்படுவதால் வங்கிக் கடனில் உதவி கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கும் வழி கிட்டும். ஆனால், உங்கள் ராசிநாதன் சூரியன் 2ம் வீட்டில் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் அடுத்தடுத்த செலவுகளால் பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும்.

அதுமட்டுமல்லாமல் கண் வலி, காது வலி வந்துபோகும். தொண்டை புகைச்சலும் வரக்கூடும். அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடிவடையும். சூரியன் வலுவிழந்து காணப்படுவதால் வேலைச்சுமை அதிகமாகும். தூக்கம் குறையும். சில நேரங்களில் சோர்வோடும் களைப்போடும் காணப்படுவீர்கள். உங்கள் பாக்யாதிபதி குரு 12ல் நிற்பதால் சுபச் செலவுகள் அதிகமாகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

கோயிலைப் புதுப்பிக்கும் பணியிலும் ஈடுபடுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமாக இருப்பதால் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். 8ம் வீட்டில் கேது நிற்பதால் மனைவிக்கு இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும்.

மாணவ-மாணவிகளே! உங்களின் பொது அறிவு, மொழி அறிவுத்திறன் கூடும். கலை, இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். பெற்றோரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. ஸ்கின் அலர்ஜி வந்துபோகும்.

அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சியினர் மீது குற்றம் சாட்டிப் பேச வேண்டாம். கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வேலையாட்களால் உதவிகள் உண்டு. சனிபகவான் 3ல் உச்சம் பெற்று நிற்பதால் வியாபாரத்தை விரிவுபடுத்த உதவிகள் கிடைக்கும்.

புது ஏஜென்சி அமையும். வெளிநாடு, வெளிமாநிலத் தொடர்புகளால் ஆதாயமடைவீர்கள். கடையை புதுப்பிப்பீர்கள். உத்யோகத்தில் 26ந் தேதி முதல் சுக்கிரன் ராகுவுடன் சேர்வதால் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். ஆனால், அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் கடின உழைப்பை பாராட்டுவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கலைத்துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். வரவேற்பு அதிகரிக்கும்.

விவசாயிகளே! நவீன ரக உரங்களை பயன்படுத்தி மகசூலை அதிகப்படுத்துவீர்கள். தண்ணீர் பிரச்னை தீரும். கடின உழைப் பாலும், விடாமுயற்சியாலும் வெற்றி பெறும்மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 24, 25, 26, 27, 28, அக்டோபர் 3, 4, 5, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 7, 8 மற்றும் 9ந் தேதி காலை 9 மணி வரை பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.

பரிகாரம்: திண்டிவனத்திலுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாளை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:10 pm

கன்னி: நியாயத்தின் பக்கம் நிற்கும் நீங்கள் அதர்மத்தைக் கண்டு அஞ்ச மாட்டீர்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாததுபோல தன்மானம் மிக்கவர்கள். யார் சொத்துக்கும் ஆசைப்பட மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளிலும், சாதகமான நட்சத்திரங்களிலும் செவ்வாய் செல்வதால் குழப்பங்கள் நீங்கும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவாலான காரியங்களைக்கூட துணிந்து ஏற்று நடத்துவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தி யில் செல்வாக்கு கூடும். சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும்.

எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். குரு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் நுழைந்திருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு, யூரினரி இன்ஃபெக்ஷன் வந்து நீங்கும்.

உங்கள் ராசிநாதன் புதன் உச்சம் பெற்றிருப்பதால் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். 26ந் தேதி முதல் சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நுழைவதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. ஆனால், மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அதிவேக மாக வாகனத்தை இயக்க வேண்டாம். ஏழரைச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் மூச்சுப் பிடிப்பு, நெஞ்சு வலி வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மாணவ-மாணவிகளே! வேதியியல் பாடப்பிரிவில் சோதனைக் கூடத்தில் ஆய்வின்போது அமிலங்களை கவனமாக கையாளுங்கள். மறதி வந்துபோகும்.

கன்னிப் பெண்களே! நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு இப்போது வரும். ரசனைக்கேற்ப வரன் அமையும். ஆரோக்யம் பாதிக்கும்.

அரசியல்வாதிகளே! தலைமையுடன் கருத்து மோதல் வரும். எதிர்க்கட்சியினரின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். எரிபொருள், வாகனம், ஸ்டேஷனரி, போர்டிங், லாட்ஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள்.

உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதனால் வேலைச்சுமை அதிகமாகும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் பரிந்துரையால் புதிய வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! மரப்பயிர்கள், தோட்டப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். விதியை மதியால் வெல்லும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 19, 20, 27, 28, 29, 30, அக்டோபர் 5, 6, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 9ந் தேதி காலை 9 மணி முதல் 10 மற்றும் 11ந் தேதி மதியம் 2 மணி வரை எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்: வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமியை தரிசித்து வாருங்கள். ஆரம்பக்கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:11 pm

துலாம்: விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதமான நண்பர் களையும் கொண்ட நீங்கள் நாலும் அறிந்தவர்கள். அன்புக்கு அடிமையாவீர்கள். உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் கேது நிற்பதால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சப்பட வேண்டாம். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். உங்கள் ராசிக்கு பாதகாதிபதியான சூரியன் 12ல் மறைந்திருப்பதால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஆனால், உங்களுடைய ராசிநாதனான சுக்கிரன் 26ந் தேதி முதல் 12ல் சென்று மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல் வரும். பழைய சம்பவங்கள், பழைய பிரச்னைகளை மேற்கோள் காட்டிப் பேச வேண்டாம். தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்துபோகும். வேலைச்சுமை அதிகமாகும். ஆனால், உங்கள் பாக்யாதிபதியான புதன் 12ல் மறைந்திருந்தாலும் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் நட்பு வட்டம் விரிவடையும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தூக்கம் குறையும். சிலர் வீடு மாறுவீர்கள். உங்களுடைய ராசியிலேயே சனி அமர்ந்து ஜென்மச் சனி நடைபெறுவதால் மறதி உண்டாகும். ஞாபக மறதியால் செல்போன் தொலைய வாய்ப்பிருக்கிறது. உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் செவ்வாய் பயணிப்பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வேற்றுமதத்தினராலும் ஆதாயம் உண்டாகும்.

மாணவ- மாணவிகளே! விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை. அறிவியல் பாடத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. பழைய நண்பர்களை தவிர்க்க வேண்டாம். புதிய நண்பர்களிடமும் எச்சரிக்கையாகப் பழகுங்கள். காதல் குழப்பங்கள் தீரும். வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தொகுதி மக்கள்தான் உங்களுடைய எஜமானர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் கடுமையாக இருக்கும். வேலையாட்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பங்குதாரர்கள் உங்களுடைய புதிய முடிவுகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். கமிஷன், கெமிக்கல், மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு 10ல் குரு நிற்பதால் உத்யோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லையே என்ற ஒரு கவலை அவ்வப்போது வந்துபோகும். அதிகாரிகள் இரட்டை வேடம் போடுவதாக நீங்கள் நினைப்பீர்கள். சக ஊழியர்களிடம் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினரே! உங்களுடைய கலைத்திறன் வளரும். புதிய வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! ஒரேவிதமான பயிர்களை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரிட முயற்சி செய்யுங்கள். அநாவசிய, ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 19, 20, 21, 22, 23, 29, 30, அக்டோபர் 1, 2, 7, 17.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 11ந் தேதி மதியம் 2 மணி முதல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.

பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஐயப்பனை தரிசியுங்கள். வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாங்கிக் கொடுக்க முயற்சியுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:12 pm

விருச்சிகம்: படிப்பறிவு, பட்டறிவு உள்ளவர்கள், சொன்னால் செவி சாய்க்கும் நீங்கள், எப்போதும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நடந்து கொள்பவர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக நிற்பதால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். துணிச்சலாக முக்கிய வேலைகளில் ஈடுபடுவீர்கள். கம்பீரமாகப் பேசுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சகோதரங்களுடன் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த தேக்க நிலை மாறும்.

புது சொத்து வாங்குவீர்கள். சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதாலும் 12ல் சனி நிற்பதாலும் தூக்கம் குறையும். வேலைச்சுமை அதிகமாகும். பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள். ஆனால், சின்னச் சின்ன காரியங்கள் தடைபட்டு முடியும். உங்களின் தன, பூர்வ புண்யாதிபதியான குரு உச்சம் பெற்று அமர்ந்திருப்பதாலும் உங்கள் ராசியைப் பார்ப்பதாலும் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

உங்கள் உறவினர் மற்றும் மனைவிவழி உறவினர்களைக் கூறி சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். முக்கிய கிரகங்கள் லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். பழைய வாகனத்தை விற்று விட்டு புதியதாக வாங்குவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும்.

மாணவ-மாணவிகளே! படிப்பிலும் முன்னேறுவீர்கள். பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். திருமணம் கூடி வரும். வேலையும் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளே! மாநில அளவில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதன் உச்சமாகி லாப வீட்டில் நிற்பதால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உணவு, மருந்து, எரிபொருள், வாகனம், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் அதிகரிக்கும். புதிய பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

வேலையாட்களும் உதவுவார்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் உத்யோகத்தில் அமைதி உண்டாகும். நீண்ட நாட்களாக போராடி கேட்டுக் கொண்டிருந்த இடமாற்றமும் கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலைக்கான அழைப்பும் வேறு நிறுவனத்திலிருந்து வரக்கூடும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். ஊரில் மதிப்பும் மரியாதையும் கூடும். கலைத்துறையினரே! பரிசும் பாராட்டுகளும் கிடைக்கும். பணபலம் கூடும். தொட்டது துலங்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 22, 23, 24, 25, அக்டோபர் 1, 2, 3, 4, 6, 9, 10, 11, 12, 17.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 17, 18 மற்றும் அக்டோபர் 14, 15, 16ந் தேதி காலை 7:30 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: கும்பகோணத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன்கோயிலில் நாகநாதரை தரிசித்து வாருங்கள். அனாதை இல்லங்களுக்குச் சென்று உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:12 pm

தனுசு: கடமை உணர்வும், காலம் தவறாத செயல்பாடுகளும் கொண்ட நீங்கள் பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளர மாட்டீர்கள். லாப வீட்டில் சனிபகவான் நிற்பதால் நட்பு வட்டம் விரிவடையும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வரும். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு.

ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாடு, அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். உங்கள் ராசிநாதனான குரு 8ல் மறைந்திருப்பதால் உங்களுடைய நடத்தை கோலத்தை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உங்களது பலம், பலவீனத்தை உணர்ந்து உங்களை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.யோகா, தியானம் மூலமாகவும் உங்களுக்கு நல்ல மாற்றம் வரும். வீரியத்தை விட காரியம்தான் முக்கியம் என்பதையும் உணருவீர்கள். உங்கள் பாக்யாதிபதியான சூரியன் 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

தந்தைவழியில் உதவிகள் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னையும் தீரும். உங்கள் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 12ல் மறைந்திருந்தாலும் ஆட்சிபெற்று நிற்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதாலும், 26ந் தேதி முதல் சுக்கிரன் நீசபங்கமடைவதாலும் மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனால், மனைவிக்கு கழுத்து வலி, நரம்புக் கோளாறு, தோலில் நமைச்சல் வந்து நீங்கும்.

மாணவ-மாணவிகளே! வகுப்பாசிரியரின் பாராட்டை பெறுமளவிற்கு கல்வியில் முன்னேறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்க்கப் பாருங்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

அரசியல்வாதிகளே! சில இடங்களில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. தலைமையைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சந்தை நிலவரத்தை அறிந்து கொள்வதுடன், வாடிக்கையாளர்களின் ரசனையையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப புது முதலீடு செய்வீர்கள். சிலர் புதுத் துறையில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். உதவும் குணம் கொண்ட பங்குதாரர் அறிமுகமாவார். வேலையாட்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். கடின உழைப்பால் மூத்த அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பீர்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கலைத்துறையினரே! உங்களின் யதார்த்தமான படைப்புகள் பரவலாக பாராட்டிப் பேசப்படும். விவசாயிகளே! எண்ணெய் வித்துக்களால் லாபம் அதிகரிக்கும். வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். தைரியமான முடிவுகளால் பழைய பிரச்னைகள் பாதியாக குறையும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 24, 25, 26, 27, அக்டோபர் 4, 5, 6, 12, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 19, 20, 21ந் தேதி நண்பகல் 12 மணி வரை மற்றும் அக்டோபர் 16ந் தேதி காலை 7:30 மணி முதல் 17 ஆகிய தேதிகளில் வீண் அலைச்சல் வந்துபோகும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 8:13 pm

மகரம்: கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே, நல்ல நிர்வாகத் திறனும், பரந்த அறிவும், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியும் அசாத்தியத் திறனும் உள்ளவர்களே! உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியும் பிரபல யோகாதிபதியுமான புதன் உச்சம் பெற்று ராசிக்கு 9ம் வீட்டில் வலுவாக நிற்பதால் அடிமனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் மனதில் உருவாகும். தடைகளெல்லாம் விலகும். குரு உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதுத்தொழில் தொடங்கும் முயற்சியும் வெற்றியடையும்.

அரசியல்வாதிகளாலும் ஆதாயமடைவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதாலும் 26ந் தேதி முதல் நீசபங்கமடைவதாலும் குடும்ப வருமானம் உயரும். சுக்கிரன் ராகுவுடன் சேர்வதால் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு நீங்கள் பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும்.

நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சூரியன் 9ல் நிற்பதால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு ஆரோக்ய குறைவு உண்டாகும். 12ந் தேதி வரை செவ்வாய் லாப ஸ்தானத்திலேயே வலுவாக நிற்பதால் சகோதர, சகோதரி கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். தாய்வழி சொத்து வந்து சேரும்.

மாணவ-மாணவிகளே! விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள். ஓவியம், இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு முன்னேறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், பிரச்னைகள் தீரும். வேலை கிடைக்கும். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலிலிருந்து விடுபடுவீர்கள். புது பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். எதிர்க்கட்சிக்காரர்களிடம் கட்சியின் உள்மட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். 3ம் வீட்டில் கேது நிற்பதால் தைரியமாக கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் ராசிநாதனான சனிபகவான் 10ல் அமர்ந்திருப்பதால் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். பதவி உயர்வையும், சம்பள உயர்வையும் எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்தபடி இடமாற்றமும் கிடைக்கும். சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர் மூத்த அதிகாரியை விட, மேல்மட்ட மூத்த அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

விவசாயிகளே! எண்ணெய் வித்துகள், கரும்பு, பயிர் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

கலைத்துறையினரே! உங்களது படைப்புத் திறன் வளரும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். இங்கிதமானப் பேச்சாலும், யதார்த்தமான முடிவுகளாலும் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 19, 27, 28, 29, 30, அக்டோபர் 7, 8, 10, 15, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 21ந் தேதி நண்பகல் 12 மணி முதல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: சென்னை - திருவான்மியூர் கலாக்ஷேத்ரா காலனியில் அமைந்துள்ள ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் ஜீவசமாதியை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, பேனா போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக